Vaanam Thedum Paravaikal
By Usha
4.5/5
()
About this ebook
Read more from Usha
Velicha Poove Vaa Rating: 4 out of 5 stars4/5Vannathupoochikku Vazhi Vidu Rating: 4 out of 5 stars4/5Minsaara Kannaa Rating: 4 out of 5 stars4/5Raththiname Kannammaa Rating: 5 out of 5 stars5/5Vannam Konda Vennilave Rating: 5 out of 5 stars5/5Enakkaakave Vanthaai Rating: 4 out of 5 stars4/5MiniMinik Kaadu Rating: 5 out of 5 stars5/5Oru Roja Oru Idhayam Rating: 5 out of 5 stars5/5Urangaatha Pookkal Rating: 5 out of 5 stars5/5Kangal Solkindra Kavithai Rating: 4 out of 5 stars4/5Pattaampoochigal Parakkum Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsJarigai Siraigal Rating: 4 out of 5 stars4/5Aval Oru Sittu Rating: 5 out of 5 stars5/5Malare Vaa Manathai Thaa Rating: 0 out of 5 stars0 ratingsNilavoliyil Pattaam Poochigal Rating: 5 out of 5 stars5/5Nagarnthu Varum Nathigal Rating: 4 out of 5 stars4/5Netru Nila Indru Nee Rating: 5 out of 5 stars5/5Nenjirkoru Vanchikkodi Rating: 5 out of 5 stars5/5Ithu Pol Mazhaikkaalam Rating: 5 out of 5 stars5/5Innoru Koodu Innoru Paravai Rating: 5 out of 5 stars5/5Ellaam Penne Unnaale Rating: 5 out of 5 stars5/5Pogumidam Vegu Thooramillai Rating: 5 out of 5 stars5/5Vaanam Thedum Paravaikal Rating: 0 out of 5 stars0 ratingsViral Thodum Thooraththile Rating: 5 out of 5 stars5/5Thaai Veedu Rating: 0 out of 5 stars0 ratingsOreedam Nee Koduthaai Rating: 4 out of 5 stars4/5Vilagatha Sirakugal Rating: 5 out of 5 stars5/5Athu Oru Nilaaakkaalam Rating: 5 out of 5 stars5/5Pookkal Thinamum Malaginrana Rating: 0 out of 5 stars0 ratingsMaththaappoo Kanavugal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vaanam Thedum Paravaikal
Related ebooks
Vaanam Thedum Paravaikal Rating: 0 out of 5 stars0 ratingsPenalla Penalla Rojapoo Rating: 0 out of 5 stars0 ratingsRathidevi Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Iruthayangal Rating: 5 out of 5 stars5/5காகித இருதயங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsமழையும் நீயே மானசி..! Rating: 0 out of 5 stars0 ratingsMazhaiyum Neeye Maanasi Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogiraai Rating: 1 out of 5 stars1/5Ithu Pol Mazhaikkaalam Rating: 5 out of 5 stars5/5Unnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Mannithuvidu Maayaa Rating: 5 out of 5 stars5/5Sontham Eppothum Thodar Kathaithan... Rating: 3 out of 5 stars3/5December Nila and Irandil Ondru Paarthu Vidu Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Thenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5தென்றலாக நீ வருவாயா Rating: 0 out of 5 stars0 ratingsMaayaman Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vanthu Vittal Rating: 0 out of 5 stars0 ratingsNenjirkoru Vanchikkodi Rating: 5 out of 5 stars5/5Manam Virumbuthey Unnai Rating: 0 out of 5 stars0 ratingsமனம் விரும்புதே உன்னை... Rating: 0 out of 5 stars0 ratingsVeethiyellaam Pooppanthal Rating: 0 out of 5 stars0 ratingsSoorya Thagangal Rating: 0 out of 5 stars0 ratingsNetru Partha Nilavu Rating: 5 out of 5 stars5/5பாச மலர்கள் Rating: 0 out of 5 stars0 ratingsPaasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsOsaiyidum Poongaatre Rating: 4 out of 5 stars4/5Uyir Sumantha Urave Rating: 0 out of 5 stars0 ratingsகனவு காணும் வாழ்க்கை Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Kaanum Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vaanam Thedum Paravaikal
2 ratings0 reviews
Book preview
Vaanam Thedum Paravaikal - Usha
25
1
ஆவேசம் அடங்கி நிதானமாகப் பெய்து கொண்டிருந்தது மழை.
