Paniyil Nanaintha Nilavu
()
About this ebook
Read more from Lakshmi Sudha
Puthiya Raagam Rating: 5 out of 5 stars5/5Natchathira Poonthottathil Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Mayakkiya Poongatre Rating: 0 out of 5 stars0 ratingsThullatha Manamum Thullum Rating: 2 out of 5 stars2/5Saaral Sollum Sangeetham! Rating: 5 out of 5 stars5/5Paarthirunthaal Varuven Vennilaviley... Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogiraai Rating: 1 out of 5 stars1/5Azhagiya Maalaiyil Rating: 0 out of 5 stars0 ratingsPookkal Paadum Boopalam... Rating: 0 out of 5 stars0 ratingsOru Murai Sollividu Rating: 5 out of 5 stars5/5Ithu Mounamana Neram! Rating: 4 out of 5 stars4/5Mayam Seithayo... Rating: 4 out of 5 stars4/5Pookkalin Punnagai Nee...! Rating: 1 out of 5 stars1/5Sagiye Snegithiye Rating: 0 out of 5 stars0 ratingsMalargal Malarkindrana! Rating: 0 out of 5 stars0 ratingsManathil Pathintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsPoo Vasam Purapadum Neram Rating: 0 out of 5 stars0 ratingsUn Thanimai Sugamaa? Rating: 5 out of 5 stars5/5Pookkale Oivedungal! Rating: 5 out of 5 stars5/5Poo Mazhai Ennul...! Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Kaatril Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsUrugiyathey En Ullam! Rating: 0 out of 5 stars0 ratingsRoja Poonthottam Nee... Rating: 3 out of 5 stars3/5Kaattrukku Thoothu Vittu...! Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Mazhai Kaalam Rating: 4 out of 5 stars4/5Panneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5Idhayam Varai Nanaigirathey! Rating: 0 out of 5 stars0 ratingsEn Swasakaattru Nee...! Rating: 0 out of 5 stars0 ratingsPoo Parikka Nee Pogathey! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Paniyil Nanaintha Nilavu
Related ebooks
Vanna Vanna Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsTheendi Sendra Thendral Rating: 5 out of 5 stars5/5Mazhai Tharumo En Megam…! Rating: 4 out of 5 stars4/5Ennai Virumbum Ooruyire! Rating: 0 out of 5 stars0 ratingsIdhaya Koyil Rating: 4 out of 5 stars4/5Nesam Thanthaval Neethane! Rating: 0 out of 5 stars0 ratingsEn Mel Vizhuntha Mazhai Thuliye Rating: 0 out of 5 stars0 ratingsEppadi Solvenadi Rating: 4 out of 5 stars4/5Ullam Kavar Kalvan! Rating: 5 out of 5 stars5/5Maayam Seithayo Mayava Rating: 0 out of 5 stars0 ratingsPanneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5Idhayam Theetiya Oviyame! Rating: 4 out of 5 stars4/5Nenjil Unthan Ninaive Rating: 1 out of 5 stars1/5Un Perai Sollum Pothae Rating: 2 out of 5 stars2/5Inba Naalum Indru Thaane! Rating: 0 out of 5 stars0 ratingsIthu Mounamana Neram! Rating: 4 out of 5 stars4/5Poovil Thoongum Panithuli Rating: 5 out of 5 stars5/5Unakkaga Kaathirukkirean Rating: 3 out of 5 stars3/5Varuvaal, Kaadhal Devathai… Rating: 3 out of 5 stars3/5Paarthirunthaal Varuven Vennilaviley... Rating: 0 out of 5 stars0 ratingsManathil Pathintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsKannoramai Kathai Pesu! Rating: 5 out of 5 stars5/5Malargal Malarkindrana! Rating: 0 out of 5 stars0 ratingsUyir Sumantha Urave Rating: 0 out of 5 stars0 ratingsKaattrukku Thoothu Vittu...! Rating: 0 out of 5 stars0 ratingsUn Thanimai Sugamaa? Rating: 5 out of 5 stars5/5Santhithome Kanakkalil...! Rating: 3 out of 5 stars3/5Kaadhalum Kutrame... Rating: 4 out of 5 stars4/5Solai Malaroliyoo! Rating: 4 out of 5 stars4/5Kaadhale...! Kaadhale...!! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Paniyil Nanaintha Nilavu
0 ratings0 reviews
Book preview
Paniyil Nanaintha Nilavu - Lakshmi Sudha
https://www.pustaka.co.in
பனியில் நனைந்த நிலவு
Paniyil Nanaintha Nilavu
Author:
லட்சுமி சுதா
Lakshmi Sudha
For more books
https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 1
இமயமலையின்
உச்சியை
அடைய வேண்டும்
என்றால்
வழியில்
நிறையச்
சிரமங்கள்
போராட்டங்கள்
இருக்கும்!
