Kaadhal Meipada Vendum!
By Daisy Maran
3.5/5
()
About this ebook
என்னைப் பற்றி...
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் நாகை மாவட்டம் கொள்ளிடம் என்ற சிறிய ஊரில். பள்ளிப் பருவத்திலேயே எழுத்தின் மீது ஆர்வம் இருந்தது. அதன் தொடர்ச்சியாக கல்லூரி காலத்தில் ஆண்டு மலரில் எழுதினேன்.
திருமணத்திற்குப் பிறகு இரண்டாயிரத்தில் சென்னைக்கு வந்து 19 வருடங்களாக கதை கட்டுரை சிறுகதை என எழுதிக் கொண்டிருக்கிறேன்.
என் முதல் நாவல் 2015ல் தான் வெளிவந்தது. அதன்பிறகுதான் நாவல் எழுதும் ஆர்வம் என்னிடத்தில் மேலோங்கியது. இந்த நான்கு வருடங்களில் 42 நாவல்கள், 60 சிறுகதைகள், இரண்டு தொடர்கதைகள், என எல்லா இதழ்களிலும் என் படைப்பு வெளிவந்துள்ளது.
தினமலர், வானதி, ஜெர்மன் ஞானசவுந்தரி போன்ற சிறுகதைப் போட்டிகளில் முதல் மூன்று பரிசுகளை பெற்றுள்ளேன்
பொதுவாக என் நாவல்கள் குடும்பம் மற்றும் காதல் என்ற தளத்திற்குள்தான் இருக்கும். கதைகளில் வன்முறைகளை தவிர்த்து சுபமான முடிவாகத் தான் எழுதுவேன். நாவல் மூலம் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு தகவலை தர வேண்டும் என்பது என்னுடைய தீர்மானம். மேலும் என் நாவல்களை பற்றி நானே சொல்வதைவிட நாவலைப் படித்துவிட்டு அதைப் பற்றிய விமர்சனங்களை நீங்கள் பதிவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
வாசிப்பை நேசிப்போம்.
அன்புடன் உங்கள்
டெய்சி மாறன்..
Read more from Daisy Maran
Manam Virumbuthe Unnaiye! Rating: 4 out of 5 stars4/5Maranthal Thane Ninaipatharku! Rating: 5 out of 5 stars5/5Santhithome Kanakkalil...! Rating: 3 out of 5 stars3/5Anbulla Maan Vizhiye Rating: 5 out of 5 stars5/5Vandhuvidu Ennavane... Rating: 5 out of 5 stars5/5Orey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Eppozhuthum Un Soppanangal…! Rating: 4 out of 5 stars4/5'Nilavai Maraitha Megam...!' Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu Mayavalai Rating: 4 out of 5 stars4/5Uyirodu Kalanthaval Rating: 3 out of 5 stars3/5Thanthu Vitten Ennai Rating: 5 out of 5 stars5/5Malai Soodiya Velai... Rating: 3 out of 5 stars3/5Idhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Then Malli Poove... Rating: 2 out of 5 stars2/5Kaadhal... Kanavugaley...! Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vantha Nila...! Rating: 0 out of 5 stars0 ratingsManathai Thiranthathu Poovasam...! Rating: 4 out of 5 stars4/5Unakkaga Kaathirukkum Idhayam! Rating: 0 out of 5 stars0 ratingsMounamey Kaadhalaai..! Rating: 0 out of 5 stars0 ratingsKann Malargalil Azhaipithazh Rating: 0 out of 5 stars0 ratingsMayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Vizhiyoram Oru Vanavil...! Rating: 2 out of 5 stars2/5Manasai Thaadi Mani Kuiyile...! Rating: 3 out of 5 stars3/5Alaigal Urasum Karaiyoram...! Rating: 0 out of 5 stars0 ratingsPirivu Ini Illai Rating: 5 out of 5 stars5/5Kanavennai Kalavaduthey...! Rating: 0 out of 5 stars0 ratingsVanamellam Sivappoo! Rating: 0 out of 5 stars0 ratings'Nesippaya Nenjamey...!' Rating: 0 out of 5 stars0 ratingsManathoodu Oru Naal... Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kaadhal Meipada Vendum!
