Inimai Kanavugal Thodrattume
By Maheshwaran
()
About this ebook
தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.
இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.
குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.
வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.
மிக்க அன்புடன்
மகேஷ்வரன்
Read more from Maheshwaran
Varuvean Naan Rating: 5 out of 5 stars5/5Aayiram Kodi Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsLinga Pura Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsPachaikili Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Thoppu Marmam Rating: 5 out of 5 stars5/5Iravum Pagalum Un Uruvam Rating: 0 out of 5 stars0 ratingsThappithu Vidu... Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vennila Rating: 0 out of 5 stars0 ratingsTick.. Tick.. Thik. Rating: 4 out of 5 stars4/5Mayanginean Solla Thayanginean Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Kobam Varum! Rating: 0 out of 5 stars0 ratingsRaja Nagam Rating: 0 out of 5 stars0 ratingsManal Sirpangal Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Naanuranga Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mudiyavillai...! - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsThanga Kappal Rating: 0 out of 5 stars0 ratingsUn Manasula Naan Irukkena? Rating: 0 out of 5 stars0 ratingsThik Thik Thilothi Rating: 0 out of 5 stars0 ratingsUyirai Pirikka Mudiyuma? Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Suduginrathe! Rating: 0 out of 5 stars0 ratingsKangal Seitha Mayam Enna Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalin Pon Veedhiyil... Rating: 0 out of 5 stars0 ratingsEn Vasam Naanillai...! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Oviyam Kaiyil Serumo! Rating: 0 out of 5 stars0 ratingsYaarathu... Nenjalli Ponathu? Rating: 0 out of 5 stars0 ratingsMayanguthu Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsNilavey Ennai Nerungathey! Rating: 0 out of 5 stars0 ratingsThalaivan Sooda… Nee Malarnthai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Inimai Kanavugal Thodrattume
Related ebooks
Thalaivan Sooda… Nee Malarnthai Rating: 0 out of 5 stars0 ratingsAathmaavin Kolangal - Nedunkathaigal Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Jeevaney..? Rating: 5 out of 5 stars5/5Unnai Pol Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsபொன் வானம் பன்னீர் தூவுது... Rating: 0 out of 5 stars0 ratingsPon Vaanam Panneer Thuvuthu Rating: 0 out of 5 stars0 ratingsMarainthirunthu... Rating: 0 out of 5 stars0 ratingsPoo Pookkum Osai Rating: 5 out of 5 stars5/5Unmeethu Nyabagam... Rating: 0 out of 5 stars0 ratingsInba Athirchi Nilaiyam Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Aayiram Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Pattampoochi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalin Pon Veedhiyil... Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mudiyavillai...! - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsSanthanamalar Sirithathu Rating: 0 out of 5 stars0 ratingsசந்தனமலர் சிரித்தது! Rating: 0 out of 5 stars0 ratingsNinaikka Therindha Manamey! Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naan Swasikiren… Rating: 0 out of 5 stars0 ratingsRosap Poovu Lesaai Saavu Rating: 5 out of 5 stars5/5Anbe Aaruyire... Rating: 0 out of 5 stars0 ratingsகனவுகள் தந்தாய் எனக்கு Rating: 0 out of 5 stars0 ratingsKanavukal Thandhaai Enakku Rating: 0 out of 5 stars0 ratingsEn Manathu Ondruthaan..! Rating: 4 out of 5 stars4/5Penmaiyin Niram Venmai Rating: 0 out of 5 stars0 ratingsVaanamadi Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsவானமடி நீ எனக்கு... Rating: 0 out of 5 stars0 ratingsKodimalar Rating: 5 out of 5 stars5/5
Reviews for Inimai Kanavugal Thodrattume
0 ratings0 reviews
Book preview
Inimai Kanavugal Thodrattume - Maheshwaran
http://www.pustaka.co.in
இனிமை கனவுகள் தொடரட்டுமே
Inimai Kanavugal Thodrattume
Author:
மகேஷ்வரன்
Maheshwaran
For more books
http://pustaka.co.in/home/author/maheshwaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
1
கதவு தட்டப்பட்டது.
உறக்கம் கலையாதவனாய் புரண்டு படுத்தான் ஷியாம். இம்முறை சற்றே பலமாய் கதவு தட்டப்படவே விசுக்கென எழுந்து விட்டான். இரு உள்ளங் கைகளையும் பரபரவென தேய்த்து கன்னத்தில் ஒற்றிக் கொண்டு இமைகளை மெதுவாய் பிரித்தான்.
