Thedi Vantha Uravugal
()
About this ebook
Read more from Vijaya Chandran
Unnai Vidamaatten Rating: 0 out of 5 stars0 ratingsVaasamilla Malarithu Vasanthathai Thediyathu Rating: 0 out of 5 stars0 ratingsIravukkum Pagalukkum Ini Enna Velai Rating: 0 out of 5 stars0 ratingsUravai Thediya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsAzhiyaatha Uravugal Rating: 0 out of 5 stars0 ratingsEn Aasaikkiliye Rating: 0 out of 5 stars0 ratingsThayin Madiyil Rating: 0 out of 5 stars0 ratingsVithi Ezhuthatha Theerppu Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Oru Vasantham Rating: 0 out of 5 stars0 ratingsAasaikkanavugal and PonVilakku Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thedi Vantha Uravugal
Related ebooks
Aasaikkanavugal and PonVilakku Rating: 0 out of 5 stars0 ratingsSorgathiley Idhu Mudivaanathu Rating: 0 out of 5 stars0 ratingsKannukkoru Vannakkili Rating: 5 out of 5 stars5/5Malare Ennai Nerunkaathe Rating: 4 out of 5 stars4/5மலரே என்னை நெருங்காதே! Rating: 0 out of 5 stars0 ratingsசிந்தனையே என் சித்தமே! Rating: 0 out of 5 stars0 ratingsSinthanaiye... En Siththame! Rating: 0 out of 5 stars0 ratingsThayin Madiyil Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Virumbum Ooruyire! Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakkavillai Nenjam Rating: 5 out of 5 stars5/5Mele Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsAnbe Azhaikkirean Rating: 0 out of 5 stars0 ratingsKathal Rajjiyam Unathu Rating: 0 out of 5 stars0 ratingsMayamaan Rating: 0 out of 5 stars0 ratingsUn Arukil Naan Rating: 4 out of 5 stars4/5Kadaisiyil Rating: 0 out of 5 stars0 ratingsIngeyum Saaral Adikkum Rating: 0 out of 5 stars0 ratingsEngey Naanendru Thedattum Ennai..! Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Uravukkendru Virintha Ullam Rating: 1 out of 5 stars1/5Sevvanathil Oru Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsIrukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Girivalam Rating: 0 out of 5 stars0 ratingsViraivil Vidiyum Rating: 0 out of 5 stars0 ratingsIndru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsKanavu En Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsKunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsகுங்குமக் கோலங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsT.R.vin Thernthedukkappatta Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsமனம் விரும்புதே உன்னை... Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Thedi Vantha Uravugal
0 ratings0 reviews
Book preview
Thedi Vantha Uravugal - Vijaya Chandran
1
அருகில் இருக்கும் அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சன்னதியில் சுப்ரபாதம் ஒலித்தது மணி ஐந்து என்று கண்களை கசக்கி எழுந்தாள் செங்கமலம். முகம். அலம்பி குளித்து பூஜை அறையில் சற்று நேரம் தியானித்து விட்டு வந்தாள்.
அம்மா பால்
பால்காரனின் குரல் கேட்டு பாலை வாங்கி காபி போட்டு படுக்கைக்கு கொண்டு போனாள்.
புவனா காபி ரெடி மணி ஐந்தே முக்கால்
எழுந்தாள்.
முகம் அலம்பி காபியை குடித்தபடியே வாசலுக்கு வந்தாள் குளிர் தென்றல் சுகமாக இருந்தது.
புவனா என்னடி பண்றே?
சும்மாதாம்மா நிற்கிறேன்
மணி ஏழரைக்கு புறப்பட்டாத்தானே பஸ் பிடிச்சுப் போக முடியும்.
வர்றேம்மா
குளித்து பச்சை நிற சாரிக்கு ஏற்ற பிளவுஸ் போட்டு வகிடு எடுத்து அழகாக சீவி கூந்தலில் ஒற்றை ரோஜாவை வைத்து நெற்றியில் சின்னப் பொட்டு வைத்து அழகுச்சிலையாக நின்றாள்.
அழகையும் நல்ல அறிவையும் கொடுத்தவன் ஒரு குறையை கொடுத்திட்டானே என்று மனதிலேயே செங்கமலம் கலங்கினாள்.
டிபனை சாப்பிட்டு வானிட்டி பேக்கை மாட்டிக் கொண்டு புறப்பட்டாள்.