Related ebooks
Anbu Megame Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukkum Poo Maalai Rating: 0 out of 5 stars0 ratingsNee En Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsThendral Vanthu Ennai Sudum! Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vanthu Vittal Rating: 0 out of 5 stars0 ratingsMangai Enthan Nenjukkul! Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsIrukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Kaadhal Vaithu Kaathirunthean! Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Vaanamadi Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsMathamennum Vaanaththil Manamennum Pura Rating: 5 out of 5 stars5/5Engey En Jeevaney..? Rating: 5 out of 5 stars5/5Maaya Kangal Rating: 5 out of 5 stars5/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Anbirunthaal Rating: 5 out of 5 stars5/5Vaanathaipola Kaadhal! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalaagi Kasindhurugi Rating: 0 out of 5 stars0 ratingsEnthanuyir Kaadhaliye..! Rating: 4 out of 5 stars4/5Kaadhal Solla Vandhean… Rating: 0 out of 5 stars0 ratingsNandhanin Anuragam..! Rating: 4 out of 5 stars4/5Povomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Ezhiloviyam Rating: 0 out of 5 stars0 ratingsKaanai Kaattu Pothum Rating: 3 out of 5 stars3/5Itharkuthane Kathiirunthom Rating: 5 out of 5 stars5/5Malai Soodiya Velai... Rating: 3 out of 5 stars3/5Maya Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Inba Irave Nee Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsNilavil Mugam Kaattu Rating: 5 out of 5 stars5/5
Reviews for Kaadhal Meipada Vendum!
2 ratings0 reviews
Book preview
Kaadhal Meipada Vendum! - Daisy Maran
http://www.pustaka.co.in
காதல் மெய்ப்பட வேண்டும்!
Kaadhal Meipada Vendum!
Author:
டெய்சி மாறன்
Daisy Maran
For more books
http://www.pustaka.co.in/home/author/daisy-maran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 1
அதிகாலை...
இருள் விலகி வெளிச்சம் பரவத்தொடங்கியது. சூரியனின் வரவை உணர்ந்த பனிக்கூட்டங்கள் அப்போதுதான் மலர்ந்துக் கொண்டிருந்த பூ மொட்டுகளுக்குள் மெல்ல நழுவிச்சென்று மறைந்து கொண்டன.
பறவைகளும், கிளிக் கூட்டங்களும், தங்கள் கூட்டை விட்டு வெளியில் பறந்து செல்ல அயத்தமாகிக் கொண்டிருந்தன. அதில் ஒரு குயில் மட்டும், தம் ஜோடியை சத்தமிட்டு அழைத்தது. குக்கூ... குக்கூ...
அந்த குயிலின் ஓசை காற்றில் மிதந்து வந்து காதுகளுக்குள் நுழைய... தூக்கம் கலைந்து கண்விழித்தாள் சாந்தினி.
'சாந்தினி...'
சாந்தினியைப் பற்றி சொல்ல வேண்டுமென்றாள், ஒரு வார்த்தையிலே, ஒரு வரியிலோ சொல்லிவிட முடியாது.
ரம்பை, ஊர்வசி, மேனகை இவர்களையெல்லாம் மிஞ்சும் ஒரு பேரழகு என்று கூட சொல்லலாம்
இருபத்தைந்து வயது நிரம்பிய இளம்பெண்.
இவளுடைய குழந்தையா? - இந்த பொண்ணைப் பார்த்தாலே சின்னப் பொண்ணாட்டம் இருக்குதே. இதுக்கு ஒரு குழந்தையா என்று பார்ப்பவர்களெல்லாம் ஆச்சரியப்படுவதற்கு காரணம் 'வினி', வினித்தா என்கிற வினிக்குட்டிதான்.
சாந்தினியின் நான்கு வயது குழந்தை படுசுட்டி ரோட்டில் நடந்து சென்றாலே எல்லோருடைய பார்வையும் வினிமேல்தான் இருக்கும்.
காலை ஏழுமணி...
அம்மா... கையெல்லாம் வலிக்குதும்மா, நாளைக்கு எழுதவா
வினி... சொன்னா கேளு, சீக்கிரமா ஹோம்ஒர்க்கு முடிச்சீன்னா, உனக்கு ஐஸ்கீரீம் வாங்கித் தருவேன். அப்புறம் ஈவினிங் வீட்டிற்கு வரும்போது புது ட்ரெஸ் கூட வாங்கித்தருவேன்... சரியா
அதெல்லாம்... ஒன்னும் வேணாம்மா நான் உங்ககூட ஆபிசுக்கு வர்ரேம்மா...
