Kaagitha Kappal
By Indhumathi
5/5
()
About this ebook
Read more from Indhumathi
Nindru Kollum Rating: 4 out of 5 stars4/5Maalaiyaagatha Pookkal Rating: 4 out of 5 stars4/5Oru Kodoyil Iru Malargal Rating: 5 out of 5 stars5/5Tholaithoorath Thandavalangal Rating: 3 out of 5 stars3/5Irandu Per Rating: 5 out of 5 stars5/5Sarayu Kaathirukkiraal Rating: 5 out of 5 stars5/5Koondu Kuyil Rating: 4 out of 5 stars4/5Penmaiyin Niram Venmai Rating: 5 out of 5 stars5/5Yaar Rating: 5 out of 5 stars5/5Kadalorak Karaigal Rating: 4 out of 5 stars4/5Kalveri Kolluthadi Rating: 5 out of 5 stars5/5Antha Sila Vinaadigal Rating: 5 out of 5 stars5/5Enakkendru Nee Rating: 5 out of 5 stars5/5Maaratha Raagangal And Poongaattru Thirumbumaa Rating: 0 out of 5 stars0 ratingsThotti Meengalum Koondu Kiligalum Rating: 5 out of 5 stars5/5Ivale En Manaivi Rating: 5 out of 5 stars5/5Manithan - Sirukathai Thoguppu Rating: 0 out of 5 stars0 ratingsNenjin Neruppu Rating: 5 out of 5 stars5/5Enge Antha Sorkkam Rating: 5 out of 5 stars5/5Neeyindri Naanillai Rating: 5 out of 5 stars5/5Odum Megangale Rating: 5 out of 5 stars5/5Pani Padarntha Paathaigal Rating: 5 out of 5 stars5/5Avalukku Amuthendru Per Rating: 4 out of 5 stars4/5Yen Eppadi Rating: 5 out of 5 stars5/5Geethamadi Nee Enakku Rating: 5 out of 5 stars5/5Puthai Manal Rating: 0 out of 5 stars0 ratings
Related authors
Related to Kaagitha Kappal
Related ebooks
Pani Padarntha Paathaigal Rating: 5 out of 5 stars5/5Anbe Aaruyire Rating: 5 out of 5 stars5/5Neeyum Naanum Veralla Rating: 5 out of 5 stars5/5Povomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Anbirku Thalaivanangu Rating: 0 out of 5 stars0 ratingsMaavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratingsPon Veenai Rating: 0 out of 5 stars0 ratingsUyire Nerungi... Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsKaathodu Oru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsSamsaarap Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsThottal Tholaindhaai! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thozhugai Rating: 0 out of 5 stars0 ratingsShanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsUllukkulle Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Itharkuthane Kathiirunthom Rating: 5 out of 5 stars5/5Nallathor Veenai Seithe...! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsMannikka Maattaayaa Rating: 5 out of 5 stars5/5Puthai Manal Rating: 0 out of 5 stars0 ratingsThotti Meengalum Koondu Kiligalum Rating: 5 out of 5 stars5/5Paravaigal Parakkindrana Rating: 0 out of 5 stars0 ratingsNirkka Nizhal Vendum Rating: 0 out of 5 stars0 ratingsThavari Podum Thalam Rating: 0 out of 5 stars0 ratingsThulluvatho Ilamai Rating: 5 out of 5 stars5/5Kadalorak Karaigal Rating: 4 out of 5 stars4/5Veesa Marantha Thendral Rating: 4 out of 5 stars4/5Nizhal Tharum Tharuve Rating: 0 out of 5 stars0 ratingsEnge Antha Sorkkam Rating: 5 out of 5 stars5/5Vannathupoochikku Vazhi Vidu Rating: 4 out of 5 stars4/5Kudumba Kathaigal Rating: 5 out of 5 stars5/5Malargale Malarungal Rating: 5 out of 5 stars5/5
Reviews for Kaagitha Kappal
5 ratings0 reviews
Book preview
Kaagitha Kappal - Indhumathi
16
1
