Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyire Nerungi... Vaa!
Uyire Nerungi... Vaa!
Uyire Nerungi... Vaa!
Ebook143 pages57 minutes

Uyire Nerungi... Vaa!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பைத்தியம் என்று எல்லோராலும் ஒதுக்கப்பட்ட பெண் அனுராகிணி. அழகும், அறிவும் நிறைந்த அழகு பதுமையாய் திகழ்ந்தவள். அனுராகிணி பைத்தியமாக காரணம் என்ன? அன்பு பாசத்திற்கு ஏங்கித் தவிக்கும் சந்திரகாந்தை அனு ஏன் சந்தேகப்பட்டாள்? அவசரத்தில் எடுத்த முடிவால் அனுவுக்கும் அவள் குடும்பத்திற்கும் என்ன நேர்ந்தது? நாமும் சில சுவாரஸ்யங்களுடன்...

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580140608562
Uyire Nerungi... Vaa!

Read more from R. Manimala

Related to Uyire Nerungi... Vaa!

Related ebooks

Reviews for Uyire Nerungi... Vaa!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyire Nerungi... Vaa! - R. Manimala

    http://www.pustaka.co.in

    உயிரே நெருங்கி... வா!-

    Uyire Nerungi... Vaa!

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    கனவுகள் போலக் கழிந்திடும் வாழ்வு!

    காதலைப் போல ஆறுதல் ஏது?

    உண்மையின் மடியில் உறவுகள் மழலை.

    ரிமையின் அருகில் உணர்வுகள் கவிதை!

    ஜிகினா பேப்பரை கிழித்தெறிந்ததுப் போல் கூட்டமாய் பறந்த புறாக்களின் சிறகுகள் கதிரவன் ஒளிபட்டு பளபளத்தன.

    ஹை என்று மனசு கும்மாளம் போட கண்கள் சுருக்கி பார்த்து ரசித்தாள் அனு.

    அனூ…

    அம்மா மல்லிகாவின் குரல் காற்றில் பயணித்து இவள் காதில் மோதியது.

    மூஞ்சி… கத்து… நல்லா கத்து! எனக்கென்ன வந்துச்சு. எப்படி அடிச்சிட்டே? போ… நான் வரலே… நீ தேடினாலும் கிடைக்க மாட்டேன்! தனக்குத்தானே பேசியபடி இன்னும் தன்னைக் குறுக்கிக்கொண்டு சுவற்றோடு ஒடுங்கி அமர்ந்தாள்.

    அவள் அமர்ந்திருந்த இடம்… மொட்டைமாடியில் உள்ள வாட்டர் டேங்கை சுற்றி ஒருவர் படுக்குமளவு இடம் விட்டு கட்டப்பட்டிருந்த கைப்பிடி சுவற்றருகே! ஏணி மீதேறி வந்தால் ஒழிய அனு அமர்ந்திருப்பது யாருக்கும் தெரியாது.

    அனு… அனு… அடியே அனு… எங்கேடிப் போய் தொலைஞ்சே? குரலில் அழுகையும், கோபமும் போட்டிப் போட்டன. கத்தி… கத்தி மல்லிகாவின் தொண்டையே வற்றிப்போனது.

    டவலால் தலையை துவட்டியபடியே பாத்ரூமிலிருந்து வெளிப்பட்டார் சௌந்தரபாண்டியன்.

    என்ன மல்லிகா? நானும் அப்பவிருந்தே பார்க்கிறேன். அனு அனுன்னு கத்திட்டிருக்கே!

    ஆமாங்க… வீடு முழுக்க தேடிப் பார்த்தேன்… பாவி மகளை காணலேங்க!

    என்ன உளர்றே? காலையிலே இருந்தாளே!

    இப்ப அரைமணி நேரமா காணலே! எங்கே போயிருப்பாளோ? ஒண்ணும் புரியலே… வயித்திலே நெருப்பள்ளிக் கொட்டினா மாதிரி பயமாயிருக்குங்க!

    ப்ச்… எங்கே போய்டப் போறா? இங்கேதான் இருப்பா! மொட்டைமாடியிலேப் போய் பார்த்தியா?

    பார்த்தாச்சு. கொல்லைப்புறம்… அவ்வளவு ஏன்… எதிர்வீட்டு கிணத்துல கூடப் பார்த்துட்டேன், காணோம்!

