Deivam Thantha Poove!
()
About this ebook
தேஜஸ்வனி ஒரு பத்திரிக்கையில் ரிப்போட்டராக பணிபுரிந்து வருகிறாள்.
ஒரு சவாலான அஸைன்மெண்ட் அவளுக்கு காத்து இருக்கிறது. அதற்காக அவள் குஜராத் செல்கிறாள்.
அங்கு என்ன நடக்கிறது? ஹோட்டல் முதலாளி நரேனால் அவளுக்கு ஏற்படும் சங்கடங்கள் என்ன?
சுவாரசியமான திருப்பங்கள் நிறைந்த நாவலை படித்தால் உங்களுக்கு புரியும்.
Read more from Lakshmi Sudha
Saaral Sollum Sangeetham! Rating: 5 out of 5 stars5/5Natchathira Poonthottathil Rating: 0 out of 5 stars0 ratingsAzhagiya Maalaiyil Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Raagam Rating: 5 out of 5 stars5/5Enna Solla Pogiraai Rating: 1 out of 5 stars1/5Ennai Mayakkiya Poongatre Rating: 0 out of 5 stars0 ratingsMalargal Malarkindrana! Rating: 0 out of 5 stars0 ratingsPaarthirunthaal Varuven Vennilaviley... Rating: 0 out of 5 stars0 ratingsOru Murai Sollividu Rating: 5 out of 5 stars5/5Sagiye Snegithiye Rating: 0 out of 5 stars0 ratingsIthu Mounamana Neram! Rating: 4 out of 5 stars4/5Solai Malaroliyoo! Rating: 4 out of 5 stars4/5Thullatha Manamum Thullum Rating: 2 out of 5 stars2/5Pookkal Paadum Boopalam... Rating: 0 out of 5 stars0 ratingsPoo Vasam Purapadum Neram Rating: 0 out of 5 stars0 ratingsManathil Pathintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsPookkale Oivedungal! Rating: 5 out of 5 stars5/5Mayam Seithayo... Rating: 4 out of 5 stars4/5Roja Poonthottam Nee... Rating: 3 out of 5 stars3/5Pookkalin Punnagai Nee...! Rating: 1 out of 5 stars1/5Kaattrukku Thoothu Vittu...! Rating: 0 out of 5 stars0 ratingsPaniyil Nanaintha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaga Kaathirukkirean Rating: 3 out of 5 stars3/5Urugiyathey En Ullam! Rating: 0 out of 5 stars0 ratingsUn Thanimai Sugamaa? Rating: 5 out of 5 stars5/5Poo Mazhai Ennul...! Rating: 0 out of 5 stars0 ratingsPanneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5Poo Parikka Nee Pogathey! Rating: 0 out of 5 stars0 ratingsVelicha Poove Vaa Rating: 0 out of 5 stars0 ratingsKaatrinile Varum Thendral Rating: 4 out of 5 stars4/5
Related to Deivam Thantha Poove!
Related ebooks
Pookkal Paadum Boopalam... Rating: 0 out of 5 stars0 ratingsInimai Kanavugal Thodrattume Rating: 0 out of 5 stars0 ratingsJannalkal Thirakkinrana Rating: 0 out of 5 stars0 ratingsAthisayam Adhu Rakasiyam Rating: 0 out of 5 stars0 ratingsTholai Thoora Velicham Nee! Rating: 4 out of 5 stars4/5Yuttha Boomi Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsOru Nimida Nisahptham and Kanavin Vilai Pathu Latsam Rating: 0 out of 5 stars0 ratingsPaarthirunthaal Varuven Vennilaviley... Rating: 0 out of 5 stars0 ratingsIdhayaraagam Rating: 5 out of 5 stars5/5Engey En Jeevaney..? Rating: 5 out of 5 stars5/5Aadatha Oonjajkal Rating: 4 out of 5 stars4/5Megam Thedum Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Pirintha Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsKannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Hello Mister Kaadhala! Rating: 0 out of 5 stars0 ratingsNenjodu Than Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsVizhi Vaasal Vasanthangal Rating: 0 out of 5 stars0 ratingsAzhagiya Penney Rating: 0 out of 5 stars0 ratingsSeenupayal Rating: 0 out of 5 stars0 ratingsNenjukulley Vai Rating: 0 out of 5 stars0 ratingsIni Illai Ilaiyuthirkaalam Rating: 5 out of 5 stars5/5Nee En Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsPon Vaanam Panneer Thuvuthu Rating: 0 out of 5 stars0 ratingsபொன் வானம் பன்னீர் தூவுது... Rating: 0 out of 5 stars0 ratingsAavi I Love You! Rating: 0 out of 5 stars0 ratingsKarpanaiyo… Kaivanthatho… Rating: 3 out of 5 stars3/5Pesum Rojakkal! Rating: 0 out of 5 stars0 ratingsAasai Nenjin Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsOru Koodai Punnagai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Deivam Thantha Poove!