அன்பே
நம் காதல்
வெற்றி பெற
வேண்டுமென்றால்
நிறைய
ஏமாற்றங்கள்
இருக்கும்!
என்னுடன்
வருவாயா?
அன்பு வெற்றி பெறும்!
அந்தக் கோயில் பிராகாரம் முழுவதும் அந்த இனிமையான குரல் எல்லாவிடத்திலும் பரவியது. நல்ல உருக்கமாகவும் குழைவாகவும் அழகாகப் பாடும் அவள் யாராக இருப்பாள் என யோசித்தபடியே கோயில் உள்ளே நுழைந்தான், ஆர்யா.
கோயில் உள்ளே கூட்டமாக இருந்தது. அம்மா கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்தான் அவன். என்ன அம்மா, கோயில்ல இவ்வளவு கூட்டம்? எப்பவும் இப்படித்தான் இருக்குமா? இல்லை, இன்னிக்கு ஏதாவது விசேஷமா?
என்றான் ஆர்யா.
இன்னிக்கு ஏகாதசிடா. மாத ஏகாதசினாலும் மார்கழி மாதம் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்குடா. ம்... ம்.... உனக்கு எங்க இதெல்லாம் தெரியப் போகுது. காடாறு மாசம் நாடாறு மாசம் அப்படிங்கற மாதிரி நீ வருஷத்தில் பாதி நேரம் கப்பல் ஓட்டற. மிச்ச நேரம் இங்க வந்திட்டு மறுபடியும் ஓடிடற!
என்றார் லேசான புன்முறுவலோடு பூரணி.
"என்னம்மா செய்யறது? என் வேலை அப்படி, கப்பல் தான் என் வாழ்க்கை. நான் க்ரூயிஸ் கப்பல்லதானே இருக்கேன். அதனால பூமிக்கும் அதுக்கும் எனக்குப் பெரிய வித்தியாசம் தெரியலை.
இங்க கிடைக்கிற எல்லாமே அங்க கிடைக்குது. நல்ல உணவகம், லைப்ரரி, தியேட்டர், ஸ்விம்மிங் பூல், உடற்பயிற்சிக் கூடம் என எல்லாமே கப்பல்ல இருக்கு,
நான் வேணா என் முதலாளிகிட்டே சொல்லி ஒரு கோயிலும் அங்கே நிறுவச் சொல்லிடவா? அப்பவாவது நீங்க அங்க வந்து கப்பலில் என்னோட தங்கி இருப்பீங்களா?" என்றான் ஆர்வமாக ஆர்யா.
அடப் போடா. நீ, உன் காதலி.... அப்புறம் மனைவி கூட அந்த மாதிரி கப்பலில் போனா ஒரு சுவை இருக்கும். நான் எல்லாம் எதுக்கு? வயசான காலத்தில கப்பல் எல்லாம் எனக்கு எதுக்குடா?
என்றார் பூரணி.
அம்மா... சும்மா என்னம்மா வயசாயிடுச்சுன்னு சொல்றீங்க. உங்களைப் பார்த்தா யாரும் வயது ஐம்பது அப்படின்னு சொல்லவே மாட்டாங்க. யூ லுக் லைக் அபௌவ் தர்டீ ஃபைவ்... அதுவும் சல்வார் போட்டீங்க... போதும், முப்பது வயசு அப்படின்னு சொல்லிடுவாங்க!
என்றான் உற்சாகமான குரலில் ஆர்யா.
