En Kanavu Devathai
4/5
()
About this ebook
பூமிகா பிரபல நாளிதழின் செய்தியாளர். அவர் மிகவும் திறமைசாலி, அழகாகவும், அறிவாகவும் இரண்டும் ஒரு சேர பெற்றவள். அவள் ஆகாஷ் என்ற பிரபல தொழிலதிபரை பழிவாங்கும் நோக்குடன் அவரின் சிறு அசைவுகளையும், நாளிதழின் முதல் பக்கத்தில் பிரதியிட்டு அவரின் பெயரையும், தொழில் வளர்ச்சியையும் வீழ்ச்சி அடைய செய்ய விரும்புகிறாள். ஏன் அவ்வாறு பூமிகா நடந்து கொள்கிறாள்? அதன் பின்னனி என்ன? இறுதியில் என்ன நடந்தது? திருப்பங்கள் நிறைந்த காதல் கதையை வாசிப்போம் வாருங்கள்…
Read more from Lakshmi Sudha
Ennai Mayakkiya Poongatre Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Poonthottathil Rating: 0 out of 5 stars0 ratingsSaaral Sollum Sangeetham! Rating: 5 out of 5 stars5/5Enna Solla Pogiraai Rating: 1 out of 5 stars1/5Mayam Seithayo... Rating: 4 out of 5 stars4/5Ithu Mounamana Neram! Rating: 4 out of 5 stars4/5Thullatha Manamum Thullum Rating: 2 out of 5 stars2/5Oru Murai Sollividu Rating: 5 out of 5 stars5/5Sagiye Snegithiye Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Raagam Rating: 5 out of 5 stars5/5Azhagiya Maalaiyil Rating: 0 out of 5 stars0 ratingsPookkal Paadum Boopalam... Rating: 0 out of 5 stars0 ratingsMalargal Malarkindrana! Rating: 0 out of 5 stars0 ratingsPoo Vasam Purapadum Neram Rating: 0 out of 5 stars0 ratingsKaattrukku Thoothu Vittu...! Rating: 0 out of 5 stars0 ratingsPookkalin Punnagai Nee...! Rating: 1 out of 5 stars1/5Pookkale Oivedungal! Rating: 5 out of 5 stars5/5Solai Malaroliyoo! Rating: 4 out of 5 stars4/5Urugiyathey En Ullam! Rating: 0 out of 5 stars0 ratingsManathil Pathintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsRoja Poonthottam Nee... Rating: 3 out of 5 stars3/5Paarthirunthaal Varuven Vennilaviley... Rating: 0 out of 5 stars0 ratingsPoo Mazhai Ennul...! Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Mazhai Kaalam Rating: 4 out of 5 stars4/5Kaatrinile Varum Thendral Rating: 4 out of 5 stars4/5Panneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5Velicha Poove Vaa Rating: 0 out of 5 stars0 ratingsEn Swasakaattru Nee...! Rating: 0 out of 5 stars0 ratingsPaniyil Nanaintha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsUn Thanimai Sugamaa? Rating: 5 out of 5 stars5/5
Related to En Kanavu Devathai
Related ebooks
Tholai Thoora Velicham Nee! Rating: 4 out of 5 stars4/5Vaanamenum Veedhiyiley...! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaga Kaathirukkirean Rating: 3 out of 5 stars3/5Pookkalin Punnagai Nee...! Rating: 1 out of 5 stars1/5Nilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Thedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsSolai Malaroliyoo! Rating: 4 out of 5 stars4/5Inaiyumo Iruthayam? Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Vaigarai Vidiyal Rating: 0 out of 5 stars0 ratingsEnathu Kavithai Neethan... Rating: 0 out of 5 stars0 ratingsNeedhan... Nee Mattum Dhan! Rating: 0 out of 5 stars0 ratingsUnnudane Naan Rating: 4 out of 5 stars4/5Kannaley Pesi Pesi... Rating: 0 out of 5 stars0 ratingsPaarthirunthaal Varuven Vennilaviley... Rating: 0 out of 5 stars0 ratingsPoo Vasam Purapadum Neram Rating: 0 out of 5 stars0 ratingsPookkale Oivedungal! Rating: 5 out of 5 stars5/5Anbu Mazhaiyiley Naan Rating: 0 out of 5 stars0 ratingsMounam Un Mozhiya? Rating: 0 out of 5 stars0 ratingsKannoramai Kathai Pesu! Rating: 5 out of 5 stars5/5Vanna Vanna Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsEppozhuthum Un Ninaivu! Rating: 0 out of 5 stars0 ratingsPoo Parikka Nee Pogathey! Rating: 0 out of 5 stars0 ratingsMargazhi Maatha Nila! Rating: 4 out of 5 stars4/5Aagayam Bhoomiyil... Rating: 5 out of 5 stars5/5Enna Solla Pogiraai Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsNaan Thediya Vanavil Rating: 0 out of 5 stars0 ratingsOli Pookkum Malai... Rating: 0 out of 5 stars0 ratingsRoja Poonthottam Nee... Rating: 3 out of 5 stars3/5Poongatru Sangeetham Aanathu! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for En Kanavu Devathai
1 rating0 reviews
Book preview
En Kanavu Devathai - Lakshmi Sudha
https://www.pustaka.co.in
என் கனவு தேவதை
En Kanavu Devathai
Author:
லட்சுமி சுதா
Lakshmi Sudha
For more books
https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
1
ஒரு இனிமையான
நிசப்தமான
மாலைப் பொழுது!
