Kaadhal Neram
5/5
()
About this ebook
Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.
Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.
Read more from Anuradha Ramanan
Moga Mazhai Rating: 5 out of 5 stars5/5Mullodu Oru Mayiliragu Rating: 5 out of 5 stars5/5Vettai Maan Rating: 0 out of 5 stars0 ratingsNanaindha Iravugal Rating: 5 out of 5 stars5/5Nilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Ulley Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsMouna Kanavu Rating: 5 out of 5 stars5/5Neeyum Naanum Oru Veedum Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Nila Rating: 0 out of 5 stars0 ratingsPuthusai Potta Kolam Rating: 4 out of 5 stars4/5Sonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Anna Rating: 5 out of 5 stars5/5Vaadagaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsPoovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsUravu Ondru Vendum Rating: 5 out of 5 stars5/5Iruttil Oru Yuddham! Rating: 3 out of 5 stars3/5Pournami Nilavu Rating: 4 out of 5 stars4/5Kaadhalikkum Bothimaram Rating: 0 out of 5 stars0 ratingsNila Sandhippu Rating: 5 out of 5 stars5/5Thendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Kaadhalikka… Kaathiru Rating: 0 out of 5 stars0 ratingsMana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsVera Vazhi Theriyale... Rating: 5 out of 5 stars5/5Chinna Chirusugal Rating: 0 out of 5 stars0 ratingsUthama Thirudi Rating: 5 out of 5 stars5/5Salanam Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Sirai Rating: 3 out of 5 stars3/5Mogam Ennum Naadakam Rating: 0 out of 5 stars0 ratingsKarkala Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsSumai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kaadhal Neram
Related ebooks
Aasai Ther Rating: 0 out of 5 stars0 ratingsKathavugal Marupadiyum Thirakkalam Rating: 0 out of 5 stars0 ratingsThalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsKadhalaal Valarnthen Rating: 5 out of 5 stars5/5Eppodhum Nee! Rating: 2 out of 5 stars2/5Thendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Vilagava Pazhaginom? Rating: 0 out of 5 stars0 ratingsThottil Sugam Rating: 5 out of 5 stars5/5Mana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Maanvizhiye Rating: 0 out of 5 stars0 ratingsMannil Neendhum Meengal Rating: 0 out of 5 stars0 ratingsVaanavil Kutram Rating: 0 out of 5 stars0 ratingsYudha Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsMattroru Naal Rating: 4 out of 5 stars4/5Pachonthigal Rating: 0 out of 5 stars0 ratingsVelli Kanavu Rating: 5 out of 5 stars5/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Vettai Rating: 0 out of 5 stars0 ratingsMuthamida Neramillai Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaga Uma Rating: 3 out of 5 stars3/5Gangaikarai Pookkal Rating: 5 out of 5 stars5/5Yaaradhu? Rating: 0 out of 5 stars0 ratingsNadaimurai Kaaviyam Rating: 5 out of 5 stars5/5Vazhikatti Vazhi Thavarugirathu! Rating: 5 out of 5 stars5/5Athuvarai Poruthiru Rating: 3 out of 5 stars3/5Neruppuden Uravu Rating: 0 out of 5 stars0 ratingsNaalaikku Neramillai... Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Sirai Rating: 3 out of 5 stars3/5Vaakku Sutham Rating: 5 out of 5 stars5/5Veliye Sonnaal Vetkam Rating: 4 out of 5 stars4/5
Reviews for Kaadhal Neram
1 rating0 reviews
Book preview
Kaadhal Neram - Anuradha Ramanan
http://www.pustaka.co.in
காதல் நேரம்
Kaadhal Neram
Author:
அனுராதா ரமணன்
Anuradha Ramanan
For more books
http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
முன்னுரை
பிரியமுள்ள வாசகர்களுக்கு வணக்கம். நலம்; நலம்தானே...
'காதல் நேரம்' - ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பக் கதை... அப்பா, அம்மா, நம் கதாநாயகன் அரவிந்த், இன்னொரு கதாநாயகராக ஆனந்த்தின் தாத்தா ஈஸ்வரன் (வயசானால் என்ன... ஹீரோவாக இருக்கக் கூடாதா... இந்த ஈஸ்வரன் தாத்தாவை நான் உருவாக்கிய போது மிகுந்த உற்சாகத்துடன் செயல்பட்டேன்) ராகினி, ரஞ்சனி, இன்னும் ஆனந்த்தின் தங்கை, அவள் கணவர், இன்னொரு தங்கை, தம்பி...
