Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilankaatru Veesuthey...
Ilankaatru Veesuthey...
Ilankaatru Veesuthey...
Ebook148 pages55 minutes

Ilankaatru Veesuthey...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

யாழினியின் வாழ்க்கை மற்ற பெண்களைக் காட்டிலும் வித்தியாசமானது. அவள் கம்பெனியில ஆட்குறைப்பு ஏற்படும்பொழுது அவளுக்கு வேறு ஏதேனும் வேலை கிடைக்கிறதா? எப்படி கிடைக்கிறது?

அங்கு அவள் சந்திக்கும் நபர்கள் எப்படிப்பட்டவர்கள்? செல்ப் எஸ்டீம் அதிகம் நிறைந்த யாழினி வேலையில் ஏற்படும் சவால்களை எப்படி எதிர்கொள்கிறாள்? கம்பெனியின் எம்.டி சஞ்சித் அதற்கு எப்படி ரியாக்ட் செய்கிறான்? படித்துப் பாருங்கள்.

படிக்கும் பொழுது நிச்சயமாக சில இடங்களில் வாய்விட்டு சிரிப்பீர்கள்.

Languageதமிழ்
Release dateFeb 12, 2022
ISBN6580140908035
Ilankaatru Veesuthey...

Read more from Lakshmi Sudha

Related to Ilankaatru Veesuthey...

Related ebooks

Reviews for Ilankaatru Veesuthey...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilankaatru Veesuthey... - Lakshmi Sudha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இளங்காற்று வீசுதே...

    Ilankaatru Veesuthey...

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    "பூங்காற்று

    இசையாக

    காதில்

    ஒலித்தது…

    அருவியின்

    ஓசை.

    இசையாக

    காதில்,

    பாய்ந்தது…

    பூக்களின்

    வாசம்…

    மனதில்?

    அமைதியை

    பரப்புகிறது…

    காலச்சக்கரம்

    மணித்துளிகளை

    நகர்த்துகிறது…

    இயற்கை

    ஏமாற்றத்தை

    கொடுப்பதில்லை

    எப்பொழுதும்…

    நம்முடைய

    அன்பும்

    அதுபோலவே."

    அந்தக் காலைப் பொழுது சத்தத்தின் சிகரமாக இருந்தது. திங்கட்கிழமை பரபரப்பு சாலையில் தெரிந்தது.

    வாகனங்கள் எல்லாவிடத்திலும் புகையைக் கக்கிக்கொண்டு நகர்ந்த வண்ணம் இருந்தன. கார்களின் இன்ஜின் உறுமல் ஒரு பக்கம், ஆம்புலன்ஸ் ஹார்ன் ஒலி ஒரு பக்கம், டூவீலரில் பின்புறம் சத்தமாக படிக்கும் மாணவியின் குரல் ஒரு பக்கம் என்று ஈ.சி.ஆர் ரோடு அமர்க்களப்பட்டுக்கொண்டே இருந்தது.

    எக்ஸாம் எழுதுவதற்கு லேட்டாகி விடும்போல் என்று நினைத்துக்கொண்டே யாழினி வேகமாக நடந்தாள்.

    கண் தெரியாத மாணவிக்கு எக்ஸாம் எழுத வேண்டும். அந்தப் பெண் விடைகள் சொல்ல சொல்ல அந்த தேர்வினை இவள் எழுத வேண்டும்.

    விடைகள் சரியாக இருக்கிறதா என்று கடைசியில் ஒருமுறை படித்துக் காட்ட வேண்டும். இந்த வேலை அவளுக்கு பிடித்த ஒன்று. அதுவும் இந்த தடவை தமிழ் மொழியில் எழுத வேண்டும்.

    தமிழ் இலக்கியத்தில் முதுகலை இரண்டாமாண்டு படிக்கிறாள் அந்த மாணவி. இதற்கு என்று யாழினிக்கு பணம் எதுவும் கிடைக்காது. ஆனால் அவளுக்கு ரொம்ப பிடித்த வேலை இது மற்றவர்களுக்கு உதவி செய்ய வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை அவள் தவறவிடுவதில்லை.