ஏய் போதும்டா. ஐஸ் எல்லாம் இருக்கட்டும். சொல்லு, எப்ப கல்யாணம் செய்ய உத்தேசம் உனக்கு? இந்தத் தடவை தீர்மானமா ஏதாவது சொல்லு. இல்லை, என்கிட்ட பேசவே பேசாதே!
என்றார் பூரணி கண்டிப்புக் கலந்த குரலில்.
"நான் என்னம்மா செய்யட்டும்.... கல்யாணத்தில் எனக்கு பெரிசா லயிப்பு ஏதும் இல்லை. அது என்னமோ வாழ்க்கையே ஒரு காலண்டர் போட்டு அதுக்கு ஏத்தமாதிரி டைம் டேபிள் போட்டு அப்பப்பச் செய்யறது எனக்குப் பிடிக்கலை.
கல்யாணம், அப்புறம் குழந்தை, அப்புறம் குழந்தையோட படிப்பு, அப்புறம் அதோட வேலை, அதோட கல்யாணம் அப்படின்னு ஒரு வட்டத்துக்குள்ள சுத்திச் சுத்தி வர ரொம்பப் போரடிக்குது.
ஒரு ரூல் புக் மாதிரி வாழ்க்கையை நடத்த எனக்குப் பிடிக்கலைம்மா" என்றான் விட்டேத்தியான குரலில் ஆர்யா.
ஆர்யா... நீ எடுக்கற எல்லா முடிவுக்கும் நான் இதுவரைக்கும் துணை இருந்திருக்கேன். ஆனால் நீ இப்ப சொல்றதில் எனக்கு உடன்பாடு இல்லை. நீ தனியா பேச்சிலர் லைஃபை என்ஜாய் செய். பட் ஹவ் லாங்?
யூ நீட் எ கம்பானியன் இன் லைஃப். கொஞ்ச நாள் கழிச்சு இந்தப் பேச்சிலர் லைஃப் போரடிக்கும். யோசிச்சு செய் ஆர்யா!
என்றார் பூரணி.
சரிம்மா. நீங்க வழக்கம் போல் உங்க ஆனந்த்கிட்ட பெடிசன் கொடுங்கம்மா. நீங்க நினைச்சது எல்லாம் நடக்கும்.
லேசான புன்முறுவலோடு சொன்னான் ஆர்யா.
ம்... ம்... அது எப்படியும் ஒர்க் அவுட் ஆகும்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. இந்த அடையாறு அனந்த பத்மநாப சாமி ரொம்ப ஃபேமஸ். கண்டிப்பா என் பிரச்சினையைத் தீர்த்து வைப்பார்!
என்று சொல்லியபடியே பூரணி பெருமாள் சந்நிதி அருகே வந்தார்.
சிரித்தபடியே ஆர்யா அவரைப் பின் தொடர்ந்தான்.
பூரணி சயனித்து இருந்த பெருமாளைப் பார்த்தாள். பார்க்கப் பார்க்கத் திகட்டாத... என்ன ஒரு சாந்தம் தவழும் முகம்,
மல்லிகைப் பூக்களாலும், தாமரை மொட்டுக்களாலும், துளசி மாலையாலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்த சுவாமிகளைப் பார்க்கவே பரவசமாக இருந்தது.
சுவாமிக்கு இன்னிக்கு விசேஷ அலங்காரம். ரொம்ப நல்லாயிருக்கு, இல்ல ஆர்யா?
என்றார் பூரணி - அனந்த பத்மநாப சுவாமிகளின் மேல் பார்வை பதித்தபடியே.
ம்... ம்... ஆமாம் அம்மா!
என்றான் ஆர்யா. ஆனால் அவன் பார்வை சுவாரசியமாகப் படிந்திருந்தது அவள் மேலே.
தங்கத் தேர் முன்னால் உட்கார்ந்தபடி ஒரு அப்சரஸ் போல் குழைந்து உருகிப் பாடிக் கொண்டிருந்த அந்த அழகியை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
அழகான குழந்தைத்தனம் மிளிர்ந்த முகம், மாநிறம், பெரிய கண்கள், அளவான நாசி, ரோஜா இதழ் நிறத்தில் உதடு, சங்குக் கழுத்து எனப் பார்க்கப் பார்க்கச் சலிக்கவில்லை அவனுக்கு,
அவள் அணிந்திருந்த நகைகளும் கண்ணை உறுத்தாமல், ரொம்ப மெல்லியதாக அழகாக இருந்தன. தாமரை இதழ் நிறத்தில் ஒரு புடவை அணிந்திருந்தாள். ஏனோ அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆர்யா.