ஏதோ மெகா சீரியல் போல கதாபாத்திரங்கள் இருந்தாலும், அழுமூஞ்சித்தனம் இல்லை.... உருக்கமான கதைதான் என்றாலும் மூக்குறிஞ்சிகள் இல்லை....
கதையின் கரு... அதுதான் வருடக்கணக்கில் 'கோமா'வில் கிடக்கும் கதாநாயகன் உண்மையிலேயே இருக்கிற சோகம் எனக்குத் தெரியும். ஆனால், நம் கதையில் கூறப்பட்டுள்ளது போல, உணர்ச்சிமிகு கதாபாத்திரங்கள் அவனைச் சுற்றி இல்லை. அதுதான் பரிதாபம். அந்த நிஜக் கதையைக் கூறி உங்களின் நல்ல மூடை'க் கெடுக்க நான் விரும்பவில்லை.
இக்கதை தினமலர் வாரமலரில் தொடராக வந்தது. ஆசிரியர் திரு. ரமேஷ் மிகவும் நேர்த்தியாக இதை வெளியிட்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. திரு. ரமேஷ், என் கதைகளை ஆர்வத்துடன் வரவேற்பதினாலோ என்னவோ - தினமலருக்கு நான் எழுதும் கதைகள் ஒவ்வொன்றும் முத்திரை பதித்து, ஏராளமான வாசகர்களின் அமோகமான வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த விதத்தில் வாரமலருக்கும் தொடராக வந்தபோது, அற்புதமாக ஓவியம் தீட்டிய திரு. ஜெயராஜ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பூம்புகார் பதிப்பகத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எழுத்தாளர்களை மதித்து, கெளரவிக்கும் பணியைச் செவ்வனே செய்யும் மிக நல்ல பதிப்பகங்களை சென்னையில் விரல் விட்டு எண்ணி விடலாம். அவைகளில் முதன்மையானது பூம்புகார்.
புத்தகம் என்பது எழுத்தாளரின் மைல்கல். அதன் முன் அட்டையிலிருந்து, பின் அட்டை வரையில் பதிப்பகத்தின் கவனம் அபாரமாக இருக்கும்...
வழக்கம் போல இத்தொடரைச் சேகரித்துத் தந்து, பதிப்பகத்தினருக்கு அளிக்கும் வகையில் உதவிய நல்ல நண்பர் திரு. சர்ச்சில் பாண்டியன் அவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.
நல்ல முறையில் முகப்போவியம் தீட்டிய ஓவியர் திரு. ஷ்யாம் அவர்களுக்கும், அச்சிட்ட என் அன்பும் நன்றியும்."
வேறென்ன கதையைப் படித்துவிட்டு, ஆளுக்கொரு ஈஸ்வரன் தாத்தாவைக் கேட்டால்... 'Sorry..’ தேடிக் கொள்ளுங்கள்' என்றுதான் சொல்வேன்.
பிகேடியர் படியுங்கள். முடிந்தால் கதை பற்றி எனக்கும் ஓரிரு வரி எழுதுங்கள். நன்றி.
இப்படிக்கு அன்புடன்
அனுராதா ரமணன்
***
1
எல்லாத்துக்கும் நேரம், காலம்னு ஒண்ணு உண்டு இல்லையா... அது நமக்கு இப்பத்தான் வந்திருக்கு...
கர்னல் தியாகராஜன் வாசல் போர்டிகோவில் நடந்து கொண்டே தொலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண் டிருக்க...
கையில் அட்டைப்பெட்டி நிறைய பாதுஷாவை வைத்துக் கொண்டு, பார்வையாலேயே வருடிக் கொண்டிருந்தார் ஈஸ்வரன்...
'அடடா... ஃபேஷன் சேனல்லே வரிசையா அணிவகுத்து நிக்கற அழகிகள் மாதிரி என்னமா இருக்குங்க..."
நடைபயின்று கொண்டிருந்த தியாகராஜன், ஒரு கணம் தந்தையின் பக்கத்தில் வந்து 'பட்'டென நின்றார்.
