Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aathmaavin Kolangal - Nedunkathaigal
Aathmaavin Kolangal - Nedunkathaigal
Aathmaavin Kolangal - Nedunkathaigal
Ebook115 pages1 hour

Aathmaavin Kolangal - Nedunkathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1964-இல் மதுரையில் பிறந்து வளர்ந்தவள். அவரது தந்தையார், காலம்சென்ற திரு.பேரை.சுப்ரமணியன், (South Central Railways, Secunderabad) எழுத்தாளர். 1960-இல், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள், எழுதிப் பல பரிசுகள் பெற்றவர். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியர். அவரது தாய்.திருமதி.சரஸ்வதி சுப்ரமணியம், அவரை எழுதச் சொல்லி ஆசி வழங்கியவர்.

1988-ல் இவரது சிறுகதைகள் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர், போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.

2009 லிருந்து இணையத்தில் எழுத ஆரம்பித்து,. கட்டுரைகள், கவிதைகள், ஹைகூ கவிதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கதைகள் ஆகிய படைப்புகள் இணைய தளத்தின் முன்னணி வார இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை, மூன்றாம்கோணம்,சிறுகதைகள்.காம் போன்ற வலை தளங்களிலும், குங்குமம் தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580120002338
Aathmaavin Kolangal - Nedunkathaigal

Read more from Jayasree Shanker

Related to Aathmaavin Kolangal - Nedunkathaigal

Related ebooks

Reviews for Aathmaavin Kolangal - Nedunkathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aathmaavin Kolangal - Nedunkathaigal - Jayasree Shanker

    http://www.pustaka.co.in

    ஆத்மாவின் கோலங்கள் - நெடுங்கதைகள்

    Aathmaavin Kolangal - Nedunkathaigal

    Author:

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    Jayasree Shanker

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jayasree-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆத்மாவின் கோலங்கள்

    நல்லதோர் வீணை…!

    ஆத்மாவின் கோலங்கள்

    ஜெயஸ்ரீ ஷங்கர், தில்லை

    அதிகாலை நேரம்... சூரியன் சோம்பல் முறித்து எழுந்து நிமிர்ந்து மூடிய கண்களைத் திறக்கிறான். மெல்ல மெல்ல ஒளிக்கீற்றுகள் கதவைத் தட்ட பூமியும் கண் விழிக்கிறது.

    நித்யா... நித்யா.... நித்யா! எத்தனை தடவை கேட்கிறேன்..... சரின்னு ஒரு வார்த்தை சொல்லேன்.... ப்ளீஸ்... படுக்கையை விட்டு எழுந்திருக்காமலே... நேற்று ராத்திரி தான் விட்ட இடத்திலிருந்து மறுபடியும் ஆரம்பித்து தேன்மொழி கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

    இப்பவே ஆரம்பிச்சுட்டியா..... சும்மா நை... நை... ன்னு என்னை தொல்லை பண்ணாதே...! கொஞ்ச நேரம் அமைதியா இரேன்.. நான் முக்கிய வேலையா இருக்கேன்... இப்போ.. புரிஞ்சுக்கோ. தங்கையை கெஞ்ச விட்டுக் கொண்டே கவனம் சிதறாமல் விரல்களுக்கு மெல்ல மெல்ல நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தாள் டாக்டர் நித்யா.

    தேன்மொழி இன்னும் கொஞ்ச நேரம் கெஞ்சட்டும் என்று மனம் எதிர் பார்த்து நேரம் கடத்திக் கொண்டிருந்தது.

    இருந்தாலும் சொன்னாள், காலையில எழுந்து போய் பல்லைத் தேய்... என்னைப் பார்த்தியா, நான் அதுக்குள்ளே குளிச்சிட்டேன்.

    அதனால் என்ன...? நீ என்ன சமையலாப் பண்றே? அம்மா தானே பண்றாங்க... காலேல நீ பண்ற வேலையப் பாரு.. நகத்துக்கு கலர் அடிச்சுக்கிட்டு...! பெரிய பீத்தல்.... குளிச்சிட்டேன்... என்று அழகு காமித்தாள்... தேன்மொழி.

    நித்யா தேன்மொழியின் பொய் கோபத்தைக் கண்டு சிரித்தாள்.

    நித்யா.. நித்யா.. ப்ளீஸ் நித்யா.... இந்த ஒரு தடவை மட்டும் உன்னோட கனடா நாட்டு மாப்பிள்ளை எப்படித் தான் இருக்கார்னு ஏர்போர்ட்லயே போய் நின்னு பார்த்துடறேன்.... இதுல எனக்கு ஒரு திரில் தெரியுமா? இதை நான் மிஸ் பண்ண மாட்டேன். என்னோட செல்ல அக்கா நீ.. உனக்கு வரப் போற அந்த புண்ணியவானை நான் தான் மொத மொதல்லப் பார்க்கணும்... பிறகு தான் அவரோட அப்பா அம்மாவே அவ்ளோ ஏன்.... நீயே.... பார்க்கணும்.. புரிஞ்சுதா..?

    எப்பிடி என் ஐடியா..? குழந்தை மனத்தில் கேட்டாள் தேன்மொழி.