தென்றல்
என் காதைத்
தீண்டி, புரியாத
புதியராகம்
இசைத்தது!
கடல் அலை
என் பாதத்தை
தழுவி கொஞ்சிவிட்டு
மனமின்றி
கடலில்
கரைந்தது!
எல்லாமே எனக்கு
புதிதாகத் தெரிகிறது!
காரணம் என்ன?
நீதான் பெண்ணே!
அந்த ஆங்கில நாளோடு அலுவலகம் வழக்கமான உற்சாகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அலுவலகத்தில் கணினியில் மும்முரமாக ஆழ்ந்தபடி சிலர் இருந்தனர். சிலர் தொலைபேசியில் ஏதோ பேசியபடி இருந்தனர்.
நாளை நாளேட்டில் வரப்போகும் செய்திகளில் அச்சுப்பிழை இருக்கிறதா என நான்காவது முறையாகப் படித்துப் பார்த்தாள் பூமிகா.
ஏய் பூமிகா. வாடி ஒரு கப் காபி குடிச்சுட்டு வரலாம். வாடி
என்று மாலாவின் குரல் அருகே கேட்க தலை நிமிர்ந்தாள் பூமிகா.
மாலா ஒரு இரண்டு நிமிஷம் கொடுடி. இன்னும் ஒரே ஒரு பத்தி இருக்கு. இதை முடிச்சுட்டுப் போகலாம்
என்றாள் பூமிகா.
வா... வந்து பார்த்துக்கலாம்
என்று சட்டென பேப்பரை அவள் கையிலிருந்து பிடுங்கினாள் மாலா.
ஏய்... என்ன ரொம்ப கோபமா இருக்க. அருணோட சண்டையா
என்றாள் பூமிகா. அவளுடன் நடந்தபடியே.
ஆமாம் பூமிகா. கரெக்டா… சொல்லிட்ட. இன்னிக்கு சத்யம் தியேட்டருக்குப் போகலாம், அப்படின்னு அவன் தான் கமிட் செஞ்சான். போன வாரம் அவன் தான் ப்ளான் செஞ்சான்.
இப்ப திடீர்ன்னு இன்னிக்கு ஈவினிங் நிறைய வேலை இருக்கு. அதனால் போக முடியாது. அப்படின்னு கேன்சல் பண்ணிட்டான். சே... இவனை நினைச்சா எரிச்சலா வருதுடி
என்று கோபத்தோடு காபியை உறிஞ்சினாள் மாலா.
கமான் மாலா. பாவம் வேலையினாலேதானே கேன்சல் செஞ்சார். இன்னொரு நாள் போங்க. இதுக்குப் போய் ஏன் இப்படிக் கோபப்படற?
என்றாள் சிரித்தபடி பூமிகா.
ஆமாம் பூமிகா. அருணுக்கு எப்பவும் வேலை வேலை அதான் முக்கியம். ப்ளஸ் பணம். ஏன்தான் இப்படி பணத்துக்கு பின்னாடி இப்படி அலையறானோ
என்றாள் வெறுப்பாக மாலா.
ம்... ம்... மாலா. அருண் மட்டும் இல்லை. எல்லா ஆண்களும் இப்படித்தானே இருக்காங்க. பெண்கள் மனசு சொல்றதைக் கேப்பாங்க. பட் ஆண்கள் முடிவு எடுக்க, பெரும்பாலும் மூளையை உபயோகிப்பாங்க. மனசு சொல்றது எல்லாம் இரண்டாம் பட்சம்தான்
என்றாள் பூமிகா.
நீ சொல்றது சரிதான்டி பூமிகா. ஆனா மனசு கேக்க மாட்டேங்குது. அருண் என்னை விட்டுத் தள்ளிப் போயிடுவானோ, அப்படின்னு ஒரு பயம். தயக்கம் அதான் வேற எதுவும் இல்லை
என்றாள் மாலா மெதுவாக."