சரக்கொன்றை பூக்க ஆரம்பித்து விட்டது. இரண்டு நாட்களாகத்தான் இப்படி மஞ்சளில் சிரிக்கிறது. இடத்தையும், மனசையும் நிறைக்கிற குழந்தைச் சிரிப்பாகத் தெரிகிறது. தரை - வாசல் - சுவர் எதிர்க் கட்டடங்கள் - தெரு எல்லாவற்றின் மீதும் அந்தச் சிரிப்பு ஒட்டிக் கொண்டு விட்ட மாதிரித் தோன்றுகிறது. அவற்றின் மீது மட்டுமில்லை. தன்னிடம்கூட அதே சிரிப்பு வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டாள் பாலி. சரக்கொன்றை சிரிக்கிற போதெல்லாம் அவளுக்கும் சிரிப்பு வரும். மனசு நிறைய சந்தோஷம் வரும். எல்லாமே அழகாகிவிட்ட மாதிரித் தோன்றும். ஒவ்வொன்றும் புதுசாகத் தெரியும். அந்த ஹாஸ்டல் கூடப் பிடித்துப் போகும். நாள் முழுதும் இப்படிப் பார்த்துக் கொண்டே மாடி வராந்தாவில் நிற்கலாம் போலிருக்கும். அந்த நேரத்தில் அதுதான் நிஜம். அதுமட்டும்தான் சாசுவதம் என்கிற நினைப்பும் வரும். அதுதான் சாசுவதம் என்கிற பட்சத்தில் அவள் எவ்வளவு சந்தோஷமாக இருப்பாள்! எப்படிச் சிரித்துக் கொண்டிருப்பாள்! எல்லாவற்றையும் மறந்துவிட்டு எதையுமே நினைக்காமல் முக்கியமாய் அந்த ஹாஸ்டல் - ஆபீஸ் - அதன் மனிதர்கள் - அம்மா - அம்மா...? மை குட்நெஸ்! கற்பனையில் கூடத் தன்னால் நிஜத்திலிருந்து விலக முடிவதில்லை. நிஜங்கள் குரூரமானவை. விலக்க முடியாதவை, அதனால்தான் இப்போது அம்மாவின் நினைவு வருகிறது. சரக்கொன்றை பூத்துச் சொரிகிற போதெல்லாம் எப்படி அம்மாவின் நினைவு தவறாமல் வருகிறது? அம்மாவுக்கும் சரக்கொன்றைக்கும் என்ன சம்பந்தம்? அந்த அழகுதான் சம்பந்தமா...? வெறும் அழகு மட்டும்தானா...? எதுவானாலும் அம்மா சரக்கொன்றை மாதிரிதான் என்று பட்டது.
அம்மாவுக்கும் அந்த மாதிரி மஞ்சள் நிறம்தான். ஆனால், அடர்த்தியான மஞ்சள் இல்லை. கண்ணில் அடிக்கிற மஞ்சளில்லை. சுவருக்கு அடிக்கிற கோபி மாதிரி ஒரு நிறம், மனசுக்குக் குளிர்ச்சியாய்த் தோன்றுகிற நிறம்.
அந்த நிறமும், அசர அடிக்கிற அழகும்தான் அவளை அப்படியெல்லாம் செய்யத் தூண்டியதோ...? ஒவ்வொரு மனிதராக வீட்டிற்கு வரச் செய்ததோ...? வீடு தங்காமல் டிராமா, ரிஹர்ஸல் என்று சுற்ற வைத்ததோ...?
அம்மா சுற்றின சுற்றல் - கூட அழைத்துக் கொண்டு வந்த மனிதர்கள் - அவர்களுக்காகப் பாட்டி பண்ணின பட்சணங்கள். வீட்டுக்கு அந்த மாதிரி யாராவது வந்து விட்டால் சமையலறையில் நெய் மணக்கும், ஏலக்காய் வாசனை வரும், ஜிர்ஜிர் என்று எண்ணெயில் பகோடாவோ, தேன்குழலோ பொரிகிற சத்தம் கேட்கும். முழங்காலைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருப்பாள் பாலி.
பாலி, சித்தே இங்கே வாயேன். இதையெல்லாம் கொண்டு போய் உங்கம்மாகிட்ட கொடேன்...
பதில் பேசாமல் எழுந்து போவாள். பாட்டி கொடுக்கிற தட்டைக் கொண்டு போய் மாடி பெட்ரூமில் வைப்பாள். அம்மாவையும், அந்தப் புது மனிதரையும் பார்த்துக் கொண்டே ஒரு நிமிஷம் நிற்பாள்.
பாலி! நீ கீழே போய் விளையாடிக்கோ, நாங்க இங்க டிராமாவுக்கு ரிஹர்ஸ் பண்ணணும்...
அம்மா அவளை முதுகில் செல்லமாகத் தட்டுகிற மாதிரி தட்டிக் கதவு வரை கொண்டு வந்து விடுவாள். பின்பு கதவு சாத்திக் கொள்ளும். சாத்தின கதவுக்குள்ளிருந்து சிரிப்புச் சத்தம் கேட்கும். மெதுவான பேச்சாக வரும். கை வளையல்கள் சிணுங்கும். கேட்டுக் கொண்டே படியிறங்குகிற அவள் மனசும் சிணுங்கிப் போகும். சற்று முன் பார்த்த மனிதரை நினைத்து வெறுப்பு வழியும். அந்த மனிதரை அப்பாவோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றும். அந்த மனிதர் மட்டுமில்லை. அம்மாவோடு வருகிற ஒவ்வொருவரையும் அவள் அப்படித்தான் ஒப்பிடுகிறாள். அந்த ஒப்பிடலில்தான் அவளுக்கு அப்பாவின் உயரம் புரிந்தது. கம்பீரம் புரிந்தது. என்ன மனிதர் அவர்! அவர் நினைவு கூடப் போதும். அதிலேயே நாட்களைத் தள்ளிவிடலாம். அந்தப் பசுமையில் எப்படிப்பட்ட பாலைவனத்தையும் கடந்துவிடலாம். இது புரியாமல் அம்மா ஏன் இப்படி அலைகிறாள்...? எதைத் தேடி அலைகிறாள்? இந்த அலைச்சல் எல்லாம் அப்போதே இருந்திருக்குமோ...? அப்பாவுக்குத் தெரிந்திருக்குமோ...? இல்லை, அவருக்குத் தெரிந்திருக்காது. அப்பா செத்துப் போன பின்னால்தான் அம்மா இப்படியெல்லாம் ஆரம்பித்திருக்க வேண்டும். அப்பாவின் சாவுதான் அவளை மாற்றியிருக்க வேண்டும். இந்த தூரத்திற்கு விரட்டியிருக்க வேண்டும்...