அப்பா... இது உங்களுக்காக - அந்த சர்க்கரை வியாதிக்காரங்களுக்காகவே ஸ்பெஷல் கடை வச்சிருக்காங்களே... அங்கே வாங்கினதுதானே...
ஈஸ்வரன் மகனை முறைத்தார்.
ஆமாடா... பின்னே நான் என்ன.. நேத்து நீ வாங்கிட்டு வந்த அடையாறு ஆனந்த பவன் பாதுஷாவையா சாப்பிடுவேன்? நெவர்டா... எனக்கு மன உறுதி அதிகம்... இல்லையின்னா, உங்கம்மா காலமாகி இந்த இருவது வருஷமா எந்தப் பொண்ணையும் நிமிர்ந்து பார்க்காம...
தியாகராஜன் அப்பாவையே உற்றுப் பார்த்தார், அவர் கையில் இனிப்புடன் நெளிந்தார்.
உங்கப் பேரனுக்கு கல்யாணம் செய்யப் பேசிட்டிருக்கேன். நீங்களானா, உங்களோட பிரும்மச்சர்யத்தைப் பத்தியே பேசிட்டிருக்கீங்க... வயசுக்குத் தகுந்த மாதிரி யோசிங்க. உங்களுக்கு இப்ப என்ன வயசு...
எழுபதோ என்னமோ... அதை எதுக்கு ஞாபகப் படுத்தறே.
எழுபதா.. அதெல்லாம் இனிமே அடுத்த பிறப்பிலே தான். எழுபத்தியெட்டாறது... உம்... 'டயட் ஸ்வீட் தான்னாலும் அளவோட இருக்கட்டும். ஒண்ணுதான் புரிஞ்சுதா.. ஒன்லி ஒன்...
ஈஸ்வரன் அசட்டுச் சிரிப்புடன் எழுந்தார்.
'தினமும் ஒண்ணுதான்டா.
ஸன்டே' யின்னா மட்டும் ரெண்டு!"
அவர் அதற்கு மேல் அங்கே இருப்பு கொடுக்காமல் அவசரமாய் எழுந்து உள்ளே ஓடினார்.
தியாகராஜன் அப்பா சென்ற திசையைப் பார்த்து, தலையிலடித்துக் கொண்டார்.
வயசுக்குத் தகுந்த மாதிரியே நடந்துக்க மாட்டேங் கறாரே...
அதே சமயம் உள்ளே சென்ற ஈஸ்வரன், மருமகள் அகிலாவைச் செல்லமாய் திட்டினார்.
ஏம்மா, நீங்க ரெண்டு பேரும் வயசுக்குத் தகுந்த மாதிரியே நடந்துக்க மாட்டேங்கறீங்க. எனக்கு மானம் போகுது...
அகிலா பதறியபடி, மாமனாரின் முகத்தைப் பார்த்தாள்.
மாமா... என்ன நடந்தது...
என்ன... நடந்ததா... ஒண்ணுமே நடக்கலே. அதான் எனக்கு வருத்தமா இருக்கு.. நாலு குழந்தைங்க பெத்ததும் ரெண்டு பேரும் 'குடுகுடு' கிழவங்களா ஆகிட்டீங்களா... அவனுக்கு அம்பத்தி நாலுதான் ஆறது... உனக்கு நாப்பத்தி மூணா... அவ்வளவுதான். ரெண்டு பேரும் எப்பவும் கிழக்கேயும், மேற்கேயுமா பார்த்துட்டிருந்தா எப்படி... என்னோட அம்பத்தினாலுல நான் எப்படியிருந்தேன் தெரியுமா... உங்க மாமியார்தான் சீக்குக் கோழி மாதிரி...
பேசிக்கொண்டே நாலைந்து பாதுஷாவை உள்ளே இறக்கி விட்டார் மனிதர்.
அம்மா, தாத்தாவோட டயட் பாதுஷா இங்கே இருக்கு. அவர் சாப்பிடறது, அப்பா நமக்காக வாங்கிட்டு வந்தது... இதோ பாரு... அட்டை டப்பாவை மட்டும் மாத்திட்டார்...
தியாகராஜனின் கடைக்குட்டி மகள் நீரஜா, சாப்பாட்டு மேசையருகே இருந்தபடியே கத்துகிறாள்.