மதியம் சாப்பாடு?
வேண்டாம்மா. பிஸ்கட் இருக்கும்மா போதும்.
நேற்றுப்போன வழி தெரியுமில்ல பேருந்து நிலையத்திற்கு தெரியும்மா கையசைத்து விட்டு நடந்தாள் பேருந்தை பிடிக்க
புதியதாக உருவான குமரன் நகரிலிருந்து பேருந்து நிலையம் விலகி இருந்தது.
பேருந்து நிலையத்தில் பழமாபுரம் என்கிற பெயரை தாங்கி மினி பேருந்து நின்றது ஏறினாள்.
பிறந்த மாவட்டம் என்றாலும் ஊர் புதியதுதானே. பிறந்த மண்ணைத் தேடி கால் பதித்து விட்டோம் என்கிற பெருமை மனதில் ஒரு வித மகிழ்ச்சியை கொடுத்தது..
மணியைப் பார்த்தாள் எட்டு முப்பது. ஒன்பது மணிக்குப் போய் விடும் என்று கண்டக்டர் சொன்னது ஞாபகம் இருந்தது.
காலை நேரம் கூட்டம் இல்லை. மண் சாலைகளில் குலுங்கி குலுங்கி போய் கொண்டிருந்தது. செடி, கொடி மரங்கள் பச்சை பசேல் என்று இருந்தன. பார்க்க பார்க்க ஆசையாய் இருந்தது.
பேருந்து புழுதியை வாரி இறைத்துக் கொண்டு நின்றது. பழமாபுரம் இறங்குங்க என்று கண்டக்டர் குரல் கொடுக்க இறங்கினாள். பிறந்த மண்ணில் கால் வைத்த பெருமை புவனாவை ஆட் கொண்டது.
கடைகள் ஆங்காங்கே முளைத்திருந்தன. கிராமம் என்று சொல்ல முடியாது நடந்தாள். ஆரம்ப சுகாதார நிலையம் நூலகம் ஹோட்டல் என வரிசையாக இருந்தன.
ஒரு பெரியவர் வந்தார்.
ஐயா பள்ளிக்கூடம் எங்கேயிருக்கு என்று கேட்டாள்.
நேரா போங்க மாரியம்மன் கோவில் இருக்கு. அதற்கு மேல்புறம் இருக்கு.
நடந்தாள் பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய பிள்ளைகள் போய் கொண்டிருந்தனர். அவர்களோடு போனாள். காலைநேர பரபரப்பிலும் ஊர் அமைதியாக இருந்தது மிகவும் பிடித்திருந்தது.
பள்ளியில் நுழையும் போதே மணி அடித்தது. மாணவ- மாணவிகள் வரிசையில் நின்றார்கள். காலை பிரார்த்தனை ஆரம்பித்தது. வெளியில் நின்றாள்.
முடிவுற்றதும் தலைமை ஆசிரியர் அறையை தேடிப்போனாள். வணக்கம் செலுத்தவும் தலைமை ஆசிரியர் பதிலுக்கு வணக்கம் தெரிவித்து உட்காருங்க என சேரைக் காட்டினார்.
அமர்ந்தாள்.
சார் நான் புதுசா பள்ளிக்கூடத்துக்கு வந்திருக்கிற ஆசிரியை.
முன்னாடியே சர்க்குலர் வந்ததுங்க
ஆர்டரை நீட்டினாள்.
தலைமை ஆசிரியர் ஒரு முறை ஆர்டரை படித்து பார்த்து விட்டு நிமிர்ந்தார்.
பெயர் புவனா. அழகான பெயர் பெயருக்கேற்ற அழகுதான் என்று மனதிலேயே பேசினார்.
டீச்சர் நான் ஒன்று கேட்பேன் தவறா நினைச்சுக்க மாட்டீங்களே?
கேளுங்க சார் என்றாள்.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் ஊராட்சியிலிருந்து மாற்றலாகி வந்திருக்கீங்க. உங்க சொந்த ஊரா கரூர் மாவட்டம்?
