Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Malai Soodiya Velai...
Malai Soodiya Velai...
Malai Soodiya Velai...
Ebook127 pages54 minutes

Malai Soodiya Velai...

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

என்னதான் வசதி வாய்ப்புகள் நிறைந்த வாழ்க்கை என்றாலும் மனநிறைவு என்பது அங்கு கிடைக்கும் நிம்மதி பொறுத்தே அமைகிறது.

பிறந்த வீட்டு சூழ்நிலையை போல புகுந்த வீட்டிலும் அதே சூழல் நிலவும் என்று சொல்லிவிட முடியாது. முன்னுக்குப்பின் முரணான ஒரு சூழ்நிலையோடு போராடுகிறாள் நம்முடைய கதையின் நாயகி(நிவேதிதா).
மண வாழ்க்கையில் வெற்றி பெற்றாளா???
Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580129505185
Malai Soodiya Velai...

Read more from Daisy Maran

Related to Malai Soodiya Velai...

Related ebooks

Reviews for Malai Soodiya Velai...

Rating: 3 out of 5 stars
3/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Malai Soodiya Velai... - Daisy Maran

    http://www.pustaka.co.in

    மாலை சூடிய வேளை...

    Malai Soodiya Velai…

    Author:

    டெய்சி மாறன்

    Daisy Maran

    For more books

    http://pustaka.co.in/home/author/daisy-maran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    மாலை சூடிய வேளை...

    மாலை மயங்குகிற நேரம், சூரியன் மெல்ல மெல்ல தன் கதிர்களை மடக்கியவாறு மறைந்து கொண்டிருந்தான். அந்த மல்லிகை தோட்டம் மணம் வீசிக்கொண்டிருந்தது.

    காலையில் பறித்த மொட்டுகள் போக மீதமுள்ள விட்டுபோன மொட்டுகள் மலர்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக மணம் வீசிக்கொண்டிருந்தன.

    மல்லிகை தோட்டத்தை ஒட்டி, தென்னந்தோப்பு தென்னந்தோப்பின் சல சலப்பையும் தாண்டி சென்றால் பத்தடி தூரத்தில் இருந்த அழகிய தாமரை குளம்.

    பெயர்தான் தாமரை குளம், ஆனால் மலர்களை காணவில்லை. தாமரை இலைகள் தான், பறந்து கிடந்தன. அந்த இலைகளின் மேல் கொக்குகள் அமர்ந்து தவம் புரிந்துக் கொண்டிருந்தன.

    நிவேதிதா, அந்த குளத்தின் இரண்டாவது படியில் நின்று கொண்டிருந்தாள். தன் தங்க கொலுசு அணிந்த கால்களால், தண்ணீரை அளாவிக் கொண்டிருந்தாள். காதுகளில் தொங்கிய தொங்கட்டான்கள், அவள் அசையும் போதெல்லாம் வண்ணங்களை வாரி இறைத்தது, அந்த வைர அணிகலன்கள். அவளின் காதுலேயும் கழுத்திலேயும் இணைந்து ஜொலித்தது.

    ஒரு சோக பெருமூச்சோடு மெல்ல படியேறி கறைக்கு வந்தாள். தென்னந்தோப்புக்குள் நுழைந்து நடக்கக் தொடங்கினாள். பச்சை கிளிகள் கூட்டமாக பறந்து சென்றன. குயில்களின் சத்தம் கேட்டது.

    அந்த தென்னந்தோப்பின் மூலையிலே பெரிய மாமரம் ஒன்று வீற்றிருந்தது. அதில் தொங்கிய கயறு ஊஞ்சல், நிவேதிதாவை அழைத்தது. அருகில் சென்றாள்.

    அது அவளுடைய அப்பா, அவளுக்காக கட்டித் தந்தது, வேண்டாங்க, கிளை, கிளை உடைஞ்சிடப் போகுது, அப்புறம் உங்கள் செல்ல மகள் கீழே விழுந்துதான் கிடப்பாள் என்று அவள் அன்னை மறுக்க மறுக்க அவள் அப்பா தேசிகன் அவளுக்காக கட்டித் தந்தது.

    அந்த ஊஞ்சல் அறுந்து போகாமல் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் அவள் அப்பாதான் அவர்களை விட்டு நிரந்தரமாக பிரிந்து போய்விட்டார்.

    நிவேதிதாவின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் உருண்டு விழுந்தன. அந்த ஊஞ்சலில் அமர்ந்து ஒருமுறை ஆடிப்பார்த்தாள் மனது சற்று அமைதி அடைந்தது

    என்ன நிவேதா எல்லோரும் உன்னை காணவில்லை என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

    நீ.... என்னடாவென்றால் இங்கு வந்து ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருக்கிறாய்.... அம்மா தேவிகாவின் குரல் கணீர் என்று ஒலித்தது.

    வா.... போகலாம் நேரமாகிறது.

    அம்மா......

    மகளின் பிசிர்படிந்த குரலைக் கேட்டு சற்று தயங்கி திரும்பி பார்த்தாள்.

