Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennai Mayakkiya Poongatre
Ennai Mayakkiya Poongatre
Ennai Mayakkiya Poongatre
Ebook101 pages44 minutes

Ennai Mayakkiya Poongatre

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வேதிகாவின் வாழ்க்கை நதி போல சீராக ஓடிக் கொண்டு இருந்தது. ஆனால் கோவிலில் நடந்த ஒரு சம்பவம், அவள் வாழ்க்கையை மாற்றியது. பூப்போல் இருந்த அவளை புயலாக மாற்றியது எது? ஒரு குற்றவாளியால் அவளுக்கு நேர்ந்த துன்பங்கள் என்ன? அவள் அதை எப்படி சமாளிக்கிறாள்? நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580140906518
Ennai Mayakkiya Poongatre

Read more from Lakshmi Sudha

Related to Ennai Mayakkiya Poongatre

Related ebooks

Reviews for Ennai Mayakkiya Poongatre

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennai Mayakkiya Poongatre - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    என்னை மயக்கிய பூங்காற்றே

    Ennai Mayakkiya Poongatre

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 1

    நீண்ட யுகங்களாகத்

    தோன்றிய

    என் வாழ்க்கை

    உன்னைப்

    பார்த்தவுடன்

    அழகிய நொடியாக

    மாறியது எப்படி?

    அன்று பிரம்மோத்ஸவத்தின் முதல் நாள் என்பதால் கோவிலில் கூட்டம் அலை மோதியது. அடையாறு அனந்த பத்மநாப சுவாமிகளுக்கு பிரம்மோற்ஸவம் எப்பொழுதும் ரொம்ப விமரிசையாக நடைபெறும்.

    ஒவ்வொரு நாளும் விசேஷ அலங்காரத்தில் சுவாமிகள் வீதியில் வலம் வருவதைப் பார்க்க கண் கோடி வேண்டும்.

    மூஷிக வாகனத்தில் லட்சுமி கணபதி, சிம்ம வாகனத்தில் நரசிம்மர், சந்திர பிரபை வாகனத்தில் வெங்கடாசலபதி, அன்ன வாகனத்தில் சரஸ்வதி, சேஷ வாகனத்தில் வைகுண்டப் பெருமாள், ஹனுமந்த வாகனத்தில் ஏரி காத்த ராமர், கஜ வாகனத்தில் குருவாயூரப்பன், புன்னமர வாகனத்தில் பாண்டுரங்கன், புஷ்பப் பல்லாக்கு வாகனத்தில் வெண்ணைத் தாழிக் கண்ணன் என அலங்காரமாக வீதியில் ஒவ்வொரு நாள் மாலையும் வீதி உலா பிரம்மாண்டமாக நடைபெறும்.

    மாலையில் கோவிலை ஒட்டி உள்ள மண்டபத்தில் இன்னிசைக் கச்சேரி நடைபெறும். வேதிகா ஒவ்வொரு வருடமும் இந்த விழாவில் தவறாமல் கலந்து கொள்வாள்.

    அடையாறில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியை வேலை பார்த்து வந்தாள் வேதிகா. அவள் வசிக்கும் வீடு கோவிலுக்கும் பள்ளிக்கும் அருகிலேயே இருந்தது.

    அன்று கதிரி கோபால்நாத்தின் சாக்ஸஃபோன் இசை வெள்ளத்தில் மூழ்கி இருந்தாள் அவள். அவர் வாசித்த 'குறை ஒன்றும் இல்லை...' அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

    இசை என்பதற்கு எவ்வளவு சக்தி! மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகின்றது. துக்கத்தைப் பாதியாக்குகின்றது. இசை வழியாக இப்பொழுது நோயின் வீரியத்தைக் குறைக்கலாம்.

    நாளாக... நாளாக நோயை இசை மூலமாக முற்றிலும் குணப்படுத்தலாம் என்று பல ஆய்வுகளின் முடிவுகள் சொல்கின்றன... என்று மனதில் நினைத்தபடி இருந்தாள் வேதிகா.

    கச்சேரி முடிந்தும் மனமின்றி இருக்கையில் இருந்து எழுந்தாள் அவள். கூட்டத்தில் இருந்தவர்கள் ஏதேதோ பேசியபடி மண்டபத்தில் இருந்து வெளியேறத் தொடங்கினர்.

    கைக்கடிகாரத்தைப் பார்த்தாள் அவள். மணி இரவு ஒன்பது என்று உறுதி செய்தது அது.