    நல்லா.... இருக்கு... உன் நினைப்பு...! அப்பா அம்மாவுக்குத் தெரிஞ்சா நாம ரெண்டு பேரும் அவ்ளோ தான். தொலைஞ்சோம். ஆமா... அதென்ன... இந்த ஒரு தடவை மட்டும்.. ன்னு அழுத்திக் கேட்கிற நீ... அப்போ அடிக்கடி இது மாதிரி நடக்குமா என்ன..? நீ நினைக்கிறது சரியில்லை.. அப்பா அம்மா கிட்ட ஒரு வார்த்தை கேளு... தேன்மொழி..! என் மனசுக்கு இது சரியின்னு தோணலை... இது தப்பு தெரியுமா? வரப் போற என் கணவனை நீ முதலாய்ப் பார்க்கணும்னு ஏன் இப்படித் துடிக்கிறே..?

    என்ன தப்பு...? என்ன பெரிய தப்பு...? யாருக்கும் தெரியாமப் போகப் போறேன்... பார்த்துட்டு உனக்கு ஒரு போனைப் போட்டு ரன்னிங் கமெண்ட்டரி தரப் போறேன்... அப்டியே ஜூட்.. ன்னு திரும்பிப் பார்க்காமல் வரப் போறேன்... நானென்ன உன் கனடா மாப்பிள்ளையை இழுத்துக் கொண்டு கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமான்னு ஓடப் போறேனா..?

    "நீ செய்தாலும் செய்வாய்! என்னைவிட நீ தான் சாமர்த்தியக்காரி. இந்த இன்ட்ரெஸ்டை நீ படிப்பில் காமி.. அப்பாக்கு எப்பவும் உன் கவலை தான். எம்.பி.எ படிக்கிறான்னு தான் பேரு... ஒரு நாளாச்சும் நீ புக்கைத் தொட்டுருக்கியா..?

    எனக்கு இப்போ உன் மாப்பிள்ளை கவலை...! எப்போ பாரு அட்வைஸ் பண்ணாதே.. நித்யா... எல்லாம் படிச்சுக்கலாம்.

    தேன்மொழி.... ஆனாலும் உனக்கு இவ்ளோ வாய் ஆகாது... தப்புன்னா அதுக்கு வேற மாதிரி அர்த்தம் இல்லை... அவர் எப்படியும் பெண் பார்க்க இன்னும் ரெண்டு நாளில் இங்க தான் வரணும்.... அன்னிக்கே பார்த்துக்கலாமே.. அதுக்குள்ளே உனக்கும் எனக்கும் என்ன அவசரம்.? உனக்கு தான் இது மாதிரி வேண்டாத ஆசை எல்லாம் எப்படித் தான் தோணுதோ? நான் சொல்றது சரிதானே.... நீ சொன்னாக் கேட்க மாட்டே.. !

    சரி.... சரி எனக்கு கிளினிக் போகணும்.. உன்னோட பேசிகிட்டு இருந்தா, இன்னைக்கு அவ்ளோ தான். பேஷன்ட்ஸ் வந்து காத்திட்டு இருப்பாங்க.நான் லேட்டாப் போனா சாபம் போடுவாங்க... வருமானமும் கோவிந்தா! நான் கிளம்பறேன்பா... உன்னோட உட்கார்ந்து நேரம் போக்க என்னால முடியாதுடா சாமி என்று கையைக் கூப்பி.. பிறகு விரல்களை திருப்பித் திருப்பி தான் போட்ட பாலீஷ் அழகா இருக்கான்னு பார்த்துக் கொண்டே கிளம்புகிறாள் நித்யா.

    அவள் ஒரு மகளிர் மருத்துவர். படிப்பு முடிந்து, ப்ராக்டிஸ் முடிந்து தனியாக ஒரு கிளினிக்கும் வைத்துக் கொண்டு கைராசியான டாக்டர் என்று பெயரும் எடுத்து விட்டு... இப்போது எடுத்த பெயரைக் காப்பாற்ற கழுத்தில் ஸ்டெதெஸ்கோப்பும் காலில் சக்கரமும் கட்டிக் கொண்டு ஓடுபவள் .

    சரி நித்யா நீ கிளினிக் போ.... நான் இப்போ.... உன் மாப்பிள்ளையைப் பார்க்கப் போவேன்.. போவேன்.. போவேன்...

    அதுவும் உன் ஸ்கூட்டரில் தான்! இப்பவே சொல்லிட்டேன்... பிறகு என் வண்டியை எடுக்காதேன்னு நீ புதுசா ஒரு சட்டம் போடக் கூடாது... ஆமாம்...

    எப்டியோ போ....! நீ சொன்னாலும் கேட்க மாட்டே... சுயமாவும் புரிஞ்சுக்க மாட்டே..... உனக்கு புத்தி வரதுக்குள்ளே நான் கிழவியாயிடுவேன். என்னை நீ எந்த வம்பிலும் மாட்டாம இருந்தால் சரி. உனக்குச் செல்லம் கொடுத்து உன் இஷ்டப் படி விட்டு விட்டு உன்னை ரொம்ப கெடுத்து வெச்சாச்சு.... இப்போ உன்னோட பிடிவாத குணம் தான் உன்னை ஆளுது. இது உன்னை எங்கே கொண்டு போயி நிறுத்தப் போகுதோ தெரியலை. ஓட்டும் போது ரோட்டைப் பார்த்து ஓட்டு, சினிமா போஸ்டர் விஜய் சிரிப்பில் மயங்கி எங்கியாச்சும் விழுந்து வைக்காதே.. மறக்காம ஹெல்மெட் மாட்டிட்டுப் போ. என்ன...?

    நிறுத்து..... நித்யா.. இப்போ நீ உன் அட்வைஸைக் கொஞ்சம்.. நிறுத்து...! என்னை

    Enjoying the preview?
    Page 1 of 1