Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sonthamena Nee Irunthal…
Sonthamena Nee Irunthal…
Sonthamena Nee Irunthal…
Ebook150 pages1 hour

Sonthamena Nee Irunthal…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110004019
Sonthamena Nee Irunthal…

Read more from Anuradha Ramanan

Related to Sonthamena Nee Irunthal…

Related ebooks

Reviews for Sonthamena Nee Irunthal…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sonthamena Nee Irunthal… - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    சொந்தமென நீ இருந்தால்…

    Sonthamena Nee Irunthal…

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    பதிப்புரை

    ராஜா! என்கிற ராஜசேகர், ஒரு டாக்டர், கதையின் நாயகன்.

    தன்னலமற்ற சேவை புரியும் அவனது உள்ளத்தைக் கவர்ந்த கதாநாயகி ராதிகா.

    ஜாதி வேறுபாடால் மனம் கவர்ந்த மங்கையை மனைவியாக அடைய முடியாமல், துரதிருஷ்டவசமாக மணம்புரியும் அக்கா மகள் கீதாவினால் எந்தவித மன நிறைவையும் பெற முடியாமல்... மது அரக்கனுக்கு அடிமையாகி, சொந்த பந்தங்களாலும் வெறுக்கப்பட்டு… வாழ்க்கையே ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகிற கதாநாயக பாத்திரத்தை நினைத்து, அவனுக்காக நாம் ஒவ்வொரு வரும் பரிதாபப்படும் அளவிற்கு - கதை என்று நினைக்கத் தோன்றாத அளவுக்கு, உண்மைச் சம்பவத்தை நேரில் பார்ப்பது போல படம் பிடித்துக் காட்டியுள்ள ஆசிரியை அனுராதா ரமணனின் எழுத்தாற்றலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

    சிறந்த கதையோட்டம்!

    கதையில் வருகிற எல்லா கதா பாத்திரங்களும் உயிர்த் துடிப்புள்ளதாக அமைக்கப்பட்டு நம் கண்முன்னே உலா வருவது நிறைவாக உள்ளது.

    இரண்டு குடும்பத்து கதாபாத்திரங்களுடன் கதை எந்தவிதக் குழப்பமுமின்றி சீராகச் செல்கிறது!

    இவ்வளவு சிறப்பான சமுதாயக் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டுள்ள 'சொந்தமென நீ இருந்தால்' நாவலை, ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறேன்.

    1

    தோளில் சாய்ந்திருந்த குழந்தை மெள்ளச் சிணுங்க…

    ராதிகா, ஒரு கையில் பூக்கூடையும், மறுகையில் குழந்தையுமாய் தவிக்கிறாள்.

    தெருவில் கால் வைக்க முடியாதபடி ஈர நசநசப்பு. மழைக்கால மாலை நேரம். இரண்டு நாட்களாய் விடாமல் பெய்த மழையில் சென்னை நகரமே சில்லிட்டுப் போயிருந்தது.

    இந்த மழையில் கோயிலுக்குப் போகாட்டி சாமி கோவிச்சுக்குமா ராது.

    மனோகரன், ராதிகாவின் கணவன் தடுத்துப் பார்த்தான். முடியவில்லை.

    சாதாரணமாகவே அவள், கணவனிடம் எதுவும் வேண்டுமெனக் கேட்டதில்லை. ஏதோ அதிசயமாய் கேட்கும் போது தடுப்பானேன் என்று உள் மனசு அதட்டியதால், ஒரு தரம் சொல்லிப் பார்த்து விட்டு, பிறகு ‘தெய்வமே’ என அவளுடன் கிளம்புகிறான்.

    தெருவில் இறங்கியதும்தான் தெரிந்தது, இவளைப் போல் எத்தனை பெண்கள் இந்தத் தூறலில் நனைந்தபடி நடை போடுகிறார்கள் என்று.

    அன்று நவராத்திரி வெள்ளிக்கிழமை.

    இதை விட்டால் மீண்டும் அடுத்த வருஷ நவராத்திரி தான் என்கிற ஆதங்கத்திலோ என்னமோ… பீரோக்களிலிருந்த புடவைகளெல்லாம் கொட்டும் மழையில் அநியாயமாய் நனைய…

    கபாலீசுவரர் கோயிலிலிருந்து நீண்டு கிடக்கும் மாட வீதியில் விதவிதமான பெண்கள்.

