Naan Thediya Vanavil
()
About this ebook
மான்யா என்பவள் மிகவும் திறமைசாலி "டி பியர்ஸ்" என்ற வைர நிறுவனம் புதுவகையான டிஸைனில் மாலையை வடிவமைக்கும் போட்டியில் இராண்டாம் இடம் பெற்று, அந்த கம்பெனியில் பணிபுரியும் வாய்ப்பை பெறுகிறாள். அந்த நிறுவனத்தில் சிறந்து விளங்குகிறாள். இதில் தினகர் மற்றும் சித்தார்த் இருவரும் மான்யாவை விரும்புகின்றனர்... இதில் மான்யா தேர்ந்தெடுத்த வானவில் யார்...? என்பதை வாசிக்கலாம்... வாருங்கள்...
Read more from Lakshmi Sudha
Saaral Sollum Sangeetham! Rating: 5 out of 5 stars5/5Natchathira Poonthottathil Rating: 0 out of 5 stars0 ratingsAzhagiya Maalaiyil Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Raagam Rating: 5 out of 5 stars5/5Enna Solla Pogiraai Rating: 1 out of 5 stars1/5Ennai Mayakkiya Poongatre Rating: 0 out of 5 stars0 ratingsMalargal Malarkindrana! Rating: 0 out of 5 stars0 ratingsPaarthirunthaal Varuven Vennilaviley... Rating: 0 out of 5 stars0 ratingsOru Murai Sollividu Rating: 5 out of 5 stars5/5Sagiye Snegithiye Rating: 0 out of 5 stars0 ratingsIthu Mounamana Neram! Rating: 4 out of 5 stars4/5Solai Malaroliyoo! Rating: 4 out of 5 stars4/5Thullatha Manamum Thullum Rating: 2 out of 5 stars2/5Pookkal Paadum Boopalam... Rating: 0 out of 5 stars0 ratingsPoo Vasam Purapadum Neram Rating: 0 out of 5 stars0 ratingsManathil Pathintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsPookkale Oivedungal! Rating: 5 out of 5 stars5/5Mayam Seithayo... Rating: 4 out of 5 stars4/5Roja Poonthottam Nee... Rating: 3 out of 5 stars3/5Pookkalin Punnagai Nee...! Rating: 1 out of 5 stars1/5Kaattrukku Thoothu Vittu...! Rating: 0 out of 5 stars0 ratingsPaniyil Nanaintha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaga Kaathirukkirean Rating: 3 out of 5 stars3/5Urugiyathey En Ullam! Rating: 0 out of 5 stars0 ratingsUn Thanimai Sugamaa? Rating: 5 out of 5 stars5/5Poo Mazhai Ennul...! Rating: 0 out of 5 stars0 ratingsPanneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5Poo Parikka Nee Pogathey! Rating: 0 out of 5 stars0 ratingsVelicha Poove Vaa Rating: 0 out of 5 stars0 ratingsKaatrinile Varum Thendral Rating: 4 out of 5 stars4/5
Related to Naan Thediya Vanavil
Related ebooks
Moongil Kaatril Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsMayam Seithayo... Rating: 4 out of 5 stars4/5Manam Virumbuthe Unnai Rating: 5 out of 5 stars5/5Poo Vasam Purapadum Neram Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsEppozhuthum Un Ninaivu! Rating: 0 out of 5 stars0 ratingsTholai Thoora Velicham Nee! Rating: 4 out of 5 stars4/5Devathai Vaazhum Veedu! Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5En Kaadhal Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Sirippinile... Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsSwasamai Kalandhavale! Rating: 4 out of 5 stars4/5Thalli Ponal Theipirai Rating: 0 out of 5 stars0 ratingsEnathu Kavithai Neethan... Rating: 0 out of 5 stars0 ratingsPaarthirunthaal Varuven Vennilaviley... Rating: 0 out of 5 stars0 ratingsYaathumagi Nindrai! Rating: 0 out of 5 stars0 ratingsOli Pookkum Malai... Rating: 0 out of 5 stars0 ratingsPonnai Virumbum Bhoomiyile Rating: 0 out of 5 stars0 ratingsEnnamo Yetho… Rating: 0 out of 5 stars0 ratingsEn Kanavu Devathai Rating: 4 out of 5 stars4/5Nilavu Thoongum Neram! Rating: 0 out of 5 stars0 ratingsMaya Nathiyile Naan...! Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Thedum Sittu Kuruvi Rating: 5 out of 5 stars5/5Vanna Vanna Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsVaanamenum Veedhiyiley...! Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Mayakkiya Mellisaiye Rating: 0 out of 5 stars0 ratingsEnnodu Vaa Nila Rating: 0 out of 5 stars0 ratingsIlankaatru Veesuthey... Rating: 0 out of 5 stars0 ratingsVelicha Poove Vaa Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Naan Thediya Vanavil
0 ratings0 reviews
Book preview
Naan Thediya Vanavil - Lakshmi Sudha
https://www.pustaka.co.in
நான் தேடிய வானவில்
Naan Thediya Vanavil
Author:
லட்சுமி சுதா
Lakshmi Sudha
For more books
https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
1
இரவு
எனும்
போர்வையைப்
போர்த்துக்
கொண்டு
எல்லோரும்
உறங்குகிறார்கள்
.....
