Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannagi Nagaram
Kannagi Nagaram
Kannagi Nagaram
Ebook65 pages19 minutes

Kannagi Nagaram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என்னைப் பற்றி...

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் நாகை மாவட்டம் கொள்ளிடம் என்ற சிறிய ஊரில். பள்ளிப் பருவத்திலேயே எழுத்தின் மீது ஆர்வம் இருந்தது. அதன் தொடர்ச்சியாக கல்லூரி காலத்தில் ஆண்டு மலரில் எழுதினேன்.

திருமணத்திற்குப் பிறகு இரண்டாயிரத்தில் சென்னைக்கு வந்து 19 வருடங்களாக கதை கட்டுரை சிறுகதை என எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என் முதல் நாவல் 2015ல் தான் வெளிவந்தது. அதன்பிறகுதான் நாவல் எழுதும் ஆர்வம் என்னிடத்தில் மேலோங்கியது. இந்த நான்கு வருடங்களில் 42 நாவல்கள், 60 சிறுகதைகள், இரண்டு தொடர்கதைகள், என எல்லா இதழ்களிலும் என் படைப்பு வெளிவந்துள்ளது.

தினமலர், வானதி, ஜெர்மன் ஞானசவுந்தரி போன்ற சிறுகதைப் போட்டிகளில் முதல் மூன்று பரிசுகளை பெற்றுள்ளேன்

பொதுவாக என் நாவல்கள் குடும்பம் மற்றும் காதல் என்ற தளத்திற்குள்தான் இருக்கும். கதைகளில் வன்முறைகளை தவிர்த்து சுபமான முடிவாகத் தான் எழுதுவேன். நாவல் மூலம் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு தகவலை தர வேண்டும் என்பது என்னுடைய தீர்மானம். மேலும் என் நாவல்களை பற்றி நானே சொல்வதைவிட நாவலைப் படித்துவிட்டு அதைப் பற்றிய விமர்சனங்களை நீங்கள் பதிவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

வாசிப்பை நேசிப்போம்.

அன்புடன் உங்கள்
டெய்சி மாறன்..

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580129504768
Kannagi Nagaram

Read more from Daisy Maran

Related to Kannagi Nagaram

Related ebooks

Related categories

Reviews for Kannagi Nagaram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannagi Nagaram - Daisy Maran

    http://www.pustaka.co.in

    கண்ணகி நகரம்

    Kannagi Nagaram

    Author:

    டெய்சி மாறன்

    Daisy Maran

    For more books

    http://pustaka.co.in/home/author/daisy-maran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    க்ரைம் கதை மன்னர் ராஜேஷ்குமார் அணிந்துரை

    சமூகத்தைப் பிரதிபலிக்கும் கதையே வெற்றிபெறும்!

    வளர்ந்துவரும் எழுத்தாளர் டெய்சி மாறன் பரவலாக பல இதழ்களில் சிறு கதைகளும் நாவல்களும் எழுதி வந்துள்ளார் என்றாலும், வாசகர்களால் பெரிய அளவில் அவர் கவனிக்கப்படவில்லை. எனினும் எதிர்காலத்தில் இவர் கவனிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன என்பதற்கு இந்த 'கண்ணகி நகரம்' நாவலே சான்றாகிறது. கடந்த இரண்டாண்டுகளில் முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.

    நாவலின் முதல் அத்தியாயமே விறுவிறுப்புடன் தொடங்குகிறது. நாவலில் டெய்சிமாறன் கடந்த காலம், நிகழ்காலம் என்று மாறி மாறி கதை சொல்லும் உத்தியைப் பயன்படுத்தியுள்ளார். அது மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய உத்தி. இல்லையென்றால் வாசகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். நான் பல நாவல்களை இந்த உத்தியில் எழுதியுள்ளேன். டெய்சி அந்த உத்தியை துல்லியமாகக் கையாண்டுள்ளார். இதற்காகவே அவருக்குப் பூங்கொத்து கொடுக்கலாம்.

    இன்றைய குற்றங்களின் பின்னணியில், உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போவதற்கு, காவல் துறையில் உள்ள சில கறுப்பு ஆடுகளே காரணம். வெற்றிவேந்தன் போன்ற நேர்மையான காவலர்கள் பலர் இருந்தாலும் நாவலில் வரும் டிஎஸ்பி போன்ற சில நேர்மை தவறிய சுயநலமிக்கவர்களின் செயல்களால் வெற்றி வேந்தன் போன்றவர்களின் அபாரத்திறமைகள் விரயமாவதும், வேலு போன்ற அப்பாவிகள் பலியாவதும் இந்த தேசத்தின் இன்றைய நிகழ்வுகள்.

    சமுதாயத்தைப் பிரதிபலிக்காத எந்தப் படைப்பும் வெற்றி பெறுவதில்லை. என் ஏராளமான கதைகள் நாட்டு நடப்புகளை அடிப்படையாக வைத்தே எழுதப் பட்டவை. டெய்சியும் இன்றைய சமூகத்தில் காவல்துறையின் ஈரல் அழுகிப் போயிருப்பதைப் படம் பிடித்திருப்பது பாராட்டுக்குரியது.

    க்ரைம் கதைகளை வெறும் கற்பனையை வைத்து மட்டும் எழுதிவிட முடியாது. தொழில்நுட்பம் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவற்றைப் பொருத்தமாகக் கதையில் கொண்டு வந்து சுவாரஸ்யப்படுத்த முடியும்.

    நான் என் ஒவ்வொருநாவலுக்கும் குறைந்தது நான்கு அறிவியல், சட்டம் தொடர்பான புத்தகங்களையாவது படிப்பேன். ஏகப்பட்ட இணையதளங்களுக்கும் சென்று தகவல் திரட்டுவேன். அவற்றையெல்லாம் கதையின் புலன்விசாரணைக்கு உதவியாகக் கொண்டு வரும்போது, கதையின் சுவாரஸ்யம் அதிகரிக்கும் வாசகர்களும் ரசிப்பார்கள்.

    டெய்சியும் கதையில் ஆங்காங்கே தொழில்நுட்பத் தகவல்களைக் பயன் படுத்தியுள்ளது மகிழ்வளிக்கிறது. குறிப்பாக வெற்றிவேந்தன் டெலிபோன் டவருக்கு வந்த போன்கால்களை ட்ரேஸ் செய்து குற்றவாளியைப் பிடிப்பது சுவாரஸ்யம். இதுபோன்ற

    Enjoying the preview?
    Page 1 of 1