Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Imsaigal
Imsaigal
Imsaigal
Ebook115 pages55 minutes

Imsaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை வெவ்வேறுவிதமான மனிதர்களை நாம் சந்திக்கிறோம். அவர்களின் குணநலங்களும், பழக்கவழக்கங்களும் வேறுபட்டே காணப்படும். சிலர் பேசுவதும், நடந்துகொள்வதும் நமக்குச் சந்தோசத்தை கொடுத்தாலும், சிலருடைய பேச்சுக்கள், பழக்கவழக்கங்கள்ள் நமக்கு இம்சைகள் தருவதை அழகான எளிய நடையில் வாசித்து அறிவோம்.

Languageதமிழ்
Release dateOct 22, 2022
ISBN6580110009122
Imsaigal

Read more from Anuradha Ramanan

Related to Imsaigal

Related ebooks

Reviews for Imsaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Imsaigal - Anuradha Ramanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இம்சைகள்

    Imsaigal

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    கங்கா நதிக்கரையில், பிரதீப மகாராஜா கண்ணை மூடிகிட்டு தியானத்துல இருந்தாரு. வானத்துல அழகான நிலா; தென்றல் காற்று... அந்த நேரத்துல அழகான பொண்ணு பவுடர், ஸ்நோ பூசாமயே அழகா இருக்கற பொண்ணு தயவு செஞ்சி இங்கே கூடியிருக்கற மாதரசிங்க எல்லாம் அவுங்களைச் சொல்றதா தப்பா எடுத்துக்கக் கூடாது. இந்த ஊரு பெண்ணரசிங்க எல்லாரும் இயற்கையாகவே மகாலட்சுமி மாதிரி இருக்கீங்க... அப்பேர்ப்பட்ட அழகான பொண்ணு, பிரதீப மகாராஜாவோட வலது தொடையில் வந்து ‘பொக்’குனு உக்காந்துச்சு. தியானம் கலைந்த ராஜா பெண்ணே! நீ யாரு?ன்னு கேட்டாரு. அதுக்கு அவ வெட்கப்பட்டுகிட்டே, ராஜா... என்னைத் தெரியலையா? நீங்க இளையராஜா; நான்தான் இளையராணின்னு சொல்றா..."

    அந்தப் பிரும்மாண்டமான சதஸ்ஸில் திருமுருக கிருபானந்த வாரியாரின் பிரசங்கம் நடந்து கொண்டிருக்கிறது. அவரது ஒவ்வொரு வார்த்தையின் இண்டு இடுக்கிலும் மறைந்திருந்த பொடியைப் புரிந்துகொண்ட ரசிக மகாஜனங்கள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள், லலிதாவைத் தவிர.

    இந்தக் கிசுகிசுப்புக்களைக்கூடப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு ஜடமில்லை அவள். ஆனால் அவளது மடியில் நாலு வயசுகூட நிரம்பாத குட்டிப்பிசாசு ஒன்று உட்கார்ந்திருக்கிறதே அது செய்கிற அமர்க்களத்தில் என்னத்தை ரசிப்பது?

    அம்மா...

    .....

    அ-ம்-மா-வ்!

    குழந்தைக்கு அவள் பாட்டி, கோரோஜனையைக் கொஞ்சம் தாராளமாகவே புகட்டியிருப்பாள் போலிருக்கிறது.

    உஸ். இப்படியெல்லாம் சத்தம் போடக்கூடாது. தீபு குட்டி... தோ பாரு... அந்தத் தாத்தா பாட்டு பாடறார் பாரு... அவள், குழந்தையின் காதோடு சொல்லிப் பார்க்கிறாள்.

    கைத்தல நிறை கனி அப்ப மொடவல் பொரி...

    ...ம்மா, இந்தப் பாட்டு ஒண்ணும் வேணாம்... ‘மாமா வந்தா மல்லிப்பூ தந்தா’ பாடச் சொல்லு...

    குழந்தை, காலை உதைத்துக்கொண்டு, மேல் ஷட்ஜமத்தில் குரலெடுத்து முகாரியில் தொடருகிறாள்.

    உம்... காலம்டியம்மா காலம். இத்தணூண்டு குழந்தைக்குகூட அந்த டப்பா சங்கீதம்தான் பிடிச்சிருக்கு பாரேன். அம்மா, அப்பா ‘சத்’துக்களா இருந்தா குழந்தையும் ஞானத்தோட இருக்கும். அவா, ‘அசத்’துக்களா இருந்தா எப்படி இருக்கும் அவாளோட வாரிசு? இப்படித்தான்!

    லலிதாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவள் மாமியார் இதுதான் சாக்கென்று, அருகிலுள்ள தன் சினேகிதியிடம் பிள்ளையின் சமர்த்தையும், மருமகளின் சமர்த்தையும் கடை பரப்புகிறாள்.

    லலிதாவுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வருகிறது. வீட்டில் இருக்கும் பொழுது இதே தீபா சனியன் ‘மூஷிகவாகன’ ஸ்லோகத்தை மழலை மாறாமல் அழகாகச் சொல்லும். ‘அம்மா, உம்மாச்சிக்கு நமச்சாரம் பண்ணட்டா?’ என்று கேட்டு, சுவாமி படத்துக்கு முன்பு கீழே விழுந்து நமஸ்காரம் பண்ணி, தோப்புக்கரணம் போடும்.

    ‘வெளியில் கிளம்பினா வல்லடி வந்துடறது... இம்சை, சரியான இம்சையடிம்மா எனக்கு...’ அவள் அலுத்துக்கொள்கிறாள்.

    இத்தனை தூரம் சினிமா சங்கீதத்தைப் பற்றி இழிவாகப் பேசுகிற தன் மாமியார் இதே ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படம் பக்கத்துத் தியேட்டரில் ரிலீசான போது, பெண்கள் கியூவில் இடித்துப் புடைத்து, சண்டை போட்டு சந்தி சிரித்து தன்னுடைய ரவிக்கையைக் கிழித்துக்கொண்டு வந்த விஷயம் லலிதாவுக்குத்தான் தெரியும்! மாமியாரின் பக்கத்தில் அமர்ந்திருக்கிற சினேகிதிக்குத் தெரியாது!

    ‘தெரியாது’ என்பதற்காக இவள், அந்த ரகசியங்களை ‘பொதேல்’ என்று அம்பலப்படுத்திவிட முடியுமா?

    ஏ பெண்ணே... நீ என் வலது தொடையில உட்கார்ந்துட்டே. அதனால் நீ என் பொஞ்சாதியாக முடியாது... அப்படின்னு ராஜா சொன்னாரு... எந்த ராஜா சொன்னாரு?

    பிரதீப் ராஜா! - வாரியாரின் எதிரில், தரையில் உட்கார்ந்திருந்த குழந்தைகளின் நடுவிலிருந்து ஒரு பொடிக் குரல் கொடுக்கிறது.

    இந்தா குழந்தே... இங்கே வா அவர் அழைக்க அந்தக் குழந்தை தயங்கித் தயங்கி அவர் முன் வர, தனது மான் தோல் பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து பரிசாக அளிக்கிறார் அவர்.

    ...ம்மா... அந்தத் தாத்தா என்ன கொடுத்தா?

    அந்த அண்ணா சமத்தா கதை கேட்டானாம்... அதுக்காக ஒரு புக் கொடுத்தார்... நீயும் சமத்தா கதை கேட்டேன்னா உனக்கும் ஒரு புக் தருவாரே... ஹை! என் தீபுக் குட்டி சமத்தா கேட்கப் போறா...

    அவள், குழந்தையின் முகவாயை பிடித்து, எரிச்சல் அத்தனையை அடக்கிக்கொண்டு, மிகமிகப் பிரியமாய் கேட்கிறாள்.

    அந்த ‘புக்’குலே அக்கா படம் போட்டிருக்குமா...?

    உம்... போட்டிருக்கும்டா...

    அண்ணா படம்?

    அண்ணா படமும் போட்டிருக்கும்டா...

    அப்புறம்... தோத்தோ படம்?

    தோத்தோ படம்... பூனையில்லே பூனை... அதும் படம், எலி படம் எல்லாம் போட்டிருக்கும்...

    குருவி போட்டிருக்குமோ அதுல... குருவி, விட்டுட்டியே...

    லலிதாவின் பொறுமை, மெள்ள மெள்ள உடைகிறது. இந்தப் பக்கத்திலிருந்த மாமி வேறு. ஆயிரம் தடவை ‘த்சு’ என்று அலுத்துக்கொள்கிறாள்.

    ஏன் மாமி, உங்களுக்குப் பிள்ளை குட்டியே கிடையாதா என்று கேட்க வேண்டும் போலத்தான் லலிதாவுக்கு நாக்கு துடிக்கிறது. கேட்க முடியுமோ?

    யாரோ ஒரு பெரிய மனிதர், வாரியாருக்கு மாலை போட அந்தச் சமயம் பார்த்து, தீபா, லலிதாவின் கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டு, அந்தக் காட்சியைக் கூட, காணவிடாமல் மறைக்கிறாள். இப்பொழுதுதான் முதன்முதலாகத் தன் அம்மாவின் அழகை ரசிப்பதுபோல குட்டிக் கைகளால் அவளது கன்னத்தைப் பிடித்து, இப்படியும் அப்படியுமாகத் திருப்பி அழகு பார்த்து,

    Enjoying the preview?
    Page 1 of 1