Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sevvanathil Oru Natchathiram
Sevvanathil Oru Natchathiram
Sevvanathil Oru Natchathiram
Ebook125 pages45 minutes

Sevvanathil Oru Natchathiram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குயில்பாறை கிராமத்தில் பெண்களுக்கான கிச்சன், பாலிடெக்னிக் கல்லூரி, சுயதொழில போன்ற வகுப்புகள் நடத்தி வத்தார் அருண். அவரின் உடல்நலம் மோசமடைய அத்தை மகள் நிவேதாவின் ஞாபகம் வருகிறது. ஒரு நட்சத்திரமாக 'நிவேதா' வருவாளர்? மீண்டும் வாருங்கள் அந்த வருகையை வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateAug 12, 2023
ISBN6580166809898
Sevvanathil Oru Natchathiram

Read more from V. Usha

Related to Sevvanathil Oru Natchathiram

Related ebooks

Reviews for Sevvanathil Oru Natchathiram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sevvanathil Oru Natchathiram - V. Usha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்

    Sevvanathil Oru Natchathiram

    Author:

    வி. உஷா

    V. Usha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/v-usha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    நேற்றைய இரவு நல்ல உறக்கம் வாய்த்திருந்தது.

    அதனால் ஐந்து மணிக்கு தானாக விழிப்பு வந்துவிட்டது.

    எழுந்து காலை வேலைகளை முடித்துக்கொண்டு நிவேதா சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

    அடுப்புக்கு மேலே இருக்கும் ஜன்னலின் கதவுகளைத் திறந்து, மெல்லிய புதுக் காற்றின் குளிர்ச்சியை உணர்ந்தாள். கண்கள் தாமாக மூடிக்கொண்டன. அர்ச்சனா சொல்வது நினைவுக்கு வந்தது. ‘ரசனையான எந்த விஷயத்தை அனுபவிக்கும்போதும் விழிகள் தாமாக மூடிக்கொள்ளும்!’

    எழுந்துட்டியா நிவேதா? என்று அம்மாவின் குரல் கேட்டது.

    ஆமாம்மா... குட் மார்னிங்... நல்ல தூக்கம்... பத்தரைக்கு கண் மூடினதுதான் தெரியும்... விழிச்சப்போ அஞ்சு மணி. ரொம்ப நாளைக்குப் பிறகு இப்படி நல்ல தூக்கம் கிடைச்சுது. இரு, உனக்கும் காபி கலக்கறேன்!

    நல்லது. நீயாவது தூங்கினாயே.

    ஏம்மா?

    எனக்கு பொட்டுத்தூக்கம்கூட சரியாக வாய்க்கலே நிவேதா. பொரண்டு பொரண்டு படுத்துக்கிட்டே இருந்தேன்...

    அடடா... முதுகு வலியா அம்மா? டெய்லரிங் வேலை அதிகமாக செய்தாயா? என்று அவள் சற்றுக் கவலையுடன் கேட்டாள்.

    அதெல்லாம் ஒண்ணுமில்லே... ஏதோ யோசனை... ஒண்ணு மாத்தி ஒண்ணு... தூங்கவே விடாத அளவுக்கு!

    அலுத்துக்கொண்டே முகம் கழுவி தலைமுடியை விரல்களால் சீராக்கி முடிச்சு போட்டுக் கொண்டாள் அம்மா.

    டிகாக்க்ஷன் அளவாக இறங்கியிருந்தது.

    பால் காய்ந்தவுடன் இரண்டு டம்ளர்களில் விட்டு நுரைபொங்க ஆற்றிவிட்டு அம்மாவிடம் கொடுத்தாள். தானும் எடுத்துக்கொண்டு வந்து உட்கார்ந்தாள்.

    ஏதோ சொல்ல ஆரம்பித்த அம்மாவிடம், மொதல்ல சூடா காபியைக் குடி அம்மா... பிறகு பேசலாம். உனக்கு ஃபில்டர் காபி ரொம்பப் பிடிக்கும் இல்லே? என்று புன்னகைத்தாள்.

    ஆமாம்... கல்யாணம் ஆனதும் அப்பா மொதல்ல தனிக்குடித்தனத்திற்கு வாங்கின பொருளே இந்த காபி ஃபில்டர்தான்!

    தெரியும்... தெரியும். குடி.

    மெல்ல விடிந்து கொண்டிருந்தது.

    எதிர் வீட்டு கோமதியக்கா வாசல் பெருக்கி நீர் தெளிக்கும் ஓசை கேட்டது. இரண்டு மாடுகள் நிதானமாக மணி அசைத்தபடி, நடக்கும் சப்தம், ஏதோ ஒரு கிளையில், ஏதோ ஒரு குயில் பாடும் பாட்டு, அவ்வப்போது தெருவைக் கடக்கும் இரு சக்கர வாகனங்களின் ஒலி என்று புதிய நாள் பூமிக்குக் கிடைக்க ஆரம்பித்துவிட்டது.

