Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pattaampoochigal Parakkum Kaalam
Pattaampoochigal Parakkum Kaalam
Pattaampoochigal Parakkum Kaalam
Ebook124 pages1 hour

Pattaampoochigal Parakkum Kaalam

By Usha

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJul 1, 2018
ISBN9781043466206
Pattaampoochigal Parakkum Kaalam

Read more from Usha

Related authors

Related to Pattaampoochigal Parakkum Kaalam

Related ebooks

Reviews for Pattaampoochigal Parakkum Kaalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pattaampoochigal Parakkum Kaalam - Usha

    24

    1

    வினோ அக்கா வந்தாலே எங்களுக்கு ஜாலிதான்... அக்கா வாங்கக்கா... கதை சொல்லுங்க உக்காருங்க மொதல்ல...

    என் பக்கத்துல வாங்கக்கா... உங்களை பக்கத்துல இருந்து பார்க்கணும்னு எப்பவும் ஆசை எனக்கு...

    அதெப்படிக்கா எப்பவும் புதுப்புதுக் கதையா சொல்றீங்க...? இன்னிக்கு என்ன கதைக்கா...?

    நிஜக்கதை, காக்கா கதை; புராணக்கதை எது வேணும்னாலும் சொல்லுங்கக்கா... உங்க கதை எல்லாமே சூப்பரா இருக்கும்க்கா...

    குழந்தைகள் வினோவைச் சூழ்ந்து கொண்டார்கள். பலாப்பழத்தை மொய்க்கிற ஈக்கள் போல, எந்த செயற்கையும் இல்லாத இயற்கை அழகாக இருந்தது அந்தச் சூழல். முகங்களில் இருந்த உற்சாகமும், ஆர்வமும் பார்ப்போர் உள்ளங்களைக் கவர்கிற வகையில் இருந்தது அந்தக்காட்சி.

    வினோ முடிந்த வரையில் கைகளை நீட்டி எல்லாகுழந்தைகளையும் அரவணைத்துக் கொண்டாள். மழை பெய்த நிலம் போல உணர்வுகள் குழைந்து, மலர்ந்து சிரித்த முகத்துடன் அவள் குழந்தைகளுக்கு நடுவில் உட்கார்ந்து கொண்டாள்.

    தாங்க்யூ குட்டீஸ்... நான் சொல்கிற கதைகள் அவ்ளோ பிடிச்சிருக்கா உங்களுக்கு? ஸோ ஸோ கைன்ட் ஆஃப் யூ குட்டீஸ்... இன்னிக்கு நான் சொல்லப்போற கதை ரொம்ப சுவாரஸ்யமானது. புராணம் இல்லே, குருவி இல்லே, சிங்கமும் இல்லே...

    பகத்சிங் கூட இல்லையாக்கா? என்றது ஒரு வாண்டு.

    இல்லடா நட்டூ... நான் சொல்லப் போறது ஒரு அருமையான சாப்பாடு ஐட்டம் பத்தி...

    ஹை... ஹை... ஜாலி ஜாலி... நான்கைந்து குரல்கள் ஒன்றாகக் கூவின.

    பர்கர் கதையாக்கா? இல்லே பீட்சாவா? இத்தாலில இருந்து வந்ததுதான் பீட்சான்னு ஒரு முறை சொன்னீங்களேக்கா...

    கரெக்ட் கண்ணுங்களா! இத்தாலில இருந்து வந்ததுதான் பீட்ஸா... வெரிகுட், நல்லா நினைவு வெச்சிருக்கீங்களே...? இப்ப நான் சொல்லப் போறது நம்ம நாட்டு உணவு பத்தி... அதிலயும் தமிழ்நாட்டு உணவு...

    சொல்லுங்கக்கா... உணவுல கூட கதை இருக்கா...?

    நீங்கள்லாம் பெரிய பசங்களா வளர்ந்துகிட்டு வரீங்க இல்லையா? அதனால மெல்ல மெல்ல நாம வரலாறுகளுக்கு மாறலாம். ஓ.கே.வா? உணவு என்கிறதும் வரலாறு தான்... நாகரீகம் எப்படி தோன்றியது, நீர் நெருப்பை மக்கள் எப்போ உபயோகப்படுத்த தொடங்கினாங்க, எப்படி பயன்படுத்தினாங்க, சமையல் என்கிறதை உலகத்தில் முதன் முதலா யார் செய்யத் தொடங்கினாங்க... எல்லாமே சரித்திரம் தான்...

    குழந்தைகள் உன்னிப்பாக கவனித்தார்கள்.

    வினோ புன்னகையுடன் தொடர்ந்தாள்.

    சரி... ஒரு சின்னக்விஸ்... உலகத்துல நிறைய உணவுகள் இருக்கு... நீங்க சொன்னது போல பர்கர், பீட்சா, பாஸ்தா நெறைய இருக்கு... இதுல உலக உணவுக்கழகம் மிக நல்ல உணவுன்னு ஒண்ணை சுட்டிக்காட்டுது... அது என்னன்னு தெரியுமா யாருக்காச்சும்?

    பிரெட்தானே? என்றாள் தனா.

    இல்லே... சப்பாத்திதான் என்றான் சரவண்.

    இல்லவே இல்லே... பரோட்டாதான்

    போடா முகில்... பரோட்டா இல்லே... தோசை தான்

    தோசையா? அதுல எண்ணை மிதக்கும்டா வாசு... இட்லிதான் சிறந்த உணவு... சரியாக்கா? என்றபடி அவளைப் பெருமிதத்துடன் பார்த்தான் விஷால்.