    தமிழில் எழுதியே ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன.

    ஸ்பீடு பிக்கப் பண்ணி கடகடவென்று எழுத வேண்டும் என்று யோசித்தபடியே நடந்து கொண்டிருந்த அவளை அலற வைத்தது அவள் கால் மேல் ஏறிய கார் டயர்.

    ஒரு பிஎம்டபிள்யூ கார் அவள் காலை பதம் பார்த்து இருந்தது.

    வண்டியில் ட்ரைவர் சீட்டில் இருந்த அந்த இளைஞன் கார் கண்ணாடியை இறக்கி அவளை பார்த்துவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து காரை கிளப்பினான்.

    வலி பொறுக்க முடியாத யாழினி கீழே விழுந்தாள். மெட்ரோவிற்கு பள்ளம் தோண்டும் வேலை நடந்து கொண்டிருந்ததால் அவளுக்கு வலதுபுறம் வேறு வண்டிகள் ஏதும் இல்லை. அதற்குள் அங்கே ஒரு சிறு கூட்டம் கூடிவிட்டது.

    திமிரு புடிச்சவன் கீழே இறங்கி என்ன ஆச்சு என்றுகூட பார்க்கல.

    குடிபோதையில் கார ஓட்டுவாங்க. என்று ஆளாளுக்கு பேசிக்கொண்டு இருந்தனர்.

    சரி பாவம் அந்த பொண்ண முதல்ல தூக்கி விடுங்கள். என்று ஒரு பெரியவர் கைதூக்கி விட மெதுவாக எழுந்தாள் யாழினி.

    தேங்க்ஸ் சார் என்றாள் அவள்.

    எங்கேயாவது அடிபட்டு இருக்காம்மா? என்றபடி இன்னொரு ஆபீஸ் போகும் பெண் அவள் அருகே வந்தாள்.

    கால் ரொம்ப வலிக்குது நடக்க முடியவில்லை. என்றாள் ஒற்றைக்காலில் நின்றபடி அவள்.

    ஊமைக்காயம் ஏதாவது பட்டிருக்குமோ?

    பக்கத்துலதான் ஆஸ்பத்திரி இருக்கு ஆட்டோவுல வாம்மா என்றார் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர்.

    இல்ல ஆஸ்பத்திரி வேண்டாம் எனக்கு ஒரு உதவி பண்ணுங்க அண்ணா என்றாள் ஆட்டோ ஓட்டுநரிடம் யாழினி.

    சொல்லுமா என்ன வேணும்.

    பக்கத்துல இருக்கிற காந்தி இன்ஸ்டிடியூட் போகணும். எக்ஸாம் நடக்குது கொஞ்சம் சீக்கிரம் போகணும்.

    அடப்பாவமே எக்ஸாம் எழுதப் போற நேரத்துல இந்த மாதிரி ஆயிடுச்சு. ஏறி உட்காருங்க. கரெக்ட்டா டயத்துல எப்படியாவது சேர்த்து விடுகிறேன். என்றார் ஆட்டோ ஓட்டுநர்.

    கஷ்டப்பட்டு காலை மேலே தூக்கி வைத்து ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள் அவள்.

    பயப்படாதே பரிட்சை நல்லா எழுதுங்க. இந்த சப்ஜெக்ட்ல பாருங்க மார்க் சும்மா டாப்பா வரப்போகுது உங்களுக்கு. என்று வாழ்த்தினார் அவர்.

    ரொம்ப நன்றி இது என்னோட எக்ஸாம் இல்ல. ஒரு பொண்ணுக்கு கண் பார்வை தெரியாது. அவங்களுக்காக நான் இந்த எக்ஸாம் எழுதப் போறேன்.

    ரொம்ப நல்ல விஷயம் இது. மத்தவங்களுக்காக நன்மை செய்பவர்களை அல்லாஹ் எப்பவும் கைவிடமாட்டார்.

