Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Natchathira Poonthottathil
Natchathira Poonthottathil
Natchathira Poonthottathil
Ebook152 pages50 minutes

Natchathira Poonthottathil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த கதையின் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. கதையின் நாயகி தேஜஸ்வினி. எதிர்பாராதவிதமாக பெரிய ஆபத்தில் சிக்கும் அவள் என்ன செய்கிறாள்? அசிஸ்டன்ட் போலீஸ் கமிஷனர் நந்தகுமார் அவளுக்கு எப்படி உதவுகிறான்? தெரிந்துகொள்ள பயணிப்போம் நாம் நட்சத்திர பூந்தோட்டத்தில்...

Languageதமிழ்
Release dateOct 15, 2022
ISBN6580140909167
Natchathira Poonthottathil

Read more from Lakshmi Sudha

Related to Natchathira Poonthottathil

Related ebooks

Reviews for Natchathira Poonthottathil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Natchathira Poonthottathil - Lakshmi Sudha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நட்சத்திர பூந்தோட்டத்தில்

    Natchathira Poonthottathil

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 1

    காலம்

    கடந்து

    விட்டது..

    மணித்துளிகள்

    குதிரை

    வேகத்தில்

    ஓடுகின்றன..

    வீணையை

    மீட்டுவதற்கு

    நான்

    தயாராக

    இருக்கிறேன்.

    காலம்

    கூடி

    வருகிறது.

    மங்கல

    நாதம்

    ஒலிக்கப்

    போகிறது.

    காத்திருக்கிறாய்

    நீ..

    பாட

    வேண்டிய

    பாடல்

    எனக்கு

    மறந்து விட்டது..

    பஜ கோவிந்தம்

    பஜ கோவிந்தம்

    கோவிந்தம் பஜ

    மூடமதே..

    பாடல் வரிகள் தேஜஸ்வினியை ஈர்க்கவில்லை.இன்று மட்டும் இல்லை சமீபகாலமாகவே இந்த பாடல் வரிகள் மட்டுமின்றி எந்த பாடல்களுமே அவள் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

    பாடல்களை உருகி கேட்பது அவற்றுடன் லயித்து மனதை பறி கொடுப்பது.

    பாடல்களில் ஒன்றிப்போய் அதிலேயே மூழ்கி இருந்தது

    ஒரு காலம்.அது கடந்த காலம் முடிந்து போன ஒரு கதை.

    மரத்திலிருந்து தானாக சருகுகள் விழுவதுபோல பழைய நினைவுகள் மனதில் இருந்து விழுந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

    விழுந்த சருகுகள் மரத்தில்ஒட்டாது.அதேபோல் நினைவுகள் மனதில் ஒட்டாமல் தொலைவாக மிகத் தொலைவாக கண்ணுக்கும் மனதிற்கும் எட்டாத தூரத்தில் இருந்தால் எவ்வளவு நல்லது என்று நினைத்தபடியே படுக்கையிலிருந்து எழுந்தாள் அவள்.

    உன்னை இப்பதான் எழுப்பலாம் என்று நினைத்து வந்தேன் அதற்குள் நீயாக கண் விழித்து விட்டாய் என்றபடியே அம்மா

    சாம்பிராணி புகை எல்லா இடத்திலும் பரவுமாறு தூபக்காலை அறைக் கதவின் மூலையில் காட்டினாள்.

    கண்விழிக்காவிட்டால் நன்றாக இருக்கும்….

    அந்த நாள் வராதா.

    மீளாத்துயில்.

    எல்லா பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை.

    விருப்பு வெறுப்பு எதுவும் இல்லாத ஒரு நிலை. அந்தநிலை கிடைக்காதா என்று வாய் வரை வந்த வார்த்தைகளை கஷ்டப்பட்டு விழுங்கினாள் தேஜஸ்வினி.

    சீக்கிரமா குளிச்சுட்டு வா. அடை அவியல் ரெடி பண்றேன் சூடா சாப்பிட்டுட்டு போ உனக்கு பிடிச்ச டிஷ்.

    சீக்கிரமா வந்தேன்னா நிதானமா சாப்பிடலாம் என்றாள் அம்மா.

    சரி என்றாள் சுரத்தே இல்லாத குரலில் தேஜஸ்வினி.

    என்னடி குரல் ரொம்ப டல்லா இருக்கு உடம்பு சரி இல்லையா

    ஒன்றுமில்லை அம்மா

    உன்னை பார்க்கும் போதெல்லாம் வயிற்றைப் பற்றி எரிகிறது. பாதகன் உன் வாழ்க்கையையே நாசம் செய்து விட்டான் என்று சொல்லும்போதே அம்மாவின் கண்கள் கலங்கின குரல் கம்மியது.

