Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yen Eppadi
Yen Eppadi
Yen Eppadi
Ebook87 pages1 hour

Yen Eppadi

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Indhumathi, an exceptional Tamil novelist, written over 1000 novels and 300+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466275
Yen Eppadi

Read more from Indhumathi

Related to Yen Eppadi

Related ebooks

Related categories

Reviews for Yen Eppadi

Rating: 4.666666666666667 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yen Eppadi - Indhumathi

    9

    1

    "அம்மா...!"

    குளியல் அறைக் கதவை லேசாய் திறந்து தலையை மட்டும் வெளியில் நீட்டி, குழைவும் கொஞ்சலுமாகக் குரல் கொடுத்தாள் ஜனனி. பக்கத்து வீட்டு மஞ்சள் ரோஜாச் செடியின் பூ மட்டும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கிற மாதிரி இருந்தது. முகம் நிகுநிகு வென்று மின்னிற்று. தாழம்பூ நிறத்திற்கு பார்டர் கட்டின அடர்த்தியான தலைமுடி அழகாகத் தெரிந்தது. தலையில் கொட்டின தண்ணீர் முத்து முத்தாக முகத்தில் உருண்டோடி இன்னமும் எடுப்பாகக் காட்டிற்று. அகலமும், நீளமுமாக நல்ல கண்கள், தீர்மையான மூக்கு, சின்ன உதடுகள், குமிழிட்ட முகவாய், இன்னமும் சிறு பிள்ளைத்தனம் பாக்கி நிற்கிற பாவம். ‘இவளா, பள்ளியில் கடைசி வருஷம் படிக்கிறாள்!’- எவரையும் ஆச்சரியமாகப் பார்க்க வைக்கிற கள்ளமற்ற குழந்தைத்தனம். ‘இவளா குழந்தை’ என்று மாற்றுக் கட்சியில் நின்று கொடி தூக்கி எதிர்க்குரல் கொடுக்கும் வாகான பதினாறு வயது உடம்பு. நல்ல உயரம். திரட்சியான சதைப் பிடிப்பு.

    இந்தத் திரட்சியும் சதைப் பிடிப்பும் இப்போது ஏற்பட்டவை. இந்த ஆறே மாதத்தில் மடமடவென்று வளர்ந்து நிற்கும் பயிரைப் போல் சட்டென்று கொடுத்த வளர்ச்சி. அதற்கு முன்பு வரை ஒட்டின மார்பில் நிற்க ஆதாரமற்று விலகி விலகிப் போகும் தாவணியுமாக மரப்பாச்சிப் பொம்மையாக நின்றிருந்தவள்தான்.

    ‘என்னடி இவ... வயசு பதினாறு முடியப் போவுது. இன்னமும் இப்படி நிக்கறா...? பொண்ணுன்னால் அதுக்கேற்ற லட்சணம் வேணாம்...? இப்படி ஒட்டி உலர்ந்த உடம்போடு இருந்தால் நாளைக்கு எவன்டி கல்யாணம் கட்டிக்குவான்...? ஏய் ராஜாம்பா... பொண்ணுக்குப் பால், தயிர் ஊற்றி ஒரு பொம்பளையாக்க வேணாம்...?’

    பாட்டி மங்கையர்க்கரசிக்குப் பேத்தி அப்படிக் குச்சு மாதிரி இருப்பதில் பெரிய அதிருப்தி. தன் மருமகள் ராஜாம்பாள்தான் பெண்ணைச் சரியாகக் கவனிக்கவில்லை என்பதுதான் குறை. பேத்தியுடன் பள்ளிக்கூடத்திலிருந்து வருகிற மற்றப் பெண்கள் எல்லாரையும் பார்க்கப் பார்க்க அவள் மருமகள் மீது காய்வாள்.

    ‘மொதல்ல பெண்ணைத் தேற்றுகிற வழியைப் பாரு...’ என்று சிடுசிடுப்பாள்.

    ‘எங்க குடும்பத்துல யாருக்கும் இந்த மாதிரி கொத்தவரங்கா வற்றலா உடம்பு கிடையாது. யாரைக் கொண்டு வந்ததோ இது?’ என்று மறைமுகமாக மருமகள் ஒல்லி என்பதை இத்தனை வருடங்கள் கழித்துச் சொல்லிக் காட்டுவாள்.

