Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Raththiname Kannammaa
Raththiname Kannammaa
Raththiname Kannammaa
Ebook130 pages1 hour

Raththiname Kannammaa

By Usha

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJul 1, 2018
ISBN9781043466206
Raththiname Kannammaa

Read more from Usha

Related to Raththiname Kannammaa

Related ebooks

Reviews for Raththiname Kannammaa

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Raththiname Kannammaa - Usha

    26

    1

    "டீச்சர்..."

    கரும்பலகையில் கணக்குப்பாடம் அல்ஜீப்ரா தொடர்பான பார்முலாவை எழுதத் தொடங்கிய மிருணாளனி, அந்த மெல்லிய குரலைக் கேட்டுத் திரும்பினாள். பொன்னி எழுந்து நின்றிருந்தாள். அவளுக்குப் பின்னால் புஷ்பா, திலகவதி, உமா, சரணவன், பாலையா, ராபர்ட், சிவகுமார் என்று ஒவ்வொருவராக எழுந்து நின்றார்கள். இறுதியில் அந்த ஐந்தாம் வகுப்பு மொத்தமுமே எழுந்து நின்றது.

    ஆச்சரியத்துடன் அவள் ஓரடி எடுத்து முன்னால் வைத்து என்னடா கண்ணுகளா, என்ன விஷயம்? எல்லாரும் ஒரே நேரத்துல எந்திரிச்சு நிக்கறீங்களே, முக்கியமா ஏதாவது? இப்படி நான் பார்த்ததே இல்லையே இந்த ஸ்கூல்ல சேர்ந்ததுல இருந்து? என்றாள் புன்னகையுடன்.

    பொன்னியின் முகம் சற்று வாடியது. மற்றவர்களும் பதில் சொல்லாமல் நின்றார்கள்.

    ஏய் குட்டிகளா? என்னடி ஆச்சு? ஏன் நின்னுட்டிருக்கீங்க? என்ன சொல்லணும்னாலும் உக்கார்ந்துகிட்டே சொல்லலாம். சரியா? சிட் டவுன், சிட்டவுன் டியர்ஸ்... என்று அவள் சிரித்தாள்.

    டீச்சர்... வந்து... அது... என்று பொன்னியின் குரல் இழுத்தது.

    எது வந்து...? சொல்லுடாம்மா...

    டீச்சர்... உங்களுக்கு... உடம்பு... சரியா... இல்லையா டீச்சர்?

    என்னது...? யார் அப்படி சொன்னது?

    நான் தான் டீச்சர்... என்று முன்னால் வந்தான் சிவகுமார்.

    நீயா...? ஏம்ப்பா அப்படி சொன்னே? நல்லாத்தானே இருக்கேன் நான்?

    இல்லே டீச்சர்... ஸாரி டீச்சர்

    ஸாரியா? ஏன் ஸாரி?

    நேத்து நீங்க போன்ல உங்க பிரெண்டு கூட பேசிட்டிருந்ததை நான் கேட்டுட்டேன் டீச்சர்...

    அப்படியா? பரவாயில்லேப்பா சிவக்குமார்... என்ன பேசினன்னு நினைவில்லையே எனக்கு...

    உடம்பு சரியில்லேன்னு சொன்னீங்க... படுத்தா தூக்கம் வரலேன்னு சொன்னீங்க... அதுக்கு உங்க பிரெண்டு என்ன சொன்னாங்கன்னு தெரியலே டீச்சர்... உடனே நீங்க சிரிச்சீங்க... அந்த சிரிப்பு ரொம்ப அழகா இருந்துச்சு டீச்சர், ஓவியம் மாதிரி...

    அட... என்று திகைப்புடன் சிரித்தபடி அவள் கேட்டாள். இவ்வளவு கவனிச்சிருக்கியா நீ? வெரிகுட்... இப்படி அப்சர்வேஷன் இருக்கிறதும் ஒரு திறமைதான்... சரி, அதுக்கு ஏன் வகுப்பு முழுக்க கவலைப்பட்டு நிக்கறீங்கன்னுதான் தெரியலே எனக்கு.