மகள் முகத்தில் தெரிந்த பிடிவாதம் சாந்தினியை கோபப்பட வைத்தது.
சொன்னா கேளு வினி... நீ அங்கு வந்தா சும்மா இருக்கமாட்டே அதுக்குத்தான் சொல்றேன். ஹவுஸ் ஓனர் பாட்டி வீட்டிலே விட்டுட்டு போறேன். சமத்தா அவங்க கூட இருக்கனும் என்ன?
கோபமாக ஆரம்பித்து கொஞ்சலோடு முடித்தாள்
அப்பன்னா... ஒங்ககூட பேசமாட்டேன் போ...
கண்களை சுருக்கி பிடிவாதத்தை வெளிப்படுத்தியவள், வீம்பா இரண்டு கைகளையும் குறுக்கே கட்டிக்கொண்டு கதவில் சாய்ந்தபடி நின்றாள்.
மகள் நின்றத் தோரணை, சாந்தினிக்கு எதையோ ஞாபகப்படுத்தியது. அது என்னவென்று உணர்ந்த அடுத்த நிமிடமே, உடம்பு அதிர்ந்து நடுங்கியது.
ச்சே... தேவையில்லாத பயம்... அதை ஏன் நான் நினைத்தேன். எதை மறக்க வேண்டுமென்று நினைக்கிறேனோ... அது தான் மீண்டும். மீண்டும் ஞாபகத்துக்கு வருகிறது.
மனதில் ஒரு வெறுமை தோன்றினாலும், இது அடிக்கடி நிகழ்வதுதானே... சிந்தனையை ஒதிக்கி வைத்துவிட்டு, மீண்டும் வினியிடமே வந்தாள்.
வினி... கடைசியா, நீ... என்னதான் சொல்றே...
அதான், சொன்னேனில்லே, உங்கக்கூடதான் வருவேன்னு...
வினி பிடிவாதக்காரி, வினியை இனி கட்டாயப்படுத்துவதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை அதற்கு மேல எதுவும் பேசாமல், மகள் கலைத்துப் போட்டிருந்த புத்தகத்தையெல்லாம் எடுத்து ஒழுங்கு படுத்தினாள்.
சரி வா
வேற ட்ரெஸ் போட்டுக்கோ, சீக்கிரமா கிளம்பணும்.
ஐ ஜாலி...
அம்மான்னா, அம்மாதான்.
என்று சொல்லிக்கொண்டே குனிந்திருந்த தாயின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
போதும் போதும் ஐஸ் வைத்தது போதும். ட்ரெஸ் மாத்திக்கலாம் வா...
அரைமணி நேரத்திலேயே ரெடியாகி, வீட்டை பூட்டிக்கொண்டு வெளியில் வந்தார்கள்.
வினி...
என்ன மம்மி...
ஆஸ்பிட்டலுக்கு போன பிறகு, வசந்தா அம்மாக்கூடத்தான் நீ இருக்கணும். நான் போற இடத்துக்கெல்லாம், என் பின்னாடியே வரக்கூடாது.
ம்ம்...
முக்கியமா, டாக்டர் ரூம் பக்கம், நீ போகவே கூடாது.
சரிம்மா... நான் வசந்தாம்மா கூடவே இருக்கிறேன். போதுமா...
பாக்கலாம்... பாக்கலாம்...
அம்மா... இந்த பஸ் ஆஸ்பெட்டலுகிட்ட நிற்குமாம்மா... இவள் அருகில் நின்றிருந்த பெரியவர் கேட்க,
ம்... போகுங்க, நானும் அங்கதான் இறங்கணும் வாங்க...
அவருக்கு பதில் சொல்லிக்கொண்டே, வினியை தூக்கிக்கொண்டு பஸ்சில் ஏறினாள்.
நல்ல வேளை, பஸ்சில் கூட்டமில்லை. காலியாக இருந்தது. இருவரும் முன்புற இருக்கையிலே அமர்ந்துக் கொண்டார்கள்.