    நீ அவளை திட்டினியா?

    இல்லையே… நேத்து அடிச்சோமில்லையா… அதிலிருந்தே முகத்தை தூக்கி வச்சிட்டிருந்தா! நைட்டு கூட சாப்பிடலே! சரி… விடிஞ்சா சரியாப் போய்டும்னு நினைச்சேன்! மத்தது நினைவுக்கு வரலேன்னாலும்… இந்த விஷயத்தை மறப்பாளா? எங்கே போனாளோ? பசி தாள மாட்டாளே! ஹூம்… வயசுக்குரிய பக்குவம் இருந்திருந்தா… இப்படி பயப்படுவேனா? பாம்புக்கும், பழுதுக்கும் வித்தியாசம் தெரியாத வயசுப் பொண்ணு. அதை நினைச்சாதானே பகீர்னு இருக்கு!

    வளவளன்னு பேசிட்டிருக்காதே! நம்ம தெருவிலே எல்லா வீட்லேயும் கேட்டுப் பார்த்தியா?

    வீட்டுக்கு வீடு வா… வான்னு கூப்பிட்டு கொஞ்சவா போறாங்க? அவளைப் பார்த்தாலே பேயைக் கண்டவங்க மாதிரி பட்டுபட்டுன்னு கதவை அடைச்சிடறாங்க. அப்படியும் கேட்டுப் பார்த்தாச்சு. ‘பைத்தியத்தை அலையவிட்டுட்டு வித்தையா காட்றீங்கன்னு’ கேக்கறாங்க? இவளால் இன்னும் என்னென்ன அவஸ்தைப்படப் போறோமோ? என்ன பாவம் பண்ணினேன் இப்படியொரு பைத்தியத்தை என் வயித்திலே சுமக்க வச்சு காலம் முழுக்க… நெஞ்சுலேயும் துக்கத்தை சுமக்க வச்சுட்டான் அந்த கடவுள்!

    விட்டா பேசிக்கிட்டே இருப்பே! கிளம்பு… பூட்டு சாவிய எடுத்துக்க… வீட்டை பூட்டிட்டு விஷ்ணு வீட்டுக்கு, தேவிகா வீட்டுக்கு போய் ஒரு நடை பார்த்துட்டு வரலாம்.

    அவளுக்கு தனியா அங்கே போகத் தெரியாதே!

    சௌந்தரபாண்டியன் மனைவியை முறைத்தார்.

    சொன்னதை செய்… அது போதும்!

    சரிங்க!

    அடுத்த கணம் மல்லிகா கேஸ் ஸ்டவ்வை அணைத்துவிட்டு பூட்டு சாவியை எடுத்துக்கொள்ள… சௌந்தரபாண்டியன் வேட்டி சட்டையை மாட்டிக்கொண்டு புறப்பட்டார்.

    தெருவில் இறங்கி… நாலாபுறமும் கண்களை ஓடவிட்டபடி நடந்தனர். தீப்பந்தம் கொளுத்தி முகத்தில் தூக்கிப் போட்டதுப்போல்… வெயில் சுள்ளென்று பொசுக்கியது.

    தேடாத இடம் பாக்கியில்லை.

    அனு விஷ்ணு வீட்டிற்கும் வரவில்லை. தேவிகா வீட்டிற்கும் வரவில்லை. பீச், பார்க், கடைத்தெரு என்று தேடியலைந்தனர்.

    மல்லிகாவிற்கு வெயிலில் அலைந்து தலை சுற்றுவதுப் போலிருந்தது.

    சௌந்தரபாண்டியன் உள்ளுக்குள் திகிலாய் உணர்ந்தாலும், மனைவி பயப்படுவாளே என்று வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

    எந்நேரமும் அழத் தயாராயிருந்தாள் மல்லிகா.

    சௌந்தரம் மனைவியை தோளில் தட்டி ஆறுதல் படுத்தினார்.

    பயப்படாதே… ஒண்ணுமில்லே… அனுவை கண்டுபிடிச்சிடலாம்.