அகிலா, கவலையுடன் மாமனாரைப் பார்த்தாள்.
என்ன மாமா இது... உங்க பையனுக்குத் தெரிஞ்சுது, என்னைத்தான் திட்டுவார். அவர் கோபம் தான் உங்களுக்குத் தெரியுமே..
அட போம்மா. அந்த காலத்துல என்னைப் பெத்தவர் அடக்கினார். 'தண்ணியடிக்காதே.' 'சிகரெட் பிடிக்காதே, 'சினிமாவுக்குப் போகாதே', 'ராத்திரி லேட்டா வீட்டுக்கு வந்தா, வாசல்லேயே தான்டா படுக்கணும் நாயே’ன்னு... ஒரு வயசுப் பையனைப் பார்த்துப் பேசற பேச்சா இதெல்லாம்? அப்புறம் பெண்டாட்டி வந்து, அவ பங்குக்கு அழுது, முகத்தைத் தூக்கி வச்சிட்டு ரகளை பண்ணினா... நீங்க ஏன் அந்த கோடி வீட்டுப் பொண்ணு வந்தா அசடு வழியறீங்க... 'பத்மினி படம்னா விழுந்தடிச்சிட்டு ஓடிடுவீங்களே... 'என்னை விட, சுவர் மூலையில் சாத்தியிருக்கற துடைப்பக் கட்டை கூட அழகுதான் உங்க கண்ணுக்குன்னு... இப்ப இவன் வந்துட்டான்... காலையில் அரை மணி நேரம், ஆறு கிலோ மீட்டர் நடக்கணுமாம்... 'ஸ்வீட் சாப்பிடாதே; 'ஸெல்லுல அரவிந்கிட்ட, தாத்தாவா லட்சணமாப் பேசுன்னு. சரியான வாட்ச் டாக்...
அகிலாவுக்கும் சிரிப்பு வந்தது... அப்படியே அவர் கையிலிருந்த இனிப்புப் பெட்டியை வாங்கி, சமயலறை அலமாரியில் வைத்துப் பூட்டி விட்டுச் சென்றாள்.
புவனியோடக் கல்யாணம் முடிஞ்சு இன்னும் ஆறு மாசம் கூட ஆகல்லே. அதுக்குள்ள உங்க பிள்ளை, அரவிந்த்தோட ஜாதகத்தைக் கையில எடுத்துட்டார் போல...
ஈஸ்வரன் அகலமாய் சிரித்தார்.
ஜாதகத்தை எல்லாம் உன் புருஷனைப் பார்க்கச் சொல்லு... பொண்ணை மட்டும் என் பேரனே பார்த்துப்பான்...
அய்யோ...
அலறி விட்டாள் அகிலா.
அப்படி எதுவும் செஞ்சிடாதேயின்னு சொல்லுங்க அவன் கிட்ட... அப்புறம் உங்க பிள்ளைய யாராலேயும் சமாளிக்க முடியாது... புவனி விஷயத்துல அவர் எப்படி நடந்துட்டார்ங்கறதை எல்லாம் அத்தனை சுலபத்துல மறந்துட முடியுமா என்ன...
உண்மைதான், கர்னல் தியாகராஜனுக்குப் பிடிக்காதப் பல விஷயங்களில் காதலும் ஒன்று!
'காதல்' என்கிற வார்த்தையைக் கண்டு பிடித்த ஆசாமி மட்டும் அவரெதிரில் வந்தால், உடனேயே இரண்டு சுற்று துப்பாக்கியால் சுட்டு விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார் அவர்...
இந்தக் காதல் ஊதல் எல்லாம் வேலையத்தவன் வேலை.... இப்ப என்ன... காதலிக்காமக் கல்யாணம் செஞ்சுக்கறவன் எல்லாம் பொண்டாட்டி, பிள்ளைங் களோட இல்லையா...
"அப்பன்காரன் நெத்தி வியர்வை நிலத்துல விழ சம்பாதிச்சு, அதுவும் போதாமக் கடனை, உடனே வாங்கிப் படிக்க வைக்கட்டும்... கழுதைங்க, பொழுதை வீணாக்காம 'லவ்' பண்ணட்டும்.
