Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kangal Solkindra Kavithai
Kangal Solkindra Kavithai
Kangal Solkindra Kavithai
Ebook108 pages55 minutes

Kangal Solkindra Kavithai

By Usha

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 200 novels and 100+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466282
Kangal Solkindra Kavithai

Read more from Usha

Related to Kangal Solkindra Kavithai

Related ebooks

Related categories

Reviews for Kangal Solkindra Kavithai

Rating: 4.25 out of 5 stars
4.5/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kangal Solkindra Kavithai - Usha

    22

    1

    கையில் இருந்த புத்தகம் படபடத்து ‘என்னைப் பார், என்னைப் படி’ என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.

    ஆனந்தியின் இமைகள் மூடியிருந்தன.

    ஆனால், உள்ளே விழிகள் திறந்திருந்தன.

    அண்மையில் வெளியான டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு பற்றி மனசு யோசித்துக்கொண்டிருந்தது.

    ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய மிக முக்கியமான தீர்ப்பு அது. இந்தியாவில் இருக்கிற, அவர்களுடைய அடிப்படை உரிமையைப் பாதுகாக்கும் வகையில் வந்திருக்கும் தீர்ப்பு. இதுவரை அவர்களுக்கு எதிராகவே இருக்கிற பாலின தண்டனைச் சட்டம் 377-வது பிரிவை விமர்சனம் செய்தும், வந்திருக்கிற தீர்ப்பை வாசித்த அன்று அவளுக்கு புருவங்கள் உயர்ந்தன.

    அட, நம்முடைய நாடும் முற்போக்குத்தனமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டதே என்று பெருமிதமாக இருந்தது. ஒரு குடிமகன், பிறரை பாதிக்காத வகையில் சௌகரியமாக வாழ, சட்டம் அனைத்து விதமான உரிமைகளையும் தர வேண்டும் என்பதுதானே முக்கியம்? பாலினச் சேர்க்கையும் அது போலத்தானே? மூடநம்பிக்கைகளாலும் போலி ஆன்மீகவாதிகளாலும் நாட்டுக்கு வந்து சேராத தீமைகளா ஓரினச் சேர்க்கையாளர்களால் வந்துவிடப் போகின்றன? கல்வியும் விழிப்புணர்வையும் பரவலாக்கிவிடுவதுதான் அரசின் கடமை. அதற்குப் பின் குடிமக்கள் பாடு. அதுதானே நியாயம்?

    ஆனாலும் சில பத்திரிகைகளும் அடிப்படைவாதிகளும் இந்த தீர்ப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதுதான் அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

    பண்பாடு என்னாவது, கலாசாரம் பாழாகிறது என்று அவர்கள் விடுகிற முதலைக் கண்ணீர்! அப்பப்பா! சின்னத்திரை செய்யாத அட்டூழியமா! பெரிய திரை காட்டாத ஆபாசமா! அரசியல்வாதிகள் செய்யாத சமூகக் கொடுமையா! வசதி படைத்த ஒட்டல்களிலும் பண்ணை வீடுகளிலும் நடைபெறாத அத்துமீறல்களா, கேவலங்களா?

    பாவம், சுயபால் விழைவாளர்கள்! அவர்களுக்குள் ஒருவரையொருவர் விரும்பி இணைந்து கொண்டால் இவர்களுக்கு ஏன் கிறுகிறுத்துப் போகிறது என்றுதான் புரியவில்லை.

    இன்னும் வேலைக்குக் கிளம்பலையா? அம்மா வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே வந்தாள்.

    கிளம்பணும்...

    காபி வெச்சுட்டுத்தானே போனேன் ஆனந்தி... ஃப்ளாஸ்க்குல? குடிக்கலையா?

    இல்லே...

    என்ன ஆச்சு? என்று அருகில் வந்து கேட்டாள். டல்லா இருக்குதே முகம்... தலைகிலை வலிக்குதா ஆனந்தி?

    அதெல்லாம் ஒண்ணுமில்லே...

    அப்ப லீவு போட்டுடு... ரெஸ்ட் எடு... ரெண்டு மணி நேரம் தூங்கி எழுந்தா எல்லாம் சரியாய்டும்...

    அய்யோ! விடேன். ஆனந்தி முகம் சுளித்தாள். தொணதொணன்னு பேசிக்கிட்டே இருக்காதே... ஃப்ரீயா விடு...

    அம்மாவின் முகம் மாறி விட்டது.

    இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இவ்வளவு கோபிக்கிறே? சே! எந்த வேளைல வந்து பொறந்தேனோ, இப்படி நாய் பொழப்பு பொழைக்கிறேன்... அந்தக் கருமாரி கோயிலுக்கு ஆயிரம் தடவை படையெடுத்து என்ன பிரயோசனம்? தூசியைவிட கீழத்தானே வெச்சிருக்கா என்னை? எல்லாம் என் நேரம்... முணுமுணுத்தபடியே அம்மா உள்ளே போனாள்.