ம்… ம்… கமான் மாலா. இப்ப ஆண்கள் எல்லாத் துறையிலும் எப்படி ஜெயிக்கறாங்க. முன்னாடி பெண்கள் மட்டுமே செஞ்சுகிட்டு இருந்ததை எல்லாம், அவங்க எப்படி பக்கா, பிசினெஸ்சா மாத்தி நடத்தறாங்க.
முன்னாடி சமையல் எல்லாம் பெண்கள் மட்டும் தான். வீட்டுல மட்டும் செய்வாங்க. ஆனா சமையலால பணம் வரும் அதைத் தொழிலா செஞ்சா... என தெரிஞ்சவுடன் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் முழுக்க ஆண்கள் தான் குக்கிங் எல்லாம்.
அப்புறம் ஃபேஷன் டிசைன் அதிலேயும் அவங்க தான் இப்ப நல்லா பணம் பாக்கறாங்க…
என்றாள் பூமிகா.
கரெக்ட். அருண் கூட கேட்டரிங் முடிச்சிட்டார். ஹோட்டல்ல அவர் தான் சீஃப் செப் இப்ப. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் சமையல் அறை பக்கம் தலை வெச்சு படுக்க மாட்டேன், அப்படின்னு சொல்லிட்டார்
என்றாள் கோபமாக.
ம்... ம்… பெரும்பாலான ஆண்கள் அப்படித் தான் மாலா. அவங்க சொல்றதை பெண்கள் செய்யணும், அப்படின்னு எதிர்பார்ப்பாங்க. பெண்கள் தானா ஏதாவது செஞ்சா... அவங்களால ஒத்துக்க முடியாது.
அலங்கார பொம்மைகளா இருக்கிற பெண்களைத் தான் ஆண்களுக்குப் பிடிக்கும்
என்றாள் வெறுப்பாக.
ஆமாம். ரொம்ப சரிடி. நீ சொல்றது. இந்தப் பேப்பரைப் பார். ஆகாஷ் தி கிரேட் பிசினெஸ் மேன் இன் நார்த். இங்க சென்னையில அவரோட பிசினசை விரிவுபடுத்த வந்திருக்கார்.
ஐயா டெய்லி, யாராவது ஒரு மாடல், இல்லை நடிகை கூடத்தான் லன்ச்... டின்னர். ம்... ம்... எவ்வளவு புத்திசாலியா இருந்தாலும், இந்த மாதிரி பெண்களைத் தான் விரும்பறாங்க
என்றாள் மாலாவும் கோபமாக.
சரி… வா. இதுக்கு மேல கேண்டினில் இருந்தா எடிட்டர் நம்மளைக் கூப்பிட்டு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடுவார். வா கிளம்பலாம்
என்று சிரித்தபடி எழுந்தாள் பூமிகா, மனதில் இருந்த கோபத்தை அடக்கியபடி.
தன்னுடைய இடத்திற்கு சென்ற பூமிகா கேண்டினில் மாலாவுடன் பேசியதைப் பத்தி ஒரு ஆர்டிகிள் எழுதினால் என்ன. ஒரு எண்ணம் பொறி போல் தோன்றியது.
மனதில் தோன்றியதை கடகடவென கணினியில் டைப் செய்தாள்.
ஆகாஷ் சென்னை வந்திருப்பது எதற்கு? பிசினெசை விரிவுபடுத்தவா? இல்லை சென்னையில் இருக்கும் நடிகைகளோடும், மாடல்களோடும், பொழுதை செலவு செய்யவா?
என்று ஒரு பெட்டிச் செய்தியைத் தயார் செய்தாள்.
எடிட்டர் இதற்கு எதுவும் சொல்லமாட்டார் என அவளுக்கு நிச்சயமாகத் தெரியும். அவருக்குத் தேவை அதிக சர்குலேஷன். ஆனால் அதற்காக பத்திரிகை தர்மத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்.
வதந்திகள் எல்லாம் அவர்கள் நாளிதழில் ஒரு நாளும் இடம் பிடித்தது இல்லை. ஆகாஷ் பற்றி இப்படி ஒரு நியூஸ் வந்தால் கண்டிப்பாக ஏதும் சொல்ல மாட்டார் என நினைத்தபடி அதை நாளிதழின் முதல் பக்கத்தில், போடுவது என முடிவு செய்தாள்.