    உங்க உடம்புக்கு என்ன டீச்சர்?

    நெஞ்சுல வலியா டீச்சர்?

    ஏன் டீச்சர் தூக்கம் வரலே?

    உங்களுக்கு ஒண்ணுன்னா எங்களால் தாங்க முடியாது டீச்சர்...

    வேற யார் வந்து பாடம் சொல்லிக் கொடுத்தாலும் எங்களுக்கு பிடிக்காது டீச்சர்...

    மதுரை ஆஸ்பிடலுக்கு போயிட்டு வாங்க டீச்சர்...

    உடம்பு முக்கியம் டீச்சர்

    ஓகே... ஓகே... ஓகே... என்று இரு கைகளாலும் குழந்தைகளை அணைத்துக் கொண்டு புன்னகைத்தாள் அவள். சடாரென்று இரண்டு துளிகள் விழிகளை நனைத்துவிட்டன.

    எனக்கு ஒண்ணுமில்லேடா கண்ணுங்களா... உங்க அத்தனை பேரோட அன்பையும் சுமக்கறதால என் இதயம் கொஞ்சம் தள்ளாடுது... ஏன் இவ்வளவு அன்புத்தொல்லை கொடுக்கிறேன்னு செல்லமா கோபப்படுது... அதனால லேசா வலி வருது அப்பப்ப... வேற ஒண்ணுமில்லடா கண்ணுகளா... ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்குடா தங்கங்களா... என் மேல இவ்வளவு பாசமா இருக்கீங்களடா... இதை விட வேறு என்னடா வேணும் எனக்கு?

    அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைத்தது. இப்போதும் மின்னல் போல் சுருக்கென்று ஒரு வலி வந்து இதயத்தை தைத்து விட்டுப் போனது. ஒரே ஒரு கணம்தான். மறுகணமே பழையபடி இயல்பாகிவிட்டது. என்ன அன்பு இது?

    பிரதிபலன் எதிர்பார்க்காத குழந்தைகளின் தூய்மையான மனம். இதுதான் அழகு. உலகின் மிக உன்னதமான அழகு இது தான்.

    சரி கண்ணுங்களா... என்று சட்டென்று கண்களை துடைத்துக் கொண்டு அவள் நிமிர்ந்து புன்னகைத்தாள். நீங்க சொன்ன மாதிரி என்ன ஏதுன்னு பாத்துடறேன்... என்னதான் பிரச்சனை இருதயத்துலன்னும் செக் பண்ணிடறேன்... சரியா? திருப்தியா,?

    ஓகே டீச்சர்... தாங்க் யூ டீச்சர்... என்று வகுப்பு உற்சாகமாகக் கத்தியது.

    உட்காரலாமா எல்லோரும்?

    சரி டீச்சர்

    கணக்குப் பாடம் படிக்கலாமா?

    படிக்கலாம் டீச்சர்

    வெரிகுட்... சூப்பர்...

    அவள் கரும்பலகைக்குத் திரும்பினாள்.

    அன்றைய பாடத்தை எளிமையாக சொல்லிக் கொடுத்தாள். புரியாத ராபர்ட்டுக்காக மறுபடி ஒரு தடவை விளக்கினாள். கணிதத்தின் மிக சுவாரஸ்யமான பகுதியான அல்ஜீப்ரா, விடைத்தாளில் சரியாக போடப்படும்போது மிக சுலபமாக மதிப்பெண்களை அள்ளிக் கொண்டு வந்து தரும் என்று எடுத்துச் சொன்னாள். ஏ பிளஸ் பீஹோல் ஸ்கொயர் என்று அடிப்படை பார்முலாவை குழந்தைகளின் அறிவுடன் சேர்த்துவிட்டு, அடுத்த தலைப்பிற்குப் போனபோது, வகுப்பு ஆர்வத்துடன் கவனித்தது.

    சட்டென்று செழியனின் நினைவு வந்தது.

    இந்த அன்பிற்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல அவன் நேசம் என்று தோன்றியது.