0 ratings0 reviews
Book preview
Deivam Thantha Poove! - Lakshmi Sudha
https://www.pustaka.co.in
தெய்வம் தந்த பூவே!
Deivam Thantha Poove!
Author:
லட்சுமி சுதா
Lakshmi Sudha
For more books
https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
முன்னுரை
வாங்க... பேசலாம்.
புத்தரைப் பற்றிய ஒரு புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடுநிலையைப் பற்றி அவர் அழகாகப் பேசுகிறார்.
இரவென்று இருந்தால், பகல் என்று ஒன்று இருக்கும். ஆனால் இது இரண்டிற்கும் இடைப்பட்ட காலம் ஒன்று உள்ளது.
வாழ்க்கையும் அப்படித்தான். பிறக்கும் பொழுதே இறப்பும் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது.
அது ஒன்றுதான் நிச்சயமாக நடக்கும், எல்லோருடைய வாழ்க்கையிலும்.
இடைப்பட்ட காலத்தை நாம் எப்படி நடத்தப் போகிறோம் என்பது நம் கையில்தான் உள்ளது.
வாழ்க்கையை வீணையின் தந்திகளுடன் ஒப்பிடலாம். ரொம்பக் கடினமாக இருந்தால், நாதம் இனிமையாக இருக்காது.
ரொம்பத் தொய்வாக இருந்தாலும் நாதம் இனிமையாக இருக்காது. இடைப்பட்ட நிலையில் இருந்தால்தான் இனிமையான இசை பிறக்கும்.
வாழ்க்கைக்கும் இந்தத் தத்துவத்தை உபயோகிக்கலாமே!
இரண்டு மாதங்களாக என் நாவல்கள் வெளி வராததால், நிறைய வாசகர்கள் மின்னஞ்சல் மூலமும், கைபேசி மூலமும் தொடர்பு கொண்டு, 'என்ன ஆச்சு மேடம்?' என்று ஆவலாகக் கேட்டீர்கள்.
நவ், பேக் டு நார்மல்!
என் நாவல்களைப் படித்து விட்டு தொடர்ந்து கருத்துகளை என்னிடம் பகிர்ந்து கொள்ளும், உங்கள் அனைவருக்கும் என் நன்றி.
நட்புடன்,
லட்சுமி சுதா
lakshmisudha2010@yahoo.com
அத்தியாயம் 1
அந்த
நாளும்
வராதா?
உன்னைப்
பார்த்த
அந்த
நிமிடம்
………
உலகமே
மறைந்து
போனது
………
என்னுள்
ஒரு
புதிய
சக்தி
………….
புதிய
உணர்வு
……………..
மீண்டும்
வராதா?
சூரியன் தன் தங்கக் கரங்களால் பூமியைத் தழுவிக் கொண்டிருக்கும் ஒரு அழகான காலைப் பொழுது.
சென்னையில் உள்ள அந்த மகளிர் விடுதியில் உள்ள பெண்கள் எந்தப் பரபரப்பும் இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தனர், தேஜஸ்வனியைத் தவிர!
அவள் மனதில் உற்சாகம் பொங்கிக் கொண்டு இருந்ததாலோ என்னவோ அவளுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. ஆனால் கூடவே சந்தேகமும் பதட்டமும் எட்டிப் பார்த்தன.
நாற்காலியில் உட்காருவதற்குப் பதிலாகக் கட்டிலில் படுத்திருந்த நந்தினியின் மேல் உட்கார்ந்தாள் அவள்.
ஆ... அம்மா...
- நந்தினியின் அலறல் காதைப் பிளந்தது.
அப்பொழுதுதான் அவளுக்குத் தான் செய்த தவறு புரிந்தது.
அச்சோ... ஸாரி நந்தினி...
என்னடி இது... காலையில உனக்குத் தூக்கம் வரலைன்னா.... எல்லோருக்கும் வராதா? இந்த மாதிரி லூட்டி அடிக்கிறியேடி...
இல்ல நந்தினி! நான் எக்ஸைட்டடா இருந்ததால என்னை அறியாமல் இப்படிச் செய்து விட்டேன்.
ம்... இறக்கை மட்டும் இருந்தால், நீ பறந்தே அந்த இடத்திற்குப் போயிடுவ போல...