நேர் எதிரே சுவர்ப்பரப்பில் பர்மா தேக்கினால் உருவாக்கப்பட்ட கலைநயமிக்க கடிகாரக் கூண்டிற்குள் இருந்து பச்சை வர்ணம் பூசப்பட்ட பொம்மைக்கிளி... தன் சிவப்பு வர்ண அலகை வெளியே நீட்டி... ஐந்துமுறை கீ... கீ... கீ... கீ... கீ... என கத்திவிட்டு... கூண்டிற்குள் மறைந்து போனது.
'ஓ மை காட்.. நாலரைக்கே எழ வேண்டும் என அலாரம் வைத்துவிட்டு படுத்தேனே....! சரியாய் நாலரை மணிக்கு அலாரம் சிணுங்கியிருக்கும். என்னால்தான் எழ முடியவில்லையோ? நேற்றைக்கு எஸ்டேட்டில் காய்கறி தோட்டத்தில் தொழிலாளர்களோடு சேர்ந்து ஓடி ஓடி வேலை செய்ததன் காரணமாக... உடம்பில் அசதி ஏற்பட்டு அதன் காரணமாகத்தான் அயர்ந்து தூங்கிவிட்டேனோ...?'
ஷியாம் பரபரப்பாய் படுக்கையை விட்டு குதித்து... தட்டப்பட்ட அறைக்கதவை வேகமாய் போய் திறந்தான்.
ஷியாம் என்னாச்சு...? விடியற்காலம் நாலரைக்கே அலாரம் வெச்சு எழுந்துடப் போறதா சொன்னியே?
அறை வாசலில் நின்று... ஆச்சர்யமாய் புருவங்களை உயர்த்தினாள் நாகரத்தினம்.
ஸாரிம்மா... நான் அலாரம் வெச்சது உண்மைதான்... ஆனா எழ முடியலை... தோட்டத்துல நேத்தைக்கு... தொழிலாளர்கள் குறைவா... இருந்தாங்களா... நானும் கூட எறங்கி வேலை செய்தேன்... அடிச்சுப் போட்டாப்ல தூங்கிட்டேன். நீங்க வந்து கதவைத் தட்டாமப் போயிருந்தா... நா எழறதுக்கு ஏழரை மணி ஆகியிருக்கும்...
என்றான்.
பரவால்ல ஷியாம்... இப்பவாச்சும் எழுந்திரிச்சியே... சீக்கிரமா குளிச்சு கெளம்பி போ...! காலை எட்டு மணிக்கு நீ திருச்சி விமானநிலையத்துல இருந்தாகணும். சிங்கப்பூர்ல இருந்து வரப் போற தியாவுக்கு இங்கே யாரையும் தெரியாது.... நீதான் அவளை வரவேற்று பத்திரமா கூட்டி வரணும்..
என்றாள் கனிவானக் குரலில்.
தியாவுக்கு என்னை தெரியும்தானே...?
தோள்களைக் குலுக்கினான்.
அதான் அப்பப்ப உன்னோட புகைப்படத்தை அவளுக்கு அனுப்பி வெச்சுகிட்டே இருக்கியே....! தியா இப்பத்தான் உன்னை மொதமொதலா நேர்ல பார்க்கப்போறா...! ஆனாலும் பார்த்ததுமே உன்னை அடையாளம் கண்டுக்குவா... உனக்கு எந்த சிரமும் இருக்காது...
ஓகேம்மா... இதோ பத்தே நிமிஷத்துல கெளம்பிடுறேன்...
சொல்லிவிட்டு குளியலறையை நோக்கி நடந்தவன் ஏதோ நினைத்தவனாய் நாகரத்தினம் பக்கம் திரும்பினான்.
அம்மா... நீங்களும் என் கூட ஏர்போர்ட்டுக்கு வர்றதுக்கென்ன...? தியா ரொம்ப சந்தோஷப்படுவாளே...
ம்ஹூம்.. தியா இப்பத்தான் இந்த பங்களாவுக்குள்ளே காலை எடுத்து வெய்க்கப் போறா... அவளை நான்தான் ஆரத்தி எடுத்து உள்ளே கூட்டிப் போகணும். அதுமட்டுமில்லை.. தியாவுக்கு பரிமாறதுக்கு விதவிதமான பதார்த்தங்களை என் கையாலேயே தயார் பண்ணி வெய்க்கணும்.. அதனாலதான் நான் உன்கூட வரலை... முதல் சந்திப்பிலேயே முதல் விருந்திலேயே தியா பிரமிச்சுப் போகணும்... இந்த பங்களாவிலேர்ந்தும் நம்ம எஸ்டேட்டிலேர்ந்தும்... கௌம்பி மறுபடியும் சிங்கப்பூருக்கு போகணும்ங்கிற நெனைப்பே அவளுக்கு வரக்கூடாது...