    இன்று அலுவலகத்தில் செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன என்று தானாக ஒரு யோசனை வந்தது. பெரிதாக ஒன்றும் இல்லை என்பதுதான் உண்மை. ஆட்கள் குறைக்கப்பட்டு விட்டார்கள், வேலைகள் குறைந்து விட்டதைப் போலவே! பூரணி, சிவகுமார், லாரன்ஸ், வாசுகி என்று அவள் டீம் எவ்வளவு பெரிதாக இருந்தது என்று நினைத்துப் பார்த்தாள். இன்று அவளும் லாரன்ஸும் மட்டும்தான். திக்கென்ற ஒரு இறுக்கம் வந்து தொண்டையைப் பிடித்தது. ஆனால், உடனே எண்ணப் போக்கை மாற்றிக் கொள்ள விரும்பினாள். பாவம், அம்மா வெகுளிதான். ஆனால், மகள் விஷயத்தில் கூர்மதி வாய்க்கப் பெற்றவள். சிறு அறிகுறி காட்டும் முகத்தை வைத்தே மனவோட்டத்தைக் கண்டுபிடித்து விடுவாள்.

    காபி சூப்பர் நிவேதா. அப்பா இருந்தால் ரசிச்சு பாராட்டியிருப்பார்... எனக்கு அந்த அளவு சொல்லத் தெரியாது. அருமையான காபி நிவேதா... என்று அன்றைய நாளின் முதல் புன்னகையை அம்மா வெளியிட்டான்.

    தாங்க்ஸ் அம்மா. நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு... வெந்தயக் குழம்பு, கீரைதானே? செய்துவிடுகிறேன். உன் கண்ணெல்லாம் ரொம்ப சோர்வாக இருக்கு அம்மா...

    நீ வேலைக்குக் கிளம்பினதும் நான் என்ன செய்யப் போகிறேன் சொல்லு... அப்போ படுத்துக் கொள்கிறேன்... சமையலை நான் பாத்துக்குறேன் நிவேதா.

    இல்லேம்மா... இன்னும் முழுசா விடியக்கூட இல்லை. என்ன அவசரம் சமையலுக்கு? நீ போய் படு... என் பொறுப்பு இன்னிக்குக் கிச்சன். போ அம்மா. என்று காலி டம்ளர்களை எடுத்துக்கொண்டு போனாள் அவள்.

    சோபாவிலேயே அம்மா படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். சமையலறை விளக்கை அணைத்துவிட்டு, கீரைக்கட்டை எடுத்துக்கொண்டு உணவு மேஜையிடம் போனாள் அவள். உள்ளே மறுபடியும் அலுவலகக் கவலைகள் மேலோங்கின. ஆட்குறைப்பு என்ற கத்தி தலை மேல் ஆடிக்கொண்டிருப்பதை அவள் உணர்ந்தே இருந்தாள். வேலை பறிபோகும் அபாயம் எல்லா நிமிடங்களிலும் இருக்கிறது. எந்த நேரத்திலும் அந்தக் கெடுதல் நிகழலாம். அதுதான் நிலைமை. ஆனால், அவளால் அதைத் தடுக்க முடியுமா?

    சேர்ந்த புதிதில் வசீகரமான கம்பெனிதான் அது. எட்டுக் கிளைகள் தென்னிந்தியாவில்! தலைமை அலுவலகம் மைசூரில்! இன்ஃபோசிஸ் கம்பெனியில் பெரிய பதவியில் இருந்த லிங்கப்பா என்பவர்தான் வெளியில் வந்து இந்த லிங்கம் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். மூன்று வருடங்களுக்கு முந்தைய வெற்றிக்கதைதான் அது. பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து நல்ல மதிப்பெண்களுடன் வெளியில் வந்த அவளின் வேலைவாய்ப்பு மனு அடுத்த நாளே ஏற்கப்பட்டது. புதிய சென்னைக் கிளைக்கு நியமன ஆர்டர் கொடுத்தார்கள். கல்லூரியைவிட்டு வெளியில் வந்த அடுத்த மாதமே இங்கே வேலை வாய்ப்பு என்பது மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. அப்பாவும் உடல் நலிவுற்று விருப்ப ஓய்வு கொடுத்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தில் அப்போது இருந்ததால், இந்த சாஃப்ட்வேர் வேலையும் ஊதியமும் காலத்தே செய்த உதவியாக இருந்தது.

    ஆனால், காலம் என்ன கருணைதேவனாகவே எப்போதும் இருக்கிறதா என்ன?

    அப்பாவும் இப்போது இல்லை.

    வேலையும் இப்போதோ அப்போதோ என்கிற ஊஞ்சலாட்டத்தில் இருக்கிறது.

    செல்பேசி அழைத்தது.

    அர்ச்சனாவின் எண்கள்!

    சொல்லு அர்ச்சனா. குட் மார்னிங்... என்று வாசற் பக்கம் போனாள் நிவேதா.

    ஜானி செத்துப்போயிட்டான் நிவேது. அர்ச்சனா ஓவென்று அழுதாள். அவள் விம்மல் செல்போனை மீறி காதுகளில் அறைந்தது. "என்ன? ஜானியா. என்ன

    Enjoying the preview?
    Page 1 of 1