என்றாள் நந்தினி, கொட்டாவி விட்டபடியே
ம்... இந்த அசைன்மெண்ட்டிற்கு என்னை அனுப்புவார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
"யெஸ்... நீ சொல்வது கரெக்ட்தான். நம் கம்பெனி பற்றி எனக்கும் நன்றாகத் தெரியும். சல்லடையில் சலித்துச் சலித்துத் தேர்ந்தெடுப்பது போல் முக்கியமான அசைன்மெண்ட்டிற்குப் பயங்கர செலக்ஷன் முறை வைத்து இருக்கிறார்களே....
அதுவும் நீ சேர்ந்து ஆறு மாதங்கள்தான் ஆகிறது. ஆனால் நீ வேலையை ஒழுங்காகச் செய்து நம்பிக்கையைச் சம்பாதித்து விட்டாய். அதனால்தான் உன்னை இதற்குத் தேர்வு செய்திருக்கிறார்கள்..."
என்றவளின் குரலில் லேசாக ஆற்றாமை தெறித்தது.
சே... சே.... அப்படி எல்லாம் இல்லை. அவர்கள் என் மேல் நம்பிக்கை வைத்து இந்த அசைன்மெண்ட்டிற்கு தேர்வு செய்ததாக எனக்குத் தோன்றவில்லை.
சரி. நீயே சொல்லு. எதற்காகத் தேஜு தேர்வு செய்தார்கள் உன்னை...?
முதலில் இந்த அசைன்மெண்ட்டிற்கு சைமனைத்தான் தேர்வு செய்தார்கள். அவருக்கு எதிர்பாராமல் வீட்டில் பிரச்னை என்பதால் அவசர அவசரமாக என்னைத் தேர்வு செய்தார்கள்.
அது உனக்கும் தெரியும் என்றுதானே நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஓ நோ. எனக்கு விஷயமே தெரியாதே...
என்றாள் நந்தினி.
ஐ அம் ஸாரி. நானும் பிசியாக இருந்ததால் இதைப் பற்றி உன்னிடம் பேச முடியவில்லை. நான் சைமனுக்குத்தான் இதற்கு நன்றி சொல்ல வேண்டும்.
எப்படியோ.... நீ இந்த அசைன்மெண்ட்டை நல்லபடியாக முடித்து விட்டுத் திரும்பினால் அதைக் காட்டிலும் சந்தோஷம் எனக்கு வேறு எதுவும் இல்லை.
தேங்க்ஸ் நந்தினி
சரி. குஜராத்தில் இருந்து வரும்பொழுது எனக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு வருவாய்தானே... அது போதும் எனக்கு.
இந்த நினைப்பு வேறு உனக்கு இருக்கிறதா... குட் ஜோக்!
"அடிப் பாவி. என்ன ஃபிரெண்ட் நீ... மற்றவங்க எல்லாம் ஃபிரெண்ட்ஸை எப்படி எல்லாம் கவனித்துக் கொள்கிறார்கள்.
ம்.... என்ன செய்வது எல்லாம் என் நேரம்தான்!" என்று பொய்யாகக் கண்ணைக் கசக்கினாள் நந்தினி.
ஏய்... ரெடியாகக் கண்ணில் ஸ்டாக் வெச்சிருப்ப போல... அழாதே. உனக்கு வாங்கிக் கொண்டு வராமல் வேறு யாருக்கு வாங்கித் தரப் போகிறேன், நான். ஸோ... நீலிக் கண்ணீர் வடிக்காதேடி!
என்றாள் சிரித்தபடியே தேஜஸ்வனி.
சே... கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே...
ஏய்... நான் ஒரு ஜர்னலிஸ்ட்டி. உன்னை மாதிரி எடிட்டர் இல்லடி...
ஏய்... இதுக்குப் பேர்தான் வம்புங்கறது. எடிட்டிங் வேலை உனக்கு அவ்வளவு கேவலமாப் போயிடுச்சா?
அம்மா தாயே... உனக்கு ஒரு பெரிய கும்பிடு. செய்யும் தொழிலே தெய்வம். நான் அதை மறக்கலை...
தட்ஸ் குட். சரி எத்தனை மணிக்கு ஃபிளைட்?
மதியம் இரண்டு மணிக்கு.
ம்.... அப்ப இங்க இருந்து பன்னிரண்டு மணிக்குக் கிளம்பினா சரியா இருக்கும்.
யெஸ்.
பேக்கிங் எல்லாம் முடிந்ததா?
அல்மோஸ்ட் ஓவர். இன்னும் லாஸ்ட் மினிட் பேக்கிங் கொஞ்சம் இருக்கு.
