Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Minsaara Kannaa
Minsaara Kannaa
Minsaara Kannaa
Ebook102 pages1 hour

Minsaara Kannaa

By Usha

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 200 novels and 100+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466251
Minsaara Kannaa

Read more from Usha

Related to Minsaara Kannaa

Related ebooks

Reviews for Minsaara Kannaa

Rating: 4.2 out of 5 stars
4/5

5 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Minsaara Kannaa - Usha

    19

    1

    அழகும் அறிவும் சேர்ந்த பெண்கள் சில பேர் இருக்கலாம்... அதோடு

    அன்பும் சேர்ந்த அபூர்வப்

    பிறவிகள் கூட இருக்கலாம்...

    பாரதி திரும்பி சாலையைப் பார்த்தாள்.

    அரவிந்தன் புள்ளியாய்த் தெரிந்தான்.

    மனசுக்குள் மத்தாப்பு மலர்ந்தது.

    ‘எவ்வளவு அழகிய நடை! என்ன கம்பீரமான தோற்றம்!

    முன்பிறவி என்பதெல்லாம் உண்மையென்றால் இவன் ராஜகுமாரனாகத்தான் பிறந்திருப்பான். சாதாரண குறுநில மன்னனாகக் கூட அல்ல. பேரரசையே கட்டிக் காக்கின்ற பட்டத்துச் சக்கரவர்த்தியாக!’

    எப்போதும் போல மனது அதை நினைத்தது.

    காற்று, தன்னோடு குளிரைச் சேர்த்துக் கொண்டு வந்து உடலைச் சில்லிட வைத்தது. ஒரு பெரிய அலையை வெகுவேகத்துடன் அடித்துக் கொண்டு வந்து கரையில் தள்ளி விட்டுப் போனது.

    குட்மார்னிங் பாரதி...

    அரவிந்தன் புன்னகை அணிந்திருந்தான்.

    பொலிவான முகம்.

    இந்திய நிறத்தை விடக் கூடுதல் நிறம்.

    கண்களில் வெளிப்பட்ட நேர்மையே அவன் கம்பீரத்துக்கு அணிகலன் சேர்த்த மாதிரி இருந்தது.

    அழகு என்பதே அலாதியான ஒன்றுதான்.

    அது ஆணுக்கு என்றாலும் சரி; பெண்ணுக்கு என்றாலும் சரி...

    பார்ப்பவர் மனதில் வெறும் தோற்றம் மட்டுமேதான் முதல் முத்திரை பதிக்கிறது.

    குட்மார்னிங் அகெய்ன்... - அவன், அவள் அருகிலே அமர்ந்தான்.

    புன்னகையை விரிவுபடுத்திக் கொண்டான்.

    குட்மார்னிங் அர்விந்த்... சற்றே வெட்கத்துடன், நீங்க சொன்னதை சரியா கவனிக்கலே... என்றாள்.

    பார்வை என்னவோ என் மேலதான் இருந்தது...!

    மனசும்தான்... ஆனா முற்பிறவில இருந்தது...

    அதென்ன புதுக்கதை?

    நீங்க ஒரு சக்ரவர்த்தியா இருந்திருப்பீங்களோன்னு அடிக்கடி தோணும் எனக்கு...

    ஏன்...? ஏன்?

    அழகான உடல் அமைப்பு... கச்சிதமான முகம்... நடைல தெரியற கம்பீரம்... எ கம்ப்ளீட் பெர்ஸனாலிடி...

    நான் ராஜான்னா நீ ராணிதானே?

    அதெப்படி!

    எனக்குச் சொன்னதெல்லாம் உனக்கும் பொருந்துமே...

    வஞ்சப் புகழ்ச்சி அணியா?

    சேச்சே... என்ன பாரதி நீ? - அவன் மென்மை தவழும் குரலுடன் அவள் பக்கம் திரும்பினான்.

    உன் பெருமை உனக்குத் தெரியாது. அழகும் அறிவும் சேர்ந்த பெண்கள் சில பேர் இருக்கலாம்... அதோடு அன்பும் சேர்ந்த அபூர்வப் பிறவிகள் கூட இருக்கலாம்... ஆனா பெருந்தன்மை, விட்டுக் கொடுக்கறது, யாரையுமே தாழ்த்தி நினைக்காதது... இந்த மாதிரி ஸ்பெஷல் குணங்களோட, அழகு அன்பு அறிவுன்னு சேர்ந்த ரத்தினம் நீ...!

