Eppozhuthum Un Soppanangal…!
By Daisy Maran
4/5
()
About this ebook
இது முழுக்க முழுக்க ஒரு ஆழமான காதல் கதை.
கதையின் நாயகன், நாயகி, இருவரும் சந்தித்த முதல் பார்வையிலேயே ஒருவருக்கொருவர் பிடித்துப்போய் காதல் வயப்படுகிறார்கள்.
ஒரு சில காரணங்களால் இருவரும் ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
அந்தத் தருணத்தில் கதாநாயகன் கதாநாயகி விட்டுவிட்டு வேறொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான். பல வருடங்களுக்கு பிறகு அவள் அந்த ஊருக்கு வருகிறாள் அப்போதும் அவனுடைய காதல் அப்படியே இருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அவனை மறக்கவும் முடியாமல் திணறுகிறாள். நாவலுக்கு உயிரோட்டமே அவர்களின் காதல் தான்.
முடிவை முழு நாவலும் படித்த பிறகு தெரிந்து கொள்ளுங்கள் நன்றி.
Read more from Daisy Maran
Santhithome Kanakkalil...! Rating: 3 out of 5 stars3/5Manam Virumbuthe Unnaiye! Rating: 4 out of 5 stars4/5Uyirodu Kalanthaval Rating: 3 out of 5 stars3/5Anbulla Maan Vizhiye Rating: 5 out of 5 stars5/5Vandhuvidu Ennavane... Rating: 5 out of 5 stars5/5Kaadhal Enbathu Mayavalai Rating: 4 out of 5 stars4/5Thanthu Vitten Ennai Rating: 5 out of 5 stars5/5Mayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Orey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Mounamey Kaadhalaai..! Rating: 0 out of 5 stars0 ratingsKann Malargalil Azhaipithazh Rating: 0 out of 5 stars0 ratingsMaranthal Thane Ninaipatharku! Rating: 5 out of 5 stars5/5Kanavennai Kalavaduthey...! Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vantha Nila...! Rating: 0 out of 5 stars0 ratingsPirivu Ini Illai Rating: 5 out of 5 stars5/5Kaadhal... Kanavugaley...! Rating: 0 out of 5 stars0 ratings'Nilavai Maraitha Megam...!' Rating: 0 out of 5 stars0 ratingsManathoodu Oru Naal... Rating: 0 out of 5 stars0 ratingsMalai Soodiya Velai... Rating: 3 out of 5 stars3/5Idhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Then Malli Poove... Rating: 2 out of 5 stars2/5Alaigal Urasum Karaiyoram...! Rating: 0 out of 5 stars0 ratingsManathai Thiranthathu Poovasam...! Rating: 4 out of 5 stars4/5Kannagi Nagaram Rating: 0 out of 5 stars0 ratings'Nesippaya Nenjamey...!' Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaga Kaathirukkum Idhayam! Rating: 0 out of 5 stars0 ratingsManitharil Ithanai Nirangala...? Rating: 0 out of 5 stars0 ratingsVizhiyoram Oru Vanavil...! Rating: 2 out of 5 stars2/5Manasai Thaadi Mani Kuiyile...! Rating: 3 out of 5 stars3/5
Related to Eppozhuthum Un Soppanangal…!
Related ebooks
Andha Yetho Ondru…! Rating: 4 out of 5 stars4/5Anbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsUdhaya Geetham Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Raagam lm Rating: 5 out of 5 stars5/5Orey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Devathai Vandhal Rating: 2 out of 5 stars2/5Maya Nathiyile Naan...! Rating: 0 out of 5 stars0 ratingsPoo Malarntha Pothu...! Rating: 0 out of 5 stars0 ratingsPen Manathai Thottu Rating: 4 out of 5 stars4/5Udal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Swasamai Kalandhavale! Rating: 4 out of 5 stars4/5Mayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Anbil Thilaitha Uravu… Rating: 4 out of 5 stars4/5Chennaiyil Oru Mazhainaal! Rating: 5 out of 5 stars5/5Sooriyakanthi Pookkal Rating: 5 out of 5 stars5/5Unnai Vidamaatten Rating: 0 out of 5 stars0 ratingsMandiyitten Madhana! Rating: 0 out of 5 stars0 ratingsSuriyan Theyumo? Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathai Thirudathe! Rating: 3 out of 5 stars3/5Kaadhal Nilavey... Rating: 5 out of 5 stars5/5Kallil Vaditha Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsSollathaan Ninaikiren Rating: 5 out of 5 stars5/5Unakkaakavaa Naan Rating: 5 out of 5 stars5/5Marakkumo Kaadhal Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsNee En Sanrothayam Rating: 0 out of 5 stars0 ratingsNilavu Thoongum Neram! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Mel Aanai Rating: 3 out of 5 stars3/5Idhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Neela Nayanangalil... Rating: 2 out of 5 stars2/5Enathu Kavithai Neethan... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Eppozhuthum Un Soppanangal…!
