Oli Pookkum Malai...
()
About this ebook
நெட்வொர்க் ஸ்பெஷலிஸ்டாக சென்னையில் பணியாற்றி வரும் நந்திதா நிர்ப்பந்தத்தின் பெயரில் ஷில்லாங் செல்கிறாள். அவள் மனதில் ஏற்பட்டுள்ள காயங்களையும் வலிகளையும் அவளால் மறக்க முடியுமா? சைக்கார்டிஸ்ட் ஆக இருக்கும் ரோஷன் அவளுக்கு செய்ய ஆர்வமாக இருக்கிறான். ஆனால் நந்திதா அதை ஏற்க மறுக்கிறாள். காரணம் என்ன? படித்து தெரிந்து கொள்ளுங்கள்....
Read more from Lakshmi Sudha
Ennai Mayakkiya Poongatre Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Poonthottathil Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Raagam Rating: 5 out of 5 stars5/5Paarthirunthaal Varuven Vennilaviley... Rating: 0 out of 5 stars0 ratingsOru Murai Sollividu Rating: 5 out of 5 stars5/5Malargal Malarkindrana! Rating: 0 out of 5 stars0 ratingsThullatha Manamum Thullum Rating: 2 out of 5 stars2/5Azhagiya Maalaiyil Rating: 0 out of 5 stars0 ratingsPookkal Paadum Boopalam... Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogiraai Rating: 1 out of 5 stars1/5Ithu Mounamana Neram! Rating: 4 out of 5 stars4/5Mayam Seithayo... Rating: 4 out of 5 stars4/5Sagiye Snegithiye Rating: 0 out of 5 stars0 ratingsSaaral Sollum Sangeetham! Rating: 5 out of 5 stars5/5Un Thanimai Sugamaa? Rating: 5 out of 5 stars5/5Kaattrukku Thoothu Vittu...! Rating: 0 out of 5 stars0 ratingsPoo Vasam Purapadum Neram Rating: 0 out of 5 stars0 ratingsPoo Mazhai Ennul...! Rating: 0 out of 5 stars0 ratingsUrugiyathey En Ullam! Rating: 0 out of 5 stars0 ratingsManathil Pathintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsPanneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5Velicha Poove Vaa Rating: 0 out of 5 stars0 ratingsPookkale Oivedungal! Rating: 5 out of 5 stars5/5Pookkalin Punnagai Nee...! Rating: 1 out of 5 stars1/5Roja Poonthottam Nee... Rating: 3 out of 5 stars3/5En Swasakaattru Nee...! Rating: 0 out of 5 stars0 ratingsPoo Parikka Nee Pogathey! Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Kaatril Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Varai Nanaigirathey! Rating: 0 out of 5 stars0 ratingsSolai Malaroliyoo! Rating: 4 out of 5 stars4/5
Related to Oli Pookkum Malai...
Related ebooks
Velicha Poove Vaa Rating: 0 out of 5 stars0 ratingsPoongatru Sangeetham Aanathu! Rating: 0 out of 5 stars0 ratingsTholai Thoora Velicham Nee! Rating: 4 out of 5 stars4/5Vaanmathiye Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkagave Naan Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Nilavae Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsPoo Parikka Nee Pogathey! Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Varai Nanaigirathey! Rating: 0 out of 5 stars0 ratingsAnthi Mazhai Saaral Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogiraai Rating: 1 out of 5 stars1/5Mayam Seithayo... Rating: 4 out of 5 stars4/5Kaatrinile Varum Thendral Rating: 4 out of 5 stars4/5Idhayaraagam Rating: 5 out of 5 stars5/5Devathai Vaazhum Veedu! Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyire... Rating: 5 out of 5 stars5/5Anbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsSolai Malaroliyoo! Rating: 4 out of 5 stars4/5Unnai Virumbinen Uyire.. Rating: 5 out of 5 stars5/5Nee Enathu Innuyir Rating: 0 out of 5 stars0 ratingsThoongatha Vizhigal Irandu Rating: 0 out of 5 stars0 ratingsPookkale Oivedungal! Rating: 5 out of 5 stars5/5En Swasakaattru Nee...! Rating: 0 out of 5 stars0 ratingsIlankaatru Veesuthey... Rating: 0 out of 5 stars0 ratingsVaanamenum Veedhiyiley...! Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Kaatril Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsMalargal Malarkindrana! Rating: 0 out of 5 stars0 ratingsEn Kanavu Devathai Rating: 4 out of 5 stars4/5Ponnai Virumbum Bhoomiyile Rating: 0 out of 5 stars0 ratingsKannaley Pesi Pesi... Rating: 0 out of 5 stars0 ratingsKaattrukku Thoothu Vittu...! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Oli Pookkum Malai...
0 ratings0 reviews
Book preview
Oli Pookkum Malai... - Lakshmi Sudha
https://www.pustaka.co.in
ஒளி பூக்கும் மாலை...
Oli Pookkum Malai...
Author:
லட்சுமி சுதா
Lakshmi Sudha
For more books
https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 1
"நான்
பறவை
என்றால்
நீ காற்றா
இல்லை
ஆகாயமா?
