Vanna Vanna Pookkal
()
About this ebook
திவ்யா, ஹாஸினி, அநந்திகா மூவரும் இணைபிரியா கல்லூரி தோழிகள். இவர்கள் கல்லூரி படிப்பை முடித்த பின்னும் ஒன்றாக இருந்தார்களா இல்லையா? இவர்கள் வாழ்வில் நடந்த இன்ப துன்பங்களை தோழிகளுடன் சேர்ந்து பார்ப்போமா...
Read more from Lakshmi Sudha
Natchathira Poonthottathil Rating: 0 out of 5 stars0 ratingsAzhagiya Maalaiyil Rating: 0 out of 5 stars0 ratingsThullatha Manamum Thullum Rating: 2 out of 5 stars2/5Ennai Mayakkiya Poongatre Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Raagam Rating: 5 out of 5 stars5/5Saaral Sollum Sangeetham! Rating: 5 out of 5 stars5/5Enna Solla Pogiraai Rating: 1 out of 5 stars1/5Malargal Malarkindrana! Rating: 0 out of 5 stars0 ratingsUrugiyathey En Ullam! Rating: 0 out of 5 stars0 ratingsPookkal Paadum Boopalam... Rating: 0 out of 5 stars0 ratingsPookkale Oivedungal! Rating: 5 out of 5 stars5/5Paarthirunthaal Varuven Vennilaviley... Rating: 0 out of 5 stars0 ratingsOru Murai Sollividu Rating: 5 out of 5 stars5/5Ithu Mounamana Neram! Rating: 4 out of 5 stars4/5Kaattrukku Thoothu Vittu...! Rating: 0 out of 5 stars0 ratingsPookkalin Punnagai Nee...! Rating: 1 out of 5 stars1/5Sagiye Snegithiye Rating: 0 out of 5 stars0 ratingsPoo Vasam Purapadum Neram Rating: 0 out of 5 stars0 ratingsMayam Seithayo... Rating: 4 out of 5 stars4/5Un Thanimai Sugamaa? Rating: 5 out of 5 stars5/5Poo Mazhai Ennul...! Rating: 0 out of 5 stars0 ratingsManathil Pathintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsSolai Malaroliyoo! Rating: 4 out of 5 stars4/5Paniyil Nanaintha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsPanneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5Nee Pogum Paathaiyil... Rating: 0 out of 5 stars0 ratingsRoja Poonthottam Nee... Rating: 3 out of 5 stars3/5Kaatrinile Varum Thendral Rating: 4 out of 5 stars4/5En Swasakaattru Nee...! Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Mazhai Kaalam Rating: 4 out of 5 stars4/5
Related to Vanna Vanna Pookkal
Related ebooks
Enathu Kavithai Neethan... Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Unnai Virumbinen Uyire.. Rating: 5 out of 5 stars5/5Pani Vizhum Malar Vanam! Rating: 0 out of 5 stars0 ratingsNilavu Thoongum Neram! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaga Kaathirukkirean Rating: 3 out of 5 stars3/5Tholai Thoora Velicham Nee! Rating: 4 out of 5 stars4/5Pookolam Podavaa... Rating: 0 out of 5 stars0 ratingsNeeyedhaan En Manaivi Rating: 5 out of 5 stars5/5Kannaley Pesi Pesi... Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Kalam Idhu Rating: 0 out of 5 stars0 ratingsEppozhuthum Un Ninaivu! Rating: 0 out of 5 stars0 ratingsIlamai Kaatru Rating: 5 out of 5 stars5/5Devathai Vanthu Vittal Rating: 0 out of 5 stars0 ratingsMargazhi Maatha Nila! Rating: 4 out of 5 stars4/5Ennul Nee Pathitha Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsNaan Thediya Vanavil Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Kaatril Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsYaathumagi Nindrai! Rating: 0 out of 5 stars0 ratingsAnbil Thilaitha Uravu… Rating: 4 out of 5 stars4/5Pookkale Oivedungal! Rating: 5 out of 5 stars5/5Kaadhalin Pon Veedhiyiley... Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathai Thirudathe! Rating: 3 out of 5 stars3/5Ithu Irulalla! Rating: 5 out of 5 stars5/5Thanga Thamarai Malare! Rating: 5 out of 5 stars5/5Arugey Vaa Anamika Rating: 0 out of 5 stars0 ratingsManathil Pathintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsVelicha Poove Vaa Rating: 0 out of 5 stars0 ratingsManathukkul Aarathanai Rating: 4 out of 5 stars4/5Malargal Malarkindrana! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vanna Vanna Pookkal
0 ratings0 reviews
Book preview
Vanna Vanna Pookkal - Lakshmi Sudha
https://www.pustaka.co.in
வண்ண வண்ணப் பூக்கள்!