எடிட்டரிடம் போன் செய்து இந்த மேட்டரைப் போடுவது பற்றி சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
இன்று மட்டும் இல்லை. இனி தினசரி அவனைப் பற்றி ஒரு பெட்டிச் செய்தி கண்டிப்பாக தயார் செய்து நாளிதழில் அதே இடத்தில் முதல் பக்கத்தில் வெளியிட வேண்டும் என தீர்மானித்தாள் பூமிகா.
அடுத்த நாள் காலை நாளிதழ் வெளிவந்தவுடன் ஒரே போன் கால்கள்... அந்தச் செய்தியை வரவேற்றும், கண்டித்தும் நிறைய பேர் தங்களுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
மின் அஞ்சல் வழியாக வேறு நிறைய பேர் தொடர்பு கொண்டிருந்தனர். ம்… ம்… பரவாயில்லை ஒரு சின்ன பெட்டிச் செய்திக்கு நல்ல வரவேற்பு என நினைத்தபடி கம்ப்யூட்டர் முன் அமர்ந்து ஈ.மெயிலை செக் செய்து கொண்டிருந்தாள் பூமிகா.
இண்டர்காம் ஒலிக்கவே அதை எடுத்தாள் பூமிகா. ஹலோ, பூமிகா ஸ்பீக்கிங்
என்றாள் மெதுவாக.
பூமிகா. நான் விஸ்வநாதன் தான் பேசறேன். என்னோட ரூமுக்கு வாம்மா
என்று எடிட்டரின் குரல் கேட்டவுடன் பூமிகாவுக்கு பதட்டமாக இருந்தது.
'சார் எதுக்குக் கூப்பிடறார். ஆகாஷ் செய்தியால் ஏதாவது பிரச்சினையா?' என்று நினைத்தபடியே அவருடைய அறைக்குள் நுழைந்தாள்.
குட்மார்னிங் சார்
என்றாள் பவ்யமாக அவருடைய அறைக்குள் நுழைந்தபடியே பூமிகா.
உட்கார் பூமிகா
என்ற விஸ்வநாதன் எதிரில் இருந்த நாற்காலியைச் சுட்டிக் காட்டினார்.
என்னவாகயிருக்கும் என்று யோசித்தபடியே நாற்காலியில் அமர்ந்தாள் பூமிகா.
இன்னிக்கு காலையில இருந்து ஒரே போன் பூமிகா. எடுத்து மாளலை. அதுக்கு என்ன காரணம் அப்படின்னு உனக்கே தெரியும்
என்றார் சிரித்தபடி.
அப்பாடா நினைத்தபடி ஏதும் பிரச்சினை இல்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் பூமிகா.
சார், ஆகாஷ் மேட்டர் பத்திதானே சொல்றீங்க
என்றாள் சிரித்தபடி.
ம்… ம்… கரெக்ட் பூமிகா. இது ஒரு நல்ல யுத்தி. எப்படி இந்த ஐடியா தோணுச்சு உனக்கு. மொத்தமே ஆறு வரிதான் இருக்கும் அந்தப் பெட்டி செய்தியில. ஆனா வாசகர்கள் மத்தியில வித்தியாசமான வரவேற்பைப் பெற்றிருக்கு
என்றார் விஸ்வநாதன்.
ஆமாம்… சார், சில பேர் ரொம்ப கோபமா என்னைக் கண்டிச்சாங்க. சில பேர் நீங்க எழுதியிருக்கறது ரொம்ப சரி மேடம். பணக்காரர்களுக்கு சோஷியல் ரென்பான்சிபிலிடி ரொம்ப முக்கியம். அப்படின்னு ஆதரவா சொன்னாங்க
என்றாள் பணிவாக பூமிகா.
குட்… பூமிகா. நம்ம நாளிதழ் விற்பனை இதனால கண்டிப்பா கூடும். அதைச் சொல்லத்தான் நான் உன்னைக் கூப்பிட்டேன். இந்த மாதிரி டெய்லி, நல்ல சுவாரசியமான செய்தியாப் போடம்மா
என்றார் சிரித்தபடி.
கண்டிப்பா சார். உங்ககிட்ட பேசின பிறகு எனக்கு இன்னும் தெம்பா இருக்கு. நாளையிலிருந்து, பாருங்க ஆகாஷ் பத்தி நிறைய செய்தி வரும்
என்று சிரித்தபடி எழுந்தாள் பூமிகா.
ஓ.கே. பூமிகா. பட் வதந்தி எல்லாம் வேணாம். ஆகாஷ் செய்றதையே விமர்சனம் செஞ்சா போதும்
என்றார்.
தேங்க்யூ சார்
என்று சொல்லிவிட்டு ரூமை விட்டு வெளியேறினாள் பூமிகா.
