Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Velvet Manasu
Velvet Manasu
Velvet Manasu
Ebook161 pages1 hour

Velvet Manasu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Anuraha Ramanan, an exceptional Tamil novelist, written over 750 novels, 1200 short stories, One of her novel "Oru Veedu Iruvasal" were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada.Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465629
Velvet Manasu

Read more from Anuradha Ramanan

Related to Velvet Manasu

Related ebooks

Reviews for Velvet Manasu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Velvet Manasu - Anuradha Ramanan

    7

    1

    "விளக்கு வைச்சு, மணி என்னன்னு பார்த்தியா... ஏழடிக்கப் போகுது... கழுதை... இத்தனை நேரம் எங்கேயெல்லாம் சுத்திட்டு வருது..."

    வடிவு, வீட்டுக்குள் காலெடுத்து வைக்கும்போதே செல்லம்மாவின் குரல்... அழுத்தமாய் - ஆர்மோனியம் பெட்டிக்கு தொண்டை கட்டினாற்போல...

    காதில் விழாதது போல, கிழவியைத் தாண்டிப்போய்விட முயற்சித்தாள் வடிவு.

    பாட்டி கேட்கறது காதுல விழல்லையா... நின்னு பதில் சொல்லிட்டு, அப்புறமா நகரு...

    வடிவு அப்பொழுதுதான் கவனித்தாள். அவளது அப்பா தருமனும் அங்கேயேதான். ஒருபக்கமாய் உட்கார்ந்து, முழுப் பலாப்பழத்தை வெட்டி, சுளை எடுத்துக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் மகள் பக்கம் திரும்பக்கூட இல்லை.

    அப்பா மட்டும் தனியாக இருந்தால், கெஞ்சி, கொஞ்சி, எப்படியோ சமாளித்துவிடுவாள் அவள். செல்லம்மா பக்கத்தில் இருந்தால், ஏதாவது தூபம் போட்டுக்கொண்டே இருப்பாள்... அவளுக்கு, பேத்தியைக் கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைப்பதே பிடிக்கவில்லை...

    என்ன படிப்பு வேண்டிக்கிடக்கு? படிச்சாத்தான் சம்பாதிக்க முடியுமா... நான் அந்தக் காலத்துல சம்பாதிக்காததா... இல்லே, அவள் அப்பன்தான் சம்பாதிக்காததா.. அழகா, ஆன வயசுக்கு அப்பனுக்கு உதவியா தாளக்கட்டைய எடுத்தா என்ன... குறைஞ்சாப் போயிடும்? படிக்கிறாளாம் படிப்பு... ஒரு நாளைப் போல - ஏழு மணிக்கு குறைஞ்சு வீட்டுக்குள்ளே வர்றதே இல்லே... இவனும், அவளைக் கண்டிக்கறதே இல்லே. ‘தாயில்லாப் பிள்ளை... போகட்டும் விடு’ன்னு இவளுக்காக வக்காலத்து வேற... வயசுப் பொண்ணைக் கட்டி காப்பாத்தி, ஒருத்தன்கிட்ட ஒப்படைக்கிறவரைக்கும் அதோட கஷ்டம் எனக்கில்லே தெரியும்?

    செல்லம்மா, ஒரு காலத்தில், தாளக்கட்டையைக் கையில் எடுத்தாளானால் அவளிடம் நாட்டியம் கற்றுக்கொள்ள வருகிற பெண்களின் முட்டிக்காலை ஒடித்துவிட்டுத்தான், தாளக்கட்டையைக் கீழே வைப்பாள் என்று அவளிடம் நடனம் படித்த மாணவிகள் பேசிக்கொள்வார்கள். ஜதியில் பொறி பறக்கும். யாருக்காகவும், எதற்காகவும் தனது முடிவுகளை மாற்றிக் கொள்ளமாட்டாள்.

    எப்பேர்ப்பட்ட கோடீஸ்வரர் வீட்டுப் பெண் நடனம் கற்க வந்தாலும், ஒரே மாதிரியான அதட்டல்தான்... உருட்டல்தான். உழைத்துச் சொல்லிக் கொடுப்பாள். அதே மாதிரி கற்றுக்கொள்ள வரும் மாணவிகளும் சர்வ பரித்தியாகம் செய்துவிட்டு, நாட்டியம் ஒன்றே லட்சியமாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பாள்.

    அப்படிச் சொல்லிக் கொடுத்தும் சரியாய் ஆடாத பெண்களைக் கொஞ்சம்கூட தாட்சண்யம் பாராமல், ‘உனக்கும் இந்தக் கலைக்கும் பத்துப் பொருத்தமா இருக்கு குழந்தை... போய் வேற எதையாவது கத்துக்க...’ - இப்படிச் சொல்லி அனுப்பிவிடுவாள்.

    தர்மன் தலையெடுத்த பிறகு அம்மா அளவுக்கு கண்டிப்பு இல்லை. ஓரளவுக்கு மாணவிகளைத் தட்டிக்கொடுத்தே கற்றுக்கொடுத்தார். பல பெண்கள் - அம்மாக்காரி வேண்டாம்; பிள்ளை கற்றுக் கொடுத்தால் கற்றுக்கொள்கிறேன் என்று அடம்பிடித்து, தருமனிடம் பாடம் கேட்க வருவதுண்டு...

    வடிவின் தாய் கூட அப்படி வந்தவள்தானாம்... செல்லம்மா அடிக்கடி சொல்லுவாள்.