    பாதி கரெக்ட் கண்ணு... என்று அவன் தோளைத் தட்டிவிட்டு அவள் தொடர்ந்தாள். ஆவில வெந்த உணவு என்னிக்கும் உடலைக் கெடுக்காதுன்னு சொல்லுறது உண்மைதான். ஆனா நம்ம வீடுகள்ல என்ன பண்றாங்கன்னா ஒரு வாரத்துக்குத் தேவையான மாவை அரைச்சு வெக்கிறாங்களா? என்னதான் ஃபிரிட்ஜ்ல வெச்சாலும் அது புளிச்சிடும்... புளிச்சாலே அமிலத்தன்மை வந்திடும்... குடல்ல அமிலம் சேரும்போது ஏப்பம், நெஞ்செரிச்சல், அரிப்பு இப்படி நோய்கள் வரும்... அதனால் இட்லி, தோசையை விட சிறப்பான உணவு ஒண்ணு இருக்கு... என்ன தெரியுமா?"

    யோசனையுடன் பார்த்து தெரியலேக்கா என்றார்கள் குழந்தைகள்.

    இட்ஸ் ஓகே... நான் சொல்றேன்... உண்மையா பாத்தா பொங்கல்தான் சிறந்த உணவு. இஞ்சி, மிளகு, கருவேப்பிலை, நெய் தாளிச்சு, அரிசியும், பாசிப்பருப்பும் குழைஞ்சு வேகிற பொங்கல் தான் உடலால் சுலபமா செரிக்க முடிஞ்ச உணவு... தொட்டுக்க தேங்காய் சட்டினி வெச்சு சாப்பிட்டா அதைவிட ருசியான பிரேக் ஃபாஸ்ட் உலகத்துலேயே இல்லே... சரியா? இனிமே மரியாம்மா கொடுக்கிற பொங்கலை ஆர்வமா சாப்பிடணும். சரியா குட்டீஸ்? வாட் டெல்லிங்...? வினோ சிரித்தாள்.

    நிச்சயமாக்கா... பொங்கல்ல இவ்வளவு விஷயம் நல்ல சத்து இருக்குன்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சது. நிச்சயமா இனிமே நாங்க ஆசையா சாப்பிடுவோம்க்கா... என்றான் வில்லியம் விரிந்த கண்களுடன்.

    அனிதா எழுந்து வினோவின் அருகில் வந்தாள்.

    முகத்தையே பார்த்தாள்.

    என்னடா அனி? கேளுடா...

    அக்கா... வீடுகள்ல பிரிட்ஜ்ல வெப்பாங்க இட்லி மாவைன்னு சொன்னீங்களே... வீடு எப்படிக்கா இருக்கும்?

    திடுக்கிட்டாள் வினோ. சடாரென்று இரு துளி நீர் எட்டிப் பார்த்தன இமைகளை மீறிக்கொண்டு.

    2

    மரியம் சிஸ்டர் கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, அவள் ஒரு நிமிடம் காத்து நின்றாள்.

    எப்படி இருக்கே வினோ? என்று குரல் கேட்டது.

    திரும்பினாள்.

    பரத் நின்றான்.

    மெல்லிய புன்னகை அவன் முகத்தை மிகப்பெரிய ஓவியம் போல மாற்றியிருந்தது. பெரிய விழிகள் அமைதியைத் தாங்கிக் கொண்டு இதத்தை விநியோகித்தன. இந்த உயரத்திற்கும் வலிமைக்கும் ஈடு கொடுப்பது போன்ற சாந்தமான முகம், தோற்றத்தை மிக வசீகரமான சிலையாக மாற்றியிருக்கும் அதிசயத்தை வியப்புடன் பார்த்தாள் வினோ.

    ஏய்... வினோ... என்ன ஆச்சு? என்று அவன் சிரித்தபிறகே இயல்புக்கு வந்தாள் அவள்.

    ஸாரி பரத்... உன் தோற்றமே முழுசா மாறியிருக்கு... ஐ மீன், யூ ஆர் ஸோகுட் நவ்... மூணு மாசமா நாம சந்திக்கலே... அதுக்குள்ள உன்கிட்ட ஏற்பட்டிருக்கிற மாற்றம், ரொம்ப அழகா இருக்கு... கிரேட்...

    வாவ்! ரியலி? தாங்க் யூ வினோ... உண்மையைச் சொல்லணும்னா இதையெல்லாம் நானும் சொல்லணும் உன்கிட்டேன்னுதான் நெனைச்சேன்... நீயும் ரொம்ப க்யூட்டா, ரொம்ப ப்ளசன்ட்டா இருக்கே... பார்பி டால் மாதிரி...

    அவன் சிரித்தான்.

    ஸாரி உனக்கு பொம்மைகள், பார்பி டால் இப்படி பேசினா பிடிக்காதுன்னு தெரியும்... சட்டுனு இந்த உவமைதான் நினைவுக்கு வந்தது...

    அடடா! ஸோ வாட் பரத்...? சரி நீ எப்படி இருக்கே...? மூணு மாசம் எப்படி போச்சு? லீவு முடிஞ்சுதா?

    நல்லா படிக்கமுடிஞ்சுது வினோ... எப்படியும் ஐ.ஏ.எஸ். பிரிலிமினரி பாஸ் பண்ணிடுவேன். அதுக்கு இந்த மூணு மாச கோச்சிங்கும் உழைப்பும் உதவி பண்ணிடும். பட், அடுத்த லெவல் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு...

    அப்படியா? கவலைப்படாதே பரத்... இதே மாதிரி கொஞ்சம் ஷார்ட் ஒர்க் பண்ணு போதும்... யூ வில் கெட்.

    தாங்க்யூ... இட் மீன்ஸ் எலாட் டு மீ வினோ... சரி சொல்லு நீ என்ன பண்றே?

    Enjoying the preview?
    Page 1 of 1