மனம் லேசானது போல் உணர்ந்தாள். நாளை என்ன செய்தி வெளியிடலாம் என யோசித்தபடி தன் இடம் நோக்கிச் சென்றாள்.
ஆகாஷ் உனக்கு நேரம் சரியில்லை இப்ப. சரித்திரம் திரும்பும் என்பது உண்மைதான். இல்லாவிட்டால் எனக்கு இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என நினைத்துக் கொண்டாள்.
சிநேகாவின் முகம் கண் முன்னே தோன்றி மறைந்தது. அவளுடைய குறும்பான குழந்தைத் தனமான முகம். உதட்டில் எப்போதும் இருக்கும் அழகான சிரிப்பு, அவளுடைய கிண்டலான பேச்சு என ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தது.
பூமிகாவின் கண்கள் கலங்கின. ஓவென்று வாய்விட்டு அழ வேண்டும் என்று தோன்றிய உணர்வை அடக்கினாள்.
கூடாது அழக்கூடாது. அழுவதால் எந்த லாபமும் இல்லை. யோசிக்கும் திறன்தான் குறைகிறது. அதனால் அழக்கூடாது என திடமாக முடிவு செய்தாள்.
கண்களைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள். தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு, நாளை என்ன செய்தி போடலாம் என யோசனையில் மூழ்கினாள் பூமிகா.
2
சூரியன் தினமும்
தவறாமல்
உதிக்கிறான்!
பால் நிலா தினமும்
இரவில்
அமுதைப்
பொழிகின்றது!
தென்றல்
தன் கரங்களால்
எல்லாரையும்
வருடுகின்றான்!
கடல் அலைகள்
ஓயாமல் கரையைத்
தொடுவதுமாகவும்
கடலில் சேர்வதுமாகவும்
இருக்கின்றன!
நானும் அனிச்சையாக
எப்போதும் உன் நினைவாகவே
இருக்கிறேன்!
எங்கே நீ?
அடுத்த நாள் தானாகவே ஒரு செய்தி வசமாக மாட்டியது பூமிகாவுக்கு. ஆகாஷின் மென் பொருள் ஏற்றுமதி நிறுவனத்தின் ஒரு பிரிவைத் தலைமை தாங்கிய ஒரு பெண் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக முந்தைய தினம் வலைதளத்தில் ஒரு ப்ளாகில் தகவல் கசிந்திருந்தது.
அந்தச் செய்தி உண்மையா என்பதை விசாரித்தாள் பூமிகா. ராஜினாமா செய்த பெண் பெயர் மாளவிகா. முதலில் தயங்கினாலும் பின் மெதுவாக நடந்ததை விவரித்தாள்.
மாளவிகாவின் மேல் அதிகாரி அவளிடம் தவறாக நடந்து கொண்டதாலேயே இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவித்தாள். முதலிலேயே இந்த முடிவுக்கு வரவில்லை என்பதையும் மாளவிகா ஒப்புக்கொண்டாள்.
தன்னால் இயன்ற வரை எதிர்த்துப் பார்த்திருக்கிறாள். ஆனால் ஒரு கட்டத்தில் மன நிம்மதி பறிபோகத் தொடங்கியதும் வேறு வழி இன்றி ராஜினாமா செய்ய முடிவு செய்ததாக மனதில் இருந்ததைக் கொட்டினாள் மாளவிகா.
தான் பட்ட கஷ்டங்கள் வேறுயாரும் அனுபவிக்கக் கூடாது என்பதால்தான் உண்மையைச் சொல்ல சம்மதித்தாக பேட்டியில் சொன்னாள்.
அவள் பேட்டியை முதல் பக்கத்தில் பிரசுரித்தாள் பூமிகா. கூடவே பெட்டிச் செய்தி 'ஆகாஷ் நடத்தும் நிறுவனத்தில் ஆகாஷ் போல் தானா மற்ற ஆண் அதிகாரிகளும்' என்ற தலைப்பு கொடுத்து ஆகாஷை சாடி இருந்தாள்.
அது எழுதி முடித்த பிறகு மனம் சற்றே நிம்மதியடைந்தது போல் உணர்ந்தாள். சிநேகா உனக்கு என்னால் முடிந்தது இது. இதை நான் தொடர்ந்து செய்வேன், என தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.
எங்கே இருக்கிறாய் சிநேகா இப்போது? உனக்கு எப்படி எல்லாரையும் விட்டுப் போக முடிந்தது. காதலுக்கு அவ்வளவு சக்தியா என்று பெருமூச்செறிந்தாள்.
நாளிதழில் அந்தச் செய்தி வெளியானதும்