    மாமியாரின் அத்தனை பேச்சுக்களையும் கேட்டுச் சில சமயங்களில், ‘கிழவிக்கு வேற வேலை இல்லே...’ என்று ஒதுக்கித் தள்ளுவாள் ராஜாம்பாள். மற்ற சந்தர்ப்பங்களில் அவளும் பதிலுக்குத் திருப்பிக் கொடுப்பாள்.

    ஆமாம்... இங்க எல்லோருக்கும் அப்படியே தளதளன்னு உடம்பு பாரு... பேசறீங்களே? உங்க கடைசி மக ரேணு மட்டும் எப்படி இருக்காம்? புடலங்கா மாதிரித்தான் இருக்கு. ஜனனியோட அப்பா கட்டு மஸ்தா இருக்காரா என்ன... எங்க குடும்பத்தைப் பிடிச்சு இழுக்கறதுக்கு...?

    சட்டென்று தழைந்து போய் விடுவாள் கிழவி. மிஞ்சினால் கெஞ்சுகிற சுபாவம்.

    அதுக்குச் சொல்லலைடி. கூட கொஞ்சம் பால், தயிர், நெய் எல்லாம் தரக் கூடாதான்னுதான் கேட்டேன்...

    அதற்கெல்லாம் ஒரு குறையும் இல்லே... நல்லா தயிரும், நெய்யுமாகத்தான் சாப்பிடறா... ஆனாலும் உடம்புல ஒட்டலேன்னால் நான் என்ன செய்யறது...?

    சாகும்வரை கிழவிக்கு அந்தக் குறை இருந்தது. பேத்தியைச் சதைப்பற்றும் பிடிப்புமாகப் பார்க்க முடியவில்லையே என்று. கிழவி கண்களை மூடின மறுமாதமே சட்டென்று ஜனனியின் உடம்பில் ஒரு மாறுதல் தெரிந்தது. மொட்டு மலர்ந்தது என்பது புதிராக இருக்கிற மாதிரி ஜனனியின் உடம்பிலும் எப்போது என்று சொல்ல இயலாத ஒரு திரட்சியும் அழகும் வந்து சேர்ந்து கொண்டது. அதன் பின்னரே ராஜாம்பாள் மகளுக்கு முதல் புடவை எடுத்துக் கொடுத்தாள். கட்டிக் கொண்டு வரச் செய்தாள்.

    இதப் பாரு. இனிமேல் மேல் புடவை விலகாமல் பார்த்துக்கணும். அப்படி விலகினாலும் கை உடனே அதை அனிச்சையா சரி செய்யணும். தெரிஞ்சதா...?

    சிறு பெண்ணாகத் தலையாட்டினாலும், கூடவே, என்னம்மா நீ...? என்று சிணுங்கவும் செய்தாள்.

    எங்கே ஸ்கூல்ல தாவணியைப் படிப்படியா வச்சு ஜாக்கெட்டோட சேர்த்துப் பின் பண்ணணும், ஒற்றைப் பட்டையா தொங்க விடக்கூடாது. தலைப்பை இழுத்துச் செருகணும். இல்லாட்டி போனால் ஒரு ரூபா ஃபைன். சுத்த கட்டுப் பெட்டி ஸ்கூல். இன்னும் ஒரே வருஷம். அப்புறம் காலேஜ் போயிட்டால் இந்தத் தொல்லையெல்லாம் இல்லை...

    ஆமாண்டி... ஒழுங்காயிருக்கச் சொல்லிக் கொடுத்தால் அது தொல்லையாத் தெரியுதா...? காலேஜ் போனால் இஷ்டப்படி ஆடலாம்ன்ற நினைப்பா...?

    ஐயோ... நீ ஒன்னும்மா... நான் எதற்கோ சொன்னால், நீ வேற எதையோ பேசு... முதல்ல சாப்பாடு போடு. சண்டையில்லாமல் ஸ்கூலுக்குக் கிளம்பறேன்... எனக்கு நேரமாச்சு...

    "அதுசரி. இப்போ நேரமாச்சுன்னு பறந்துகிட்டு கிளம்பற மாதிரி ஸ்கூல் விட்டதும் வீட்டுக்கு வர்றதுக்கும் அதே பறக்கல் இருக்கட்டும்.

    Enjoying the preview?
    Page 1 of 1