Inge Oru Shahjahan
()
About this ebook
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Read more from Mukil Dinakaran
Uyirulla Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Neeyadi!... Unnil Naanadi! Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Varam! Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai Malare! Rating: 5 out of 5 stars5/5Oruvan Manathu Onbathada! Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Porkaalam Rating: 0 out of 5 stars0 ratingsKanneer Varaintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsUyirgalidathu Anbu Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsVinnai Thodalam Unthan Siragu Rating: 0 out of 5 stars0 ratingsPoovizhi Vaasalile! Rating: 0 out of 5 stars0 ratingsKaraiyai Thedum Odangal Rating: 0 out of 5 stars0 ratingsMulloduthan Muthangala? Rating: 0 out of 5 stars0 ratingsEzhu Janmam Vendinean Rating: 0 out of 5 stars0 ratingsAntha Violet Kangal Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Vanthal! Rating: 5 out of 5 stars5/5Aatuvithal Yaaroruvar? Rating: 0 out of 5 stars0 ratingsVarum Kaalam… Vasantha Kaalam! Rating: 0 out of 5 stars0 ratingsUyiraal Inainthirupean Rating: 0 out of 5 stars0 ratingsAasaiye Alai Polea...! Rating: 0 out of 5 stars0 ratingsPoochuduthe En Vaalibam! Rating: 0 out of 5 stars0 ratingsOru Kathavum... Innoru Kathavum! Rating: 0 out of 5 stars0 ratingsAttaikathi Rajakkal Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 0 out of 5 stars0 ratingsKanavaana Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsKaanal Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsBhuvana Oru Puthumai Penn Rating: 0 out of 5 stars0 ratingsUn Nizhalum Naanthane? Rating: 0 out of 5 stars0 ratingsMannithu Vidu... Magane...! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Inge Oru Shahjahan
Related ebooks
Thee Kozhunthil Pani Thuliyai..!!! Rating: 0 out of 5 stars0 ratingsPoovizhi Vaasalile! Rating: 0 out of 5 stars0 ratingsUn Per Solla Aasaithan Rating: 0 out of 5 stars0 ratingsVelicha Poove Vaa… Rating: 0 out of 5 stars0 ratingsPesu... Malarey... Pesu! Rating: 0 out of 5 stars0 ratings...Enavey, Ennodu Vaa! Rating: 5 out of 5 stars5/5Uyirvarai Inithaval Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணெல்லாம் உன் வண்ணம்..! Rating: 0 out of 5 stars0 ratingsKannellaam Un Vannam Rating: 0 out of 5 stars0 ratingsAnbil Vantha Raagame Rating: 5 out of 5 stars5/5Mul Naduve Malar Valarthu! Rating: 0 out of 5 stars0 ratingsMala Ennai Mannippaya? Rating: 0 out of 5 stars0 ratingsVithiyin Kaigal Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsMayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Uyir Unarum Va(li)zhiyo Kaadhal Rating: 3 out of 5 stars3/5Vandhal, Sendral, Vendral... Rating: 0 out of 5 stars0 ratingsAasai Kodi Sumanthu! Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Manasu Rating: 5 out of 5 stars5/5Pesi Vidu Maname Pesividu…! Rating: 0 out of 5 stars0 ratingsமலரே என்னை நெருங்காதே! Rating: 0 out of 5 stars0 ratingsMalare Ennai Nerunkaathe Rating: 4 out of 5 stars4/5Kaadhal Poyin Rating: 0 out of 5 stars0 ratingsParvaiyile Sevaganai..! Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsMayamaan Rating: 5 out of 5 stars5/5Yen? Yeppadi? Rating: 0 out of 5 stars0 ratingsVallamai Thaaraayo? Rating: 5 out of 5 stars5/5Poo Parikka Ithanai Naala Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsIndrum Theriyavillai Natchathirangal! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Inge Oru Shahjahan
0 ratings0 reviews
Book preview
Inge Oru Shahjahan - Mukil Dinakaran
http://www.pustaka.co.in
இங்கே ஒரு ஷாஜகான்
Inge Oru Shahjahan
Author:
முகில் தினகரன்
Mukil Dinakaran
For more books
http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 28
அத்தியாயம் - 1
மதிய உணவு இடைவேளை.