ஆகஸ்டு மாதத்து மழை சென்னைக்கு இது போனஸ்தான் என்று ஆனந்தி நினைத்துக் கொண்டாள். அக்டோபர்தான் மழைக்காலம். சிறுவயதிலிருந்து அப்படித்தான் இருந்தது. இப்போது தான் சில வருடங்களாக எல்லாமே மாறிவருகிறது. அதுவும் தலைகீழாக. போனவாரமெல்லாம் அப்படி அக்னியாக கொட்டிக் கொண்டிருந்தது வெயில். இதோ இந்த வாரம் வெள்ளக்காடு. பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று தெரிகிறது. அதற்கான முழுக் காரணம் மனிதன்தான் என்றும் தெரிகிறது. அவனுடைய சுயநலம் எதில் கொண்டு போய் நிறுத்தப்போகிறது என்றுதான் தெரியவில்லை
ஆனந்தி...
என்று தாத்தாவின் குரல் கேட்டது.
இதோ வரேன் தாத்தா...
என்றபடி அவள் அடுப்பை அணைத்துவிட்டு விரைந்தாள்.
தாத்தா அவருக்குப் பிரியமான தேக்குமர நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். முகத்தில் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது. குனிந்தவாக்கில் மடியில் வைத்திருந்த பணத்தை எண்ணி சிறு ரப்பர் பேண்டு வளையத்தால் கட்டி வைத்துவிட்டு நிமிர்ந்தார்.
கூப்பிட்டிங்களா தாத்தா? இதென்ன பணம், கட்டு கட்டா?
என்றாள் வியப்புடன்.
ரேஸ், சீட்டுக்ட்டு, லாட்டரின்னு எந்தப் பழக்கமும் கெடையாது உங்களுக்கு... வெறும் நாலாயிரம் ரூபா பென்ஷன்தான்... அதையும் முள்ளங்கி பத்தை மாதிரி எனக்குக் கொடுத்துடுவீங்க... பின்ன ஏது தாத்தா இது?
தாத்தா புன்னகைத்தார்.
நல்ல அம்சமான வட்ட முகம் தாத்தாவுக்கு. பெரிய விழிகள். எண்பதை நெருங்கிக் கொண்டிருந்தாலும் முகத்தில் நிறைய சுருக்கங்கள் விழாதது அதிசயம்தான். நல்ல கோதுமை நிறம். சிரிக்கும்போது ஏதோ மின்னல் அடித்து விட்டுப் போவது போல பளபளப்பு.
பாட்டி அதிர்ஷ்டக்காரி தாத்தா...
அவள் தாத்தாவின் பக்கத்தில் அமர்ந்தபடியே சிரித்தாள்.
பேரழகனான மாப்பிள்ளை கெடைச்சதுக்கு நல்ல அதிர்ஷ்டம்தான் செஞ்சிருக்கா பாட்டி... ஏன் தாத்தா, அந்தக் காலத்து சினிமா டைரக்டர்கள் யாரும் உங்களைப் பாக்கலையா? பாகவதர், பி.யூ. சின்னப்பா காலத்துல நீங்களும் சினிமாவுல நுழைஞ்சிருந்தா சூப்பர் ஸ்டாரா ஆகியிருந்திருக்கலாம் தாத்தா...
எனக்கும் ஆசைதாம்மா... ராஜகுமாரி, வசந்த கோகிலம்னு கதாநாயகிகளோடு நடிக்கணும்னு கனவுதான்... ஆனா என்ன செய்ய, காந்திஜியை ரொம்ப பிடிச்சுப்போச்சே எனக்கு... சுதந்திரம், போராட்டம், ஜெயில்னு ஆகிப் போச்சே வாழ்க்கை...
என்று தாத்தா சிரித்தார்.
இப்பக்கூட கெட்டுப் போயிடலே தாத்தா... மேக்கப் போட்டா போதும், அசின், நயன், நமீதா யாருக்கு வேணா நீங்க ஹீரோதான்... நான் ட்ரை பண்ணவா?
நல்ல வேளை... உன் பாட்டி இல்லை இப்ப... இருந்தா உன்னோட மல்லுக்கட்டிகிட்டு நிப்பா... ஆனா ஆனந்தி, இப்ப ஸ்ரேயான்னு ஒரு பொண்ணு இருக்குதாமே சூப்பரா, அது கூட நடிச்சா என்ன?
ஆஹா... நல்ல ஐடியாதாத்தா...
இருவரும் சிரித்தார்கள்.
சரி தாத்தா... சொல்லுங்க... கூப்பிட்டிங்களே...
இதுல இருபதாயிரம் ரூபா இருக்கும்மா...
என்றார். நீட்டினார்.
இருபதாயிரமா? ஏது தாத்தா?
நாட்டுப்பற்றுக்கான விலை...
என்றார்.