    புத்தகம் மறுபடி படபடத்தது.

    ஆனந்தி எடுத்தாள்.

    ‘நகரின் நடுவே

    தரிசென

    தனியே நிற்கிறது

    அந்த மொட்டை தென்னைமரம்

    அதன் பொந்தில் வசிக்கும்

    கிளிகள்

    அவ்வப்போது தோன்றி

    எனக்கு பச்சை காட்டிச் செல்லும்

    மர்மம் என்ன?’

    மர்மம்! மர்மம்! மர்மம்!

    ‘இங்கு எல்லாமே மர்மம்தான்! அய்யோ ஏன் இப்படி இருக்கிறது உலகம்?’ என்று மலையுச்சிக்குச் சென்று ஓவென்று கத்த வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

    மொட்டை தென்னை மரத்தில் இருக்கிற அமானுஷ்யமான பொந்தில் வசிக்கிற கிளிகளைப் போல அவளும் அம்மாவும் இருப்பதாய் ஒரு கணம் தோன்றியது. அந்த மொட்டை மரத்தில் கிளிகள் மட்டுமா இருக்கும்? மரங் கொத்திகளும் விஷவண்டுகளும் கூடத்தானே இருக்கும்? இருளில் அவை அந்தக் கிளிகளை என்ன செய்யும்? மாநகரின் பரபரப்பில் கண்ணுக்குத் தெரியாமல் இருட்டில் நடைபெறுகிற அத்துமீறல்களைப் போல கிளிகளின் அழுகையும் மவுனமாகவே நடைபெற்று முடிந்து விடுமா?’

    ஆனந்தி தலையை வேகமாக ஆட்டியபடி எழுந்து குளியலறை நோக்கி நடந்தாள்.

    அலுவலகம் இன்று அழுது வடிந்தது.

    பாஸ்கர் விடுமுறையில் இருக்க, தேவநாதன் பர்மிஷனில் இருக்க, ஒரு மணி நேர தாமதத்தில் ஷோபனா வந்தாள்.

    ஓ! ஆனந்தி, தனியா இருக்கியா? என்று தோளைத் தட்டி விட்டு எதிரில் உட்கார்ந்தாள். செம வெயில் இல்லே? புரட்டாசி வெயில் புரட்டி அடிக்கும் என்கிறது சரியாதான் இருக்கு... என்று அலுத்துக்கொண்டாள்.

    ஒரு விஷயம் படிச்சியா?

    என்ன?

    இன்னும் நூற்றியம்பது வருஷங்கள் போனால் தென்மேற்குப் பருவக்காற்றே வராதாம். அரபிக்கடலின் மேற்புற வெப்பத்தில் ஏகப்பட்ட மாற்றங்களாம். பூமியின் வெப்பம் மிக வேகமாகக் கூடுதாம்.

    மைகாட்! செய்ய வேண்டிய வேலை இன்னும் எவ்வளவோ இருக்கே ஆனந்தி?

    பின்ன? மசாக்கலி சூரிதார், அனார்கலி சூட், செமி பாட்டியாலா, ஃபுல் பாட்டியாலான்னு வாங்கி அணிஞ்சு அழகு பார்க்க வேண்டாமா?

    உனக்கென்ன? எல்லாம் செய்யத்தான் முகுந்த் இருக்காரே...

    சண்டை ஆனந்தி...

    சண்டையா ஏன்?

    செல்லமாக முகம் தூக்கி வைத்தபடி ஷோபனா சின்னப் பெண்போல, மகாபலிபுரம் போகலாம் வா, ஒரு நாள் தங்கிவிட்டு வரலாம் வான்னு கூப்பிட்டான். கல்யாணத்துக்கு அப்புறம் போகலாம்னு சொன்னேன். சண்டை போடறான் ஆனந்தி என்றபோது திகைப்புடன் அவள் தோழியைப் பார்த்தாள்.

    ஏனோ அம்மாவின் நினைவு வந்தது.

    வயிற்றில் கரு ஏறியவுடன் அம்மாவை ஏமாற்றி விட்டுச் சென்ற அப்பாவின் கசப்பு நினைவுகளால் நெஞ்சு கரித்தது.

    2

    உறக்கம் வரவில்லை

    இன்று என்றில்லை.

    அண்மைக்காலமாக இப்படித்தான் ஆகிக்கொண்டிருக்கிறது.

    எதைப் பார்த்தாலும் சஞ்சலம். எந்த முகத்தைக் கண்டாலும் சந்தேகம்.

    அலுவலகத்தின் ஒரே மாதிரியான பணி. எக்ஸ்போர்ட் சலான்களை கணினியில் ஏற்றுவது... இறக்குமதி தொடர்பான செய்திகளை சரிபார்ப்பது... பாஸ்கரும், தேவநாதனும் செய்து முடிக்கும் வேலைகளை

    Enjoying the preview?
    Page 1 of 1