    அவள் கண்கள் கலங்கி இருப்பதை காணவும், என்னம்மா.... என்னாச்சி...? ஏன் கண்ணெல்லாம் சிவந்திருக்கு பதறிப்போனாள் தேவிகா.

    அம்மா.... உன்னை விட்டு, விட்டுப்போக எனக்கு மனசே.... இல்லை. தாயின் இரண்டு கரங்களை பிடித்து

    நான் இங்கையே....... இருந்துவிடட்டுமா...?

    என்ன நிவேதா...... சின்ன பிள்ளையாட்டம் இப்படி பேசுகிறாய். என மகளை தைரியப்படுத்தியவள், துக்கம் அடைக்க குரல் உடைந்து அழத் தொடங்கிவிட்டாள்.

    நீ.... நல்லா இருக்க வேண்டும். என்பதற்காகத்தான், நான் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறேன்.

    இனிமேல் இப்படி பேசக்கூடாது சரியா...?

    சரி.... என தலை அசைத்தாள் நிவேதிதா.

    அன்னை...... கண்களை துடைத்துக் கொண்டு முன்னே நடக்க, அவளை பின் தொடர்ந்து சென்றாள் மகள்.

    "என்ன தேவிகா.... மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள் எல்லாம் ரெடியா.... இருக்காங்க ராகுகாலம் முடிஞ்சிடிச்சி நிவேதா... கிளம்பவேண்டாமா...?

    நிவேதிதாவின் பாட்டிதான் வினாவினாள்

    எல்லாம் ரெடியாகத்தான் இருக்கிறது அம்மா

    நிவேதா.... பாட்டிகிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்க

    பாட்டியின் கால்களை தொட்டு வணங்கினாள் நிவேதிதா

    பூவும், பொட்டுமா...... நீண்ட ஆயுளோட இருக்கணும்

    பாட்டி கண்ணில் நீரோடு ஆசிர்வதித்தாள்

    பாட்டியை கட்டி தழுவியவள், அம்மாவை பத்திரமாய் பார்த்துக் கொள்ளுங்கள் பாட்டி

    சரிடா.... நீ புகுந்த வீட்டுல எல்லோரிடமும் அன்பாக நடந்துக்கணும். நல்ல மருமகள் என்று பெயர் எடுக்கணும் சரியா...?

    ம்...... என்று தலை அசைத்தாலே ஒழியா, மனது பாரமாக இருந்தது. இந்த ஊர், உறவுகளை, விட்டு பிரிந்துப் போவதை நினைத்து, துக்கம் தொண்டையை அடைத்தது.

    என்னம்மா.... கிளம்பலாமா? மாமியார் வடிவு நிவேதிதாவின் அருகில் வந்து கேட்டாள்.

    தலை அசைத்தவாறு, பாட்டியின் கரங்களை பிடித்துக் கொண்டு வராண்டாவுக்கு வந்தாள்.

    அத்தைப் பெண் மாலினி சரமாக கோர்க்கப்பட்ட மல்லிகையை நிவேதிதாவின் தலையிலே சூடினாள்.

    ஏய்...... நிவேதா, மூஞ்சை கொஞ்சம் சிரித்த மாதிரி வச்சுகோயேன்

    அம்மா...... வீட்டைவிட்டு போகும்போது, கண்டிப்பாக அழனுன்னு, ஏதாவது சட்டம், கிட்டம் இருக்கா... என்ன? ஒரேடியா.... சோகத்தை பூசிகிட்டு இருக்கியே......

    ஏய்...... மாலினி, அவள் வாயை புடுங்கலேன்ன, உனக்கு தூக்கம்.... வராதே......

    பாட்டி அதட்டவும் அமைதியானாள் மாலினி

    எல்லோரும் வாசலுக்கு வந்தார்கள்

    கார் ரெடியாக இருந்தது ஒன்று பெண்ணும் மாப்பிள்ளையும் போவதற்காக, மற்றொன்று மாப்பிள்ளை வீட்டார் செல்வதற்காக......

    முன்னால் நின்ற பி.எம்.டபிள்யூ வெள்ளை நிற காரில் சிகப்பு ரோஜாக்கள் ஒட்டப்பட்டு அழகு படுத்தப்பட்டிருந்தன.

    காரின் கதவை டிரைவர் திறந்துவிட, எல்லோரிடமும், கை அசைத்துவிட்டு கண்ணீருடன் காரில் ஏறினாள் நிவேதிதா...... அவனை காணவில்லை. அதான் நிவேதிதாவின் கணவன் வசந்தன்.

    மெல்ல தலையை திருப்பி பார்த்தாள்

    அங்கே வசந்தன் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டிருந்தான்.

    இவனுக்கு சிரிக்கக்கூட தெரியுமா...?

    எல்லோரும், நிவேதிதா ஏறிய காரின் அருகில் வந்தார்கள்.

    வசந்தன் காரின் பின்புற கதவை திறந்துக் கொண்டு, நிவேதிதாவின் அருகில் அமர்ந்தான்.

    எங்கள் நிவேதாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா.... மாலினிதான் கூறினாள்.

    டாக்டராச்சே.... தலைவலி கிலவலி வந்தால்

    Enjoying the preview?
    Page 1 of 1