ஆமாங்க ஐயா. பிழைக்கப்போன இடம் அங்கேயே படிச்சு வேலை வாங்கினேன். சொந்த ஊர் பக்கம் வந்திடலாமுன்னு கவுன்சிலிங்கில் மாற்றல் கேட்டு வந்துட்டேன் குடும்பத்தோடு
பிறந்த மண்ணை நேசிக்கிறீங்க. உங்களோட நல்ல எண்ணம் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. வாழ்த்துக்கள்
சில இடங்களில் கையெழுத்துப் போட்டு விட்டு அமர்ந்திருந்தாள்.
இன்றைக்கு முதல் நாளே வகுப்பு எடுக்கிறீங்களா?
பார்க்கிறேன் சார்
தலைமை ஆசிரியர் நாராயணமூர்த்தி சக ஆசிரியை, ஆசிரியர்களிடம் புவனாவை அழைத்து போய் அறிமுகப்படுத்தினார். கிராமங்களில் அரசுப் பள்ளிகள் வெறிச்சோடி கிடக்கும். பழமாபுரம் பள்ளியில் நடுநிலைப்பள்ளி என்று சொல்ல முடியாது உயர்நிலைப்பள்ளி போல மாணவ- மாணவிகள் நிறைய இருந்தனர்.
புவனாவிற்கு மூன்றாம் வகுப்பு ஒதுக்கினார் தலைமை ஆசிரியர். மாணவ- மாணவிகளிடம் புவனாவை அறிமுகப்படுத்தினார்.
அனைத்து மாணவ- மாணவிகளிடமும் பெயரை கேட்டாள், கூறினார்கள். புதிய வேலை பார்க்கும் இடம், மாணவ- மாணவர்கள் செயல் எல்லாமும் பிடித்திருந்தன. பாடம் நடத்தினாள். லஞ்ச் டைமில் சக ஆசிரியர்களிடமும் பேசினாள்:
பள்ளி முடித்து மாலை மினி பேருந்தை பிடித்து வீட்டிற்கு வந்தாள்.
செங்கமலம் முகம் மலர காபி எடுத்து வந்தாள்.
புவனா! இந்த ஊர் பள்ளிக்கூடம் சக ஆசிரியர்கள் பிடிச்சிருக்கா?
பிடிச்சிருக்கும்மா. இயற்கை அழகும் பச்சை பசேரென வயல் வெளிகள் நிறைந்த ஊர். அமைதியும் அடக்கமும் நிறைந்த ஊர். ஆசிரியர்களும் பிடிச்சிருக்கும்மா.
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தனர் அம்மாவும், மகளும். நான் சமையல் வேலையைப் பார்க்கிறேன். நீ கொஞ்சம் ஓய்வெடு என்று கூறி செங்கமலம் சமையலறைக்குள் போனாள்.
2
மாலைநேரம் மனது என்னமோ போல இருந்தது. மாடிக்குப்போனாள். மாலை நேரக் காற்று மனதிற்கு இதமாக இருந்தது. கீழே பார்த்தாள் மாடிப்படிகள் தீப்பெட்டி போல அழகாகவே தெரிந்தது.
அலைபேசி அலறியது.
யாராக இருக்கும்? எண்களைப் பார்த்தாள். உயிர்த் தோழி பாரதி தான்.
பாரதி புவனா தான் பேசறேன். நல்லாயிருக்கியா? இருக்கேன்.
புது ஊர் வேலை பார்க்கிற இடம் எப்படி?
பாரதி எல்லாமே நல்லாயிருக்கு.
நீ என்னைப் பிரிஞ்சி போனதிலிருந்து நான் தனியாக தவிக்கிறேன். என்னாலே இருக்கவே முடியலை புவனா.
நம்ம நட்பு இன்றா நேற்றா. பள்ளி வாழ்க்கையிலிருந்து டீச்சர் டிரெனிங். அப்புறம் வேலையும் ஒரே இடத்திலேயே பார்த்தோம்: எளிதில் மறக்க முடியுமா? நானும் உன்னை விட பிரிவை தாங்க முடியாமல் இருக்கிறேன். சூழ்நிலைகள், சந்தர்ப்பங்கள் தம்மை பிரிச்சுடுச்சு. பிரிய நான் தான் காரணம் என்று நிறைய நேரம் நினைச்சு வருத்தப்படுவேன்.