Vanna Vanna Pookkal!
Author:
லட்சுமி சுதா
Lakshmi Sudha
For more books
https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
முன்னுரை
வாங்க... பேசலாம். என்னுடைய நாற்பதாவது நாவலான ‘வண்ண வண்ணப் பூக்கள்’ மூலம் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.
நாற்பதாவது நாவலைக் கொஞ்சம் பெரிதாக எழுத முயற்சி செய்தேன். அதனால் தான் கொஞ்சம் தாமதமாகி விட்டது.
இந்த நாவலின் கருவை முதலில் நான் வாசகி திருமதி புஸ்பா பிரபுவுடன் பகிர்ந்து கொண்டேன். அவர் வழக்கம் போல நிறைய பயனுள்ள டிப்ஸ் கொடுத்தார்.
நாவல்கள் எழுதத் தொடங்கிய பின்பு இணையத்தின் மூலமாகவும், கைபேசி மூலமாகவும் நிறைய வாசகிகளிடம் பரிச்சயம் ஏற்பட்டது.
என் முதல் நாவலில் தொடங்கி... இதுவரை வெளிவந்துள்ள எல்லா நாவல்களைப் பற்றியும்... தொடர்ந்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் திருமதி காஞ்சனாவைப் பற்றி இங்கே சொல்லியே ஆக வேண்டும்.
‘சோலை மலரொளியோ' மாதிரி, 'காற்றினிலே வரும் தென்றல்' நாவல் மாதிரி இன்னொரு நாவல் எழுதுங்களேன் மேடம்! என்று அன்பாகக் கோரிக்கை வைப்பார் காஞ்சனா, ஓவ்வொரு முறை பேசும் பொழுதும். மனதில் இருப்பதைப் பளிச்சென தயங்காமல் சொல்லும் காஞ்சனாவிற்கு நன்றி.
கதை எழுதுவதற்கான 'Theme' ஏதாவது ஒரு காரணத்தினால் மனதில் தோன்றும். சுற்றி நடக்கும் சம்பவங்கள், வாழ்க்கையில் சந்திக்கும் வித்தியாசமான மனிதர்கள் என ஏதாவது ஒரு 'Spark' தோன்றும். அப்படித் தான் ஒவ்வொரு நாவலும் உருவாகிறது.
என் நாவலில் உள்ள ஆங்கிலச் சொற்களைக் குறைக்கச் சொல்லி... தொடர்ந்து காஞ்சனா சொல்லிக் கொண்டிருப்பார்.
இந்த நாவலில் ஆங்கிலச் சொற்கள் குறைவு என நம்புகிறேன்!
என் நாவல்களைப் பற்றித் தொடர்ந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் திரு. ராஜா, மற்றும் அவர் மனைவி திருமதி லீலாவிற்கும் நான் என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இணையதளம் மூலம் அறிமுகமான சாரதா மேடம்... இன்னொரு சுவாரசியமான வாசகி.
கதையை அக்கு வேறு ஆணி வேறாக அலசி விடுவார். இந்த நாவலில் இது மிஸ்ஸிங்... இந்த நாவலில் இது சூப்பர்... இந்த நாவலில் ‘Flow' இங்க சரியா இல்லை...!
சே... பாவம் அந்தக் கேரக்டர்! பரவாயில்லை... ஹீரோ ஹீரோயினும் சேரணும். நீங்க என்ன செய்வீங்க? என்று பதிலும் அவரே சொல்லி விடுவார். நன்றி சாரதா மேடம்!
என்னுடைய புத்தகங்களைப் படித்துத் தொடர்ந்து ஆதரவு தரும் எல்லா வாசகர்களுக்கும் என் நன்றி.
என்னை அறிமுகப்படுத்தித் தொடர்ந்து என் புத்தகங்களை வெளியிடும் திரு. லட்சுமணன் ஐயாவிற்கும், திரு. அருண் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
லட்சுமி சுதா
lakshmisudha2010@yahoo.com
பி.கு: இந்த நாவலுக்கு இந்தப் பெயரை வைக்க வேண்டும் என்று செல்லமாக வற்புறுத்தியது யார் தெரியுமா? ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் மகள்.