    அம்மா தயவு செஞ்சு காலையில அழுகை ஆரம்பிக்காத ப்ளீஸ் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக நடந்தாள் தேஜஸ்வினி.

    குளிர் குளிர்ந்த நீர் திவலைகள் உடலில் பட்டவுடன் உடலில் இருந்த களைப்பு நீங்கியது போல் உணர்ந்தாள் தேஜஸ்வினி. ஆனால் மனதிலிருந்த அலுப்பு தீரவில்லை.

    மனதில் இருக்கும் காயம்... ஆறாத ரணங்கள்... என்னைவிட்டு போகுமா என்றாவது ஒருநாள்...

    யோசித்தபடியே குளித்து முடித்தாள் அவள்.

    சமையலறையில்அம்மா தட்டில் வைத்திருந்த அடையை அவசர அவசரமாக சாப்பிட தொடங்கினாள் தேஜஸ்வினி.

    ஹாலில் அப்பா வழக்கம்போல் சின்ன குழந்தைகளுக்கு ஸ்லோகத்தின் அர்த்தத்தை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

    இந்த உலகியல் வாழ்க்கை நிலையில்லாதது. தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது. அதுபோல் வாழ்க்கை நிலையில்லாதது.

    மூச்சுக்காற்று உள்ள வரை உறவு நட்பு எல்லாமே.

    மூச்சுக்காற்று போனபின்புஉயிரற்ற உடலுடன் வாழ்வதற்கு நெருங்கிய சொந்தங்கள் கூட அஞ்சுவர்.

    சிறுவயதில் விளையாட்டில் கவனம். பருவகாலத்தில் இன கவர்ச்சியில் ஒரு மயக்கம். முதுமை காலத்தில் எத்தனையோ கவலைகள்.

    இதற்கு நடுவில் பரம்பொருளான கோவிந்தனை நினைப்பதற்கு நேரம் எங்கே.

    பிறப்பு இறப்பு என்னும் மாய கடலில் படகு போல் உன்னை காப்பாற்ற உதவுகிறது. கோவிந்தன் மேல் கொண்டுள்ள பக்தி மட்டுமே. அதை மறந்து விடாதே.

    புரிந்ததா குழந்தைகளா

    நாளைக்கு லீவா தாத்தா என்று அடுத்த நாள் விடுமுறையில் கருமமே கண்ணாக இருந்தான் ஒரு குழந்தை.

    டேய் ஸ்லோகத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்ப என்று பார்த்தால் நீ நாளைக்கு லீவுக்கு அடி போடுற என்று அவனை செல்லமாக கடிந்து கொண்டார் சாம்பசிவ சாஸ்திரி.

    நான் கிளம்பறேன் என்று பொதுவாக சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினாள் தேஜஸ்வினி.

    அத்தியாயம் 2

    வாழ்க்கைப்

    பயணத்தில்

    இறங்க

    வேண்டிய

    இடம்

    வந்து

    விட்டது..

    புதிதாக

    ஒரு

    உலகம்

    எனக்காக

    காத்துக்

    கொண்டிருக்கிறது..

    இந்த

    பாதை

    ஒளி

    நிறைந்தது.

    சூரிய

    கதிர்கள்

    பாதை

    மேல்

    நடனமாடுகின்றன.

    என்னுள்

    இருக்கும்

    இருள்

    மறைகிறது.

    என்

    வாழ்வில்

    புது

    நம்பிக்கை

    ஒளி

    பிறக்கிறது...

    சென்னை நகரம் அடுத்த தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்தது.

    மெரினா கடற்கரையில் பிரதமர் உரையாற்ற உள்ளதால் செக்யூரிட்டி ஏற்பாடுகள் பிரமாண்டமாக இருந்தன.

    டெல்லியில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்பாக சென்னைக்கு மாற்றலாகி வந்திருந்த ஸ்பெஷல் பிரான்சை சேர்ந்த அசிஸ்டன்ட் கமிஷனர் நந்தகுமார் போலீஸ் ஜீப்பில் வேகமாக மெரினாகடற்கரையை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

    ராஜ் பிரதமர் ஸ்கெடுளிங்ல் எந்த மாற்றமும் இல்லை தானே

    இல்லை சார். இன்னும் ஒரு மணி நேரத்தில் பிரதமர் கடற்கரையில் உரையாற்றுவார்

    குட். எல்லா சாலைகளும் அதற்கேற்றாற்போல் பிளாக் செய்து விட்டார்கள் தானே

    ஆமாம் சார்.

    எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாம் பிரதமர் சென்னை விஜயம் பற்றியும் மெரினா உரை பற்றியும் கவர் செய்ய ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றன.

    மீடியாவை கண்ட்ரோல் செய்வது கஷ்டமாக இருக்கிறது என்று தீபக் சொல்லிக்கொண்டிருந்தான்

    அது எதிர்பார்த்ததுதான்.

    பாஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1