Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aasai Kodi Sumanthu!
Aasai Kodi Sumanthu!
Aasai Kodi Sumanthu!
Ebook118 pages53 minutes

Aasai Kodi Sumanthu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தான் பெறாவிட்டாலும், பெற்ற பிள்ளைகளுக்கும் மேல் ரமணியால் வளர்க்கப்படும் மீரா, மீரா பிறப்பின் ரகசியம் என்ன? மருமகளை மகளாக நினைத்து, மருமகள் வாழ்க்கையில் சம்பூர்ணம் என்ன நடவடிக்கை எடுத்தாள்? ஆசை கோடி சுமந்து போராடும் ராதாவின் ம்ஹிலை என்ன? மீராவின் வாழ்வில் நடந்த திருப்பங்களை, சுவாரஸ்யத்தோடு வாசிப்போம் வாருங்கள்...

Languageதமிழ்
Release dateJul 4, 2022
ISBN6580140608563
Aasai Kodi Sumanthu!

Read more from R. Manimala

Related to Aasai Kodi Sumanthu!

Related ebooks

Reviews for Aasai Kodi Sumanthu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aasai Kodi Sumanthu! - R. Manimala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆசை கோடி சுமந்து!

    Aasai Kodi Sumanthu!

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 1

    இளங்காலைப் பொழுது!

    தன் பல்லாயிரக்கணக்கான கைகளை விரித்து கதிர்களை பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தான் கதிரவன்.

    வெள்ளிக் காசுகளை பரப்பி காயவைத்துக் கொண்டிருந்தது கடல். அதை யாரும் தொடவிடாதவாறு விரட்டிக் கொண்டிருந்தன அலைகள்.

    கண்களைத் தவிர, தலை முகம் முழுக்க துப்பட்டாவால் மூடி, கூலிங்கிளாஸ் அணிந்து, கைகளை முழுக்க மறைத்த கிளவுஸுமாய்... முகமூடி மனிதர்களைப்போல் டூவீலர்களில் பறந்து கொண்டிருந்த யுவதிகளில், பிங்க் நிற ஆக்டிவாவில் மீராவும் வேகமாக பறந்துக் கொண்டிருந்தாள்.

    அழகான கடற்கரைச்சாலை... வாகனங்களால் மாசுபடத் துவங்கியது.

    ஆனாலும் பார்க்க பார்க்க சலிக்காத கடற்கரையின் அழகு... சாலையின் மீதிருந்து கண்களை அவ்வப்போது கவனம் ஈர்த்தது.

    மீரா வாட்ச்சைப் பார்த்தாள்.

    இன்னும் நேரமிருந்தது. சட்டென தன் டூவீலரை கடற்கரை உள்வாசலை நோக்கி செலுத்தினாள்.

    நிறுத்திவிட்டு மணற்பரப்பில் நடந்தாள். கற்கள் பதித்த தங்கநிற செருப்பை கழற்றி வைத்துவிட்டு தண்ணீரில் வந்து நின்ற மீரா முகத்தை மூடியிருந்த துப்பட்டாவை எடுத்தாள்.

    வட்ட முகமும், குழி விழுந்த கன்னங்களும், மேக்னட்டால் செய்யப்பட்ட கண்களும், பட்டாம் பூச்சியாய் படபடத்த இமைகளும் துளிபவுடர் இன்றி பளபளத்த சருமமும், கூர்மையான நாசிக்கே உரிய மென்மையான அழகுமாய் வசீகரித்தவளை வியப்புடன் பார்த்த மீன்கள் மேற்பரப்பில் வந்து துள்ளி குதித்தது.

    அவ்வளவு அருகில் மீன்களை பார்த்த சந்தோஷத்தில் ‘ஹேய்’ என உற்சாகமாய் கத்தினாள்.

    அக்கா!

    பக்கவாட்டில் குரல் கேட்க, திரும்பினாள்.

    சாயம் போன டிரவுசரும், சட்டையும் அணிந்திருந்த பதிமூன்று வயது சிறுவன்.

    என்னப்பா?

    நீ... டி.வி.யில் வருவியே... பேரு... பேரு... தெரியலே. அந்தக்காதானே? வெட்கமும், வியப்பும், சிரிப்புமாய் கேட்டான்.

    ம்... என்று மென்மையாய் சிரித்தாள்.

    ரொம்ப அழகாயிருக்கேக்கா!

    ...

    எப்போக்கா கல்யாணம்? ஆர்வ மிகுதியால் பெரிய மனுஷத் தோரணையில் கேட்டான்.

    அட... என கண்களை விரித்து நடக்கும்போது கண்டிப்பாச் சொல்றேன். நீ என்னப் பண்றே?