1
"மழைத் தூறல்
நேரம்
செல்லச்
செல்ல
மழைச் சாரல்
மாறியது!
மழைச் சாரல்
நேரம்
செல்லச்
செல்ல
அடைமழையாகியது
ஆனால்
என்
அன்பு
பார்த்த நொடி
முதல்
அடைமழை தான்!"
பிரம்மாண்டமாக, அலங்காரமாக விழாக் கோலம் பூண்டிருந்தது அந்தக் கல்லூரி வளாகம், அன்று. வண்ண விளக்குகள் தோரணமாய் மரங்களை அலங்கரித்துக் கொண்டிருந்தன.
மாணவிகள் பலர் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர், மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் தங்கள் சக மாணவியர்களை!
மேடையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தாள் அநந்திகா.
ஏய்... நல்ல வாய்ஸ்டி இவளுக்கு!
என்றாள், ஜூனியர் மாணவி ஒருத்தி.
ம்... இப்ப வரைக்கும் நம்ம காலேஜ் நிகழ்ச்சிகளை எல்லாம் இவங்க தான் காம்பியர் பண்றாங்க. இனிமேல் நம்ம காலேஜில் இவங்க குரலைக் கேட்க முடியாது. என்ன செய்யறது?
என்றாள், இன்னொரு மாணவி.
தேன் போல இனிமையான குரல் இவளுக்கு. ஆளும் பார்க்க அழகா இருக்கா. நம்ம காலேஜ் மட்டும் கோ-எட் ஆக இருந்தால் அவ்வளவு தான்... எல்லாப் பசங்களும் இவ பின்னாடி தான் இருப்பாங்க...
ம்... இவ மட்டும் இல்லை. இவ ஃபிரெண்ட்ஸ் ஹாஸினி, திவ்யாவும் கூட நல்ல அழகு.
ஆமாம்... ஆமாம். மூணு பேருமே ஒட்டிப் பிறந்த வங்க மாதிரித் தானே திரிவாங்க... எப்பவுமே...?
யெஸ்... யெஸ்... காலேஜ் இருந்த வரைக்கும் பரவாயில்லை. இனிமேல் என்ன செய்யப் போறாங்க?
அதுதான் எனக்கும் தெரியலை. காலேஜில் இவங்க கேங்கோட செல்லப் பெயரே முப்பெருந்தேவியர் தானே!
மூன்று பேருக்குமே... ஒவ்வொரு டேலண்ட். அநந்திகாவின் குரல் அவளுக்கு வரம்.
ஹாஸினி- படிப்பில் அவ்வளவு ஸ்மார்ட். கோல்டு மெடலிஸ்ட்.
திவ்யா அதிர்ந்து பேசமாட்டாள். அமைதியின் சிகரம் அவள்!
ம்... ஆமாம். ஆனால் எல்லோருமே நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவங்க. அது ஒரு நல்ல நட்பு உருவாகிறதுக்கு காரணமா இருந்ததோ என்னவோ?
ம்... ஆமாம். நீ சொல்றது சரிதான். அதோடு மூன்று பேருமே ஹாஸ்டல்ல ரூம் மேட்ஸ் வேற...!
ஆமாம்... அதுவும் ஒரு முக்கியமான காரணம். ஹாஸ்டல் வாழ்க்கையே வித்தியாசமானது. ஹாஸ்டல்ல இருந்தால் நல்ல ஃபிரெண்ட்ஸும் கிடைப்பாங்க.
அதே சமயம் படிக்கிறதுக்கும் நிறைய வாய்ப்பு இருக்கு. நிறைய டைம் இருக்கு. படிக்கவும் படிக்கலாம். அதே சமயம் என்ஜாயும் பண்ணலாம்...
ம்... இக்கரைக்கு அக்கரை பச்சைடி...! ஹாஸ்டல் சாப்பாடுன்னு ஒண்ணு இருக்கு... அதை மறந்துட்டியே...?
ஆமாம்... ஆமாம். வறட்டி மாதிரி சப்பாத்தி... கல்லு மாதிரி இட்லி... எப்பவுமே மசாலா தூக்கலாக இருக்கும் சாப்பாடு, இதெல்லாம் சொல்ல மறந்துட்டேனே...
