Ennul Nee Pathitha Suvadu
By Chitra.G
()
About this ebook
"வாழ்க்கைப் பயணத்தில் சேர்ந்து பயணம் செய்யப் போகிற நாம், ரயிலில் பயணம் செய்வதா அதிசயம் என்கிறான் நகுலன்.
நமது சந்திப்பு சாதாரண ரயில் பயணம் மாதிரிதான். பயணம் செய்கிற நேரமும், இறங்குகிற இடமும் ஒன்றாக இருந்தாலும் நாம் சென்றடைகிற இடம் வேறு வேறுதான். பாய் பாய் சொல்லிவிட்டுப் பிரிகிறாள் நந்தினி.
நகுலனின் எண்ணச் சுவடுகள் நந்தினியின் மனதிற்குள்ளும் எழுந்ததா என்பதுதான் "என்னுள் நீ பதித்த சுவடு"
Read more from Chitra.G
Nesapoovin Narumanam Rating: 5 out of 5 stars5/5En Nandhavanathu Poo Rating: 0 out of 5 stars0 ratingsMaya Enum Poonchiragu Rating: 0 out of 5 stars0 ratingsKattil Vizhuntha Mazhaithuli Rating: 0 out of 5 stars0 ratingsAnbenum Pookkal Malaratum.... Rating: 0 out of 5 stars0 ratingsUn Thogai En Tholil Rating: 0 out of 5 stars0 ratingsDheetchanya Rating: 0 out of 5 stars0 ratingsParapatharke Siragugal... Rating: 0 out of 5 stars0 ratingsVizhuthugal Thangum Uravugal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ennul Nee Pathitha Suvadu
Related ebooks
Nenjodu Than Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Nilave Mugamkaattu Rating: 5 out of 5 stars5/5Mayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsDheetchanya Rating: 0 out of 5 stars0 ratingsPoove Unnai Nesippen Rating: 4 out of 5 stars4/5Sol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsAboorva Ragam Rating: 5 out of 5 stars5/5Vanthal Varalakshmi!!! Rating: 0 out of 5 stars0 ratingsNin Vasamaathal Vendum Rating: 0 out of 5 stars0 ratingsAnal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsAasai Thee Valarthen Rating: 5 out of 5 stars5/5Ennuyire... Rating: 5 out of 5 stars5/5Kaathal Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsEngey Enathu Kavithai? Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Veralla Rating: 5 out of 5 stars5/5Neeyiruntha Manasu Rating: 4 out of 5 stars4/5Idhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Manamagale Marumagale Vaaa Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Tharum Megam Rating: 5 out of 5 stars5/5En Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Kangal Solkindra Kavithai Rating: 4 out of 5 stars4/5Kaadhal Enbathu Mayavalai Rating: 4 out of 5 stars4/5Minmini Pookkal Rating: 5 out of 5 stars5/5Unnai Karam Pidithean Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Thedum Sittu Kuruvi Rating: 5 out of 5 stars5/5Sarkkarai Nilave Rating: 0 out of 5 stars0 ratingsIdhayaraagam Rating: 5 out of 5 stars5/5Nenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ennul Nee Pathitha Suvadu
0 ratings0 reviews
Book preview
Ennul Nee Pathitha Suvadu - Chitra.G
https://www.pustaka.co.in
என்னுள் நீ பதித்த சுவடு
Ennul Nee Pathitha Suvadu
Author:
சித்ரா.ஜி
Chitra.G
For more books
https://www.pustaka.co.in/home/author/chitra-g
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 1
செங்கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டதைப் போன்ற அழகான வீடுகள். ராஜஸ்தான் மார்பிள் கற்களால் இழைக்கப் பட்டிருந்த தரைகள். பசுமை வேலிகளால் அழகுப்படுத்தப்பட்டிருந்த சுற்றுச் சுவர்கள்.
நான்கு புறமும் இருந்த வீடுகளுக்கு மத்தியில் ஒரு பூங்கா. பசுமை போர்வையால் மூடப்பட்டத்தைப் போல அருகம்புற்கள் செழித்திருந்தன.