    சர்பத் விக்கறேன்க்கா! அக்கா இன்னைக்கும் நீ டி.வி.யில வருவியா?

    ம்... ஒன்பது மணிக்கு!

    இந்த டிரஸ்லேயா?

    இல்லே வேற டிரஸ்!

    நான் உன்னை பார்த்த விஷயத்தை என் தெருவுல எல்லார்க்கிட்டேயும் சொல்லப்போறேன்!

    வலம்புரிச்சங்கு கைக்குக் கிட்டியது போல், பெருமகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து ஓடினான்.

    மீராவுக்கு சிறு கர்வமும், சந்தோஷமும் ஏற்பட்டது. நேரமாக... செப்பலை மாட்டிக் கொண்டுக் கிளம்பினாள்.

    ***

    செல்போன் அலாரம், கணபதி மந்திரம் சொல்லி எழுப்பியது.

    "ஓம் கங்கணபதயே நமோ நமஹ...

    சித்தி விநாயகா நமோ நமஹ...

    அஷ்ட விநாயகா நமோ நமஹ...

    மங்கள மூர்த்தயே ஹோரையா..."

    செல்போனை அணைக்க மனம் வராமல் அரைகுறை உறக்கத்திலும் அந்த மந்திரத்தை கேட்டாள் ராதா.

    ம்... ம்... புரண்டு படுத்த சைந்தவி உறக்கம் அறுபட முகம் சுருக்கினாள்.

    சட்டென செல்லை அணைத்தாள்.

    மெல்ல மகளின் தோளில் இதமாய் தட்டிக் கொடுத்தாள். சைந்தவி சலனமின்றி உறக்கத்தில் ஆழ்ந்துப் போனாள்.

    நேரம்... அதிகாலை நாலரை.

    ராதா பாத்ரூமிற்கு வந்து முகத்தை கழுவிக்கொண்டு கிச்சனில் பருப்பையும், அரிசியையும் ஊறப்போட்டு விட்டு, ஒரு சொம்பு நிறைய தண்ணீரைப் பருகினாள். நைட்டியிலிருந்து ட்ராக் ஷூட்டிற்கு மாறினாள்.

    தன் ஃப்ளாட்டிலிருந்து வெளியே வந்தவள் கதவை லாக் பண்ணிவிட்டு ரோட்டில் இறங்கி மிதமான வேகத்தில் ஓடத் துவங்கினாள்.

    மும்பை பாந்த்ரா பகுதி!

    ஒரு வாரமாய் வெளுத்து வாங்கிய மழையில் சிறு சிறு குட்டைகளாய் தண்ணீர் தேங்கியிருந்தது. இந்த இரண்டு நாட்களாய்தான் மழை இல்லை. தெரு விளக்குகளின் வெளிச்சத்தில் பனி படர்ந்திருப்பது தெரிந்தது. பாதையோரம், கிடைத்த இடத்தில் எல்லாம், டப்பா வாலாக்கள் கம்பளிக்குள் முடங்கிப் படுத்திருந்தனர்.

    பழக்கமான ஏரியா! பரிச்சயமான கூர்க்காக்கள் இவளைப் பார்த்து சிறு புன்னகையை படர விட்டனர்.

    ஓடிக் கொண்டிருந்த ராதா... வீடு திரும்புமுன் அவளைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக் கொள்ளலாம்.

    வயது நாற்பத்தைந்து! தேசிய வங்கியில் வேலை. கை நிறைய சம்பளம். கண்ணியமான தோற்றம், தைரியசாலியான பெண்மணி. மகள் சைந்தவிக்கு பதினைந்து வயது. பத்தாவது படிக்கிறாள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கணவர் சந்திரன் ஹார்ட் அட்டாக்கில் இறந்துப் போனார். சொந்த ஃபிளாட், வங்கியில் சேமிப்பு, லாக்கரில் நகைகள் என வாழ்க்கை வசதிக்கு தேவையானவை இருந்தாலும், தனிமை மனதை கரையான்போல அரித்துத் தின்றது.

    ஒரு வழியாய் ஜாகிங் முடித்துவிட்டு திரும்பியபோது, வழக்கமாய் அதிகாலையிலேயே கோவில் வாசலில் பூக்கூடையுடன் அமர்ந்திருந்தப் பெண் இவளைப் பார்த்ததும் தாமரை இலையில் மல்லிகைப் பூவை எடுத்து நீட்டினாள்.

    தாங்க்ஸ் என்றபடி பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தாள் ராதா.

    ***

    இன்னமும் உறங்கிக் கொண்டிருந்த சைந்தவியை எழுப்பினாள்

    Enjoying the preview?
    Page 1 of 1