என்று தன்னையே கடிந்து கொண்டாள் அவள்.
கைதட்டல் சத்தம் காதைப் பிளந்தது.
தேசிய கீதம் ஒலிக்கத் தொடங்கியது. எல்லோரும் எழுந்து நின்றனர்.
தேசிய கீதம் முடிந்ததும்... குழுமியிருந்த எல்லோரும் கலையத் தொடங்கினர்.
ஹாஸினியும் திவ்யாவும் அநந்திகாவை நோக்கிச் சென்றனர்.
அநந்தி... சூப்பரா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினடி...
என்றாள் ஹாஸினி.
தேங்க்ஸ்டி...! திவ்யா... நீ ஏன் இப்படி உம்முன்னு இருக்க?
அவ என்னிக்குடி... வாயைத் திறந்து மடை திறந்த வெள்ளம் போல பேசியிருக்கா...
என்ன ஹாஸினி இது...
சிணுங்கினாள் திவ்யா.
"ஏன்டி... எத்தனை தடவை உனக்குப் படிச்சுப் படிச்சுச் சொல்றது...? ரொம்ப அமைதியாக இருந்தால் எல்லோரும் உன்னை ஏய்ச்சுடுவாங்கடி...
உங்க சித்தியே... அதான் உன்னை அப்படியெல்லாம் பாடுபடுத்தறாங்க... நீ ஒரு தடவை தைரியமா உன் மனசில் இருப்பதைச் சொல்லுடி!
அப்பதான் அவங்க எல்லோருக்குமே உன்னைப் பத்திப் புரியும். தலையாட்டி பொம்மை மாதிரி இருக்காதடி... திவ்யா!
என்றாள் அநந்திகா.
ஆமாம்டி! எனக்கும் இவளை நினைச்சா பயமாத்தான் இருக்கு. கூடவே பாவமாவும் இருக்கு... வீடு, ஹாஸ்டல்... இதைத் தவிர வேற எதுவுமே இவளுக்குத் தெரியாது.
ஆமாம்... அதுவும் இவங்க அப்பாவே சொன்னார். இவ ரொம்ப சாது... அதனால தான் இவளோட சித்தி, இவளை ஆட்டிப் படைக்கறான்னு...
இது நாள் வரைக்கும் நாம இவளைப் பத்திரமாப் பார்த்துக்கிட்டோம். இனிமேல் இவ எப்படி சமாளிக்கப் போறா...?
ம்... அதுதான்டி எனக்கும் கவலையா இருக்கு...
நீங்க நினைக்கிற மாதிரி எங்க சித்தி ஒண்ணும் மோசமானவங்க இல்லைப்பா...!
என்றாள் திவ்யா, மெல்லிய குரலில்.
இது இன்னொரு பிராப்ளம்டி! வெளுத்தது எல்லாம் பால்ன்னு நினைக்கிறவடி இவ...! எனக்கு இவளுக்கு அதிர்ச்சி வைத்தியம் ஏதாவது கொடுக்கலாமோன்னு தோணுது...
ஏய்... பாவம்டி இவ தாங்க மாட்டாடி...!
என்னை வெச்சு ரெண்டு பேரும் டைம் பாஸ் செய்யறீங்களா?
என்றாள் திவ்யா, முகம் சிவக்க.
அட... உனக்குக் கூட கோபம் வருமா?
சாது மிரண்டால் காடு கொள்ளாது!
என்று அவளுக்குப் பரிந்து பேசினாள் ஹாஸினி.
சரி... என்னைப் பற்றிய பேச்சு போதும். காலேஜ் நமக்கு முடிஞ்சு போச்சு. அடுத்து என்ன செய்யப் போவதாக உத்தேசம்?
ம்... ஏதாவது ஒரு ரேடியோ சேனலில் ரேடியோ ஜாக்கியாகப் போய்ச் சேர வேண்டியது தான்!
என்றாள் அநந்திகா.
உனக்கு இருக்கிற அழகுக்கும், பர்சனாலிடிக்கும் நீ டி.வி.க்கே முயற்சி செய்யலாம்டி!
நீ நல்லா ஸ்பஷ்டமா... தெளிவாப் பேசற. அதுவும் ஆங்கில வார்த்தை அப்பப்ப வருது...
