Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaaththiruntha Kaathal
Kaaththiruntha Kaathal
Kaaththiruntha Kaathal
Ebook94 pages33 minutes

Kaaththiruntha Kaathal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By V.Usha
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466961
Kaaththiruntha Kaathal

Read more from V.Usha

Related to Kaaththiruntha Kaathal

Related ebooks

Related categories

Reviews for Kaaththiruntha Kaathal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaaththiruntha Kaathal - V.Usha

    காத்திருந்த காதல்

    1

    "அம்மா..."

    ஏழு வயது ராகுலின் குரல் மெலிதாக அவளை வந்து சேர்ந்தது.

    சக்தி ஓடுகிற மிக்சியை நிறுத்திவிட்டு திரும்பி குரல் கொடுத்தாள்.

    எழுந்து வாய்யா ராகுல்... மணி ஏழடிக்கப் போகுதில்லே?

    இல்லம்மா... மொதல்ல நீ இங்க வாம்மா...

    ராகுல் பழைய மாதிரி இல்லை என்று உடனே தோன்றியது அவளுக்கு. முரண்டு பிடிக்கிறான். முகத்தில் நிறைய யோசனை தெரிகிறது. குழந்தைத்தனம் போய்க்கொண்டே இருக்கிறதா என்ன?

    தலையை ஆட்டிக் கொண்டாள் அவள்.

    சேச்சே, ஏழு வயதுக் குழந்தையைப் பற்றி ஏன் இவ்வளவு யோசிக்கிறேன்?

    கூப்பிடறேனில்லே... வாம்மா... என்று ராகுல் மறுபடி அழைத்தான்.

    சரிப்பா, வந்துட்டேன்... என்றபடி அவள் மகனின் அருகில் வந்தாள்.

    படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்த ராகுலைப் பார்த்து புன்னகைத்தாள்.

    உக்காரு... என்று கைகாட்டினான்.

    சரி... உக்காந்துட்டேன்... சொல்லு... எதுக்குப்பா கூப்பிட்டே?

    அப்பா முகம் எனக்கு ஏம்மா ஞாபகத்திலே இருக்கமாட்டேங்குது?

    சக்தி நிமிர்ந்து மகனைப் பார்த்தாள்.

    இதோ பாரும்மா... என்று தலையணைக்குக் கீழே இருந்த புகைப்படத்தை எடுத்து நீட்டினான்.

    கல்யாண ஃபோட்டோ அது!

    அவளும் தேவராஜனும் புகை மண்டலம் சூழ எழுந்து நின்று சோர்வு கவ்விய முகமும் கழுத்து மறைக்கும் மாலைகளுமாக நிற்கிற புகைப்படம்.

    இது எப்படி இவனிடம் வந்தது?

    பாட்டிக்கிட்டே கேட்டேன்... என்றபடி புகைப்படத்தையே பார்ததான்.

    யோசனையுடன் அவன் விழிகள் தேவராஜின் உருவத்தின் மேல் உலவின. ஒற்றை விரலால் தேவராஜின் முகத்தின் மேல் வருடிப் பார்த்து விட்டு விரலை எடுத்துக் கொண்டான். மறுபடி உற்றுப் பார்த்தான்.

    ஃபிஃப்டி டைம்ஸ் பார்த்துட்டேம்மா அப்பாவோட முகத்தை... இதுக்கு முன்னாடிகூட எத்தனையோ தடவை பார்த்திருக்கேன். ஆனா கண்ணை மூடிக்கிட்டா அப்பா முகம் மறந்து போகுதும்மா... ஏம்மா?

    தெளிவான வார்த்தைகளை அழுத்தமாக உச்சரித்து விட்டு, பதிலுக்காக காத்திருக்கும் மகனை சக்தி வியப்புடன் ஏறிட்டாள்.

    கொஞ்ச நேரத்திற்கு முன்னால் தான் இவனைப்பற்றி யோசித்ததற்கு, அர்த்தம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள். ராகுலிடம் குழந்தைத்தனம் குறையத் தொடங்கியிருக்கிறது.

    சொல்லம்மா... ஏன் அப்படி?