    சில்லென்று முகத்தில் வீசிய காற்று மனதிற்கு இதமாக இருந்தது.

    கோவில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் ஸ்கூட்டி அருகே வந்துவிட்டாள் வேதிகா. அப்பொழுதுதான் அந்தப் பெண்ணைக் கவனித்தாள் அவள்.

    கூட்டத்தினரைத் தள்ளிக்கொண்டு வேகவேகமாக ஓட்டமும் நடையுமாகச் சென்று கொண்டிருந்தாள் அந்தப்பெண். அவள் முகத்தில் பதட்டம்... கண்களில் மிரட்சி அப்பட்டமாகத் தெரிந்தது.

    அவளைப் பின்தொடர்ந்து தலைதெறிக்கும் வேகத்தில் ஒருவன் அவளைத் துரத்தியபடி வருவதைப் பார்த்த வேதிகா திடுக்கிட்டாள்.

    அந்தப் பெண்ணை அவன் ஏதோ செய்யப்போகிறான் என்று வேதிகாவின் உள்ளுணர்வு சொன்னது. சட்டென ஒரு யோசனை தோன்றியது அவளுக்கு.

    தன் காலின் அருகே இருந்த கல் ஒன்றை வேகமாக எடுத்தாள் வேதிகா. குறிபார்த்து அவன்மீது எறிந்தாள்.

    அவன் பின் தலையில் கல் பட்டது.

    சட்டெனப் பின்னால் திரும்பினான் அவன். அவன் கண்களில் கோபம் தெறித்தது. தெருவில் கூட்டம் இருந்தபொழுதும் அவன் பார்வை வேதிகா மீது ஒரு நொடி நிலைத்தது.

    பின்பு மீண்டும் அவன் அந்தப் பெண்ணைத் துரத்தினான்.

    ஒரு கார் அவன் அருகே வந்தது. டிரைவர் சீட்டில் இருந்த ஒருவன் அந்தப் பெண்ணைக் காரினுள் இழுத்தான்.

    அவள் தப்பியோட முடியாதபடி அவளைத் துரத்தியவனும் அவள் அருகே வந்து, அந்தப் பெண்ணைக் காரினுள் தள்ளினான்.

    பின்பு கார் சீறிப் பாய்ந்தது.

    'கடவுளே! இது என்ன இப்படி ஒரு கடத்தல்? இவ்வளவு பேர் இருக்கும்பொழுது எப்படி இந்த மாதிரி துணிகரமாக செயல்பட முடிகிறது!' என்று பதறினாள் வேதிகா.

    'காலம்... கலிகாலம்... என்ன கண்றாவி இதெல்லாம்?' என்று ஒரு வயதான பெண்மணி புலம்பினாள்.

    'யாராவது வண்டி நம்பரை நோட் செஞ்சீங்களா...?' என்று ஒரு பொதுஜனம் குரல் கொடுத்தார்.

    'சே... கார் நம்பரைக் குறித்துக்கொள்ளாமல் விட்டு விட்டேனே...!' என தன்னையே நொந்துகொண்டாள் அவள்.

    ம்... நீ நல்லாக் குறி பார்த்துத்தான் கல்லை எறிஞ்ச... பட் ஹி இஸ் ஸ்மார்ட் தென் யூ... என்ன செய்யறது? என்றார் ஒரு பெரியவர்.

    "ஆமாம் ஸார்... நான் காலேஜ் டேஸ்ஸில் துப்பாக்கி சுடுவதில் பயிற்சி பெற்றுள்ளேன்.

    ஆனால் என்ன பிரயோஜனம்! அந்தப் பெண்ணைக் கடத்திக்கொண்டு போய் விட்டார்களே...!"

    "கடத்தல்னு ஏன் நினைக்கணும்? அந்தப் பெண்ணோட காதலனாகக்கூட இருக்கலாம்... காரினுள் இருந்தவன்.

    அந்தப் பெண்ணைத் துரத்தியவன் நண்பனாகக்கூட இருக்கலாம். அவர்களைச் சேர்த்து வைக்க அவன் உதவி செய்யலாம்..."

    "ஆனால் அந்தப் பெண்ணோட முகத்தில் பதட்டம் தெரிஞ்சுதே! அவளை வலுக்கட்டாயமாகக் காரினுள் தன்ளினானே அவன்.

    அதுதான் எனக்குச் சந்தேகமாக இருக்கு ஸார்!"

    "நீ சொல்றதும் சரிதான். ஒருவேளை அந்தப் பெண்ணைத் துரத்தியவன்

    Enjoying the preview?
    Page 1 of 1