எல்லாம் செவிட்டுல. நாலு கொடுத்தா, காதலாவது, கண்டங்கத்திரிக்காயாவது.
இப்படி எகிறிக் குதிக்கும் மனிதரின் மூத்த மகள் புவனி, கல்லூரியில் கடைசி வருடம் படிக்கும் போது, அவளதுப் பாடப் புத்தகத்தின் நடுவே ஒரு காதல் கடிதம் இருந்துத் தொலைத்தது...
இத்தனைக்கும் அந்தக் கடிதம் அவளது சினேகிதிக்கு வந்தது. எழுதியவன் கடிதம் முழுக்க, 'கண்ணே 'கற்கண்டே', 'தேனே', 'மானே', என்றெல்லாம் உருகி, உருகி எழுதியிருந்தானே தவிர, ஓரிடத்திலாவது, தன் காதலியின் பெயரை எழுதவில்லை.
கல்லூரி வகுப்பு நேரத்தில் இந்தக் கடிதத்தை வைத்துக் கொண்டு, தலைக்குத் தலை கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள். விரிவுரையாளர் வகுப்புக்குள் நுழைந்ததும், புவனியின் திறந்திருந்த புத்தகத்தின் நடுவில் அக் கடிதம் தஞ்சம் புகுந்தது...
வீடுவரை வந்தும் விட்டது... தியாகராஜனின் பார்வையில் கடிதம் பட்டும் விட்டது...
அடேயப்பா... வீடு, சுனாமி அடித்த கடற்கரை மாதிரியாகிவிட்டது.
புவனிக்கு செமத்தியான அடி. ஈஸ்வரன் மட்டும் குறுக்கே புகுந்துத் தடுத்திருக்காவிட்டால் புவனி இன்று போட்டோவாகச் சுவரில் தொங்கிக் கொண்டிருப்பாள்.
தியாகராஜனின் அத்தனை கெடுபிடிகளுக்கும் நடுவில், ஒரேயொரு நல்ல குணம்... அவரை நெருங்கிப் பேச, ஈஸ்வரன் ஒருவரை மட்டும் அனுமதித்திருந்தது தான்.
அன்றைக்கு அவர்தான் மகனை அடக்கினார்.
டேய்... டேய்.. அவதான் சொல்றா இல்லே, அந்த லெட்டர் தன் சினேகிதிக்கு எவனோ எழுதினதுன்னு...
இதை என்னை நம்பச் சொல்றீங்களா...
நம்புடா... நம்பித்தான் ஆகணும். உன் பொண்ணோட வார்த்தையை நீயே நம்பலையின்னா, வேற எவன்டா நம்புவான். அந்தப் பொண்ணு, உன்னோடப் பொண்ணு தானே... இல்லே, வேற யாருக்கோ பொறந்ததா...
அப்பா...
"என்னடா அப்பா? உலகமே நம்பிக்கையோட அடிப்படையிலத்தான்டா சுழண்டுட்டு இருக்கு... நீ என்னை 'அப்பா'ன்னு கூப்பிடறே... எப்படி. உங்க அம்மா, 'இதுதான்டா உன்னோட அசட்டு அப்பான்னு' காட்டினதாலே... நீ, இவளை உன் மகள்னு எப்படி சொல்றே... உன் பொண்டாட்டி உத்தமிங்கற அசைக்க முடியாத நம்பிக்கையாலே.
……………
இதையெல்லாம் நம்பறவன், பொண்ணு சொல்றதையும் நம்பணும்டா... இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்க... காதல்லே விழுந்தவ, இப்படி நாலஞ்சு தோசைய அடுக்கி வச்சிட்டு, சாம்பார், சட்னி, மிளகாப் பொடியின்னு வகை தொகையாச் சாப்பிட்டுட்டு இருக்க மாட்டா... அது தனியா மூஞ்சியிலேயே தெரியும். எப்பவும் பேதி மருந்து சாப்பிட்டாப்பல அல்லாடிட்டு இருக்கும். அதெல்லாம் உனக்கு எங்கே தெரியப் போறது? என்னைக் கேளு... சொல்றேன்.
………….