நான் இசை
என்றால்
நீ வீணையா
இல்லை
சாக்ஸோபோனா?
நான்
ஓவியம்
என்றால்
நீ காகிதமா
இல்லை
தூரிகையா?
நான்
கவிதை
என்றால்
நீ
வார்த்தைகளா
இல்லை
அர்த்தமா?
சொல்
பெண்ணே
சொல்"
ஜன்னல் வழியாக தெரிந்த ஒற்றை குருவியை பார்த்தவண்ணம் இருந்தாள் நந்திதா.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக மருத்துவ கல்லூரி இருப்பதால் இங்கே குருவிகள் நடமாட்டம் உண்டு.
செங்கல்பட்டு தாண்டி வந்தால் குருவிகளை பார்க்கலாம். சென்னையில் முடியாது வாகன இரைச்சலும், செல்போன் கோபுரங்களும் குருவிகளின் சுதந்திரத்தை பறித்துவிட்டன.
விட்டு விடுதலையாகி விட்டாய் இந்த குருவியைப் போல
என்று பாரதி பாடியது அவள் நினைவில் ஓடியது.
நானும் அதேபோல் விடுதலை அடைந்து விட்டேனா?
அவள் எண்ண ஓட்டத்தை தடை செய்தது உமாவின் குரல்.
ஏய் ஆரம்பிச்சுட்டியா ஜன்னல் பக்கமா வெறித்துப் பார்க்கறதுக்கு. உன்ன நெனச்சா எனக்கு ரொம்ப கவலையா இருக்கு.
ஓ வந்துட்டியா. என்ன பத்தி கவலைப்படுவதற்கு ஒரு ஆள் இருக்கு, அதை நினைக்கவே சந்தோஷமா இருக்கு.
சினிமா டயலாக் பேசுறதெல்லாம் நிறுத்தரியா.
இல்லடி நான் சும்மா சொல்லலை. எனக்கு உன்னைத்தவிர யாரு இருக்காங்க?
என்று சொல்லும்போதே அவள் கண்கள் கலங்கின.
உன்ன என்ன பண்றதுன்னு எனக்கு புரியல. அங்கே ரத்தன் ரொம்ப ஜாலியா புது மனைவியோட பார்ட்டிக்கு போயிட்டு இருக்கான். நீ இங்க துக்கம் அனுசரிச்சுகிட்டு இருக்க. ஸ்டாப் இட் ஐ சே
என்றாள் கோபமாக உமா.
நான் என்ன செய்யட்டும் உமா சொல்லு. என்னால மறக்க முடியல. அவன்தான் என் பின்னால் வந்தான். நண்பர்களாக இருந்தால் மட்டும் போதாது. அதை தாண்டிய ஒரு பந்தம் நமக்கு இருக்க வேண்டும் என்று சொன்னது அவன் தான்.
காதல், திருமணம் எதுவும் ‘வேண்டாம்’ என்று நான் மறுத்தபோது, நீ இல்லாமல் என்னால் உயிரோடு இருக்க முடியாது என்று புலம்புவான்.
இப்ப அவங்க அப்பா அம்மா சொல்லிட்டாங்க என்ற ஒரே காரணத்திற்காக என்னை ரிஜக்ட் செய்துவிட்டு, வீட்டில் பார்த்த அந்த பணக்கார பெண்ணை திருமணம் செய்துகொண்டு விட்டான்.
டிஸ்கஸ்திங்
என்றாள் பல்லைக் கடித்தபடியே நந்திதா.
உன் கோபம் நியாயமானது நந்திதா. ஆனால் அதுக்காக நீ உன்னையே அழித்துக்கொள்வதை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை.
நம்ம கம்ப்யூட்டர் பாஷையில சொல்லணும்னா நீயே ஒரு வைரஸ் மாதிரி ஒன்ன அழித்துக்கொண்டு இருக்கிற.
டாமிட். போதும். இந்த நினைப்பெல்லாம் உன் மனதில் இருந்து போக வேண்டுமென்றால் நாம ரெண்டு பேரும் ஷில்லாங் போவதுதான் சரியான தீர்வு.
தெரியல உமா, ரொம்ப குழப்பமா இருக்கு.
ரொம்ப யோசிக்காத. நம்ம ரெண்டு பேருக்கும் ஷில்லாங்கில் இருக்கிற மகாத்மா காந்தி மெடிக்கல் இன்ஸ்டியூட்டில் நல்ல வேலை கிடைச்சிருக்கு. புது இடம் புது மனிதர்கள் நிச்சயமா உனக்கு நல்ல மன மாற்றத்தையும் ஏற்படுத்தும். அதனால நம்ம அங்க போகிறதுதான் பெஸ்ட். அதுமட்டுமல்ல சம்பளமும் இங்கே இருப்பத காட்டிலும் 40% அதிகம்.
பணம் மட்டுமே வாழ்க்கைக்கு தேவையான நிம்மதியைக் கொடுக்காது உமா.