ஸ்டாஃப் டைனிங் ஹாலில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த பிரேமலதாவிற்கு சாப்பாடே தொண்டையில் இறங்கவில்லை. ஏன்?... என்னாச்சு இந்த திவாகருக்கு?... எப்பவும் என் கூட தானே உட்கார்ந்து லன்ச் சாப்பிடுவான்... இன்று ஏன் அங்கே போய்த் தனியா உட்கார்ந்து சாப்பிடறான்?... அவனைக் கோபப்படுத்தும் அளவுக்கு நான் எந்தத் தப்பும் செய்யலையே?...
இருப்புக் கொள்ளாமல் தவித்தாள்.
அது ஒரு கொரியர் சர்வீஸ் நிறுவனம்.
சுமார் முப்பது பேர் பணி புரியும் அந்த அலுவலகத்தின் கம்ப்யூட்டர் பிரிவில் பணி புரியும் பிரேமலதாவிற்கு அந்த ஆபீஸில் இருக்கும் ஒரே நண்பன் திவாகர்தான். சக ஊழியர்கள் யாரிடமும் அதிகம் ஒட்டாதவள் அவள். அலுவலக வேலை சம்மந்தமாக ஏதாவது பேச வேண்டிய கட்டாயமிருந்தால் மட்டுமே சக ஊழியர்களிடம் பேசுவாள். மற்றபடி அனாவசியாமாக அரட்டையடிப்பதோ, தேவி... கற்பகம்... ரோஸி... மற்றும் சில பெண்களைப் போல், ஆண் ஊழியர்களுடன் நேரம் போவதே தெரியாமல் கடலை போடுவதும், அவர்களுடன் மாலை வேளைகளில் வெளியில் செல்வதும் கிடையாது.
அதன் காரணமாகவே திமிர்க்காரி
, கர்வம் பிடிச்சவள்
, ஹெட் வெயிட் கேஸ்
போன்ற பல்வேறு பட்டங்களை உடன் பணி புரியும் பெண் ஊழியர்களிடம் பெற்று வைத்திருக்கிறாள்.
ஆனால், அதையெல்லாம் துளியும் லட்சியம் செய்யாமல், தன் போக்கில் போகும் அவள், திவாகரிடம் மட்டும் தன் கொள்கைகளை ஓட்டு மொத்தமாய் விட்டுக் கொடுத்திருந்தாள். திவாகர் டெலிவரி செக்ஷனில் பணி புரியும் இளைஞன். பீடி, சிகரெட் பிடிக்காத... பிராண்டி, விஸ்கி தொடாத, அதிசய வாலிபன். ஆனால், ஒண்ணாம் நெம்பர் அழுக்கு மூட்டை!... நாலஞ்சு நாளைக்கு ஒரே டிரஸ்ஸை போட்டுக்கிட்டு வந்து பக்கத்துல நிக்கறவங்களை மூக்கைச் சுளிக்க வைப்பான், எது எப்படியோ, வேலைக்குன்னு கம்பெனிக்குள்ளார வந்து விட்டால், எந்நேரமும் பரபரப்பாய்த் திரிவான். எல்லோராலும் வெறுக்கப்படும் அவனை ஏனோ பிரேமலதாவிற்குப் பிடித்திருந்தது. பல நேரங்களில், அவனுடன் பேசுவதற்காகவே டெலிவரி செக்ஷனுக்கு ஏதாவது ஒரு காகிதத்தைத் தூக்கிக் கொண்டு சந்தேகம் கேட்க போவது போல் போய் வருவாள்.