ஸாரிடி. நான் எந்த ஹெல்ப்பும் செய்யலை உனக்கு...
கமான் நந்து... அடுத்த இஷ்யூ வெளிவர்றதுக்காக நீ பயங்கர பிசியா இருக்கிறதைப் பற்றி எனக்குத் தெரியாதா என்ன...
"ஆமாம்... தேஜு. புதுசாச் சேர்ந்து இருக்கிற சப்-எடிட்டர் சுத்த வேஸ்ட். எப்படி செலக்ட் ஆனார்னே தெரியலை.
அவர்கிட்ட நம்பி ஒரு வேலையை ஒப்படைக்கக் கஷ்டமா இருக்கு."
யார் அது?
ராஜ்ன்னு ஒருத்தர்டி, சேர்ந்து ஒரு மாசம் கிட்ட ஆகப் போகுது. பட், அவரால எந்தப் பிரயோஜனமும் இல்லை.
ஏய்... இப்பதானேடி சேர்ந்திருக்கார்.
ஏய்... சும்மா ஜஸ்ட் லைக் தட் சப்போர்ட் செய்யாதே. அவர்கிட்ட இதுவரை நாலு ஆர்டிகிள்ஸ் வரை எடிட் செய்யக் கொடுத்தேன். எதுவும் உருப்படியா வரலை, இதுவரை...
அப்புறம் எப்படி செலக்ட் ஆனார் நந்தினி?
ம்... ரெகமெண்டேஷனா இருக்கும்னு நினைக்கிறேன்.
யெஸ். அப்படித்தான் இருக்கும். பேசாமல் உன் பாஸ்கிட்ட சொல்லேன்...
அச்சோ... அவர் ராஜ்க்கு பயங்கர சப்போர்ட்.
ஓ... ஒருவேளை அவர்தான் ரெகமண்ட் செய்தாரோ என்னவோ... இருக்கலாம்டி! அப்ப நீ ஜாக்கிரதையா இரு. ஏதாவது பிரச்னை ஆகப் போகுது...
ம்... நானும் அதனால்தான் கொயட்டா இருக்கேன்.
சரி, இன்னிக்கு உன் புரோகிராம் என்ன?
வேற என்ன... விண்டோ ஷாப்பிங் செய்ய வேண்டியதுதான்.
ஏய்... உனக்கு அது அலுக்கவே அலுக்காதா?
நோ வே. ஷாப்பிங் மால்ஸ் எல்லாம் எதுக்காகக் கட்டி இருக்காங்க! நம்ம மாதிரி மக்கள் போய்ப் பழகணும் அப்படிங்கறதுக்குத்தான்....
ம்... உனக்கு இந்தப் பைத்தியம் எப்பதான் தெளியப் போகுதோ?
ஏய்... நிஜ ஷாப்பிங் பைத்தியம் இருந்தால்தான் கடி, பணமும் வேஸ்ட் ஆகும். பட்.... விண்டோ ஷாப்பிங்கால வெறும் டைம்தான் வேஸ்ட்.
ம்... டயத்தோட அருமை தெரியாமல் நாம எவ்வளவு அசால்ட்டா அதை வேஸ்ட் செய்யறோம்....
"அச்சோ.... உன் தத்துவத்தை உன்னோட வெச்சுக்கோ. தேஜு ப்ளீஸ்... ஏற்கெனவே என் காலைத் தூக்கம் உன்னால கோவிந்தா.....
இப்ப இந்த மாதிரி பிளேடு எல்லாம் என்னால தாங்க முடியாதுடி...!" என்று கெஞ்சினாள் நந்தினி.
சரி. நீ இவ்வளவு புலம்பறதால நான் உன்னை இதோட விடறேன்...
"அப்பாடா! உன் பெரிய மனசே மனசு. சரி, நான் போய்க் குளிச்சுட்டு வர்றேன். நீ அப்புறமா குளி.
தென் இரண்டு பேரும் அட்லீஸ்ட் இன்னிக்காவது காலையில நம்ம ஹாஸ்டல் பிரேக்ஃபாஸ்ட்டை ஒண்ணாச் சாப்பிடலாம்."
ஓ... ஷ்யூர். நம்ம ரெண்டு பேரும் ஒரே கம்பெனியில் வேலை பார்க்கறோம், அப்படின்னுதான் பேர். பட், நம்ம ஒண்ணா உட்கார்ந்து பேசறதுக்கு வாய்ப்பே இல்லை.
"நம்ம கம்பெனி ஷிஃப்ட் அந்த மாதிரி தேஜு. உனக்கு வெளிய