    எப்படிங்க? எங்கும் இல்லையே! இந்த காலத்துல நல்ல தைரியசாலியான பொட்டை புள்ளைங்களுக்கே என்னென்னவோ நடந்துப்போகுது. நம்ம அனுவுக்கு ஒண்ணுமே தெரியாதே! அவளை யாராவது… ஐயோ என்னால் கற்பனைக்கூட பண்ணிப் பார்க்க முடியலே… அப்படி ஏதாவதொன்னு ஆகியிருந்தா… நிச்சயமா நான் உயிரோட இருக்க மாட்டேங்க விம்மினாள்.

    மல்லிகா… இதோ பார்! நீ அழுது… என் தைரியத்தை குலைச்சிடாதே! வா… எதுக்கும் போலீஸ் ஸ்டேஷன்ல போய் ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்துட்டு வந்துடலாம்.

    ***

    ஹெட்கான்ஸ்டபிள் இவர்களிடம் கேள்வி கேட்டு குறித்துக்கொண்டார்.

    பேரு?

    அனுராகினி!

    வயசு?

    இருபத்திநாலு!

    பொண்ணு… யாரையாவது லவ்வு, கிவ்வுன்னு…

    அவ… அவளுக்கு மனநிலை சரியில்லைங்க!

    பைத்தியம்னு சொல்லுங்க. அதை முன்னமே சொல்றதுக்கென்ன? பைத்தியம்னு சொல்றீங்க… ஏன் சார் வீட்லே வச்சுக்கிட்டு அல்லாடறீங்க? அதுங்களுக்கின்னு ஹாஸ்பிடல் இருக்கில்லே… பாருங்க வயசான காலத்துல உங்களால் நிம்மதியா இருக்க முடியுதா?

    ….. கூனிக்குறுகிப் போயினர் இருவரும்.

    போட்டோ இருக்கா?

    கையிலே இல்லை… வீட்லே இருக்கு. நான் கொண்டுவந்து தர்றேன்!

    சரி… இதுல ஒரு கையெழுத்தைப் போட்டுட்டு போங்க…

    சார் எப்படியாவது என் பொண்ணை…

    கண்டுபிடிச்சிடலாம்… கவலைப்படாதீங்க என்றார் ஹெட்கான்ஸ்டபிள்.

    இருவரும் தொய்ந்துபோய் வீடு திரும்பினர்.

    மல்லிகா நேரே பூஜையறைக்குள் சென்று கதறியபடி ஆரம்பித்தாள்.

    மல்லிகா… என்ன இது? ப்ச்… அழாதே!

    பயமாயிருக்குங்க… என் பொண்ணு எங்கே அல்லாடறாளோ தெரியலியே…

    வந்துடுவா… கிடைச்சிடுவா… கவலைப்படாதே! என்றவருக்கு கண்கள் பொங்க… அதை மறைக்க… மாடிப்படியேறினார்.

    துண்டால் கண்களை அழுந்த துடைத்துக்கொண்டார். மொட்டைமாடியில் நிற்க இடமின்றி மஞ்சள் வெயில் தீப்பறந்தது. துளியும் காற்றில்லை.

    கீழே செல்ல திரும்பியபோதுதான் அந்த சப்தம் கேட்டது.

    ‘லா…லலலா…லா…லலலலா…’

    ‘சந்தேகமேயில்லை… இது அனுவோட குரல்தான்!’

    உடம்பெங்கும் நீர்ப்பாய்ச்சிய சுறுசுறுப்பு ஓட… சுற்றிலும் பார்த்தவர்… கடைசியாய் தண்ணீர் தொட்டி கண்ணில் பட்டது.

    ஏணி மீதேறினார்.

    சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது சுவற்றில் சாய்ந்துக்கொண்டு, காலாட்டியபடி பாடிக்கொண்டிருந்த அனுவைப் பார்த்ததும்… திரும்ப உயிர் வந்து ஒட்டிக்கொண்டதுப் போலிருந்தது.

    அதேசமயம் இப்படி அலைக்கழிக்க வைத்து விட்டாளே என்ற கோபமும் எழுந்தது. வெகுவாய் கடினப்பட்டு கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டார்.

    அனு…

    திடுக்கென்று திரும்பிய அனு அப்பாவைப் பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

    இங்கே என்னம்மா பண்ணிட்டிருக்கே?

    …..

    "உன்னைக் காணாம… நாங்க பயந்துபோய்

    Enjoying the preview?
    Page 1 of 1