    வியப்புடன் அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

    மனசு சின்னப் பெண் மாதிரி துள்ளிப் பறந்தது.

    அவளைப் பற்றி அவளுக்குத் தெரியும்.

    அழகு தாய் கொடுத்தது.

    நற்குணங்கள் தேடித் தேடி வளர்த்துக் கொண்டது.

    ஒரு நல்ல மனிதப் பிறவியாக தான் இனம் காணப்பட வேண்டும் என்று மெல்ல மெல்ல அடைந்த பரிணாம வளர்ச்சி.

    ‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால் - உனக்கு

    மாலைகள் விழ வேண்டும்...

    ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று

    போற்றிப் புகழ வேண்டும்’

    இதைப் போல் எத்தனையோ பாடல்கள் நெஞ்சுக்குள் விதைத்த விதை! பாரதி என்று காரணப் பெயர் வைத்த தந்தையின் ஆசை.

    தன்னைப் பற்றி அடக்கமாகவேதான் அவள் எப்போதும் நினைத்துக் கொள்வாள் என்றாலும், ஒரு ஆணின் வாயால் அதுவும் அரவிந்தன் போன்ற ஒரு நல்ல மனிதனின் வாயால் அதைக் கேள்விப்படும்போது கன்னம் சிவந்துதான் போயிற்று.

    ப்ளஸ் இந்த அழகான வெட்கம்...!

    தலை குனிந்தாள். புன்னகைத்தாள்.

    ப்ளஸ் இந்த ரோஜாப்பூ புன்னகை...

    போதும் அர்விந்த்... என்றாள் கடல் பக்கம் திரும்பி.

    ஒரே சூப்பர் மூட்ல இருக்கீங்க போலிருக்கு. வந்ததுல இருந்து மூட்டை மூட்டையா ஐஸை தலைல எறக்கிட்டே இருக்கீங்களே...!

    நெஜத்தைச் சொல்றேன் பாரதி...

    வேண்டாம் அர்விந்த்...

    ஏம்மா?

    இகழ்ச்சி மட்டுமில்லே... புகழ்ச்சி கூட ஒரு நல்ல மனுஷனை, தான் நடக்கற பாதைல இருந்து சற்றே இடறி விட்டுடும்...

    புகழ்ச்சிக்கு மயங்கற மனிதனுக்குத்தானே?

    நா மட்டும் மனுஷியில்லையா?

    இல்லே...

    என்னது? இல்லையா?

    தே... வ... தை...! - ஒவ்வொரு எழுத்தாக அவன் அனுபவித்து உச்சரித்தான்.

    ஓ... அர்விந்த்... கமான்... - அவள் மறுபடி முகத்தை அலைகளின் பக்கம் திருப்பிக் கொண்டாள்.

    என்ன ஆயிற்று அரவிந்துக்கு? இப்படி முகத்துக்கெதிராகப் புகழ்பவன் இல்லையே... காரணமின்றி யாரையும் தூக்கி வைப்பவனும் இல்லை.

    ‘குட்’ என்கிற ஒரே ஒரு சின்ன வார்த்தை, அவன் உதடுகளால் உச்சரிக்கப்படுகிறதென்றால், அந்தப் பாராட்டுக்குரிய விஷயம் நூற்றுக்கு இருநூறு பர்சென்ட் தரமாகத்தான் இருக்கும்.

    இன்றைக்கு எத்தனை பாராட்டுக்கள்?

    தந்தையை மனம் கனிவுடன் நினைத்தது.

    வானத்தைப் பார்த்து மானசீகமாகக் கும்பிட்டது.

    தாயைக் கனிவுடன் நினைத்தது.

    ஏதாவது அம்மாவுக்கு வாங்கிப் போக வேண்டும் என்று நெகிழ்ந்தது.

    என்ன பாரதி... அமைதியாய்ட்டே...?

    ஏதாவது பேசுங்க அர்விந்த்...

    அலைகளைப் பாத்தா என்ன தோணுது உனக்கு...?

    அஃறிணையா இருந்தாலும் மனிதனைவிட உயர்ந்ததோன்னு தோணுது...

    எதுக்காக?

    கரையை மீறாத அலைகள், சத்தியத்தை மீறாத சத்புத்திரர்களாகத் தெரியலையா?

    அது இயற்கையோட நியதி...

    மனுஷனுக்கும் அதே இயற்கைதானே அறிவையும் கொடுத்திருக்கு?

    மனுஷன் நம்பகமானவன் இல்லையா?

    Enjoying the preview?
    Page 1 of 1