அப்பா செத்துப் போனது அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது. மடிமீது உட்கார வைத்துத் தலையைத் தடவிக் கொண்டே அவர் சொன்ன கதைகள் கூட ஞாபகமிருந்தது. எப்போதுமே அவர் அவளுக்குக் காக்காய் குருவி கதை சொன்னதில்லை. சிங்கம், புலி என்று பயமுறுத்தினதில்லை. சர்க்கஸ் கோமாளி, தெனாலிராமன் என்று சிரிக்க வைத்ததில்லை. எல்லாமே புத்தி சொல்கிற கதைகளாக - மனசில் பதிகிற கதைகளாகத்தான் இருக்கும். அரிச்சந்திரா, மனுநீதி, சிபிச்சக்கரவர்த்தி, பஞ்சபாண்டவர், ராம லக்ஷ்மணர் - இப்படி எத்தனை கதைகள்...
சில சமயம் சொல்கிற போதே, அவர் குரல் கம்மிப் போகும். கண் கலங்கும். அவள் தலையை வருடுகிற விரல்களில் ஒரு நடுக்கம் தெரியும்.
என்னப்பா...?
என்று அவள் முகத்தை நிமிர்த்தி அவரைப் பார்ப்பாள்.
குழந்தே... உனக்கு ஏன் நான் பாலின்னு பேர் வச்சிருக்கேன், தெரியுமா...? பால் மாதிரி நீ வெள்ளை வெளேர்னு இருக்கேன்றதாலே இல்லே, மனசு பாலா இருக்கணும், கல்மிஷம் - கபடமில்லாமல் இருக்கணும். பால்லே சர்க்கரை போடற மாதிரி எல்லோர்கிட்டேயும் பிரியமா இருக்கத் தெரியணும். அதுக்குத்தாம்மா உன் பேரு பாலி...
அப்பா ஞாபகம் வந்ததும் கூடவே இந்த வார்த்தைகளும் அவள் ஞாபகத்துக்கு வரும், அப்பாவை நினைக்கிறபோது கடைசியாய்க் கூடத்தில் கிடத்தியிருந்தார்களே, அந்த உடம்பு தான் முதலில் மனசுக்குள் வந்து போகிறது. அதன் பின்பு வெள்ளை வெளேரென்று ஆறடி உயரத்தில் அவருடைய ஆகிருதி வருகிறது. அதற்கப்புறம் சிரிக்கிற அப்பா, கையைப் பிடித்து நடத்தி அழைத்துக் கொண்டு போகிற அப்பா, கதை சொல்கிற அப்பா... எல்லாமே கூடத்தில் கிடத்தியிருந்த அப்பாவுக்கப்புறம் வருகிற அப்பாக்கள்தான்.
அந்த அப்பாவைப் பார்த்து அன்று அம்மா அழுத அழுகையும் கூடவே நினைவுக்கு வந்தது. அம்மாவை அப்படி அவள் பார்த்ததேயில்லை. அந்தக் கதறலும், மறுகலும் அவள் மனசை என்னவோ பண்ணியது. எழுந்து போய்க் கண்களைத் துடைத்துச் சமாதானப்படுத்த வேண்டும் போலிருந்தது. ஆனால் ஒன்றும் சொல்லாமல் கூடத்து ஜன்னலில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அப்பாவின் உடம்பை எடுத்துக் கொண்டு கிளம்பினதும் அம்மாவும் சரேலென்று எழுந்து கூடவே ஓடினாள். பாட்டிதான் அம்மாவின் பின்னாலேயே போய் அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாள். கூடத்து நடுவில் உட்கார வைத்துவிட்டு, பாலியிடம் வந்து, அவளைத் தூக்கிக் கொண்டு போனாள்.
இதோ பாரு மைதிலி. இந்த மூஞ்சியப் பாரு. இதுக்காகவாவது நீ இருக்க வேணாம்? இது மேல மாப்பிள்ளை எத்தனை உசிரை வச்சுண்டிருந்தார்! எத்தனை கனவுகளோட இருந்தார்! அந்தக் கனவையெல்லாம் நினைவாக்க வேணாமா? நிறைவேற்ற வேணாமா? அதுவரைக்கும் மனசுல கொஞ்சம் வைராக்கியத்தோட இரு. மாப்பிள்ளை சாயலா இருக்கிற இதைப் பார்த்துக் கொஞ்சம் ஆறுதலா இரு.
அதைக் கேட்டதும், அம்மாவின் அழுகை சட்டென்று நின்றது.