    அம்பாளுக்கு இன்னிக்கு என்ன அலங்காரம்! இப்படிப் பார்க்க வரும் பெண்கள்…

    அடுத்த வீட்டுப் பெண் இன்று என்ன அலங்காரத்தில் வெளியே கிளம்பியிருக்கிறாள் என்று வீட்டு வாசலில் பழி கிடக்கும் பிரகிருதிகள்...

    நாலைந்து பட்டுப் பாவாடை தாவணிகளின் கலீரிட்ட சிரிப்பு…

    குங்குமம் கொட்டிடுத்துடி- நடுவில் ஒருத்தியின் தவிப்பு.

    குங்குமம் கொட்டினா கல்யாணம் வரும்பாங்க.

    இந்தப் புரட்டாசி போய் ஐப்பசி வந்தா மாப்பிளை வராரோ என்னமோ - இது பக்கத்திலிருந்த சினேகிதியின் எக்களிப்பு.

    உனக்கு இதை விட்டா வேறு பேச்சே கிடையாதே இது முதலாமவளின் பொய்யான முகச் சுளிப்பு.

    ராதிகா -கணவனின் பின்னால், குழந்தையைத் தூக்க மாட்டாமல் தூக்கிக் கொண்டு மூச்சிரைக்க நடக்கிறாள்.

    'கொஞ்சம் நின்னு, சேர்ந்து போனாத்தான் என்னவாம் ! கூட ஒருத்தி வர்றதே மறந்து போயிடும் இவருக்கு.’

    நடக்க முடியாத அவஸ்தையில் மெலிதான கோபம் நெஞ்சில் எழுந்தது.

    பட்டுப் புடவை வேறு மழையில் நனைந்து அவள் நடக்கையில் தஸ் புஸ்ஸென்று காலைத் தடுக்க

    இதுக்குத்தான் - சாதாரண சில்க் புடவை எதையாவது சுத்திக்கிட்டு கிளம்பலாம்னு பார்த்தா - இந்த அத்தையும், பாட்டியும் விடமாட்டேங்கறாங்களே

    ராதிகாவுக்கு – நல்ல புடவை மழையில் நனைவது வருத்தம்தான். மனோகரின் தாய் செல்லமும் பாட்டி காமுவும் நாள்கிழமை என்றால் பட்டுப் புடவைகளை தாடுத்து உடுத்திக் கொண்டால்தான் ஆயிற்று என்று பிடிவாதம் பிடிப்பார்கள், அவளுக்கு மனசு வராது. இருந்தாலும் பெரியவர்களுக்காகப் பார்ப்பாள்.

    இல்லாவிட்டால் செல்லத்துக்கு ஏகப்பட்ட கோபம் வந்துவிடும். முகத்தை வெண்கலப் பானை மாதிரி வைத்துக் கொண்டு - தனது வயசான தாயாரிடம் போய் முறையிடுவான்.

    அம்மா - உன் பேரன் பெண்டாடிக்கு என் வார்தையெல்லாம் ஒரு பொருட்டேயில்லை. அந்தக் காலத்துல என் மாமியார் - நவராத்திரி வந்தார். என்னை என்ன பாடு படுத்துவா... கூறைப் புடவைய எடுத்து கட்டிக்கச் சொல்லி, கூடை நகையையும் அள்ளி மாட்டி விட்டு ஒவ்வொரு வீட்டுக்கா, மஞ்சள் குங்குமத்துக்கு அழைச்சிட்டுப் போவா. இதுல பாடச் சொன்ன வீட்டுல எல்லாம் பாடியாகணும். இவளை நான் அப்படியெல்லாம் கொடுமைப் படுத்தறேனா?

    நல்ல நாளுலே பட்டுப் புடவைய எடுத்துக் கட்டிடக்கன்னு சொன்னா - காதுலேயே வாங்கிக்காம சில்க்குப் புடவையச் சுத்திக்கிட்டு வந்து நிக்கறா.

    இதைச் சொல்வதற்குள் - எங்கிருந்தோ அழுகை பிரவாகமாய் பெருக்கெடுக்கும்!