அதுதான் இப்ப ஃபேஷன். அதனால நீ டி.வி.யில புரோகிராம் செய்ய ஆரம்பிச்சா... சூப்பர் ஹிட்டாயிடும்.
ஆமாம்... இப்ப இருக்கிற பெரும்பாலான டி.வி. சேனல்களில் வருகின்ற தொகுப்பாளர்கள் எல்லாமே தமிழும் ஆங்கிலமும் கலந்து தான் பேசறாங்க...
"பட்... எனக்கு டி.வி.யில் ட்ரை பண்ண இஷ்டம் இல்லை. என்னுடைய பிளஸ் பாயிண்ட்டான குரலுக்கு டி.வி.யில் இரண்டாம் இடம் தான். ஆளுக்குத் தான் அங்கே முதல் இடம்.
அதனால் ரேடியோ தான் என் முதல் சாய்ஸ். அது தான் என் ஒரே சாய்ஸும் கூட!
என்றாள் அநந்திகா, தெளிவாக.
ம்... நீ சொல்றது சரிதான்டி! ஹாஸினி நீ என்ன செய்யப்போற...?
மேற்கொண்டு படிக்கப் போறியா? நீ தான் சரஸ்வதி தேவியின் செல்லப் பெண் ஆச்சே...!
என்றாள் திவ்யா.
ஹாஸினியும் அநந்திகாவும் கலகலவெனச் சிரித்தனர்.
அட... நீ கூட இப்படி எல்லாம் பேசறியே... திவ்யா! என்னால நம்ப முடியவில்லையே?
என்றாள் ஹாஸினி, வியப்புடன்!
நீங்க எல்லோரும் இன்னிக்கு இங்கேயே விடிய விடிய உட்கார்ந்து அரட்டை அடிக்கலாம்னு நினைக்கறீங்களா?
என்றாள் ரேகா.
ம்... ஹாய் ரேகா! நிலவொளியில் அரட்டை அடிக்க ஆசையாத் தான் இருக்கு. ஆனால் நம்ம ஹாஸ்டல் மட்டன் விடமாட்டாங்களே...!
என்றாள் அநந்திகா.
ம்... காலேஜில் இருந்த வரை, இணை பிரியாத தோழிகளா நீங்க மூன்று பேரும் இருந்துட்டீங்க. இனிமேல் என்ன செய்யப் போறீங்க?
சிதறு தேங்காய் போல் ஆளுக்கு ஒரு மூலையா சிதறப் போறீங்க...!
என்றாள் ரேகா.
அவள் கண்களில் ஒரு குரூர மின்னல் தோன்றி மறைந்தது.
திவ்யாவின் முகம் வாடியது.
ஹாஸினியின் முகம் கோபத்தால் சிவந்தது.
ரேகாவின் குணம் அநந்திகாவுக்குத் தெரியும்.
அடுத்தவர்களின் துன்பத்தில் இன்பம் காண்பது அவளுக்கு ரொம்பவும் பிடித்தமான ஒன்று என்று அநந்திகாவுக்குத் தெரியும்.
ரேகாவின் மூக்கை உடைக்க வேண்டும் என்று முடிவு செய்தாள் அவள்.
"ம்... நாங்க எல்லோரும் சிதறு தேங்காய் போல் சிதறுவோமோ... இல்லை ஃபெவிகால் பாண்ட் போல் ஒட்டிக் கொண்டு திரிவோமோ என்பதைப் பொறுத்திருந்து பார், ரேகா!
சரி... நீ என்ன செய்யப் போற? உனக்குப் பெரிதாக வித்தியாசம் ஏதும் தெரியப் போவதில்லை. ஏனென்றால் உனக்கு ஃபிரெண்ட்ஸே கிடையாது!
என்றாள் புன்னகைத்தபடியே, அநந்திகா.
ரேகாவின் முகம் கோபத்தால் சிவந்தது.
ஹாஸினியும் திவ்யாவும் சிரித்தனர்.
இவர்களைப் பழி வாங்க வேண்டும் என்று கறுவியபடியே அங்கிருந்து அகன்றாள் ரேகா.
நல்லா நோஸ் கட் கொடுத்த அநந்திகா! அவளுக்கு இது தேவை தான்!
என்றாள் ஹாஸினி.
பாவம்... ரேகா! முகம் வாடிப் போச்சு...
என்றாள் திவ்யா.
நீ திருந்தவே மாட்டேடி...!