நான்
மட்டும்
கண்
விழித்துக்
கொண்டு
இருக்கிறேன்!
.....
உன்
நினைவுகளைச்
சுமந்தபடி
சுகமாகக்
கண்
விழித்து
இருக்கிறேன்!
விமானத்தை விட்டு இறங்கும்பொழுது யூடிகுலனின் நறுமணமும் காபியின் மணமும் மான்யாவின் நாசியில் நிறைந்து இருந்தது.
எங்கள் விமானத்தில் பயணம் செய்ததற்கு ரொம்ப நன்றி!
என்றாள் கைகூப்பி வணங்கியபடியே விமானப் பணிப்பெண்.
பதிலுக்கு அழகாகப் புன்னகைத்தாள், மான்யா. அப்பொழுது அவள் முன்னால் சென்றுகொண்டு இருந்த தினகர், தடுமாறிக் கீழே விழப்போனான்.
பாத்து... தினகர்...
என்றபடியே அவன் கையைப் பற்றினாள்.
ஏய்... என்னால் தனியாக நடக்க முடியும். விடு என் கையை!
என்று படபடத்தான் அவன்.
அவளிடமிருந்து பெருமூச்சுப் பிறந்தது. இவன் இங்கே வந்தே இருக்கக்கூடாது. ஜெம்ஸ் மற்றும் விலை உயர்ந்த கற்கள் பற்றித் தெரிந்துகொள்ள நான் இங்கே வந்திருக்கிறேன்.
கஷ்டப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து நான் இங்கே வந்து இருக்கிறேன். ஆனால் தினகர் ஜெம்ஸ் அண்ட் யூ
நிறுவனத்தின் முதலாளியின் மகன்.
இங்கே சத்திஸ்கரிலிருந்து நேரடியாகச் சுரங்கத்தில் இருந்து கிரிஸ்டல் கற்களை வாங்கினால் விலை குறைவாக இருக்கும் என்ற எண்ணத்தில் இங்கே வந்திருக்கிறான்.
இந்தப் பயணத்தில் தினகரும் வரப்போகிறான் என்று எனக்கு முதலிலேயே தெரிந்து இருந்தால், நான் இதை ஒத்திப்போட்டு இருப்பேன்.
ஆனால் இவன் வரப்போவது எனக்குக் கடைசியில்தான் தெரிய வந்தது. அதற்குப் பின்பு டிக்கெட்டைக் கேன்சல் செய்தால் எனக்கு ரொம்ப நஷ்டம்.
இவனுடைய அப்பாவிற்கு இவன் நேர் எதிர். முரளிஸார் எல்லாவற்றிலுமே ரொம்ப ஆர்கனைஸ்டாக இருப்பார்.
ஆனால் இவனுக்குக் கடைசி நிமிஷத்தில்தான் எல்லாவற்றையும் செய்து பழக்கம். அதோடு இவன் மதுவிற்கு அடிமை.
குடிக்காவிட்டால் இவனுக்குக் கோபம், எரிச்சல் எல்லாமே வரும். நடை தள்ளாடும். வாய் குளறும். இதோ இப்பொழுதுகூட விமானத்தில் இருந்து இறங்கும்பொழுது இவன் விழப் பார்த்தானே!
சே! இவன் இருக்கும்பொழுது என்னால் இங்கே என்ன கற்றுக்கொள்ள முடியும் என்று கோபமும் எரிச்சலும் அவளை ஆக்ரமித்தது.
விமான தளத்தில் இருந்த ‘சந்திக்கும் முனை’ என்று இருந்த இடத்தில் லக்கேஜுடன் நின்றனர் இருவரும்.
என்ன விமானம் இது! சே... சாப்பாடா அது! என் உடம்புக்கு இது ஒத்துக்கொள்ளவில்லை போல... வயிற்றை ஏதோ செய்கிறது!