டேய், தீர்த்தம் வாங்கிக்கோ. என்ன யோசனை?
என்று அம்மா காதருகே சொல்லவும் சட்டெனச் சுயஉணர்வு பெற்றான் ஆர்யா.
தீர்த்தத்தை வாங்கிக் குடித்தான். பின் துளசிப் பிரசாதத்தையும் வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டான்.
'குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா’ என்ற பாடல் அவன் காதைத் தீண்டியது.
ஆர்யா... நல்ல பாட்டுடா. யார்னு தெரியலை. ரொம்ப நல்லா பாடறா. கேட்டுட்டுப் போலாமே!
என்றார் பூரணி.
ம்... ம்... சரிம்மா. கேக்கலாம். எனக்கே பிடிச்சிருக்குன்னா பார்த்துக்கோ!
என்றான் கிண்டலாக.
ம்... ம்... பாடற பொண்ணையா இல்ல பாட்டையா? எதுடா உனக்குப் பிடிச்சிருக்கு?
என்றார் பூரணியும் சளைக்காமல்.
அம்மா... நான் கர்நாடிக் மியூஸிக் பாட்டு எல்லாம் அவ்வளவா விரும்பிக் கேட்டது இல்லை. ஆனா இந்தப் பாட்டு நல்லா இருக்கு, ரொம்ப இன்வால்வ் ஆகிப் பாடற மாதிரி தோணுது!
என்றான் ஆர்யா.
கரெக்ட் ஆர்யா. எம்.எஸ். அம்மா இந்தப் பாட்டை ரொம்ப அழகா பாடி இருப்பாங்க. இந்தப் பெண் சின்னப் பெண்ணா இருந்தாலும் நல்லா பாடறா இல்ல. கண்களை மூடி லயிச்சு, ஒன்றிப் போய்ப் பாடறா!
என்றார் பூரணி.
ஆமாம் என்பது போல் தலை அசைத்தான் ஆர்யா. பாடுவது என்பது இறைவன் கொடுத்த பரிசுதான் போல. சட்டென மனம் எப்படி நெகிழ்ந்து விட்டது இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது.
'நான்' என்ற அகந்தை, கர்வம் எல்லாம் சட்டென ஒடுங்கி இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அன்பினால் நிரப்பப்பட்டது போல் ஒரு உணர்வு உடல் முழுவதும் அலை அலையாகப் பரவுகிறதே என்று வியந்தான் ஆர்யா.
பாடல் முடிந்துவிட, சட்டெனக் கனவு உலகில் இருந்து நிஜ உலகிற்கு வந்தான் ஆர்யா.
டேய் வாடா. அந்தப் பெண்ணைப் பார்த்து இரண்டு வார்த்தை பேசிட்டு வரலாம். நல்லாப் பாடினா இல்ல. அதை அவகிட்ட சொன்னா ரொம்பச் சந்தோஷமா இருக்கும். கலைஞர்களுக்குப் பிடிச்சதே தங்களோட கலை ரீச் ஆயிடுச்சு அப்படின்னு தெரியறதே!
என்றார் பூரணி.
மௌனமாக அவரைப் பின் தொடர்ந்தான் ஆர்யா. ஏனோ மனதில் ஒரு குறுகுறுப்பு.
அந்தப் பெண் கோயில் நிர்வாகி போல் காட்சி அளித்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தாள்.
அவர்கள் பேசி முடிக்கும்வரை காத்திருந்தார், பூரணி. அந்த நிர்வாகி கிளம்பியவுடன் பூரணியின் பார்வையும் அந்தப் பெண்ணின் பார்வையும் சந்தித்தன.
ரொம்ப நல்லா பாடினம்மா. நல்ல குரல் வளம் உனக்கு. உன் பாட்டைக் கேட்டுண்டே இருக்கலாம் போல ஒரு உணர்வு!