என்ன சொல்றீங்க தாத்தா, புரியலையே
தியாகிகள் பென்ஷன்ல அரியர்ஸாம்... மொத்தமா கொடுத்தாங்க பாங்க்ல... பென்ஷன் வாங்குறதே தப்பு... நாங்களா விருப்பப்பட்டு ஈடுபட்ட போராட்டத்துக்கும் மறியலுக்கும் ஒத்துழையாமைக்கும் விலை பேசற வேலை அது... இதுல அரியர்ஸ் வேற... பிடிக்கலேம்மா...
என்றார் தரையைப் பார்த்து.
அய்யோ என்ன தாத்தா இது மறுபடி மறுபடி இதே மாதிரி பேசிகிட்டு...
அவள் சிறுமியைப் போல் உதட்டை சுழித்தபடி பேசினாள்.
சூரியனுக்கு தைப் பொங்கல் அன்னிக்கு சர்க்கரைப் பொங்கல், கரும்பு, வெல்லம்னு வெச்சு படைக்கிறோமே, ஏன்? நன்றி தாத்தா... எங்களை வாழ வைக்கிற கருணை இயற்கை தெய்வமேன்னு கை கூப்பி நாம செய்யற நன்றி... சூரியனோட கடமைதானே அது, நாம என்ன வணங்க வேண்டியிருக்குன்னு என்னிக்காவது நெனைச்சிருக்கோமா? சுதந்திரப் போராட்ட தியாகிகள் எல்லாருமே சூரியன் தாத்தா... இந்த பென்ஷன் தொகை என்கிறது வெறும் பொங்கல் படையல் தாத்தா... ஸோ, பெருமிதத்தோட இந்தத் தொகையை வாங்கிக்குங்க தாத்தா...
எனக்கெதுக்கும்மா... வீட்டை அருமையா நிர்வாகம் பண்றது நீ... கடுமையா உழைக்கிறவளும் நீ... ஸ்கூல், ஸ்கூல்னு நாள் முழுக்க தவம் மாதிரி வேலை பாக்கறவ... எப்படி வேணும்னாலும் பயன்படுத்திக்கோ... இந்தா...
தாத்தா பலவந்தமாக அவள் கைகளில் திணித்தார்.
இல்லே தாத்தா...
என்றாள் அவள் மிக மென்மையாக.
உழைப்பும் உங்களுது... உழைப்புக்கான ஊதியமும் உங்களுது தான்... பீரோல வெக்கிறேன் தாத்தா...
உன் இஷ்டம்மா... சரி இன்னிக்கு ஏதோ மீட்டிங்னு சொன்னியே சீக்கிரம் கெளம்பணும்னு...
ஆமா தாத்தா... ட்ரஸ்ட் மீட்டிங்னு ஹெச்.எம். சொன்னாங்க... நான் ஒரு சாதாரண டீச்சர்... என்னை ஏன் வரச் சொன்னாங்கன்னு தெரியலே... ஆனாலும் கெளம்பறேன் தாத்தா...
பணம் எதுக்கும்மா வீட்டுல? போற வழில பாங்க்ல கட்டிட்டுப் போயிடேன்...
சரி தாத்தா... அதுவும் கரெக்ட் தான்...
குளித்துவிட்டு சந்தன மணத்துடன் வந்து இள ஊதா வர்ண சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டாள். மொரமொரப்பான துப்பட்டா. நெகிழ்வான கூந்தல். பளிச்சென்ற முகம். மை தீட்டாமலே கரேலென்று சுழன்ற திராட்சை விழிகள். மிக ரம்மியமான இதழ்கள்.
பர்ஸைத் திறந்து பணத்தை வைத்துக் கொண்டாள். பர்ஸினுள் தெரிந்தது புகைப்படம்.
அப்பா அம்மாவின் புகைப்படம். நிறைமாத சூலியான அம்மாவின் தெய்விக புன்னகை. ஒரு தடவை கூட நேரில் காணாத தாயின் முகம். மறுபடி உள்ளே வைத்துக் கொண்டாள். உயிரும் உடலும் கொடுத்த பெற்றோரின் ஒரே புகைப்படம்.
கண்கள் சரசரவென நீரைப் பொழிந்தன.
2
வங்கியில் பணத்தைக் கட்டிவிட்டு கிளம்பும் போது டீச்சர்... ஒரு நிமிஷம்...
என்று குரல் கேட்டது.
திரும்பினாள்.
முதியவர் ஒருவர் நின்றிருந்தார். கம்பீரமான உயரம். உறுதியான உடல்வாகு. இளகிய முகம். இவளைப் பார்த்ததும் வெளிப்பட்ட புன்னகையில் புத்துணர்வு பளீரிட்டது.
வணக்கம்மா... ஆனந்திதானே நீங்க?
என்றார் அருகில் வந்து.
வணக்கம்...
என்றாள்