    அந்த பொண்ணு நல்ல மார்க் வாங்கினா அதுபோதும் எனக்கு. நல்ல காலம் கையில் அடிபடவில்லை. அடிபட்டிருந்தால் எக்ஸாம் எழுதுவது ரொம்ப கஷ்டம்.

    ஆமாம் கரெக்ட் தான். படகு மாதிரி கார் வைத்திருந்தால் என்ன வேணாலும் செய்யலாம் அப்படிங்கிற திமிரு. ரொம்ப மோசமா போச்சு இப்ப காலம்

    ஆமாம் அண்ணா காரில் இருந்து இறங்கி வந்து பார்த்து இருந்தால்கூட பரவாயில்லை. அதுகூட செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை. மனிதாபிமானம் இல்லாமல் போய்விட்டது.

    உங்களைப்போல் நல்லவர்கள் இருப்பதால்தான் இன்னும் இந்த பூமி இருக்கு.

    அப்படியெல்லாம் பெரிதாக நான் எதுவும் செய்துவிடவில்லை என்னால் முடிந்த சின்ன உதவி.

    சின்ன உதவி, பெரிய உதவி என்ற வேறுபாடு பார்க்க வேண்டாமே. உன்னால் முடிந்ததை நீ மற்றவர்களுக்கு செய்கிறாய் அது நல்ல உதவி. என்றார் சிரித்தபடியே அவர்.

    இந்த ஓரமா அப்படியே நிறுத்திக் கொள்ளுங்கள் அண்ணா. நான் இறங்கிக் கொள்கிறேன்.

    இல்லம்மா காலேஜ்குள்ளேயே போய் நான் உன்னை ட்ராப் பண்றேன். இந்த கால வெச்சுக்கிட்டு வேகமா உடனே நடந்து போவது கஷ்டம்.

    கரெக்ட் அண்ணா நீங்க சொல்வது நான் ஏதோ ஞாபகத்தில் சொல்லிட்டேன்.

    பரவாயில்லை அம்மா என்றபடி செக்யூரிட்டியிடம் சொல்லிவிட்டு காலேஜுக்குள் நுழைந்தார் அவர்.

    காலேஜ் மரத்து நிழலில் தனக்காக காத்துக் கொண்டிருக்கும் அந்த மாணவியை பார்த்தவுடன் அவள் மனதில் ஒரு நிம்மதி பெருமூச்சு ஏற்பட்டது.

    ஹலோ மைதிலி.

    வாங்க யாழினி அக்கா உங்களுக்காக தான் காத்துக்கிட்டு இருந்தேன்.

    ஒவ்வொரு வருடமும் யாழினி இவளுக்காக எக்ஸாம் எழுதுவதால் இருவருக்கும் நல்ல பழக்கம் உண்டு.

    இன்னும் ஒரு 10 மினிட்ஸ் டைம் இருக்கு. எக்ஸாம் ஹால் போலாமா, இல்ல இன்னும் 5 மினிட்ஸ் கழிச்சு போகலாமா?

    இப்பவே போகலாம் அக்கா கடைசி நிமிஷத்துல ஏதாவது படிச்சா எனக்கு அவ்வளவுதான். என்றாள் சிரித்தபடியே மைதிலி.

    காலேஜ் மணி அடிக்கும் சப்தம் கேட்டது.

    2

    "இந்தப்

    பூக்கள்

    யாருக்காக

    மலர்கின்றன?

    எந்த

    எதிர்பார்ப்பும்

    இல்லாமல்

    வண்ணச்

    சிதறல்

    ஆன

    பூக்கள்

    மலர்கின்றன

    தினமும்

    யாருக்காக?

    வண்ண

    ஜாலம்

    காட்டி

    நொடியில்

    மறைகிறது

    வானவில்…

    தோன்றியவை

    எல்லாம்

    மறைந்து

    போவதற்காக

    தான்…

    நம்

    அன்பை

    Enjoying the preview?
    Page 1 of 1