என்று வயிற்றைப் பிடித்தபடி அரற்றினான் தினகர்.
சாப்பாடு எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. உன் உடம்பு மதுவிற்கு அடிமையாகிவிட்டது. அது இல்லாமல் உன்னால் இருக்க முடியவில்லை என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் அவள்.
என்ன... நான் இங்கே வலியால் துடித்துக்கொண்டு இருக்கிறேன். நீ அதைக் கண்டுகொள்ளாமல் எங்கோ பார்த்துக்கொண்டு இருக்கிறாய். உனக்கு ரொம்பத் திமிர்தான். எல்லாம் அப்பா கொடுக்கும் இடம்.
உங்கள் உடம்பிற்கு ஒன்றும் இல்லை. மது அருந்தாமல் இருப்பதால்தான் உங்களுக்கு இப்படி எல்லாம் தோன்றுகிறது. நீங்கள் அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டால் எல்லாம் தானாகச் சரியாகிவிடும்.
ஏய்... நீ எப்ப டாக்டர் ஆன? இப்பவே என் மனைவி போலப் பேசற. உன் அட்வைஸ் எல்லாம் கல்யாணத்திற்கு அப்புறம் வைத்துக்கொள்,
என்று கத்தினான்.
விமான தளத்தில் போவோர் வருவோர் எல்லாரும் திரும்பிப் பார்த்தனர். சிலரின் விழிகள் தன் மேல் பரிதாபமாகப் படிவதைக் கவனித்தாள் மான்யா.
அவள் முகம் கோபத்தாலும் அவமானத்தாலும் சிவந்தது. கஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக்கொண்டாள் அவள்.
என்ன... இன்னும் யாரையும் காணவில்லை என்று அவள் மனதில் கேள்வி குடைந்தது. விமான தளம் கிட்டத்தட்டக் காலியாகிவிட்டது.
விமான ஊழியர்கள் மட்டுமே அங்கும் இங்கும் அவரவர் வேலையில் ஈடுபட்டு இருந்தனர்.
மிஸ் மான்யா... மிஸ்டர் தினகர்... ஸாரி, உங்களை ரொம்ப நேரம் காக்க வைத்ததற்கு...
என்று கம்பீரமான ஒரு குரல் பின்னால் இருந்து கேட்கத் திரும்பினாள் அவள்.
அவன் கண்களில் திமிர் கலந்த புத்திசாலித்தனம் தெரிந்தது. அவள் நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில் அவன் இருந்தான்.
அவன், அவள் அருகே இருந்த பையை எடுக்கக், குனிந்தான்.
ஒரு நிமிடம்...
என்று மான்யா சட்டெனப் பையை அவனிடம் இருந்து பிடுங்காத குறையாக இழுத்துக்கொண்டாள்.
அவன் சட்டென நிமிர்ந்தான். கண்களில் அலட்சியம் தெரிந்தது.
ஏன்...?
என்றான் நிதானமாக.
நீங்கள்... நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் உங்களுக்கு நாங்கள் யார் என்று தெரிந்து இருக்கிறது. உங்களைப் பாலகுமாரன் ஸார் அனுப்பி வைத்தாரா... எங்களை அழைத்து வருவதற்கு?
அவன் கண்களில் ஆச்சரியம் தெரிந்தது.
ம்... நான் உங்களிடம் இன்னொரு ஸாரி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்,
என்று வசீகரமாகப் புன்னகைத்தான்.
நான் யார் என்று உங்களிடம் சொல்லவில்லை. நான் சித்தார்த்... பாலகுமார் என் அப்பா. அவரால் நேரில் வந்து உங்களை வரவேற்க முடியவில்லை.
ஓ... அப்படியா...? பரவாயில்லை... எப்படியும் அவரைச் சந்திக்கத்தானே போகிறோம்!
ம்... இப்பொழுது உள்ள சூழலில் அது முடியாது என்று நினைக்கிறேன்.
என்ன சூழல்? எனக்குப் புரியவில்லை.
ம்... என் அப்பா இப்பொழுது மருத்துவமனையில் பை-பாஸ் சர்ஜரி செய்வதற்காக அட்மிட் செய்யப்பட்டு உள்ளார். உனக்கு இருக்கும் பல வேலைகளில் நீ இதை மறந்துபோய் இருப்பாய்,
என்றான் குத்தலாக அவன்.
எ... என்னது?
என்று அதிர்ந்தாள் அவள்.