என்றபடியே அவள் கயைக் கிள்ளினாள் ஹாஸினி.
மூவரும் ஹாஸ்டலை நோக்கி நடந்தனர்.
2
"நீ
அன்று
ரோஜாத்
தோட்டம்
அருகே
வந்தாய்!
ரோஜாப்
பூக்களின்
முகம்
மேலும்
சிவந்தன!
அட!
அதற்குக்
கூட
பொறாமையா
உன் மேல்?"
அன்று இரவு முழுவதும் தூங்காமல் அரட்டை அடிப்பது என முடிவு செய்தனர் அநந்திகாவும், ஹாஸினியும்.
திவ்யாவைப் பற்றித் தான் அவர்களின் பேச்சு பெரும்பாலும் இருந்தது.
ஹாஸ்டல் லைஃப் முடியப் போகுது, அநந்திகா... எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்குடி!
என்ற ஹாஸினியின் கண்கள் கலங்கின.
"ஏய்... என்ன இது? அழாதேடி! எனக்கு மட்டும் கஷ்டம் இல்லையா என்ன? என்ன செய்யறது? இந்த மூன்று வருஷம் ஓடிப் போய் விட்டது...
ரேகா சொன்னது மாதிரி ஆகி விடக் கூடாது ஹாஸினி! உனக்கு திருச்சி சொந்த ஊர். எனக்குச் சென்னை தான் எல்லாம்.
நம்ம திவ்யாவிற்கு செங்கல்பட்டு பக்கத்தில் உள்ள கிராமம் தான் எல்லாம். நாம எப்படித் தொடர்பு விட்டுப் போகாமல், நம்ம நட்பைக் காப்பாற்றப் போறோம்னு தெரியலை?
"தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இது பெரிய விசயம் இல்லை ஹாஸினி! கணினியில் இருக்கவே இருக்குது... ஃபேஸ்புக் வழியா நாம டச்சில் இருக்கலாம்.
அலைபேசி வேறு இருக்குது. அதனால நாம எப்பவும் தொடர்பில் இருக்கலாம்...
ம்... நீ சொல்றது சரிதான். ஆனால் நாம டெய்லி கொஞ்ச நாள் வேண்டுமானால் இந்த மாதிரி அலைபேசி வழியாகப் பேசுவோம்.
ஃபேஸ் புக் மூலமாக... நீ என்ன சாப்பிட்ட? எத்தனை மணிக்கு எழுந்த...? என்ன புதுப் படம் பார்த்த... அப்படின்னு கொஞ்ச நாள் நமக்குள்ள விஷயங்களைப் பகிர்ந்து கொள்வோம்.
அப்புறம் எல்லாமே படிப்படியாகக் குறைந்து போக வாய்ப்பு இருக்கு. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது தான் வித்தியாசம்!
நம்முடைய ப்ரையாரிடிஸ் மாறிப் போக நிறைய வாய்ப்பு இருக்கு. அதனால இந்த விஷயத்தை நாம கொஞ்சம் பிராக்டிகலா யோசிப்போம்.
அதுவும் திவ்யா வீட்டில் அவ்வளவு கெடுபிடி. உங்க சித்தி அவளுக்குப் பத்து ரூபாய் கூட கொடுக்க மாட்டாங்க. இந்த நிலைமையில் ஃபேஸ்புக், கணினி, அலைபேசி எல்லாம் அவளுக்குச் சாத்தியம் இல்லை...
அநந்திகாவின் வார்த்தைகளில் இருந்த உண்மை ஹாஸினியின் மனதைப் பாரமாக்கியது.
என்ன செய்யலாம்டி? நீயே சொல்லு! எல்லாப் பிரச்சனைகளுக்கும் நீ தான் நல்லதா தீர்வு சொல்லுவ...!
நீ எப்படிச் சந்திச்சுக்கறது? நாம எந்தச் சூழலில் இருந்தாலும் நம்ம ஃபிரெண்ட்ஷிப்... படிப்படியாக எல்லாமே குறைந்து போக வாய்ப்பு இருக்கு... அதோடு நாம் பொருளாதாரத்திற்கும் யாரையாவது சார்ந்திருக்க வேண்டிய நிலைமையில் உள்ளோம்.
இப்பொழுது காலேஜில் இருப்பதால் நமக்கு பாக்கெட் மணி கிடைக்கிறது. இதுவே நாம காலேஜில் இல்லாமல் வீட்டில் இருந்தால்... நம் நிலைமை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.