1 rating0 reviews
Book preview
Eppozhuthum Un Soppanangal…! - Daisy Maran
http://www.pustaka.co.in
எப்பொழுதும் உன் சொப்பனங்கள…!
Eppozhuthum Un Soppanangal…!
Author:
டெய்சி மாறன்
Daisy Maran
For more books
http://pustaka.co.in/home/author/daisy-maran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
1
அவலாஞ்சி...!
ஊட்டியிலிருந்து இருபத்தெட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேல் பாவானிக்கு செல்லும் வழியில் இருந்தது இந்த அவலாஞ்சி. அவலாஞ்சியின் அழகை வார்த்தைகளால் சொல்லி முடித்துவிட முடியாது. அவ்வளவு அழகோஅழகு!.அதுமட்டுமல்ல போகும் வழியில்தான் எமரால்டு வனம் இருந்தது.
பனிப்படர்ந்த மலையின் உச்சியில் நின்றப்படி நீண்டு வளைந்து நீர்கோடு போல் ஓடும் நதியையும், பசுமையின் குவியலாய் தோற்றமளிக்கும் பள்ளத்தாக்கையும் வெறித்துக் கொண்டிருந்தாள் மௌனிகா. உடல் ஜெர்க்கினுக்குள் அடங்கிக்கிடந்தது.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கிடந்த அழகான பசுமையோ! அதை தழுவி செல்லும் குளிர்காற்றோ! அடிக்கடி முகத்தை மோதி மயிர்க்கால்களை சிலிர்க்க வைக்கும் பனிபடர்ந்த மேகங்களோ! இவை எதுவுமே அவள் கருத்தைக் கவர்வதாக இல்லை. மாறாக மன அழுத்தத்தைதான் அதிகப்படுத்தியது.
கவலைதோய்ந்த முகமும் சோகம் அப்பிக்கிடந்த கண்களும் அவள் மன வேதனையை வெளிப்படையாகவே கோடிட்டுக்காட்டியது. நிம்மதியைத் தேடி இங்கு வந்தால் அது கிடைக்காமல் போவது ஒருபக்கம் என்றாலும் அதைவிட அதிகமான வேதனையையும் துன்பத்தையும் உண்டாக்கியது வந்த இடம்.
இவளின் மனச்சோர்வுக்கு வேதனைக்கும் மூலகாரணமாய் இருந்தவனை மீண்டும் சந்திக்க நேர்ந்ததுதான் சோகத்திலேயே பெரிய சோகம்.
"நீ...என் உயிர், உனக்காக என் உயிரையும் கொடுப்பேன். நீ இல்லாத இந்த உலகத்தில் எனக்கு வாழ்க்கையும் இல்லை நிம்மதியும் இல்லை. இப்படியெல்லாம் டயலாக் பேசி அவளை கவர்ந்தவன்தான் இப்போது எதிரியாகவும், விரோதியாகவும் தெரிகிறான். மீண்டும் அவனை சந்திக்கக்கூடாது என்று அனைத்து கடவுளையும் வேண்டிக்கொண்டுதான் இங்கு வந்திருந்தாள். ஆனால் எந்த கடவுளும் அவள் வேண்டுதலுக்கு செவி சாய்க்கவில்லை. வந்த சிலநாட்களிலேயே அவனை அதாவது இவளுடைய மொத்த சந்தோஷத்தையும் கெடுத்தவனை சந்திக்க வைத்து கொஞ்சம் நஞ்சமிருந்த நிம்மதியையும் அடியோடு துடைத்துப்போட்ட அத்தனை கடவுளையும் சபித்து தள்ளினாள். இந்த ஊருக்கு வந்தால் கண்டிப்பாக அவனை சந்திக்க நேரிடும் என்ற எண்ணத்தில்தான் இத்தனை நாளும் ஊட்டியையே மறந்திருந்தாள். ஆனால் பெற்றோர்கள் தீவிர மாப்பிள்ளை வேட்டையில் இறங்கிவிடவே, இனியும் அங்கிருந்தால் இவளுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் துன்பம் நேரிடும் சூழ்நிலை உருவானது.