அப்படிப் போகும் போது, குறைந்தபட்சம் பத்து நிமிடமாவது திவாகரிடம் பேசி விட்டுத்தான் நகர்வாள். அப்போது, அவர்கள் இருவரின் பேச்சில் இருக்கும் அன்னியோன்யத்தையும், முக பாவங்களையும், மற்றவர்கள் கவனித்தால், சரி... இந்த ரெண்டும் காதல் ஜோடிகள் போலிருக்கு!
என்றுதான் தீர்மானிப்பார்கள். கூடிய விரைவில் இன்விடேஷனைக் கொண்டு வந்து இருவரும் ஒரு சேர நீட்டுவார்கள்!
என்று ஆணித்தரமாகக் கூறுவர்.
ஆனால், நிஜத்தில் அவர்கள் இருவரும் இந்த நிமிடம் வரை காதலர்கள் இல்லை. அவர்களிடையே இருந்தது தூய்மையான... தெளிவான நட்பு மட்டுமே.
ஒவ்வொரு நாளும் காலையில் அலுவலகத்திற்கு வந்து வேலையை ஆரம்பிக்கும் பிரேமலதா, எப்போதுடா லன்ச் டைம் வரும்!
என்று காத்திருப்பாள். திவாகருடன் அமர்ந்து உணவருந்தும் அந்த சந்தோஷத்திற்காக அவள் எவ்வளவு கோடி வேணாலும் கொட்டிக் கொடுப்பாள். அவனுடன் பேசும் போது தன்னையேயறியாமல் தனக்குள் ஒரு புத்துணர்ச்சி உண்டாவதை ஆவதை அவள் பலமுறை உணர்ந்திருக்கிறாள். தன்னையே அறியாமல், தான் மனதிற்குள் திவாகரைக் காதலித்துக் கொண்டிருப்பது, அவளுக்குப் புரியாமல் இல்லை. ஆனால், ஏனோ அதை அவனிடம் வெளிப்படுத்த அவள் மிகவும் தயங்கினாள். ஒருவேளை அவன் மனதிற்குள் அந்த மாதிரியான
காதல் எண்ணம் எதுவும் இல்லாமலிருந்து... நான் பாட்டுக்குக் கேட்கப் போய்... அவன் என்னைத் தப்பாக நினைத்து விட்டால்... அதற்குப் பிறகு அவன் என்னை விட்டு விலகி விட்டால்...
நினைத்துப் பார்க்கவே கொடூரமாயிருந்த்து அவளுக்கு.
ஒரு முறை, என்ன திவாகர்... நாலஞ்சு நாளா இதே சட்டை... பேண்ட்ல இருக்கே?... என்னாச்சு?
சகஜமாய்க் கேட்பது போல் கேட்டே விட்டாள்.
அதையேன் கேட்கறே... துணிகளை வாஷ் பண்ண நேரமே கிடக்க மாட்டேங்குது!... தெனமும் ஓவர் டைம் வேலையை முடிச்சிட்டு வீட்டுக்குப் போகவே மணி ரத்திரு ஒன்பது... ஒன்பதரை ஆயிடுது!... அதுக்கப்புறம் நனைச்சு... துவைச்சு... அதுகளை காய வெச்சு மறுநாள் காலைல போட்டுட்டு வர்றது சாத்தியப்படாது...
வாயில் சாப்பாட்டை வைத்துக் கொண்டே சொன்னான் அவன்.
சரி... அம்மாகிட்ட ஒரு செட் டிரஸ்ஸைக் குடுத்து துவைச்சு வைக்கச் சொல்ல வேண்டியதுதானே?