அதோடு எங்க வீட்டில அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் அநாவசியமா ஃபிரெண்ட்ஸோட அரட்டை அடிப்பது அவருக்குப் பிடிக்காது!
என்றாள் ஹாஸினி.
ம்... நீ சொல்றது கரெக்ட் தான். உங்க வீட்டில உங்க அப்பா ஸ்டரிக்ட் ஆபீஸர் என்றால்... எங்க வீட்டில் என் அம்மா ரொம்பவே கண்டிப்பு!
இந்தக் காலேஜில் சேர்வதற்காக... நான் அவர்களைக் கெஞ்சிக் கூத்தாடி சம்மதிக்க வைத்தேன்... அதோடு வீட்டிலிருந்து காலேஜ் வந்து போனால் ரொம்ப டைம் ஆகும்...
அதனால் படிக்க டயம் பத்தாது என்று அடம் பிடித்து காலேஜ் ஹாஸ்டலில் சேருவதற்கு அவர்களிடம் பர்மிஷன் வாங்கினேன்.
முதலில் வேலைக்குப் போவதற்கு ஏதாவது வழி செய்ய வேண்டும். அதுதான் என்னுடைய பிரையாரிட்டியில் முதலில் உள்ளது!
என்றாள் அநந்திகா.
ம்... சென்னையில் தான் நிறைய எஃப்.எம். அலைவரிசை இருக்குதேடி! எல்லாத்துக்கும் அப்ளை பண்ணுடி...
ம்... நீ என்னடி செய்யப் போற? ஹையர் ஸ்டடிஸா? எம்.எஸ்சி. அப்ளை பண்ணப் போறியாடி?
ம்... படிக்கணும்னு எனக்கும் ஆசை தான். ஆனால் அப்பாவுக்கு மேற்கொண்டு என்னைப் படிக்க வைப்பதில் இன்ட்ரஸ்ட் இல்லை.
அப்ப... நீயும் வேலைக்குப் போகப் போறியாடி?
இல்லடி! அப்பா அதுக்கும் ஒத்துக்க மாட்டார்!
அப்ப என்னடி கல்யாணமா?
ம்... அப்படித்தான் நினைக்கிறேன்!
என்றவளின் முகத்தில் செம்மை படர்ந்தது.
அட! கல்யாணம்னு சொன்ன உடனேயே... உன் முகத்தில் உடனே வெட்கம் தெரியுதே! உடனே கல்யாணமாடி உனக்கு...?
ம்... என்னடி செய்யறது? எனக்குக் கீழ ரெண்டு தங்கைங்க இருக்காங்க... அவங்களையும் அப்பா கவனிக்கணுமே!
ஏய்... கூடப் பிறந்த தங்கைங்க மாதிரி இல்ல பேசறே?
என்னடி செய்யறது? எங்க அம்மா முகத்தைக் கூட நான் பார்த்தது இல்லை. அத்தை தான் என்னை உளர்த்தது... அத்தை பொண்ணுங்க என்னோட நல்லா ஒட்டிண்டதுங்க...
இதோ இப்ப ஜெயந்தி பத்தாவது படிக்கிறா. வைஜெயந்தி எட்டாவது. டைம் எவ்வளவு ஃபாஸ்ட்டா ஓடுறது...
ம்... ஆமாம் ஹாஸினி! இந்த நாள் அப்படியே நின்னு போனால் நன்றாக இருக்கும்...
என்றவளின் கண்கள் கலங்கின.
ஏய்... உனக்குத் தான் நல்ல மெச்சூரிட்டி நம்ம குரூப்ல...! நீயே இப்படிக் கண்கலங்கினா என்ன அர்த்தம்?
ம்... வாழ்க்கையில் இன்னும் நமக்கு என்னென்ன விஷயங்கள் நடக்கவிருக்கிறதோ?
என்றாள் பெருமூச்சு விட்டபடியே அவள்.
என்னடி! நீ தத்துவம் பேசறியா?
என்றாள் ஹாஸினி, சிரித்தபடியே.
ஏன்டி! நான் பேசக் கூடாதா... என்ன?
அதெல்லாம் திவ்யாவோட டிரேட் மார்க் ஆச்சே!
"ம்... அது என்னவோ சரிதான். பார்... எந்தக் கவலையும் இல்லாமல்