Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uthama Thirudi
Uthama Thirudi
Uthama Thirudi
Ebook123 pages58 minutes

Uthama Thirudi

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110002986
Uthama Thirudi

Read more from Anuradha Ramanan

Related to Uthama Thirudi

Related ebooks

Reviews for Uthama Thirudi

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uthama Thirudi - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    உத்தம திருடி

    Uthama Thirudi

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    மகள் எழுந்து, பல் துலக்கும் போதே பார்வதி அதட்டும் குரலில் கூறிவிட்டாள்.

    இந்தா, காபியை குடிச்சிட்டு, வீட்டைப் பெருக்கி மெழுகு... ஒட்டடை அடிச்சாக் கூடத்தேவலாம்.... மாசக் கணக்காறது... இன்னிக்கு காலையில் பத்து மணிக்கு தண்ணிய நிறுத்திடுவானாம்.... அப்புறம் சாயங்காலம் நாலு மணிக்குத்தான் திறந்து விடுவாங்களாம்... லீவு நாளும் அதுவுமா அவனுக்கும் என் கழுத்தை அறுக்க இதுதான் முகூர்த்த நேரம்.... என்ன, வாயில குச்சிய வச்சிட்டு எத்தனை நேரம்தான் மலைச்சு நிற்பே... சீக்கிரம் குளிச்சு முடிச்சு, தண்ணி பிடிச்சு வையி...

    ……………

    என்னாடி, நான் சொல்லிட்டே இருக்கேன்... நீ பாட்டுக்கு'கம்'முனு நின்னா என்ன அர்த்தம்... வாயில என்ன கொழுக்கட்டையா?

    அதான் நீயே சொல்லிட்டியே... குச்சிய வாயில வச்சிட்டு மலைச்சு நிக்கறேன்னு... ஆமா.... இன்னிக்கு என்ன, விடிகாலையிலேயே கையில சவுக்கை எடுக்காத குறையா விரட்டறே...

    சீதா பாதி எரிச்சலும், பாதி கிண்டலுமாய் கேட்டாள்... முகத்துக்கு சோப்பு போட்டதில் எப்படியோ -சோப்பு கண்ணில் பட்டு'கபகபவென எரிந்தது....

    போதாக் குறைக்கு இன்று அவளும், அவளது உயிர் சினேகிதி ராகினியும், இன்னும் சில சினேகிதிகளுடன் சேர்ந்து-ராகினியின் தோட்ட வீட்டுக்குப் போய் கொட்டமடிப்பதாக முதல் நாளே திட்டம் போட்டு வைத்திருந்தார்கள்...

    பெரிசு குறுக்கே விழுந்து தடுத்துடும் போல இருக்கே... இது என்ன அவஸ்தை...

    அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே-அவளது மனசில் ஓடும் எண்ணங்களைப் படித்தாற் போல் பார்வதி தடாலென வார்த்தைகளை வீசினாள்.

    என்ன... இந்த முழி முழிக்குறே... வெய்யில்ல பாழாப் போகாம எங்கே சுத்தறதா திட்டம் போட்டிருக்காப்பல...

    அது... அது வந்தும்மா... பண்ணை வீட்டு ராகினி இல்லே ராகினி... அவளும், மத்த சினேகிதிகளும் பண்ணை வீட்டை ஒழிச்சு சுத்தம் செய்யலாம்னு... பட்டணத்துல படிக்கிறாரில்லே-ராகினியோட அண்ணா... அவர் நாளைக்கு வர்றாராம்...

    உக்கும்...

    பார்வதி ஆத்திரத்துடன் காபி தம்ளரைக் கொண்டு வந்து, சீதாவின் எதிரில் 'ணக்'கென வைத்தாள்.

    ராகினியின் அண்ணன் விஜயன் வரப் போகிற விஷயம் ஏற்கனவே இவள் காதில் விழுந்ததினால் தானே - மகளுக்கு வீட்டிலேயே சிறை வைக்கிறாள்...

    முதல் நாளிரவே சீதாவின் தந்தை அம்பலம்- தன் மனைவியை அழைத்து எச்சரித்து விட்டார்.

    பண்ணையோட மகன் நாளை மறுநாள் வர்றான்.... அவன் வந்தாலே அவனோட படிச்ச பசங்க எல்லாம் அவனோடத்தான் சுத்தும்... உன் பொண்ணைக் கொஞ்சம் அடக்கி வையி... இவளும், இன்னும் நாலஞ்சு குட்டிகளும் அந்தப் பையன் மேல ஏகக் கிறுக்காயிட்டுக் கிடக்குதுங்க... ஜிலேபியை ஈ மொயிக்கறாப்பல இதுங்க அந்த வீட்டையே சுத்திச் சுத்தி வருதுங்க... பண்ணையார் சம்சாரம் சேதி தான் தெரியுமே... கொட்டைப் பாக்கைக் கடிச்சாப்பல நாலு பேரை வச்சிட்டு எதையாவது சொல்லித் தொலைப்பாங்க...

    பார்வதிக்கு பண்ணையார் மனைவி தேவகியைப் பற்றி நன்றாகவே தெரியும். என்றாலும், அதை விடவும் மிக நன்றாக மகளைப் பற்றியும் தெரிந்து தானே வைத்திருக்கிறாள்...