    ஒரு தடவையாவது நேர்ல பார்த்திருந்தா மனசுல பதிஞ்சிருக்கும்பா ராகுல்... உங்கப்பா உயிர் போகும்போது நீ என் வயித்துல எட்டு மாச குழந்தையா இருந்தே... ஜஸ்ட் ஃபோட்டோல மட்டும் பாக்கறே அப்பாவை... அதனாலதான் ஞாபகத்துல வெச்சுக்க முடியலே... சரி, ஏழு மணியாச்சு... எழுந்துக்கோ, இன்னிக்கு ஆஃபிஸ்ல ரத்ததான முகாம் நடக்குது... கொஞ்சம் சீக்கிரம் போகணும் நான்... என்று சொல்லிக்கொண்டே அவள் எழுந்தாள்.

    கொதிக்கத் தொடங்கியிருந்த ரசத்தை இறக்கி வைத்து நெய்யில் கடுகு தாளித்துவிட்டு, திரும்பியபோது ராகுல் அதே சிந்தனையுடன் அதே படுக்கையில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. என்ன ஆயிற்று இவனுக்கு என்று உறுத்திற்று.

    ராகுல்... என்றாள் அழுத்தம் கொடுத்து. அம்மா பேச்சை கேக்கற பையனா இல்லையா நீ? ம்? கெட் அப்... உன்னை ஸ்கூல்ல விட்டுட்டு நான் ஆஃபிஸ் போகணும்... அதுவும் சீக்கிரம் போகணும்... எழுந்து வா...

    ஏன் இப்படி கத்தறே குழந்தைகிட்ட, காலை வேளையில? என்றபடி அம்மா எழுந்து வந்தாள்.

    குப்பென்று நீலகிரித் தைலம், தலைவலித் தைலம் கலந்த வாடை வீசிற்று. பூலான்தேவிபோல நெற்றியைச் சுற்றி பட்டை கட்டியிருந்தாள்.

    என்ன, தலைவலியா? என்றபடி சக்தி மறுபடி பாலை அடுப்பில் வைத்தாள்.

    ஆமாமா, வேறென்ன? இந்த தலை இருக்கிற வரைக்கும் தலைவலியும் என்னை விடாது. நானும் அதைவிடப் போறதில்லே அம்மா முணுமுணுத்தபடி பல் தேய்த்துவிட்டு வந்தாள்.

    உர்ரென்ற முகத்துடன் ராகுல் வந்து எதிரில் நின்றான்.

    என்னடா? பல் தேச்சுட்டு வா, போ...

    ஸ்விம்மிங் கிளாஸ்ல சேத்துவிடு என்னை என்றான் நிமிர்ந்து.

    இப்ப என்ன திடீர்னு ஸ்விம்மிங் கிளாஸ்?

    என் ஃப்ரெண்ட சேந்திருக்கான், விக்னேஷ்

    பத்து நாள் தொடர்ந்து லீவு போடணும் ராகுல்... அப்பதான் உன்னை கொண்டு போய் விட்டுட்டும் கூட்டிட்டும் வர முடியும். லீவ் அப்ளை பண்றேன்... கெடைச்சதும் சேரலாம்... என்றாள் பொறுமையாக.

    இதோட ரெண்டு தடவை சொல்லிட்டே, ஆனா சேரவே இல்லையே...

    இந்த தடவை கட்டாயம் சேரலாம்...

    இல்லேன்னா என் ஸ்கூல் பையை தூக்கி கெணத்துல போட்டுடுவேன்...

    ராகுல் நகர்ந்து விட்டான்.

    திகைப்புடன் அவள் அப்படியே நின்றாள்.

    வார்த்தைகளில் இயல்பாக கலந்துவிட்ட முரட்டுத்தனத்துடன் அவன் எச்சரிக்கிற தொனியில் பேசியதை இன்னும் நம்ப முடியவில்லை. அம்மா, அம்மா என்று பூனைக்குட்டியாக அவள் புடவைத் தலைப்பைச் சுற்றிய ராகுலா இது? நிச்சயமாக இல்லை.

    இன்னிக்கு என்னவோ தலைவலி ரொம்பவே ஜாஸ்தியா இருக்கு... காபிகூட வேண்டாம்டி சக்தி... மறுபடி போய் படுக்கப் போறேன்... என்றபடி அம்மாவும் போய்விட்டாள்.

    அலைபாய்ந்து கொண்டிருந்த எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அவள் வேலைகளை விரைவாக முடித்தாள். ராகுலிடம் எதுவும் பேசாமலே அவனுக்கான பணிகளை செய்துவிட்டு ஸ்கூலில் அவனை விட்டபோது வயிறு கடபுடா என்றது.

    Enjoying the preview?
    Page 1 of 1