புவனா நீ காரணம் இல்லை. ஒவ்வொருத்தருக்கும் இப்படித்தான் வாழ்க்கை என்று தலையில் எழுதியிருக்கோ, அது நடந்து தான் தீரும். கண்டதையும் நடந்து முடிந்து போனதை நினைச்சு மனதை குழப்பிக்காதே. நினைத்த மாதிரி எதுவும் நடந்திட்டா வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை.
புவனாவின் விசும்பல் பாரதிக்கு கேட்டது.
என்னடி புவனா அழறியா?
இல்லை பாரதி என்று மறைத்தாள்.
பாரதி அம்மா, அப்பா, அக்கா நல்லாயிருக்காங்களா கேட்டதாக சொல்லுடி.
சொல்கிறேன் அம்மா எப்படி இருக்காங்கடி. பேச சொல்லுடி.
நான் மாடியில் இருக்கேன். அம்மா கீழே இருக்காங்க. நாளைக்கு பேச சொல்கிறேன். இந்த புவனாவை தினமும் கண்டுக்கடி
நான் தினம் பேசுகிறேன். போதுமா?
பாரதி. நாங்க குடியிருந்த வீட்டில் தென்னை மரம், கொடுக்காபுளி மரம், மல்லிகைப்பூச்செடி எல்லாத்தையும் பார்த்துக்க ஏன்னா நான் ஆசையா வைச்சு வளர்த்தது.
பார்த்துக்கிறேன். புவனா அம்மா ஏதோ வல்லத்தில் விசேஷமாக போயிட்டாங்க. சமையல் நான் தான் செய்யணும். போனை கட் பண்ணட்டுமா.
சரி பாரதி.
அலைபேசியை கட் பண்ணினாள்.
செங்கமலம் வந்தாள்.
யாருடனோ பேசின மாதிரி தெரிஞ்சது.
அம்மா நம்ம பாரதி உங்களை விசாரிச்சாம்மா.
சரி. வா கீழே சாப்பிடலாம்.
மணி என்னம்மா?
ஆறு முப்பது.
உனக்கு பிடிச்ச ஜவ்வரிசிப் பாயாசம் வைச்சிருக்கேன்.
பாயாசமா என்று வேகமாக கீழே இறங்கினாள்.
வாசலில் வேன் நின்றது..
என்ன வேன் வந்திருக்கு? செங்கமலம் புரியாமல் நின்றாள்.
ஒரு இளைஞன் இறங்கி வந்தான்.
கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்லேயிருந்து வர்றோம். மளிகை சாமான்கள் ஆர்டர் பண்ணினீங்கல்ல சாமான்கள் கொண்டு வந்திருக்கேன்.
இறக்கி வைத்து பட்டியல் சரிபார்த்து விட்டு பில்லைக் கொடுத்து இரண்டாயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு போனார்கள்.
புவனா நீ பாயாசம் சாப்பிடு. சாமான்களை எடுத்து வைக்க வேண்டிய இடத்தில் வைக்கிறேன்..
இல்லேம்மா நானும் உதவி பண்றேன் என்று உதவி செய்தாள். வேலை எல்லாம் முடித்து சாப்பிட்டு படுக்க மணி ஒன்பது ஆயிடுச்சு.
புவனாவுக்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். பழைய ஞாபகம் கண் முன்னே நின்றது. வெகுநேரம் மனதை அலைய விட்டு அப்புறமாக தன்னையும் மறந்து தூங்கி விட்டாள்.
நேற்று காலை நேரம் உடற்பயிற்சி செய்ய கணேஷ் மாடிக்கு வந் தான். பக்கத்து மாடியில் புவனா நைட்டியுடன் துவைத்த துணிகளை காயப் போட்டு கொண்டிருந்தாள். அழகான பெண். புதியதாக குடி வந்திருக்கிறாள். புவனாவையே பார்த்தான்.
அவன் கண்களுக்கு புவனா அழகு ரோஜாவாக தெரிந்தாள். இளமை தேவியின் கண்மணி மனது படபடத்தது. மனம் அலைபாய தொடங்கியது. கண்கள் அவளையே வட்டமிட்டன. உடற்பயிற்சியை மறந்தான்.
புவனர் மாடியிலிருந்து இறங்க ஆரம்பித்தாள். கண்களுக்கு விருந்தில்லையே என கவலையுடன் உடற்பயிற்சியை தொடங்கினான்.
புவனா அவனை கண்டாலும் கண்டு கொள்ளாதவளாக