வயசுக்கு வந்த பெண்ணை கை நீட்டி அடிக்கறதை விட்டுட்டு, வேற வேலை இருந்தாப் பாரு... பட்டாளத்துக்காரன், மகளுக்குக் காதல் கடுதாசி எழுதறவன் எதுக்குடா, 'நம்ம காதல் உங்கப்பாவுக்குத் தெரிஞ்சா, நம்மளைப் பீஸ் பீஸாக் கிழிச்சிடுவான்னு எழுதணுமாம்? அந்தப் பொண்ணு ஏதோ ஜவுளிக் கடைக்காரன் பொண்ணா இருக்கணும். இல்லே, டைலர் பெத்த ரத்தினமாயிருக்கணும்...
உண்மையிலே அன்றைக்கு, அகிலா, புவனி, அத்தனைப் பேருக்குமே ஈஸ்வரன் - சாட்சாத் பரமேஸ்வரனாகவே காட்சியளித்தார்.
ஆனால்-
அதற்குப் பின், புவனியின் கல்லூரி தேர்வு முடிவுகள் வருவதற்குள் அவளது ஜாதகத்தைக் கையில் எடுத்து விட்டார் தியாகராஜன்.
அப்பொழுதும் இப்படித்தான். தானா பார்த்து, பேசி, முடிவெடுத்து, நிச்சயதார்த்தத்துக்கு முதல் நாள் வீட்டில் சொன்னார்.
ஏண்டா, புவனி மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டாமா.
அதானே... என்ன தாத்தா, அப்பாவோட அராஜகத் துக்கு ஒரு முடிவே இல்லையா...
இது அரவிந்த். நமது கதாநாயகன் இவன்தான். நல்ல வேளையாக, இந்த முரட்டு அப்பாவிடம் சிக்கிக் கொள்ளாமல், பெங்களூரில் வேலையில் இருக்கிறான்.
ஈஸ்வரனுக்கு இவனென்றால் உயிர். புவனியின் திருமணத்துக்காக சென்னை வந்த போதே, தன் பாசமிகு தாத்தாவிடம் ரகசியமாய் சொல்லி விட்டான் அவன்.
"மை டியர் ஓல்டு மேன்... உங்க பையனைக் கொஞ்சம் அடக்கி வையுங்க. இவரு பார்க்கற பொண்ணை நீங்க வேணுமானா கட்டிக்குங்க... நான் ஏற்கனவே ஒருத்திய 'லவ்' பண்றேன்...
"என்ன து... 'லவ்' வா...
ஈஸ்வரன், மிக அவசரமாய் தன் 'பல் செட்டை ' மாட்டிக் கொண்டு வாய் பிளந்தார்!
***
2
ஏண்டா, நகமும் சதையுமாய் பழகின சொந்த தாத்தா கிட்டயே விஷயத்தை மறைச்சிட்டியேடா... எமகாதண்டா நீ...
அரவிந்த், தன் காதல் பற்றி சொன்னதுமே முறுக்கிக் கொண்டார் ஈஸ்வரன்.
அரவிந்தன் எத்தனையோ சமாதானம் செய்தும் கூட, புவனியின் திருமணம் முடிந்து, அவன் பெங்களூருக்குக் கிளம்பும் வரையில், முகத்தை ஒரு முழ உயரத்துக்கு நட்டுக் கொண்டு நடந்தார் கிழவர்.
சாதாரணமாய், பேரன் பெங்களூரிலிருந்து வந்தாலே, ஈஸ்வரனைக் கையில் பிடிக்க முடியாது.
அதென்னவோ அவரது ஒரே மகன் தியாகராஜனின் நான்கு குழந்தைகளில் அரவிந்திடம் தான் அவருக்கு செல்லம் அதிகம்...
புவனியை 'ஊமைக் கோட்டான்' என்பார்; வருண் காரிய வாதி; சுயநலவாதி; முழிச்சிட்டிருக்கறப்பவே முழியப் பிடுங்கிண்டு போயிடுவான்; பீத்தல் பீதாம்பரம்... இப்படி ஏகப்பட்ட பெயர்களில் அர்ச்சனை செய்வார். கடைசி பேத்தி நீரஜா - நீலிக் கண்ணி; பூஜை வேளைக் கரடி; அரிசி மூட்டை ; கோழி மூட்டி குண்டம்மா.
போதுமா...
அரவிந்த் மட்டுமே - சமர்த்து,