என்றார் பூரணி.
ரொம்ப நன்றிம்மா!
என்று வெட்கம் கலந்த புன்முறுவலோடு சொன்னாள் அந்தப் பெண்.
உன் பெயர் என்னம்மா? கச்சேரி எல்லாம் செய்யறியா?
என்றார் ஆவலோடு.
என் பெயர் தான்யா. கச்சேரி எல்லாம் செய்யலை. நான் மியூஸிக் பள்ளியில் டீச்சராக இருக்கிறேன். லேட்டாச்சு. கிளம்பணும்.
என்று சங்கீதம் போல் பேசிவிட்டு, ஒரு புன்முறுவலோடு அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆர்யா. ஏனோ ஒரு ஏமாற்றம் அவன் மனதை ஆக்கிரமித்தது.
அம்மாவையே பார்த்துப் பேசினாள் அவள். பக்கத்தில் ஆறடி உயரத்தில் கம்பீரமாக நிற்கும் ஒரு இளைஞனைத் துளி கூடக் கண்டுகொள்ளாமல்... என்ன பெண் இவள்!
ஒருவேளை திருமணமானவளா என்று மனதில் ஒரு நொடி தோன்றிய எண்ணத்தை ஒதுக்கினான். பார்த்தால் அப்படித் தெரியவே இல்லை. கழுத்தில் மெல்லிய சங்கிலி ஒன்று அணிந்திருந்தாள். அதைத் தவிர ஏதும் இல்லை.
தன் மனதில் ஓடும் எண்ணங்களைக் கண்டு அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. பெண்களுடன் ரொம்பப் பழக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது இல்லை.
ஆனால் இவளைப் பார்த்தவுடன் அந்த மாதிரி ஒரு எண்ணம் ஏன் தோன்றுகிறது? அவள் குரலின் இனிமையா இல்லை, அவளின் அழகான தோற்றமா? ஏன் இப்படி நான் நினைக்கிறேன் எனத் திகைத்தான்.
அவள் பெயர் தான்யா என்றுதானே சொன்னாள். பெயர் ரொம்ப வித்தியாசமாக இருக்கிறதே, என்று நினைத்தபடி நடந்தான்.
என்னடா என்ன யோசனை? எனக்குப் பிராகாரம் சுத்த முடியாது போல... டயர்டா இருக்கு... அதனால நான் அங்கே உட்கார்ந்திருக்கேன். நீ சுத்திட்டு வா,
என்றார் பூரணி.
சரிம்மா... நான் பிராகாரம் சுத்திட்டு வரேன்.
என்று சொல்லிவிட்டு உள் பிராகாரத்தைச் சுற்றத் தொடங்கினான் ஆர்யா.
சட்டென முன்னால் சென்று கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தான். அட! இங்க இப்ப கோயில்ல பாடின அதே பெண். தான்யா! என்று மனதிற்குள் சிரித்தபடி அவளைப் பின் தொடர்ந்தான்.
அவள் கூந்தலில் இருந்த ஒற்றை ரோஜா கீழே விழுந்தது. அதைக் குனிந்து எடுத்தான்.
எக்ஸ்க்யூஸ் மீ... இந்தாங்க ரோஜா... பை தி பை நீங்க ரொம்ப நல்லா பாடினீங்க, தான்யா!
என்று லேசான புன்முறுவலோடு ரோஜாவை அவளிடம் நீட்டினான் ஆர்யா.
அவனைப் பார்த்தாள் தான்யா. அவள் விழிகள் அவனைப் பார்த்தன. பின் ஒற்றைச் சிவப்பு ரோஜாவைப் பார்த்தன.
அவள் விழிகளில் கோபம் தெறித்தது. அவனைக் கோபத்தோடு பார்த்தாள்.
ஹலோ... ஐ ஆம் நாட் ஃபார் திஸ் ஸில்லி கேம்ஸ்!
என்று கோபமாக அனல் போல் வார்த்தைகளைக் கக்கி விட்டு வேகமாக நடந்து சென்றாள்.
ஒரு நிமிடம் திகைத்து நின்றான் ஆர்யா. பின் அவன் செய்த தப்பு புரிந்தது. சே... மடையன்