    இந்தக் காலத்துல குழந்தைங்களுக்கு பெரியவங்க கிட்ட அத்தனை மரியாதைடி செல்லம். அவளைச் சொல்லியும் தப்பில்லே.. உன் பிள்ளை கொடுக்கற எடம் இத்தனையும்.

    காமுப் பாட்டி மகளைச் சுட்டிக்கொண்டு அழுவாள். எதற்கு வீண் தகராறு?

    ராதிகா - புகுந்த வீட்டினரிடம் ரொம்பவும் மரியாதையாக நடந்து கொன்னாள். தன்னால் - மனோகருக்கு தர்ம சங்கடமான நிலைமை உருவாவதைக் கூடிய மட்டும் தவிர்க்கப் பார்ப்பாள். சில சமயங்களில் - நிலைமை புரியாமல் கணவனே, நாலுபேர் எதிரில் தன்னைப் புகழும்போது, சொல்ல முடியாமல் தவிப்பாள்.

    மனோகரனுக்கு சூதுவாது தெரியாது. தன் அம்மாவையும், பாட்டியையும் வைத்துக் கொண்டு - பொண்டாட்டியின் கைச் சமையலை 'ஓகோ' வெனப் புகழ்வான். இல்லாவிட்டால், மனனவியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு தமக்கையிடம் இப்படிச் சொல்லுவான்.

    ஜெயா, இந்த ப்ளு ஸாரி -நனக்கு அத்தனைப் பாந்தாமில்லே, நேத்து கட்டியிருந்தியே லைட்கிரீன். அது உனக்குப் பாந்தமாயிருந்தது. இந்த ப்ளு ராதிகாவுக்குத்தான் ஜோராயிருக்கும் நீ என்ன சொல்றே பாட்டி?

    பாட்டி, பதில் சொல்லாமல், முகத்தை 'நக்’ கென்று தோள்பட்டையில் இடித்துக் கொண்டே அந்தண்டை போவாள்.

    உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது, அவங்க எதிரே -என்னைப் பத்தி உசத்தியா பேசாதீங்கன்னு. ஜெயா அக்காவைப் பாருங்க, நீங்க சொன்னவுடனே, விடுவிடுன்னு போயி புடவையை மாத்திட்டு வந்திட்டா

    ராதிகா, தனிமையில் கணவனிடம் நொந்து கொள்வாள்.

    ஒண்ணுமில்லாத இந்த சின்ன விஷயத்துல் இத்தனை தப்பர்த்தம் இருக்கா? எனக்கு ஒண்ணும் இது தப்புன்னு படலையே.

    அவன், அதிசயித்துப் போவான்.

    நிஜம்தான். மனோகரனுக்கு அத்தனை சாமர்த்தியம் போதாது. கை நிறைய சம்பாதிக்கிறான். பெரிய தொழிற்சாலையில் இன்ஜினீயராக இருக்கிறான். தன் குடும்பத்திடம் அளவு கடந்த பாசம் உண்டு. மனைவியிடம் கால்லையில்லாத காதல் உண்டு. ஆனால், இதையெல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளத் தெரியாத அப்பாவி, மனசில் பட்டதை 'பொத்’தென்று போட்டு உடைத்து விடும் சாதாரண, சராசரி ஆண்பிள்ளை.

    அத்தனை - சூட்சுமம் இருந்தால், பெண்டாட்டி குழந்தையையும், பூக்கூடையையும் ஒரு சேர தூக்கிக் கொண்டு, பழையில் நனைந்தபடி வருகிறாளே, நின்று, குழந்தையை தான் வாங்கிக் கொள்ள வேண்டுமென்றோ, சேற்றில் கால் வழுக்காமல் அவளுக்கு உதவ வேண்டுமென்றோ ஒரு மனிதனுக்குத் தோன்றாதோ?

    இந்தாங்க... பாபுவைக் கொஞ்சம் பிடிங்க. உங்க டவலாலே அவன் தலை நனையாமப் போர்த்துங்க.

    ராதிகா நின்ற இடத்திலிருந்தே குரல் கொடுக்கிறாள். அப்பொழுதுதான் மனோகர் தன் தவறை

    Enjoying the preview?
    Page 1 of 1