Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Alaigal Urasum Karaiyoram...!
Alaigal Urasum Karaiyoram...!
Alaigal Urasum Karaiyoram...!
Ebook102 pages43 minutes

Alaigal Urasum Karaiyoram...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க போராடும் கதாநாயகன். அதை விரும்பாத கதாநாயகி இருவருக்கிடையே நகரும் மணித்துளிகளில் ஊடல், கூடல் என்று கதை வளர்கிறது. ஒரு நாள் முழுவதும் கப்பலில் நிகழும் நிகழ்வை மையமாக வைத்து முழுக்கதையும் பயணப்படுகிறது. "அலைகள் உரசும் கரையோரம்!" கடற்கரையில் ஆரம்பித்து கடற்கரையில் முடிவுறும் காதல் கதை.

Languageதமிழ்
Release dateFeb 7, 2022
ISBN6580129508080
Alaigal Urasum Karaiyoram...!

Read more from Daisy Maran

Related to Alaigal Urasum Karaiyoram...!

Related ebooks

Reviews for Alaigal Urasum Karaiyoram...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Alaigal Urasum Karaiyoram...! - Daisy Maran

    https://www.pustaka.co.in

    அலைகள் உரசும் கரையோரம்...!

    Alaigal Urasum Karaiyoram...!

    Author:

    டெய்சி மாறன்

    Daisy Maran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/daisy-maran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 1

    அது ஒரு நவீன ஹோட்டல் வளாகம்…

    ஒருபுறம் உள்ளூர் இயற்கை அழகின் பசுமையால் சூழப்பட்டும், மறுபுறம் கடலின் விளிம்பில் நேரடியாக இணைக்கபட்டதுமான அமைப்பில் கட்டப்பட்டிருந்தது.

    இங்குள்ள ஓவியங்கள், சிலைகள், தளபாடங்கள், மரப்பொருட்கள் என அனைத்துமே நுண்ணிய வேலைப்பாடுகளுடன் மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டிருந்தன. நூறு இருக்கைகள் கொண்ட மிகப்பெரிய உணவருந்தும் அறை கண் கவரும் அம்சத்துடன் இருந்தது.

    இத்தகைய அழகிய இடம் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது என்றால் அதில் வியப்பொன்றுமில்லை. இந்த கடலும் அதை சார்ந்த இடத்தின் ஆரோக்கியமான சூழலையும் அனுபவைக்கும் விதத்தில் இந்த ஹோட்டல் அமைந்திருந்தது. விருந்தினர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் உயர்தர சேவை மற்றும் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஹோட்டல் உத்தரவாதம் அளிக்கிறது, எனவே இது வெவ்வேறு வயதினர்களும் ஓய்வெடுப்பதற்கான சிறந்த இடமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்த இடத்திற்கு ஒருமுறை வந்தவர்கள் திரும்பவும் வருவதற்கு வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்பதுதான் முற்றிலும் உண்மை. அதன் அமைப்பும் சூழ்நிலையும் அதை சார்ந்தே இருந்தது.

    ஆனால்... அழகு பதுமையான லாவண்யாவிற்கோ இங்கிருந்து எப்போது கிளம்பலாம் என்றிருந்தது. சூழ்நிலை சரியில்லை. உடன் வந்தவர்கள் அனைவரும் குடித்துவிட்டு தலைக் குப்புற கவிழ்ந்து கிடக்க, முன்னே பின்னே இதற்கெல்லாம் பழகாத இவளுக்கும் குளிர்பானம் என்ற பெயரில் மதுபானத்தை கொஞ்சம் கலந்து கொடுத்திருந்தார்கள்.

    விருப்பமில்லாமலே அதை சுவைத்திருந்தாள். எப்படியோ அந்த தங்க நிற திரவம் உள்ளுக்குள் இறங்கி இவளை அரை மயக்கத்திற்கு கொண்டுப்போய் விட்டிருந்தது.

    எப்படியாவது இங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்று மனது நினைத்தாலும் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. மனதையும் உடலையும் ஒருமுகப்படுத்திக்கொண்டு ஒரு முடிவோடு அவள் எழுந்தப்போது கால்கள் பின்னி வலுவிழந்து சோர்வோடு திரும்பவும் அதே இடத்தில் பொத்தென்று அமர்ந்தாள்.

    எதிரில் அமர்ந்திருந்த சங்கரின் உருவம் இரண்டாய் தெரிந்தது. தலையை உதறி அது சங்கர் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள். அவன்தான் இவளை இங்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்திருந்தான். தலையை பிடித்தப்படி மெல்ல எழுந்த சங்கர் சிறு தள்ளாட்டத்தோடு லாவண்யாவின் அருகில் வந்தான்.

