Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadalorak Karaigal
Kadalorak Karaigal
Kadalorak Karaigal
Ebook60 pages46 minutes

Kadalorak Karaigal

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Indhumathi, an exceptional Tamil novelist, written over 1000 novels and 300+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateApr 3, 2019
ISBN9781043466398
Kadalorak Karaigal

Read more from Indhumathi

Related to Kadalorak Karaigal

Related ebooks

Related categories

Reviews for Kadalorak Karaigal

Rating: 4 out of 5 stars
4/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadalorak Karaigal - Indhumathi

    10

    1

    கட்டிலில் மல்லாந்து படுத்து ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்தாள், கவிதா. வானம் இருண்டு கிடந்தது. மழை வருவதற்கான அறிகுறி தெரிந்தது. ஜரிகைப் பொடிகளாக ஒட்டிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் எதுவுமில்லை. யாரோ பெரிதாய் ஒரு கறுப்புப் போர்வையை இழுத்துப் போர்த்து விட்டுப் போன மாதிரி கிடந்தது. நடுவில் கிராஃப் கோடுகள் மாதிரி மின்னல் வெட்டியது. சட்டென்று நினைத்துக் கொண்டாற்போல் சடசடவென்று தூற்றலாக விழ ஆரம்பித்தது.

    கவிதாவின் உதடுகளில் சின்னச் சிரிப்பாக ஒன்று எட்டிப் பார்த்தது, இந்த மழைக்குத்தான் எத்தனை சக்தி என்று நினைத்துக் கொண்டாள். மனசும் உடம்பும் எப்படிக் குளிர்ந்து போகிறது!

    இதில் நனைந்துகொண்டே நடக்கவேண்டும். நிமிர்ந்து பார்த்து முகத்தில் விழுகிற தூற்றலைச் சின்னச் சினுங்கலாகச் சிணுங்கிக்கொண்டே ரசிக்க வேண்டும். ஏரியில் படகு வலிக்கவேண்டும். உடம்பு முழுதும் நனைய - உடை தொப்பமாக - நடக்கமுடியாமல் கால் தடுக்க...

    ஆனால் அதெல்லாம் இப்போது முடியாது. அதெல்லாம் கொடைக்கானலோடு முடிந்துபோன விஷயங்கள். அந்த போர்டிங் ஸ்கூலோடு மறந்துபோன விஷயங்கள், ராகேஷோடு ஓய்ந்துபோன -

    ராகேஷ்...!

    சட்டென்று உடம்பு சிலிர்த்தது. மனசுக்குள்ளும் அதே சிலிர்ப்பு ஓட ஜன்னல் கர்ட்டனை இழுத்து விட்டாள் தூற்றல் சத்தம் கேட்காமல் காதைப் பொத்திக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது. கர்ட்டனை இழுத்து விடலாம். காதைப் பொத்திக் கொள்ளலாம். ஆனால், மனசு...? அதை என்ன செய்ய முடியும்? எப்படி ஓயச் செய்யமுடியும்? ஒரு வேளை ராகேஷ் மாதிரி...

    ‘ராகேஷ், ராகேஷ்... ஹெல் வித் யூ...!

    உன்னை ஏன் என்னால் மறக்க முடியவில்லை? நீ ஏன் என் மனசுக்குள் ஒட்டிக்கொண்டு என்னை இப்படி ஹிம்சை பண்ணுகிறாய், நோ... ஐ மஸ்ட் ஃபர்கெட் யூ. உன்னை நான் மறக்கப்போகிறேன், அடியோடு, ஒரே வழியாய்... முடியுமா...? முடியவேண்டும்...’

    அவள் சட்டென்று திரும்பி மணி பார்த்தாள். ஒன்று பத்து. வழக்கப்படி இன்றும் நந்தகுமார் வரவில்லை. இனிமேல் வரமாட்டான். காலையில் நேராக நர்சிங் ஹோமிற்குப்போய் இஷ்டமிருந்தால் ராத்திரி வருவான். இல்லாவிட்டால் அதுவும் நிச்சயமில்லை. இப்படி அவன் வராமல் இருப்பது பழகிவிட்டது. இந்தத் தனிமை, வெறுமை, எல்லாமும்தான், அவன் வந்தால் மட்டும் என்ன...? நேராக டைனிங் ஹாலுக்குப் போவான், நீ சாப்பிட்டாயா என்றுகூடக் கேட்காமல் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்காருவான். அவள் வருவதற்குள் சமையற்காரரைப் போடச் சொல்லிச் சாப்பிடுவான், கையலம்பினதும் படுக்கப்போவான். அவள் சாப்பிட்டு வந்து பார்த்தால் மார்பு சீராக ஏறி இறங்கும். முகம் ஆழமான தூக்கத்தைக் காட்டும் கூப்பிட்டுப் பார்த்தால் பதில் வராது...

    அவளுக்கு அதற்குப் பின் தூங்கப் பிடிக்காமற்போகும். புத்தக அலமாரியைத் திறந்து வரிசையாகப் பார்ப்பாள்... பார்வை சட்டென்று அந்தச் சிவப்பு நிறப்புத்தகத்தில் பதியும், Never Leave Me நெவர் லீவ் மி... ஹெரால்ட் ராபின்ஸின் புத்தகம்.

    ஹாஸ்டலுக்கு வந்து அந்த லவ் பனியனோடு சிரித்துக்கொண்டு நின்று தலையிலிருந்த பெரிய குல்லாயைக் கழற்றி -

    "ஹேவ்

    Enjoying the preview?
    Page 1 of 1