ம்... நான் அனுப்பிய ஈமெயில் வரவில்லை என்று சொல்வாயோ?
என்றான் கோபமாக அவன்.
ஆமாம்... எனக்கு வரவில்லை. எப்படி... இது எனக்கு...
என்று அவள் முடிக்கும் முன்பு தினகர் குறுக்கிட்டான்.
மான்யா! எனக்கு உடம்பு முடியவில்லை,
என்று அலறினான் தினகர்.
காட்... இவன் விழுந்துவிடப் போகிறான்...
என்று பதறினாள் அவள். சட்டென அவன் தோள்மேல் கைபோட்ட மான்யா, அவனிடம் கெஞ்சலாகப் பேசத் தொடங்கினாள்.
நீங்கள் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும்.
சித்தார்த்தின் கூரிய விழிகள் தன் மேல் படர்வதை அவளால் உணர முடிந்தது.
ம்... என் முதலாளியின் மகன் இவர். இவருக்கு விமானத்தில் சாப்பிட்டது ஏதோ ஒத்துக்கொள்ளவில்லை.
நான் உன் வுட்பி!
என்று தெளிவாகச் சொன்னான், தினகர்.
அவனை மறுத்துப் பேசத் துடித்த உதட்டைப் பற்களால் அழுத்தி அடக்கினாள் அவள். இந்தப் புதியவன் முன் சண்டை வேண்டாம் என நினைத்துத் தன்னை அடக்கிக்கொண்டாள்.
நீங்கள் சொல்வதில் உள்ள உண்மை புரிகிறது,
என்றான் தினகரைப் பார்த்தபடி சித்தார்த். சித்தார்த்தின் உதடுகள் ஏளனமாக வளைவதைக் கவனித்தாள் மான்யா.
எங்களின் ஹோட்டல் எங்கு இருக்கிறது என்று சொன்னீர்கள் என்றால் போதும். நாங்கள் அங்கே போய்த் தங்கிக்கொள்வோம். இதற்கு மேல் இன்று உங்களுக்குத் தொந்தரவு தர நாங்கள் விரும்பவில்லை,
என்றாள் மெதுவாக அவள்.
ம்... நாளைக்கு நீ தொந்தரவு கொடுப்பாய்... அப்படித்தானே?
என்றான் வறண்ட குரலில் அவன்.
இ... இல்லை. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை!
என்றவளின் முகம் அவமானத்தால் சிவந்தது.
அப்படியா என்ன?
அவன் புருவங்கள் ஏளனமாக மேலே எழும்பி இறங்கின. பின்பு அவனே தொடர்ந்தான்.
அப்பாவின் கடமைகளைச் செய்வது அவர் மகனான என் கடமை. அதனால் நீங்கள் எங்கள் வீட்டில் தங்க வேண்டும். அப்பா அதைத்தான் விரும்புவார்.
அவன் சும்மா ஒப்பிற்குக் கூட அழைக்கலாம். இதை ஏற்றுக்கொள்ளக் கூடாது. இதைவிட அவமானம் ஏதும் இல்லை என்று முடிவு செய்தாள் அவள்.
யூ ஆர் வெரி கைண்ட். ஆனால் நீங்கள் சொன்னதுபோல் உங்கள் தந்தை இங்கு இல்லை. நாங்கள் அவரைத்தான் சந்திக்க வந்தோம்
.
உங்கள் வீட்டில் எங்களைத் தங்கச் சொல்வது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஆனால் எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது!
என்றாள் தீர்மானமான குரலில் மான்யா.
தினகரின் கைகள் சட்டென அவள் மணிக்கட்டை அழுத்தமாகப் பற்றின. வலி பொறுக்க முடியாமல் தன்னை மீறி, ஸ்... ஸ்...
என்று முனகினாள் மான்யா.
ஏய்! அவன் சொல்வதைக் கேள். ஏன் என்று விவரமாக நான் அப்புறம் சொல்கிறேன்,
என்று அவள் காதைக் கடித்தான் தினகர்.
ஆனால் அவன் சொன்னது சித்தார்த்தின் காதிலும் விழுந்து இருக்கும் என்று யூகித்தாள் அவள்.
ஓ...! தினகர்... நீங்கள் என் வீட்டிலேயே தங்கலாம். நீங்கள் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் உங்கள் உடல்நிலை. என் வீட்டில் உள்ளவர்கள் பணியாட்கள் உங்களை நன்றாகக் கவனித்துக்கொள்வார்கள்.
