Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enakkaakave Vanthaai
Enakkaakave Vanthaai
Enakkaakave Vanthaai
Ebook60 pages1 hour

Enakkaakave Vanthaai

By Usha

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJul 1, 2018
ISBN9781043466190
Enakkaakave Vanthaai

Read more from Usha

Related authors

Related to Enakkaakave Vanthaai

Related ebooks

Reviews for Enakkaakave Vanthaai

Rating: 4 out of 5 stars
4/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enakkaakave Vanthaai - Usha

    12

    1

    அன்றைய வானிலை மிக இதமானதாக இருக்கப் போவதாக இசைக்குத் தோன்றியது. ஐந்தரை மணிக்கே வந்து ஆளைத் தொடுகிற சூரியனைக் காணவில்லை. கொய்யா மரத்து இலைகளில் ஏதோ சிலிர்ப்பு. ஆற்றில் குளித்துவிட்டு வருவதைப் போல காற்று புத்துணர்வைக் கொண்டுவந்து சேர்த்தது.

    கிளம்புகிறாயா இசை? இன்றைக்கும் போகத் தான் வேண்டுமா வேலைக்கு? அம்மாவின் நலிந்த குரல் போர்வைக்குள்ளிருந்து கேட்டது.

    ஆமாம்மா... இதய ஆபரேஷன் இருக்கிறது ஏழு மணிக்கு... பெரிய டாக்டர் என்னைத்தான் தேடுவார். கண்டிப்பாக போகத்தான் வேண்டும் என்றபடி அவள் குளியலறைக்கு விரைந்தாள்.

    பத்து நிமிடங்களில் தேகத்தை தூய்மை செய்து கொண்டு வந்தபொழுது, அம்மா படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்தாள்.

    பல் விளக்கியாகிவிட்டது தானே? என்று புன்னகையை அணிந்தபடி தேநீரை நீட்டினாள்.

    ம்... கொடு...

    அம்மா...

    நன்றாக தூங்கினாயா?

    ம்... தூக்கமாத்திரைதான் என்னை பிணம் போல தூங்க வைக்கிறதே இசை...

    என்னம்மா இது? அழகான விடியல் வெளியே தோட்டத்தை அழகுபடுத்திக் கொண்டிருக்கிறது. ஜன்னலை இதோ கைநீட்டித் திறந்தால் போதும். புதிய அழகு நம் கண்களுக்கு இனிமையைக் கொடுக்கக் காத்திருக்கிறது. என்னம்மா நீ? என்று அலுத்துக்கொண்டாலும் சொற்களை அவள் எச்சரிக்கையாகவே கையாண்டாள்.

    அம்மா முன்னைப்போல் இல்லை. தேளைப் போல் கொட்டிய வாழ்வின் அனுபவங்கள் அவள் நெஞ்சத்தைக் குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கிவிட்டன. ஆசைகளைக் கொன்று, கனவுகளைப் புதைத்து, அவள் வசிப்பதற்காகவே நரகத்தை உண்டாக்கி வைத்திருக்கும் வாழ்க்கையை அவள் விஷம் போல வெறுக்கத் தொடங்கிவிட்டாள்.

    உனக்காகவே தேநீரில் ஏலம் தட்டிப் போட்டேனம்மா... பிடித்திருக்கிறதா? என்று அவள் தாயின் - தலையைக் கோதினாள்.

    இசை... என்றாள் அம்மா. அப்போது அவள் குரல் தொண்டைக்குள் அடைபட்டிருந்தது.

    எதைப் பற்றியும் கவலைப்படாதேம்மா... துயரங்களும், கடமைகளும்தானே மனிதன்? அதிலும் தங்கமான மனிதன்தான் புடம் போடுவதைப் போல சோதனைகளால் சுடப்படுகிறான்... இல்லையா? நீயும் தங்கம் அம்மா... சுத்தமான தங்கம்...

    இல்லை இசை... நான் தங்கமாக இருந்திருந்தால் கொண்டாடப்பட்டிருப்பேனே... இப்படி காலின் கீழே தூசியைப் போல மிதிப்பட்டிருக்கமாட்டேனே?

    சேச்சே! அதெல்லாம் இல்லை! தங்கத்தின் மதிப்பு தங்கத்திற்குத் தெரியாது... இல்லாதவர்களுக்குத்தான் தெரியும். சரி... சமையல் முடிந்துவிட்டது. உனக்குப் பிடித்த சேனைக்கிழங்கு வறுவலும், தக்காளி ரசமும் செய்திருக்கிறேன்... ஒன்பது மணிக்கு சர்க்கரை நோய்க்கு மாத்திரை... பத்து மணிக்கு சாப்பாடு... கொஞ்சம் டி.வி., கொஞ்சம் தோட்டத்தில் நடை... அரை மணி நேரம் ஓய்வு... இரண்டு மணிக்கெல்லாம் நான் வந்துவிடுவேன் அம்மா... சரிதானே? என்று அவள் புன்னகையை விரிவுபடுத்திக்கொண்டே தாயின் படுக்கையைச் சீர் செய்தாள்.

    நீ சாப்பிட்டாயா இசை, ஏதாவது? என்று தாய் எழுந்தாள்.

    ஓட்ஸ் கஞ்சி வழக்கம்போல் தயார் செய்து விட்டேனம்மா... குடித்துவிட்டு இதோ கிளம்பவேண்டியதுதான்...

    "அது எப்படி போதும் இசை? ஆஸ்பத்திரியே

    Enjoying the preview?
    Page 1 of 1