ஏய் நில்லுடா நீ ரொம்ப ஓடுற. என்னால பிடிக்க முடியலை. போ நான் விளையாட்டுக்கு வரலை
பூங்காவில் விளையாடியக் குழந்தை ஒன்று கோபித்துக்கொண்டு உட்கார்ந்தது.
அதனிடம் இருந்து தப்பி வேகமாக ஒடியக் குழந்தை திரும்ப ஓடிவந்து அதனருகில் உட்கார்ந்து கொண்டது. உட்கார்ந்த வேகத்தில் கோபித்தக் குழந்தையை சமாதானம் செய்ய ஆரம்பித்தது. ஓடியபோது எழும்பிய குரல் அருகில் அன்பாக பேசும் பொழுது எழவில்லை.
அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நந்தினி தனது பார்வையை வேறு புறம் திருப்பினாள்.
அவள் பார்வையைத் திருப்பிய பகுதியில் மிகப் பெரிய நீச்சல் குளம். சிறு குழந்தைகள் பல நீரில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை பாதுகாப்பதற்காக டிரைனர் ஒருவர் அவர்களுடன் சுற்றிக் கொண்டிருந்தார்.
அவள் நின்றிருந்தது கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில். அதன் மீதிருந்து அந்த காம்பிளக்சின் அனைத்துப் பகுதிகளையும் பார்க்க முடிந்தது.
தங்களது கிராமத்தில் வரிசை வரிசையாக நீளமாகக் கிடக்கின்ற வீடுகள் எல்லாம் அவளது நினைவிற்கு வந்தன. அந்த வீடுகள் எழுந்து நிற்பதைப் போன்ற ஒரு தோற்றத்துடன் அந்த கட்டிடங்கள் தெரிந்தன. அனைத்து வசதிகளும் அங்கு இருந்தாலும். எல்லாமே ஒரு எல்லைகளுக்குள்தான் விரிந்து கிடந்தது.
இங்கு சுதந்திரம் கூட சுவர்களுக்குள்தான் எனத் தோன்றியது நந்தினிக்கு.
இந்தக் காட்சிகள் எல்லாம் இன்னும் சில வாரங்களுக்குத்தான். அதன்பிறகு இயற்கை கொட்டிக் கிடக்கும் சொந்த ஊருக்குப் போய்விடலாம்.
வாரத்தின் ஐந்து நாட்களுக்கு வேலை. வார இறுதியில் இருநாட்கள் விடுமுறை. கிடைக்கும் விடுமுறையில் செய்கின்ற வேலைக்குத் தேவையான அடிஷ்னல் கோர்ஸ் படிப்பது,
இரண்டு நாட்களுடன் சேர்த்து ஒரு நாள் லீவ் கிடைத்தால் ஊருக்குச் செல்வது இப்படியாகத்தான் நாட்கள் சென்றன.
ஒன்றல்ல, இரண்டல்ல. நெடிய மூன்று வருடங்கள். இந்த சூழ்நிலையிலேயே கடந்து போயின. பெருமூச்சு வந்தது.
இந்த மூன்று வருடங்களும் டைம் டேபிள் போட்டு பாடம் படிப்பதைப் போல ஒரு நேர்கோட்டு வாழ்க்கைதான் வாழ முடிந்தது. இனி அதிலிருந்து ஒரு மீட்சி. ஒரு இடைவெளி அவசியம். மனதிற்குள் அந்த எண்ணம் எழ ஆரம்பித்து பல மாதங்கள் ஆகிவிட்டன.
நந்தினி! லஞ்ச் ரெடி. வா!
தோழி ரியாவின் குரல் அழைத்தது.
பால்கனியிலிருந்து வீட்டிற்குள் திரும்பினாள்.
மிகப்பெரிய ஐ.டி. கம்பெனியிலிருந்து கல்லூரி கேம்பஸில் சேலத்திலிருந்து நந்தினி வந்திருக்க, அதே கம்பெனிக்காக சென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவள் ரியா.
வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் நந்தினியுடன் இருப்பவள். ரியாவின் அம்மாவும், அப்பாவும் பேங்கில் வேலை செய்பவர்கள். இருபத்து நான்கு மணிநேரத்தில் உறங்குவதற்கு மட்டுமே வீடு என்பதை நினைவில் வைத்திருக்கும் படியான உயர்பதவிகளில் இருப்பவர்கள்.
தொடர்ந்து வேலை வேலை என இயந்திரமாக ஓடி சலித்த நந்தினிக்கு நடுவினில் ஒரு இடைவெளி விட்டால் பரவாயில்லை எனத் தோன்றியதும் மூன்று மாதத்திற்கு முன்பே நோட்டீஸ் கொடுத்துவிட்டாள்.
இங்கிருந்து செல்லும் நந்தினிக்காக ரியாவின் வீட்டில் லஞ்ச் கொடுப்பதற்காக அழைத்திருந்தாள்.
ஏய் நந்து... வா... வா... உனக்காக நான் என்னென்ன செஞ்சிருக்கேன் பாரு
சொல்லியவள் நந்தினியின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள்.
நவீன ரக சாப்பாட்டு மேஜை. இப்பொழுதுதான் வாங்கி வந்ததைப் போல பளப்பளவென்றிருந்தது. இத்தனை வசதிகளையும் விட்டு எதற்காக என்னுடன் ஒரு சிறிய அறையை பகிர்ந்து கொண்டாய் என்று கேட்டால் ஒரே வார்த்தையில் அவளது பதிலைச் சொல்லிவிடுவாள் ரியா.
தனிமை.
வீட்டிற்குப் போனாலும் தனியாதான் இருக்கணும். அப்பாவும், அம்மாவும் வீட்டுக்கு வரதுக்கே நைட் ஆகிடும். அதுக்குத்தான் ஆபீஸ் பக்கத்துல உங்க கூடவே இருக்கேன்.
அதற்கு மேல் பேச என்ன இருக்கின்றது. தனியாக சம்பாதிக்கிறாள். தன்னுடைய தேவையை தானே பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு இருப்பவளை வீடும் சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதித்தது.
ஏய் நந்து அப்படி என்ன யோசிக்கிற?
அவளது சிந்தனையைக் கலைத்தாள் ரியா.
இது காஷ்மீரி புலாவ். இது பனீர் கோப்தா. இது கார பூந்தி ரைத்தா
பீங்கான் தட்டில் என்னவென்று சொல்லிக் கொண்டே பரிமாறினாள்.
என்ன நந்தினி எல்லாத்தையும் அவளே செஞ்சதா சொன்னாளா?
ரியாவின் அம்மா நிஷா கையில் ஒரு பாத்திரத்துடன் கேட்டபடி மேசைக்கு அருகில் வந்தார்.
கேட்டவரை நிமிர்ந்து பார்த்தாள்.
அம்மாவிற்கும் மகளிற்கும் அப்படியொன்றும் பெரியதாக வித்தியாசம் தெரியவில்லை. ஒரே மாதிரியான பனியன். முட்டிக்குக் கீழான பேண்ட். இதற்கு முன்பும் நான்கைந்து முறை வந்திருக்கிறாள். நன்றாக பேசி உபசரிக்க மனமிருந்தாலும் அவருக்கான வேலைப்பளு அதை அனுமதிக்காது என்பது புரிந்ததால் ரியா அழைத்தாலும் தவிர்த்து விடுவாள்.
இது தவிர்க்க முடியாத அழைப்பு.
என்ன நந்தினி பதிலையே காணோம்
சிரிப்புடன் அருகில் அமர்ந்தார்.
ஆமான்னு சொன்னாலும் சங்கடம். இல்லைன்னு சொன்னாலும் அது பொய்யாகிடும் அதனால் பேசாம இருக்கேன் ஆன்ட்டி
இப்படி பதில் சொல்றதுக்கு நீ பேசாமலேயே இருந்திருக்கலாம் நந்து
செல்லமாகக் கோபித்த ரியா தானும் ஒரு தட்டின் முன்பு உட்கார்ந்து கொண்டாள்.