மான்யா கோபத்தை அடக்கிக்கொண்டாள். ஒருபுறம் தினகர் இந்த மாதிரி உளறுகிறான் என்றால், இந்தப் புதியவனும் அதையே வற்புறுத்துகிறானே...!
இவன் வீட்டில் இருப்பதைவிடச் சும்மா இருக்கலாம். சே! எல்லாம் இந்தத் தினகரால் வந்தது என நினைத்தபடியே இறுகிப்போய் இருந்தாள் அவள்.
போகலாமா மிஸ் மான்யா? எனக்கு நிறைய வேலைகள் உள்ளன. அதனால் கொஞ்சம் சீக்கிரமாக வந்தால் நன்றாக இருக்கும், என்றான் அதிகாரமாக அவன்.
வேறு வழி இன்றிப் பல்லைக் கடித்துக்கொண்டு கோபமாக அவனைப் பின் தொடர்ந்தாள் மான்யா. இவன் அப்பா பற்றித் தகவல் இமெயில் மூலம் கொடுத்தேன் என்று சொன்னானே... அது என்ன ஆயிற்று என்று நினைத்தபடியே குழப்பமாக நடந்தாள்.
அந்த ஸ்போர்ட்ஸ் காரில் அவளின் லக்கேஜை அவள் வைத்தாள். டிரைவர் ஸீட்டில் சித்தார்த் உட்காருவதை அவள் பார்த்தாள்.
பின் ஸீட்டில் நீயும் உன் வுட்பியும் உட்காரலாம்,
என்றான் அவன்.
அவள் முகம் கோபத்தால் சிவந்தது.
தினகர் அருகில் இருந்த இடத்தில் தள்ளி அமர்ந்துகொண்டாள் அவள். தினகர், ஜன்னல் வழியாகத் தெரிந்த காட்சிகளைப் பார்த்துக்கொண்டு வருவதைக் கவனித்தாள்.
இப்பொழுது சொல்லுங்கள்... ஏன் இவர் வீட்டில் நாம் தங்க வேண்டும் என்று வற்புறுத்தினீர்கள்?
என்றாள் மெதுவாக அவள்.
அவன் பதில் சொல்லாமல் அலட்சியமாகப் புன்னகைத்தான்.
உங்களைத்தான் கேட்கிறேன். ஏன் இப்படிச் செய்தீர்கள்? நாம் பாலகுமாரன் ஸாரிடம்தான் பேசினோம். நாம் வருவது அவரைப் பார்க்கவே! அவர் இப்பொழுது இல்லை. உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார். இந்த நிலையில் நாம் அவர் வீட்டில் தங்குவது நன்றாக இல்லை.
ஏன்... தங்கினால் என்ன? இது ரொம்ப நல்லது... பாலகுமாரன் ஸாருக்குப் பின்பு இந்தச் சுரங்கங்களின் பொறுப்பெல்லாம் சித்தார்த்தைச் சேரும்.
ஆனால், அவர்கள் வீட்டில் கெஸ்டாகத் தங்கினால் பிஸினெஸ் எப்படி உங்களால் பேச முடியும்? பிஸினெஸ், பணம், விருந்தினர் இதெல்லாம் ஒன்றாக இருப்பது நல்லது இல்லை. அதோடு அவர் அப்பாவின் உடல்நிலை இப்படி இருக்கும்பொழுது நாம் அவர் வீட்டில் போய்த் தங்குவது முறையாகத் தெரியவில்லை.
லுக்... மான்யா... அப்பாவிற்கு அடுத்தபடியாக வியாபாரத்தில் பொறுப்பேற்கும் முடிவு எனக்கு மட்டுமே உண்டு. அதைப் புரிந்துகொள். அதோடு கிரிஸ்டல் பற்றிய விவரங்கள் மட்டுமே உனக்குத் தெரியும். பிஸினெஸ் பற்றி உனக்கு ஏதும் தெரியாது. அதனால் வாயை மூடிக்கொண்டு வா
.
அதோடு அடுத்த வருடம் அப்பா ரிடையர் ஆகிவிடுவார். கம்பெனி முழுக்க என் வசம். அதை ஞாபகம் வைத்துக்கொள். இப்பொழுதே நீ அதற்குப் பழகிக்கொள். என் கோபத்தைத் தூண்டாதே!
"நீங்கள் செய்வது உங்களை மட்டும் பாதித்தால் பரவாயில்லை. என்னையும் அல்லவா சேர்த்துப் பாதிக்கிறது. அது மட்டும் இல்லை... என்னை உங்கள் வுட்பி என்று