ஆமாம் பெரிய அம்பானி ஃபேமிலி, இவ பேச்ச பாரு. ஆசிரமத்தில் நிறைய நாளு சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு இருக்கேன் அப்படின்னு நீதான் சொல்லி இருக்கே. ஏதோ பணக்கார இடத்தில, குடும்பத்தில் திகட்டதிகட்ட பணம் இருக்கிற எடத்துல பிறந்த மாதிரி பேசாத. நிறைய பணம் இருந்தால் ஆசிரமத்துக்கு நிறைய கொடுக்க போறே. அந்த ஆங்கிளில் யோசனை செய்.
சரி சரி நீ சொல்றபடியே செய்யலாம் போதுமா
என்றாள் நந்திதா.
அத்தியாயம் 2
"உன்
பார்வை
புதிதாக
தெரிகிறது.
அமைதியான
என்
மனதில்
ஒரு
புதிய
விடியல்
தோன்றியது
உன்
வரவால்
என்னை
புதிதாக
படைத்தவள்
நீ
என்னுடைய
நவீன
பிரம்மா
நீ"
ஒருவழியா நம்ம ஷில்லாங் நகருக்கு வந்து சேர்ந்துவிட்டோம். குளிரு ஜாஸ்தியா இருக்கு
என்றாள் உமா.
சென்னையில குளிர் இருக்காது. மிஞ்சிப்போனா மார்கழி மாசத்துல கொஞ்சம் டிரை வெதர் இருக்கும். சென்னையை கம்பேர் பண்ணா இது ரொம்ப ரொம்ப குளிரு
என்றாள் நந்திதா.
ஆமாம் 1500 மீட்டர் கடல் பரப்பிற்கு மேலே இருக்குல்ல. குளிர் இருக்கத்தான் செய்யும்
என்றாள் நடுங்கியபடியே உமா.
காலேஜ் நல்ல பெருசா இருக்கு. காலேஜ் குவாட்டர்ஸ் ரொம்ப நல்லா இருக்கு
என்றாள் நந்திதா.
உனக்கு புடிச்சிருக்கு அப்பாடா. ஐ அம் சோ ஹேப்பி. சின்ன குழந்தையாட்டம் கண்ணைக் கசக்கிக்கொண்டு சென்னைக்கு போகணும் அப்படி என்று நீ சொல்லிடுவாய் என்று எனக்கு பயமா இருந்தது
என்றாள் உமா.
அதைக்கேட்ட நந்திதா கலகலவென சிரித்தாள்.
இன்னும் அவ்வளவு மோசமான நிலைமைக்கு நான் வரவில்லை. சென்னையிலேயே இருந்து பழகிவிட்டேன் நான். இந்த இடம் அட்ஜெஸ்ட் ஆக கொஞ்ச நாள் ஆகும் அவ்வளவுதான் அரசியல்வாதிகளுக்கு வருவதுபோல் செலக்டிவ் அம்னீஷியா வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். தேவையில்லாத நினைவுகளை மறந்துவிடலாம்
என்றாள் பெருமூச்சுடன் நந்திதா.
நீ இவ்வளவு யோசிக்கிற அளவுக்கு அவன் அவ்வளவு நல்லவன் இல்லை.
கரெக்டுதான். என் மனம் ரொம்ப வறண்டு இருந்தது போல, அன்பு செலுத்துவதற்கு ஒருவன் வந்த உடன் மனம் லேசாகி விட்டது. அவனை சொல்லி குற்றமில்லை என் மேலும் தப்பு உள்ளது.
நீ மற்றவர்களை பற்றி ரொம்ப கவலைப்படாதே. உன்னைப் பற்றி கவலைப்பட பழகிக்கொள். நீ காட்டிய பரிதாபத்தை அவன் நன்றாக பயன்படுத்திக் கொண்டான். அதை அழகாக காதலாக மாற்றிவிட்டான். செஸ் விளையாட்டில் மெதுவாக காய்களை நகர்த்துவதுபோல் உனக்கு தெரியாமலேயே அவன் அதை செய்துவிட்டான்
என்றாள் உமா.
ஒருவேளை இந்த கம்ப்யூட்டர் கூட இருந்தது, மற்றவர்கள் மனதில் என்ன இருக்கு என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது போல. நானும் ஒரு எந்திரம்போல் ஆகிவிட்டேன் போல. இந்த இயந்திரத்திற்கு இப்பொழுது தேவை டெலிட் கமெண்ட். அது கொடுத்தால் போதும் எந்திரன் படத்தில் வரும் ரோபோ போல் எல்லாம் மொத்தமாக காலியாகிவிடும்
என்றாள்
நந்திதா.
சரி இந்த டாப்பிக்கை நாம இதோட முடிச்சுக்கலாம். ஷில்லாங் வந்த பின்பும் இதைப் பற்றி பேசி நீ மூட் அவுட் ஆவதில் எனக்கு விருப்பமில்லை
என்றாள் கண்டிப்பான குரலில் உமா.
"சரி சரி நாளைக்குதான் முதல்முறையா வேலைக்கு சேரப் போகிறோம். கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட் மத்த ஸ்டாஃப் எல்லாம் எப்படி