    ஏதோ, இது நாள் வரையில் மகளின் மனசு. தனக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். இப்பொழுது கணவனும் அதையே சொல்லும் போது-'சுள்ளென அவமானத்தில் நெஞ்சு சுட்டது...

    மத்த கழுதைங்க எப்படியோ எனக்குத் தெரியாது... நம்ம சீதா குழந்தைங்க....பாவம்... என்னவோ இன்னமும் சின்னப் புள்ள மாதிரி...

    இதற்கு மேலும் ஏதாவது சொல்லியிருப்பாள்... கணவரின் முகத்தைப் பார்த்ததும்'கப்'பென அடங்கி விட்டாள்.

    பார்வதி... முழுப் பூசணிக்காயச் சோத்துல மறைக்கப் பார்க்காதே... இதே விஜயன் போன வருசம் லீவுக்கு வந்திருக்கறப்ப என்ன நடந்ததுங்கறதை நான் ஞாபகப்படுத்தணும்கற அவசியமில்லைன்னு நினைக்கிறேன்-பதினஞ்சு முடிஞ்சு-பதினாறு தொடக்கத்துலேயே லவ் லெட்டர் எழுதினவதானேடி உன் பொண்ணு?

    பார்வதி முகம் சிறுக்க, புருஷனைப் பார்த்துச் சீறினாள்.

    ஆமா... இது மாதிரி எடக்கு மடக்கா ஏதாவது செய்யற சமயத்துல மட்டும் அவ என் பொண்ணு. உங்க பொண்ணு இல்லே, அப்படித்தானே?

    என்னவோ எரிந்து விழுந்து விட்டு, படுக்கையைத் தட்டிப் போட்டுக் கொண்டு வந்து விட்டாளே தவிரமனசு மட்டும்-கணவரின் வார்த்தைகளைச் சுற்றிச் சுற்றியே வந்தது....

    கைக்கு எட்டிய தூரத்தில் தான் பெற்று வளர்த்த பெண் படுத்திருக்கிறாள்... என்றாலும் அவளுக்கும் எனக்கும் நடுவில் பெரிய சுவரே எழும்பிவிட்டதுபோல்... நெஞ்சுக்குள் தவிப்பு...

    அம்பலம் தன் வீட்டில் இருந்து கொண்டு, தனது மனைவியிடம் இத்தனை சொல்கிறாரே தவிரபண்ணையாரின் பங்களா வாசற்படியை மிதித்தால் போதும்.... தனது மெலிந்த தேகத்தை அப்படியே குறுக்கிக் கொண்டு விடுவார்... தேவகி கொண்டு வந்து வைக்கும் காபியை மரியாதையுடன் தனது மேல் துண்டால் பற்றி--கதவிடுக்கின் பக்கமாய் மறைந்து நின்று தான் குடிப்பார்.... இவர்தான் என்றில்லை.... இவரது தகப்பனார், பாட்டனார் காலத்திலிருந்தே இப்படித்தான்...

    வழி வழியாய் பண்ணையார் குடும்பத்துக்கு இவரது குடும்பம்- காரியஸ்தராக வேலை பார்ப்பதும், திட்டோ. வசவோ, இடிச்சொல்லோ மடி நிறைய வாங்கிக் கட்டிக் கொள்வதும்தானே எழுதாத சாஸனம்?

    சீதா ஒரே பெண்ணாகப் போன தில் ஒரு விதத்தில் பார்க்கப் போனால் அம்பலத்துக்கு சந்தோஷம்தான்... இந்த அடிமைப்பட்டியலில் தனக்குப் பின்- வேறு எந்தப் பெயரும் சேராது அல்லவா...

    போதும்டா சாமீ... இந்தப் பொண்ணு சீதாவுக்கு மட்டும் ஒரு கல்யாணத்தைச் செஞ்சிட்டேன்னா துண்டை உதறித் தோளுல போட்டுட்டுக் கிளம்பிடுவேன் பார்வதி... காசு என்ன பெரிய காசு... எங்கே வேலை செஞ்சாலும் காசுதான்... இந்தம்மா கிட்ட பேச்சு கேட்க வேணாமில்லை...

    அவர் இப்படிச் சொல்லும் போதெல்லாம் பார்வதியும் சிரித்துக் கொண்டே சொல்லுவாள்.

    நீங்களே இப்படிச் சொல்றீங்களே... பாவம், பண்ணையாரைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க... பெண்டாட்டி வேண்டாம்னு அறுத்துட்டு ஓட முடியுமா... லட்சமும், கோடியுமாச் சொத்தும், தோப்பும் துறவும், வீடும் வாசலும்... எல்லாத்துக்கும் மேல தங்கம் தங்கமாப் பொண்ணும், பையனும்.... அவரே பொறுத்திட்டிருக்கார்... உங்களுக்கென்ன...

    நிசம்தான்... பாவம் பண்ணையார்...

    அம்பலம் அத்தோடு அடங்கிப் போய்விடுவார். மேலும் அந்தக் குடும்பத்தில் தேவகி மட்டும்தான் அப்படி. பண்ணையார் ராஜலிங்கம் பரம சாது....வாயில்லாப் பூச்சி என்று சொல்ல முடியாது.... எதற்கு வாயைக் கொடுத்து விட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளவேண்டும் என்று ஒதுங்கிப் போகிறவர். விஜயனும், ராகினியும் அந்தக் குடும்பத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1