    அரை மண்டி போடச் சொன்னா மூக்காலே அழுவா உங்க அம்மா... நான் வகுப்பு எடுத்திட்டிருந்தா - உள்ளே வரவேமாட்டா... வாசல்ல வண்டியிலேயே, பிடிச்சு வைச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருப்பா... நான் எழுந்து சமையலை கவனிக்கப் போவேன். உங்கப்பன் வந்து உட்காருவான். அந்த நேரம் பார்த்து, ‘இந்தப் பூனையும் பாலைக்குடிக்குமா’ங்கறமாதிரி வந்து நிற்பா இவள்...

    அவள் இதைச் சொல்லும் போதெல்லாம் கூடவே இதையும் மறக்காமல் சேர்த்துக் சொல்வாள்.

    ஒவ்வொரு சமயம் நீ வந்து நிற்கற சமயத்துல எல்லாம் அந்தக் கடங்காரியத்தான்டி ஞாபகப்படுத்தறே...

    ஓரொரு சமயங்களில் அம்மாவின் வார்த்தைகளைக் கேட்டு தருமனின் விழிகளில் கூட நீர் தளும்பும். அதுபோன்ற சமயங்களில் தாயாரிடம் அதட்டலாகச் சொல்வதுண்டு.

    சரி, சரி... இப்ப எதுக்கு அதெல்லாம்...

    இப்படிப்பட்ட நெகிழ்வான சமயங்களை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக ஓடி விடுவாள் வடிவு.

    இப்பொழுதும் அப்படித்தான்.

    அம்மாவைப் பற்றி பாட்டி ஏதாவது பேச்செடுத்தால், அப்பா கரைந்துபோய் நிற்கிற சமயம் பார்த்து உள்ளே ஓடிவிடலாம் என்றுதான் பரபரத்தாள் அவள்.

    ஆனால் - செல்லம்மாவோ, தருமனோ அவளை அத்தனை சுலபத்தில் விடுவதாக இல்லை.

    கேட்கறாங்க இல்லே... ஒரு நாளைப் போல ஏழு மணி வரைக்கும் எங்கே சுத்திட்டு வர்றே?

    சுத்தலைப்பா... ரஞ்சனி வீட்டுல பரிட்சைக்காக சேர்ந்து உட்கார்ந்து படிச்சிட்டு...

    அவள் சொல்லி முடிக்கவில்லை. செல்லம்மா, சிறுத்தை போலப் பாய்ந்தாள்.

    கேட்டியாடா... அந்த ரஞ்சனி வீட்டுல... யாரு தெரியறதா... மேம்பட்டி ஜமீன் பேத்தி... ‘பொண்ணு வயித்து’ பேத்தி...

    கிழவி - ‘பொண்ணு வயித்துப் பேத்தி’யில் அதிகம் அழுத்தம் கொடுக்க - எப்பொழுதுமே சாந்தமும், புன்னகையுமாய் விளங்கும் தருமனின் முகம் சிவந்து கன்றியது.

    வடிவு, ஏற்கனவே உங்கிட்ட என்ன சொல்லியிருக்கேன் நான்..? அந்தக் குடும்பத்தோட சினேகமே வேண்டாம்னு சொல்லலே..? அவங்க எல்லாம் மனிதாபிமானமே இல்லாதவங்க... காரியம் ஆகணும்னா தலைமேல தூக்கி வைச்சிட்டுக் கொண்டாடுவாங்க... இல்லையின்னா தரையிலப் போட்டு மிதிப்பாங்க... உனக்குப் பாடத்துல ஏதாவது சந்தேகம் இருந்தா - உங்க புரபசரை - இல்லேயின்னா லெக்சரரைக் கேளு... உன் சிநேகிதிகளைக் கேளு... இவள்தான் கிடைச்சாளா..?

    அப்பா. நான் அவள்கிட்ட பாடம் கத்துக்கலே. அவள்தான் என்கிட்ட கத்துக்கறா... அவள் என்னைவிடவும் ரெண்டு வயசு பெரியவள்... என்ன காரணத்துனாலேயோ... அவளை லேட்டாகத்தான் பள்ளிக்கூடத்துல சேர்த்திருக்காங்க... அவளுக்கும் படிப்புல அத்தனை ஈடுபாடு இல்லே...

    இல்லேயின்னா எவனாவது ஒரு இளிச்சவாயனைப் பார்த்துக் கட்டி வைக்க வேண்டியதுதானே... அந்த வீட்டு மனுஷங்களுக்குத் தெரியாத சாமர்த்தியமா..?

    செல்லம்மா பொரிய, தருமன் ‘அம்மா’ என்று கீழ்சுருதியில் அதட்டினார்.

    அவளுக்குப் படிப்பு வரல்லையின்னா, அவங்க டியூஷன் வைக்கிறாங்க. அவங்களுக்கு இல்லாத வசதியா... உன்னை - அதுவும் இந்த இருட்ல தன் வீட்டுல தங்க வைச்சிருக்காங்களே... என்ன மனசு அவங்களுக்கு? இதுவே அந்தப் பொண்ணை இத்தனை நேரத்துக்கு நம்ம வீட்டுல விட்டு வைப்பாங்களா..?

    தருமனின் குரல் ‘சட்’டென இறங்கியது. மகளைப் பரிவுடன் பார்த்தார்.

    "இப்பவும் சொல்றேன் வடிவு... பணக்காரங்க தங்களோட சுண்டுவிரல் நகத்துலக்கூட அழுக்குப்பட அனுமதிக்க மாட்டாங்க. ஆனா, ஏழைங்க மானமே போய் குற்றுயிரும், குலையுயிருமாக் கிடந்தாலும் கண்டுக்கமாட்டாங்க. அவங்களைச் சொல்லிப் பலனில்லே... இப்படி

    Enjoying the preview?
    Page 1 of 1