அதை சொல்கிறபோதே நாகரத்தினத்தின் முகம் சுடர்விட்டு எரிகிற நெய்தீ விளக்காய் ஒளிர்ந்தது.
தியாவைப்பற்றி நாகரத்தினம் தன் மனசுக்குள் நிறைய கனவுகளை விதைத்து வைத்திருந்தாள்.
ஷியாம்.. நீ தியாவை விமானநிலையத்துல பார்த்ததும் அவ கையில் பூங்கொத்தை கொடுத்துதான் வரவேற்கணும்... சரியா...?
காஸ்ட்லியான பொக்கேவுக்கு நேத்தைக்கே ஆர்டர் பண்ணிட்டேன்... ஏர்போர்ட்டுக்கு போறதுக்கு முன்னாடியே பொக்கே என் கைக்கு வந்துடும்...
புன்னகையை சிதறவிட்டவனாய் குளியலறைக்குள் நுழைந்தான் ஷியாம்.
கொல்லி மலைப் பகுதியை ஆண்ட ராஜபரம்பரையின் வழி வந்தவன் ஷியாம்.
திருச்சி காலேஜில் எம்.பி.ஏ படித்தவன். கோல்டு மெடல் ஸ்டூடண்ட்.. அவனுடைய திறமைக்கும் படிப்பிற்கும் இந்தியாவிலும் சரி, வெளிநாட்டிலும் சரி பெரிய பெரிய நிறுவனங்களிலேயே வேலை கிடைக்கும். கைநிறைய சம்பளமும் தருவார்கள். கடல் கடந்து தூர தேசங்களுக்கெல்லாம் சென்று லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் உலக நாடுகளையெல்லாம் சுற்றிப் பார்க்க வேண்டும் என அவனுக்கு கொள்ளை ஆசை.
அரண்மனையாட்டம் இருக்கற நம்ம பங்களா... நூத்துக் கணக்கான ஏக்கர்ல பரவி கெடக்கற இந்த எஸ்டேட். நம்மையே நம்பி இருக்கற தொழிலாளர்கள்... எல்லாத்தையும் நீதான்பா இனி ஆயுசுக்கும் நிர்வகிக்கணும். என்னையோ உங்கப்பாவையோ ஒருநாள் கூட பிரியக் கூடாது... எங்களோட கண் பார்வையிலேயே நீயும், உன்னோட பாச நிழல்லயே... நாங்களும் கடைசி காலத்தை ஓட்டிடுறோம்.. நீ எங்கேயும் போகக் கூடாது... உன்னை படிக்க வெச்சது கவுரவத்துக்காகத்தான் ஷியாம்...
கண்களில் நீர் மல்க தழுதழுத்த குரலில் மன்றாடியபடியே அவனுடைய கைகளை இறுக்கமாய் பற்றிக் கொண்ட நாகரத்தினத்தின் வார்த்தைகளை அவனால் எள்ளளவும் மீற முடியவில்லை.
ஷியாமின் தந்தை மார்த்தாண்டனுக்கு பக்கவாதம் பாதித்து ஏழு வருடங்களாகிறது. லட்சக் கணக்கில் பணத்தை வாரி இறைத்தும் மார்த்தாண்டனை முழுமையாய் குணப்படுத்த முடியவில்லை. ஒரு பக்க தேகம் முழுவதும் செயலிழந்து போய்விட்டது.
பெரும்பாலும் படுக்கையிலேயேதான் கிடப்பார்.
எப்போதாவது நினைத்துக் கொண்டால் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு நாகரத்தினத்தை தள்ளச் சொல்லி அறையைவிட்டு வெளியே வருவார்.
நாகரத்தினம் அதிகம் படிக்கவில்லையென்றாலும் மார்த்தாண்டனுக்கு பிறகு அவள்தான் எஸ்டேட்டின் நிர்வாகத்தை கவனித்துக்கொண்டாள்.
இப்போது... நாகரத்தினத்திற்கும் வயதாகிவிட்டது.
நின்றால் நடந்தாள் மூச்சு வாங்குகிறது.
உடம்பு முன்புபோல ஒத்துழைப்பது கிடையாது… சமீப காலமாக ஷியாமிடமே எல்லா பொறுப்புகளையும் ஒப்படைத்து விட்டாள்.
எஸ்டேட்டில் ஏராளமான நிலங்கள் தரிசாக கிடந்தது.