    லா... லாவண்யா வா நாம ரூம்க்கு போகலாம்... சந்தோஷமாக இருக்கலாம்... என்று கண்கள் சொருக, நா குழறியப்படி தடுமாற்றத்துடன் அவள் தோள்களைப் பற்றி மெல்ல அசைத்தான். அவனின் அந்த திடீர் தொடுதலால் உடல் சிலிர்க்க, தலையை நிமிர்த்தி அருவருப்போடு சங்கரை பார்த்தாள். இப்போது லாவண்யா முன்புப்போல் இல்லை. மயக்கம் சற்று குறைந்து இருவன் ஒருவனாக தெரிந்தான்.

    வா... ரூமுக்கு போகலாம்... சொன்னதையே திரும்ப சொன்னவன், அடுத்த நிமிடம் அசிங்கமான சிரிப்போடு அவள் தோள்களைப்பற்றி முகத்தருகே குனிந்தான்.

    ஏய் விடு... நான் வரல... என்று அவனை தள்ள முயன்று தோற்றாள்.

    அவளின் பலவீனத்தை சாதகமாக்கிக்கொண்டவன் அவளை தன் கரங்களால் தூக்க முயன்றான்.

    அவனை விட்டு விலக முயன்று பலனின்றி சோர்ந்துப்போய் அவன் மேலேயே சாய்ந்தாள் லாவண்யா. அவனோ லாவகமாக அவளை தன் மீது சாய்த்து அவளை ஆவலோடு அணைக்க முற்பட்ட போதுதான் பின்னாலிருந்து அந்த வலிமையான கரம் ஒன்று அவனை பற்றி நிறுத்தியது.

    கோபத்தோடு திரும்பியவன் பின்னால் நின்றவனின் உடல் வாகையும் உடையின் தோரணத்தையும் பார்த்தவுடன் அதிர்ச்சியோடு விலகினான்.

    ஆறடிக்குக் குறையாத உயரம் சிகப்பும் இல்லாத கருப்பும் இல்லாத மாநிறம். தடித்த மீசை கூர்மையான விழிகள் அகன்ற மார்பு நீளமான கைகள் என்று ஆள் வாட்டசாட்டமாக இருந்தான்.

    அவனுக்கு அருகே பூனைபோல ஒடுங்கிப்போய் நின்றான் சங்கர். யார் இவன்? எங்கிருந்து வந்தான்? திடீரென்று வானத்திலிருந்து குதிச்சு வந்தது போல் வந்து நிற்கிறானே?? இவன் ஆளையும் மூஞ்சையும் பார்த்தால் பெரிய ஆபிசராக இருப்பான் என்று தோன்றுகிறதே?. வந்த இடத்தில் எந்த பிரச்சனையிலும் சிக்காமல் கொஞ்சம் அமைதியாக அமைதியாக இருப்பதே நல்லது. இல்லையென்றால் ஏதாவது ஒரு கேசில் உள்ளே போனால் இந்த ஊரில் ஜாமினில் வருவதெல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டம். வெளியூருக்கு வந்திருக்கிறோம் இங்கெல்லாம் வந்து நம்ம வேலையை காட்டக் கூடாது. அதுவும் இவனிடம் அமைதியாக இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்தான் சங்கர்.

    சா... சார் அது என்கூட வந்த பொண்ணு. சார் நான் அந்த பொண்ண ரொம்ப ரொம்... ப காதலிக்கிறே, நான் தான் இங்க கூட்டிட்டு வந்தேன். திரும்பவும் பாதுகாப்பா எங்க ஆபீஸ் கொலிக்ஸ் தங்கி இருக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போய் விடுவேன். த... யவு செய்து நான் சொல்றத நம்புங்க, இவளை எங்கிட்ட விட்டுடுங்க... இல்லன்னா என்னால... என்னால... அதுக்கு அப்புறம் தொடர்ந்து பேச முடியாமல் தடுமாறினான்.

    என்ன ஓவரா ஆயிடுச்சா... நிதானம் இல்லாத மாதிரி தெரியுது...?

    என்று சொல்லியபடி சங்கரை முரட்டுத்தனமாய் விலக்கியவன், லாவண்யாவின் கரங்களைப் பற்றினான்.

    "சார்... சார்... அவ என்னுடைய

    Enjoying the preview?
    Page 1 of 1