அவள் உட்கார்ந்ததும் போன் மணியடிக்க அவசரமாக எழுந்து அறைக்குள் ஓடினாள்.
சற்று நேரம் கழித்து வந்தவள் நந்து! ப்ரித்வி போன். புக்ஃபேர்க்கு எத்தனை மணிக்கு வந்து சேருவீங்கன்னு கேட்கிறான்.
ஓ... புத்தகக் கண்காட்சிக்கு போறீங்களா. ரியா அப்படியே எனக்கொரு கவிதை புக் வாங்கிட்டு வந்துடு. கவிஞர் மனுஷ்யபுத்திரனின் லேட்டஸ்ட் புத்தகம்
கடல் பார்த்த வீட்டில் கடைசி நாள்."
அம்மா எனக்கென்னத் தெரியும். இதோ நந்தினிதான் அவங்கம்மாவுக்குன்னு புக் வாங்கப் போறா. அவகிட்டே சொல்லுங்க. ஆமா உங்களுக்குப் படிக்க எல்லாம் நேரம் கிடைக்குதா?
கிண்டலாகக் கேட்பவளுக்குத் தெரியும் எவ்வளவு களைப்பாக இருந்தாலும் அரைமணிநேரமாவது அம்மா எதையாவது படித்துவிட்டுத்தான் உறங்கப் போவார் என்பது ஆனாலும் அவரை கலாட்டா செய்தாள்.
சரி நான் கவிதை படிக்கிறேனா இல்லையா என்பதுதானே உன்னோட சந்தேகம் இதைக் கேளு
என்று ஆரம்பித்தார்.
"நாம் ஏன் இப்படி
இருக்கிறோம்
சதா முணுமுணுத்துக்கொண்டு
எப்போதும் துணிகளை மடித்துக்கொண்டு
எதையாவது சுத்தம் செய்துகொண்டு
யாரையாவது சபித்துக்கொண்டு
எதையாவது அடைய முயற்சித்துக்கொண்டு
எதனிடமாவது தோல்வியடைந்துகொண்டு
எப்போதும் நம்மை நிரூபித்துக்கொண்டு
ஒரு சிகரெட்டைப்போல எரிந்துகொண்டு
தேவையற்ற பொருட்களால் நம் தனிமையை நிரப்பிக்கொண்டு
யாரிடமாவது நம்மைப் பிணைக்க முயற்சித்துக்கொண்டு
ஒரு அபத்தமான சினிமாவின் முதல் காட்சியைப் பார்த்துக்கொண்டு
கடற்கரையில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றுகொண்டு...."
அந்த கவிதையின் வரிகள் நீண்டு கொண்டே சென்றது. ஆனாலும் மூச்சு விடாமல் சொல்லிவிட்டுத்தான் நிறுத்தினார்.
வாவ்... வாவ்... அம்மா!
ஓடிப் போய் அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் ரியா.
அருமையான கவிதை ஆன்ட்டி யாரோடது
இதுவும் கவிஞர் மனுஷ்யபுத்திரனோடதுதான். ரொம்ப வருசம் ஆச்சு படிச்சு. இன்னும் மனசுல அப்படியே இருக்கு. அந்த கவிதையில இருக்கிற அத்தனை வரிகளையும் நாம விடாம செய்துகொண்டேதான் இருக்கோம். ஆனாலும் அதைவிட்டு விலக முடிஞ்சதில்லை
அதை சொல்லும்போது ஒருவிதமான சோகம் அவரது முகத்தில் வந்து சென்றது.
பல வருடங்கள் ஆச்சுன்னு சொல்றீங்க இன்றைக்கும் நினைவிலிருக்கு ஆன்ட்டி.
நமக்கு காலையில படிச்ச பாடமே சாயங்காலம் மறந்து போயிடுதுன்னு சொல்றியா நந்து!
"அதுவும்தான் ஒரு காரணம். எங்கம்மா கூட எவ்வளவு வேலையிருந்தாலும்