ம்ஹூம்... அவங்களாலே முடியாது... என்னோட ஜீன்ஸ் பேண்ட்டுகளை நனைச்சா கொஞ்சம்நஞ்சம் வெயிட்டா இருக்கும்?... நானே தூக்கித் துவக்க முடியாம திணறுவேன்!... அம்மா எப்படி?... அதுவுமில்லாம... என்னோட துணிமணிகளை எப்போதுமே நானே வாஷ் பண்ணித்தான் பழக்கம்!... இன்னிக்கு நேத்திக்கு இல்லை... நான் ஸ்கூல்ல படிக்கற காலத்திலிருந்தே அப்படித்தான்!
அட... ஒரு அவசர ஆத்திரத்துக்கு ஒரு செட் குடுத்து வாஷ் பண்ணிக்கறதுல என்னப்பா தப்பு?
ப்ச்!... பரவாயில்லை லதா!... நான் அழுக்கா இருந்தா என்ன?... அழகா இருந்தா என்ன?... என்னை வந்து எவளாவது மாப்பிள்ளை பார்க்கவா போறா?
டேய் அழுக்கு மூட்டை ராஸ்கல்... நீ மட்டும்
உம்னு ஒரு வார்த்தை சொல்லுடா... நான் வர்றேன் உன்னை மாப்பிள்ளை பார்க்க!
என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டவள், நீயும் ஒரு நாளைக்கு மாப்பிள்ளை ஆகத் தானே போறே?
க்கும்... அதை அப்ப... பார்க்கலாம்!
என்றவன் குனிந்து தன் உடையை ஒரு தரம் பார்த்து விட்டு, இந்த மாதிரி ஜீன்ஸ் பேண்ட்டும்... முரட்டு காட்டன் சர்ட்டும் போடுறதுல இது ஒரு வசதி லதா... பத்து நாளைக்கு துவைக்காமப் போட்டாக் கூடத் தெரியாது!
என்றான்.
க்கும்... நீதான் சொல்லிக்கணும்!... நான் இப்பக் கண்டு பிடிச்சுக் கேட்கலையா?
அது... நீ தெனமும் என்னை உற்று உற்றுப் பார்க்கறதினால... உனக்குத் தெரியுது!... இதே மத்த ஆளுங்களுக்குத் தெரியாது!
பல நேரங்களில் அவன் சொல்வது ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இல்லாதிருந்த போதிலும், அவனுடன் தொடர்ந்து வாதம் செய்யாமல், அவன் திருப்திக்காகவே ஆமாம் திவா... நீ சொல்றது சரிதான்!
என்று சொல்லி விடுவாள் பிரேமலதா. அது ஒருவிதமான விட்டுக் கொடுத்தல் என்று அவளே அதற்கும் ஒரு நியாயம் கற்பித்துக் கொள்வாள்.
அப்படிப்பட்ட திவாகர் இன்று அவளோடு வந்து உட்காராமல் தனியே உட்கார்ந்து உணவருந்திக் கொண்டிருந்தால் அவளுக்கு எப்படி இருக்கும்?... அவள் மனசு எவ்வளவு பாடுபடும்?
விரல்கள் சோற்றுப் பருக்கைகளைக் கிளறிக் கொண்டிருந்தாலும், விழிகள் திவாகர் மீதே பதிந்து கிடந்தன. அவன் தன்னைப் பார்த்தால், கண் ஜாடையால் என்னப்பா?... என்னாச்சு?
என்று கேட்க காத்திருந்தாள்.
அவனோ, தலையைத் தூக்கிப் பார்த்தால், நிச்சயம் அவள் தன்னுடன் கண்களால் பேசுவாள் என்பதைப் புரிந்து கொண்டவன் போல், குனிந்த தலையை நிமிராமலே உணவருந்திக் கொண்டிருந்தான்.
இருவரது டிபன் பாக்ஸிலும் கொண்டு வந்த உணவின் அளவு குறையாமலே இருந்தது.
சில நிமிடங்களுக்குப் பிறகு, விருட்
டென்று எழுந்த திவாகர் வேக வேகமாய்ச் சென்று வாஷ்பேசினருகே