இங்கிருந்து ஆஸ்பிட்டலுக்கு போக அரைமணி நேரமாகும். மகளை இடது கையால் அணைத்தப்படி, சீட்டின் பின்புறம் சாய்ந்து அமர்ந்தாள்.
ஐந்து வருடத்திற்கு முன்பு கோவைக்கு வந்தது. சிறுவிபத்து நேர்ந்து மருத்துவமனையில் சேர்ந்தது. பிறகு அங்கேயே வேலைக்கேட்டு வேலையில் சேர்ந்தது. எல்லாமே கனவுப்போல கண் முன்னால் தோன்றியது.
கண்களை மூடி அந்த நினைவுகளில் நிலைத்திருந்தவளை வினியின் குரல் தட்டி எழுப்பியது.
அம்மா... அம்மா...
மகளின் குரல் கேட்டு கண் திறந்தாள்.
என்ன... வினி
இன்னைக்கு என்ன டேம்மா?
இன்னைக்கு சாட்டர்டே... ஏன் கேட்கிறே
ஒன்னுமில்லேம்மா
இந்த சனிக்கிழமை வந்தாலே, சாந்தினிக்கு தொல்லையாகிவிடும். மற்ற நாட்களில் இந்த பிரச்சனையில்லை. திங்கள் முதல் வெள்ளி வரை வினிக்கு ஸ்கூல் இருக்கும். அந்த நாட்களில், வினியை ஸ்கூலில் விட்டு விட்டு வேலைக்கு கிளம்பி விடுவாள்.
அவள் வேலைப் பார்க்கும் ஆஸ்பிட்டலுக்கு அருகிலேயே வினியின் ஸ்கூல் இருந்ததால், அவளை அங்கு விட்டுட்டு வேலைக்கு வந்து விடுவாள்.
ஸ்கூல் ஆயாவிடம் மாதம் ஒரு தொகையை கொடுத்து விடுவாள். இவள் வேலையை விட்டு வர கொஞ்சம் தாமதமானாலும். அந்த ஆயா வினியை பார்த்துக் கொள்வாள்.
தினமும் வேலை முடிந்து வினியை அழைத்துக் கொண்டுதான் வீட்டிற்கு செல்வாள். ஆனால் ஒவ்வொரு வாரமும் சனி கிழமைகளில் வினிக்கு லீவாகத்தான் இருக்கும். அது போன்ற நாட்களில் ஹவுஸ் ஓனர் வீட்டிலே விட்டு விட்டு வருவாள். மகளுக்கு தேவையான லஞ்சையும் ஒரு டிபன் பாக்ஸில் போட்டு அவர்களிடம் கொடுத்து விடுவாள். போன மாதம் வரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் போய் கொண்டிருந்தது. திடீரென்று பாட்டி வீட்டில் இருக்கமாட்டேன். உன்கூடத்தான் வருவேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்தாள். காரணம் கேட்டபோதுதான். பாட்டி எப்போ பார்த்தாலும் சீரியல் பார்க்கிறாங்கம்மா. எனக்கு கார்ட்டூன் சேனலே போட மாட்றாங்கம்மா, அதனால் எனக்கு அங்கு இருக்க பிடிக்கலை...
தெளிவாக சொல்லிவிட்டாள்.
என்ன செய்வதென்று தெரியாமல்தான், மூன்று, நான்கு வாரமாக வினியை தன்னுடனே அழைத்துப் போகிறாள்.
அம்மா... ஸ்டாப்பிங் வந்துடுச்சியம்மா...
கண்டக்டர் குரல் கொடுத்தார். தினமும் போகிற பஸ் என்பதால், அவள் இறங்குகிற இடம் அவருக்குத் தெரியும்.
பஸ் நின்றவுடன், வினியை அழைத்துக் கொண்டு கீழே இறங்கினாள். ரோட்டை கிராஸ் பண்ணி ஆஸ்பிடலுக்கு நுழைந்தவளை வரவேற்றான் வார்டுபாய்.
வாங்க மேடம். இப்போதுதான் வாரிங்களா உங்களை டாக்டர் தேடிகிட்டிருந்தாரு. என்ன விஷயன்னு தெரியலை, போய் பாருங்க.
"என்ன