மகளின் மன நிலையை உணர்ந்த பெற்றோர்கள் ஊட்டியில் இருக்கும் தன் மகன் மணிமாறன் வீட்டில் இவளை அழைத்துவந்து விட்டுவிட்டு சென்றார். மௌனிக்காவுக்கும் இடமாற்றம் தேவைப்பட்டது. ஆனால் அது ஊட்டியாக இருக்கக்கூடாது என்பதுதான் அவளுடைய வேண்டுதலாக இருந்தது. ஆனால் அவளுடைய வேண்டுதல் நிறைவேற வில்லை. அண்ணன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். வந்த பிறகு மௌனிகா வெளியில் எங்கும் செல்லாமல் வீடே கதி என்று முடங்கி கிடந்தாள். ஆனால் எத்தனை நாளைக்குதான் வீட்டுக்குள்ளே கிடப்பாய்? வா...ஷாப்பிங் போயிட்டு வரலாம். என்று அண்ணன் அழைக்கவே, மறுக்க முடியாமல் போனபோதுதான் அவனை பார்க்கும் சூழ்நிலையும் உருவானது.
மௌனீ...மௌனீ....
பின்பக்கமிருந்து இவள் பெயர் சொல்லி அழைக்கும் குரல் கேட்டவுடன்தான் இயல்புநிலைக்குத் திரும்பினாள் மௌனிகா. யாரென்று பார்த்தால் ஐம்பது அடி தூரத்தில் இவள் நின்றிருந்த மலையின் அடிவாரத்தில் நின்றபடி உரத்த குரலில் இவளை அழைத்துக்கொண்டிருந்தாள் இவளுடைய அண்ணி சாந்தி.
அண்ணியின் குரலை தொடர்ந்து,
அத்தை கீழே வாங்க...ரொம்ப ஹைட் போயிட்டீங்க! விழுந்திட போறீங்க...
என்று தன் மொத்த சக்தியையும் திரட்டி கத்திக் கொண்டிருந்தாள் அண்ணன் மகள் வினி. வினியின் குரல்கேட்டு சில மரங்களில் பறவைகளின் சலசலப்பை உணரமுடிந்தது.
இதோ வரேன்... நீ அங்கேயே இரு!
என்று பதில் உரைத்தபடி மெல்ல மலையிலிருந்து தட்டுத்தடுமாறி கீழே இறங்கினாள் மௌனிகா. ஏறும்போது எளிமையாக இருந்த மலை இறங்கும்போது அவள் மனதைப்போல பாரமாய் இருந்தது.
இதற்கு அப்புறமும் இங்கு இருந்தால் மூன்று பேரும் அவளைத் தேடிக் கொண்டு மேலேயே வந்து விடுவார்கள். என்று எண்ணியது அவளின் மனம். அதற்கு காரணம் அவள் மேல் உள்ள தீராத பாசத்தையும் தாண்டி சில நாட்களாய் மாறுபட்டிருந்த அவளின் மனநிலையும் ஒரு காரணம். எதன்மேலும் விருப்பமில்லாமல் எவரோடும் சரியாக பேசாமல் அறைக்குள்ளேயே முடங்கிக்கிடந்ததுதான் அதற்கு காரணம். எதனால் தங்கை இப்படி இருக்கிறாள் என்று தெரியாவிட்டாலும் அவள் மேல் எப்போதுமே ஒரு கண் இருக்கட்டும் என்று எச்சரித்துவிட்டு சென்றிருந்த அப்பா தர்மலிங்கத்துக்காக அவளை கவனத்துடனே வைத்திருந்தனர்.
ஏற்பாடு பண்ணப்பட்ட திருமணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு கட்டாயப்படுத்தினீர்கள் என்றால் தற்கொலை தவிர வேறு வழியில்லை என்று எச்சரித்தவளை, ‘உன் மனசுக்கு ஒரு இடமாற்றம் தேவை, அதனால் நீ உன் அண்ணன் வீட்டில் கொஞ்ச நாட்கள் இரு’ என்று அழைத்து வந்து இங்கே விட்டு விட்டு சென்றார் அவளுடைய அப்பா. ஏன் இந்த கல்யாணம் பிடிக்கவில்லை என்று கேட்ட அண்ணன் அண்ணியிடம் திருமணத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்த நம்பிக்கை வரும்போது நானே சொல்கிறேன். என்ற பதிலோடு முடித்துக்கொண்டாள். அதன் பிறகு திருமணம் என்ற பேச்சையே எடுக்கவில்லை மணிமாறன். தங்கைக்கு இடமாற்றம் மட்டுமல்ல மனமாற்றமும் தேவை என்று எண்ணியவன் இரண்டுநாட்கள் லீவு போட்டுவிட்டு குடும்பத்தினரை இந்த அவலாஞ்சிக்கு அழைத்துவந்திருந்தான்.
மழை ஆரமிக்கிறது போகலாமா மௌனி...?
சரிண்ணா...
தங்கையை யோசனையோடு பார்த்தான். முன்பானால் மழை என்றாலே துள்ளிகுத்தித்துக்கொண்டு ‘ஆசையா இருக்கு கொஞ்சம் நனைந்துவிட்டுதான் வரேனே!?’ என்று பிடிவாதம் பிடிக்கும் அதே தங்கைதான் இப்போது