Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nindru Kollum
Nindru Kollum
Nindru Kollum
Ebook44 pages23 minutes

Nindru Kollum

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Indhumathi, an exceptional Tamil novelist, written over 1000 novels and 300+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateApr 3, 2019
ISBN9781043466404
Nindru Kollum

Read more from Indhumathi

Related to Nindru Kollum

Related ebooks

Related categories

Reviews for Nindru Kollum

Rating: 4 out of 5 stars
4/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nindru Kollum - Indhumathi

    5

    1

    மணி பதினொன்றானாலும் பாரத்வாஜ் பரபரத்தான். இதற்கு மேல் கிளம்பி ஆபீசுக்குப் போனால் நிச்சயம் சீஃப் எக்ஸிக்யூடிவ் கூப்பிட்டனுப்புவார். தன் சிவந்த முகம் மேலும் சிவக்கப் பேசுவார்.

    என்ன மிஸ்டர் பாரத்வாஜ், இன்னும் அரை மணியானால் லஞ்ச் பிரேக் வந்து விடுமே... ஒரு வழியாகச் சாப்பாட்டை முடித்துக் கொண்டே ஆபீஸிற்குள் நுழைந்திருக்கலாமே... என்பார்.

    அதில்லை சார். இன்னிக்கு ஆவணி அவிட்டம். பூணூல் மாத்திக்க நேரமாயிடுத்து...

    இவன் அசடு வழிய நேரிடும்.

    பூணூல் மாத்திக்கிறதுக்காகத்தானே ஒரு மணி நேரம் பர்மிஷன் கொடுத்தது. இப்படி அரை நாளுக்கு மேல் எடுப்பீங்கன்னு நினைக்கலை. என்னவோ நம்ம ஆபீஸில் நீங்க மட்டும்தான் பூணூல் மாத்திக்கிட்ட மாதிரி பேசறீங்க. எத்தனை பேர் மாத்திக்கிட்டு சீக்கிரம் வரலை...?

    சார்... அவங்களுக்கெல்லாம் சாஸ்திரிகள் சீக்கிரம் வந்திருப்பார். எங்க வீட்டு சாஸ்திரிகள் பத்து மணிக்குத்தான் உள்ளே நுழைந்தார்...

    இதைப் பாரத்வாஜால் அவரிடம் சொல்ல முடியாது. இந்த சாஸ்திரிகள் விஷயமெல்லாம் அவருக்குப் புரியாது. அவர் பஞ்சாபி. முன் கோபக்காரர். எதையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

    அவர் மட்டுந்தானா...? இந்த அம்மாவிற்கும் ஒன்றும் புரிவதில்லை. சொன்னால் கேட்கவும் மாட்டேன் என்கிறார்.

    என்னடா பெரிய ஆபீஸ். ஒரு நல்ல நாள், கிழமை எதுவும் கிடையாது. அப்படி என்ன ஆபீஸ் வேண்டியிருக்கு? பேசாமல் லீவு போடுடா...

    அம்மாவின் கத்தலுக்குப் பயந்தே அன்று அவன் நேரமானாலும் பரவாயில்லை என்று பேசாமல் இருந்தான். ஆபீஸ் போய்ச் செய்யப் போவது ஒன்றுமில்லைதான். ஆனாலும் லீவு போட முடியாது.

    ஞாயிற்றுக் கிழமைகளில் கூட ஆபீஸ் இருக்குமானால் சந்தோஷப்படுவான். அதற்குக் காரணம் இருந்தது. ஆனால் அதைத் தற்போது அம்மாவிடம் சொல்ல முடியாது. சமயம் பார்த்துத்தான் சொல்ல வேண்டும். அம்மா சந்தோஷமாக இருக்கிற நேரத்தில் தெரியப்படுத்த வேண்டும். இல்லையென்றால் மூர்க்கமாக மறுத்துவிடுவாள்.

    அம்மா சற்றுப் பிடிவாதக்காரி. ஒன்று வேண்டாம் என்று வைத்து விட்டால், கடைசிவரை வேண்டாம்தான்.

    அவளாக மனசு மாறினால் தவிர, வேறு யாராலும் மாற்ற முடியாது. நிறையவே அழுத்தக்காரி.

    அப்பா போன பின்பு, இந்த அழுத்தம் இன்னும் அதிமாகி விட்டது.

    தனியாய் நின்று அத்தனை பிரச்சனைகளையும் சமாளிக்கிற தைரியத்தில் ஏற்பட்ட அழுத்தம்.

    ஒரே பிள்ளை நேராய் வளர வேண்டுமென்ற ஆதங்கத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1