    ஏனோ இந்த நிமிடமே அவனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. சிரமப்பட்டு தன்னை மீட்டுக் கொண்டு அவள் அல்ஜீப்ராவிடம் திரும்பினாள்.

    2

    "முதலாளி..." என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டது.

    செழியன் திரும்பவில்லை.

    அரை நிமிடம் கழித்து மறுபடியும் அதே குரல்.

    முதலாளி... உங்களைத்தான்...

    அவன் இன்வாய்ஸ்கள், பில்கள் இரண்டையும் சரி பார்த்தபடி இருந்தான்.

    செழியன் அண்ணா... உங்ககிட்ட பேசத்தான் வந்தேன்... பேசலாமா?

    புன்னகையுடன் திரும்பினான் அவன்.

    சுந்தரம் நின்றிருந்தான். கைகளை குறுக்கே கட்டிக் கொள்வதும், பிசைவதுமாக ஏதோ ஒரு சங்கடம் தெரிந்தது.

    எத்தனை முறை சொல்லியிருக்கேன் சுந்தரம், முதலாளின்னு கூப்பிடக்கூடாதுன்னு? நான் சொன்னால் கேட்க மாட்டியா?

    அய்யோ அப்படி இல்லேண்ணா... என்று பதறினான் சுந்தரம். நீங்க சொன்னா எப்படின்னா நான் கேட்காம இருப்பேன்? நான் சாப்பிடற ஒவ்வொரு பருக்கை சோறும் நீங்க போட்டது அண்ணா...

    பிறகு ஏன் அப்படி கூப்பிட்டே, முதலாளி முதலாளின்னு?

    தப்புண்ணா... உங்க மனசு தெரியும்னா... இருந்தாலும் ஏதோ அவசரத்துல...

    அவசரமா? என்ன அவசரம்?

    வந்து... வந்து... பர்மிஷன் வேணும்னா... நாலு மணிக்கு கெளம்பணும்...

    சரி... போயிட்டு வா சுந்தரம்...

    ஏன்னு கேக்கலையேண்ணா...

    செழியன் முறுவலித்தான். உன்னைத் தெரியாதா சுந்தரம் எனக்கு? வேலைல கருத்தா இருப்பே, பங்க்சுவாலிடி ஒழுக்கம்னு பாத்துக்குவே... எல்லார்கிட்டயும் இனிமையா பழகுவே... பர்மிஷன் கேட்கிறே... நிச்சயமா அது தேவையானதாத்தான் இருக்கும்... கரெக்டா?

    சுந்தரம் சற்று நெகிழ்ச்சியுடன் படபடத்தான்.

    தாங்க்ஸ்ணா... ஆமாண்ணா... என் நண்பன் கோபாலோட அம்மாவுக்கு முட்டில ஆபரேஷன்... அரசு ஆஸ்பத்திரில தான்... மேஜர் ஆபரேஷனாம்... ஆறு பாட்டில் ரத்தம் தேவையாம்... டொனேஷனா வேணுமாம். எங்களை மாதிரி ஏழை குடும்பம்ணா... அதான் போய் ரத்ததானம் செய்யலாம்னு...

    வெரிகுட் சுந்தரம்... நானும் வரலாமா? உன்னை மாதிரியே நானும் டிசிப்ளினா வாழறவன்தான்... என் ரத்தமும் சுத்தமாத்தான் இருக்கும்...

    அய்யோ... அதுக்கில்லேண்ணா... கோபால் ஆறு பேருக்கு ஏற்பாடு பண்ணிட்டாண்ணா... தேவைப்பட்டா உங்க நம்பரை அழைக்கிறேன்

    சரி... இரு... என்று செழியன், டேபிள் டிராயர் திறந்து ஐநூறு ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்தான். அம்மாவுக்கு பழம் வாங்கிட்டுப் போ சுந்தரம்... எல்லாம் நல்லபடியா ஆகும். கெளம்பு...

    "சார்... வந்து... எதுக்கு சார்...

    Enjoying the preview?
    Page 1 of 1