Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnai Vidamaatten
Unnai Vidamaatten
Unnai Vidamaatten
Ebook62 pages33 minutes

Unnai Vidamaatten

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Vijaya Chandran
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466954
Unnai Vidamaatten

Read more from Vijaya Chandran

Related to Unnai Vidamaatten

Related ebooks

Related categories

Reviews for Unnai Vidamaatten

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnai Vidamaatten - Vijaya Chandran

    1

    அன்று ஞாயிற்றுக் கிழமை.

    சுந்தர் பைக்கில் வந்து இறங்கினான். பெட்டிக்கடையில் ஒரு சிகரெட் வாங்கி பற்ற வைத்தான். மணியைப் பார்த்தான். பத்து. இன்னும் எட்டு மணி நேரம் எப்படி பொழுதுபோகும் என்று எரிச்சலாக இருந்தது.

    அதைவிட பெரிய கோபம் இப்படி சின்ன ஊரில் கொண்டு வந்து தள்ளிவிட்டுப் போயிட்டாரே என்று தந்தைமீது வருத்தப்பட்டான்.

    இந்த ஊருக்கு வருவதற்கு முன் அப்பாவிடம் எத்தனை முறை போகலைன்னு பிடிவாதம் பிடித்தேன் போய்த்தான் ஆக வேண்டும் நம்ப பரம்பரை வியாபாரத்தை கவனித்தாக வேண்டும். அந்த வியாபாரம்தான் நம்மளைலட்சாதிபதி ஆக்கினது என்று சொல்லியே தள்ளிவிட்டார். கிராமத்தில் கொண்டு வந்து விட்ட தந்தை மீது.

    இத்தனைக்கும் பழமாபுரத்தில் ஒரு உயர்நிலைப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று இரண்டு டீக்கடைகள் இரண்டு மளிகை கடைகள். காலைநேர ஓட்டல் ஒன்று என்று இருந்தன. விவசாயம் நிறைந்த ஊர். சுந்தரின் தானிய மண்டி ஒன்றுதான் பெரியநகரம். கோவையில் வாழ்ந்தவன். இந்த ஊர் பிடிக்கவில்லை. ஒரு முக்கிய காரணம் பெண்கள்.

    அழகான பெண்களைப் பார்ப்பதென்றால் அரிதாக இருக்கும். விவசாய வேலையே கதி என்று கிடப்பார்கள். வெளியே வரக்கூட நேரம் இருக்காது. சைட் அடிக்க பெண்களே இல்லை.

    கோவையில் அவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுதும் படித்து முடித்து வெட்டியாய் ஊரைச் சுற்றி அலைந்த பொழுதும் நாட்கள் எவ்வளவு இன்பகரமாய் கழிந்தன. பஸ்ஸில் சென்றால் பெண்கள் பீச்சிற்கு சென்றால் பெண்கள். சினிமா, பார்க், நாடகம், பொருட்காட்சி என்று செல்லும் இடமெல்லாம் அழகான பெண்கள்.

    சுந்தர் விரல்விட்டு ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தான். பெண்கள் அவனிடம் சுற்றியிருக்கிறார்கள். எதை அனுவிக்க வேண்டுமோ எல்லாமே அனுபவித்து விட்டான். லாட்ஜ் அழைத்து போவதெல்லாம் கை வந்த கலை எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும் வலையில் விழ வைக்கும் தந்திரம் காரணம் பணமும் பலமும் தான்.

    இப்படி ஜாலியாக ஜிம்கானா பாடிக் கொண்டிருந்தவனை வலுக்கட்டாயமாக இப்படி ஒரு நரகத்தில் தள்ளிவிட்டாரே இந்த ராமசாமி எனது அப்பா என்று அப்பாவைத் திட்டினான்.

    ராமசாமி கோவை மாவட்டத்திலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் என்று சொல்லலாம். பணக்காரர் என்ற பந்தாவே கிடையாது. எளிமையாக தன்னைக் காட்டிக் கொள்வார். மஞ்சள் மிளகாய். நெல் அரிசி மண்டி வைத்து மற்றும் காலத்துக்கேற்ற பயிர் செய்யும் பொருட்களையும் விற்பனை செய்வார். அதில்லாமல் லாரி பஸ் என நிறைய ஓடுகின்றன. மூத்தவன் மதன் அப்பாவுடன் சேர்ந்து வியாபாரம் மற்றும் நிர்வாகங்களை கவனித்து வருகிறான். அக்கா மாலதி மலர்மதி இருவருக்கும் திருமணமாகி விட்டது.

    சுந்தர் விளையாட்டுப் பிள்ளை என்கிற நினைப்பில் ஆரம்பத்தில் அவன் போக்கில் விட்டுவிட்ட ராமசாமி நாளாவட்டத்தில் அவனது நடத்தை அவருக்கு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரில் பைக்கில் கண்ட பெண்களை ஏற்றி ஊரைச் சுற்றுவதும் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு

    Enjoying the preview?
    Page 1 of 1