Thottil Sugam
5/5
()
About this ebook
Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.
Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.
Read more from Anuradha Ramanan
Mullodu Oru Mayiliragu Rating: 5 out of 5 stars5/5Moga Mazhai Rating: 5 out of 5 stars5/5Mouna Kanavu Rating: 5 out of 5 stars5/5Vaadagaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsNanaindha Iravugal Rating: 5 out of 5 stars5/5Nilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Thendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Poovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsUlley Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Nila Rating: 0 out of 5 stars0 ratingsVettai Maan Rating: 0 out of 5 stars0 ratingsKarkala Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsNadippu Suthesikal... Rating: 5 out of 5 stars5/5Pournami Nilavu Rating: 4 out of 5 stars4/5Anna Rating: 5 out of 5 stars5/5Neeyum Naanum Oru Veedum Rating: 0 out of 5 stars0 ratingsMogam Ennum Naadakam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikka… Kaathiru Rating: 0 out of 5 stars0 ratingsPuthusai Potta Kolam Rating: 4 out of 5 stars4/5Uravu Ondru Vendum Rating: 5 out of 5 stars5/5Mana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsSonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Kaadhalikkum Bothimaram Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Sirai Rating: 3 out of 5 stars3/5Iruttil Oru Yuddham! Rating: 3 out of 5 stars3/5Salanam Rating: 0 out of 5 stars0 ratingsVera Vazhi Theriyale... Rating: 5 out of 5 stars5/5Unnaruge Ullaval Rating: 0 out of 5 stars0 ratingsAnuradha Ramananin Sirukathaigal Part - 1 Rating: 5 out of 5 stars5/5Nila Sandhippu Rating: 5 out of 5 stars5/5
Related to Thottil Sugam
Related ebooks
Kathavugal Marupadiyum Thirakkalam Rating: 0 out of 5 stars0 ratingsEn Vizhiyil Yen Vizhunthaai Rating: 0 out of 5 stars0 ratingsVilagava Pazhaginom? Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Pol Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Kangal Rating: 5 out of 5 stars5/5Athisayam Adhu Rakasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Kalam Idhu Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Vettai Rating: 0 out of 5 stars0 ratingsNila Sandhippu Rating: 5 out of 5 stars5/5En Uyir Neethaney Rating: 0 out of 5 stars0 ratingsMuthamida Neramillai Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vandha Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsGangaikarai Pookkal Rating: 5 out of 5 stars5/5Nandhini Oru Nandhavanam Rating: 5 out of 5 stars5/5Siragai Thedum Sittu Kuruvi Rating: 5 out of 5 stars5/5Janani Jagam Nee Rating: 0 out of 5 stars0 ratingsAan Manam Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Kadhal Vendum Rating: 4 out of 5 stars4/5Unakkaagavey Naan Vazhgiren Rating: 5 out of 5 stars5/5Uruga Marukkum Meluguvarthikal Rating: 0 out of 5 stars0 ratingsKetkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsJarigai Siraigal Rating: 4 out of 5 stars4/5Nagarangal Moondru Sorgam Ondru Rating: 5 out of 5 stars5/5Maya Maan Rating: 0 out of 5 stars0 ratingsAnuradha Ramananin Sirukathaigal Part - 2 Rating: 5 out of 5 stars5/5Paruva Vayasum... Paal Manasum... Rating: 5 out of 5 stars5/5Anbin Niram Maarathu Rating: 0 out of 5 stars0 ratingsManakukai Ooviyamaai... Rating: 5 out of 5 stars5/5Malare Mounama? Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thottil Sugam
2 ratings0 reviews
Book preview
Thottil Sugam - Anuradha Ramanan
http://www.pustaka.co.in
தொட்டில் சுகம்
Thottil Sugam
Author:
அனுராதா ரமணன்
Anuradha Ramanan
For more books
http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
முன்னுரை
தொட்டில் சுகம்... இக்கதை எனது வழக்கமானக் கதைகளிலிருந்து கொஞ்சம் வித்தியாசமானது.
ஒரு நாள்….
தமிழரசி ஆசிரியர் டாக்டர் திரு. விக்கிரமன் அவர்கள் - சில எழுத்தாளர்களுடன் - நடிகரும், டைரக்டருமான திரு. பாக்யராஜ் அவர்களை சந்தித்து உரையாட ஏற்பாடு செய்திருந்தார். அதில் நானும் ஒருத்தி...
உரையாடல் பல திசைகளில் போய் - சினிமாக் கதைக்கும், பத்திரிகை கதைக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி அலசிய போது -
சினிமா கதைகளை - பாமரர்களும் ரசிக்கும் வண்ணம் தயாரிக்கும் நீங்கள் ஏன், பத்திரிகைக்கு என்று எழுதக் கூடாது
- என்று நான் கேட்க
அதற்கு நேரமில்லை... என்னால் எதையுமே சினிமாவின் கோணத்தில்தான் பார்க்க முடிகிறது... ஒரு வேளை இதற்கென்று நேரம் ஒதுக்கி முயற்சித்தால் முடியும் என்று நினைக்கிறேன். அது சரி, நான் சினிமாவுக்கான ஒரு கதையின் கருவைச் சொல்கிறேன். அதை நீங்கள் உங்கள் பாணியில் பத்திரிகைக்கு ஏற்றவாறு கதையாக எழுதலாமே...
இப்படி திரு. பாக்யராஜ் சொல்ல...
என்றைக்குமே புதுமைக்கும், வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கும் ஊக்கம் அளித்து, உற்சாகப்படுத்தும் திரு. விக்கிரமன் அவர்கள் உடனேயே சொன்னார்:
அது மாதிரி நீங்கள் கருவைச் சொல்ல அதை அனுராதா ரமணன் தன் எழுத்தில் வடித்தால் தமிழரசியில் பிரசுரிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்...
தொட்டில் சுகம் இப்படி வளர்ந்ததுதான். கதையை திரு. பாக்யராஜ் ஒலிப்பதிவு நாடாவில் சொல்ல - அதை நான் - என் கற்பனைக்கு ஏற்றபடி எழுத... ஓவியர் திரு. மணியம் செல்வன் அவர்கள் தனது மந்திரத் தூரிகையினால் ஒவ்வொரு அத்தியாயத்தையும் சிறப்புற அலங்கரிக்க...
தமிழரசி பதிப்பாசிரியர் திரு.ம.நடராஜன் அவர்கள் மிகுந்த அன்புடன் ஒவ்வொரு வாரமும் தன் விமரிசனங்களையும், ஆலோசனைகளையும் கூற...
தொட்டில் குழந்தை சுகமாக வளர்ந்தது இப்படித்தான்.
ஆனாலும்….
‘அனுராதா ரமணன்' - என்கிற மனுஷியான நான் இக்கதை பற்றி ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
கதாநாயகிக்கு குழந்தை இல்லை என்கிற காரணத்தினால் - கதாநாயகன - வேறு ஒரு பெண் மூலம் குழந்தை பெற... அக்குழந்தையை தனது முதல் மனைவியிடம் அநாதைக் குழந்தை என்று சொல்லி எடுத்து வர, அவளும் ஆசையுடன் வளர்க்க - உண்மையிலேயே குழந்தையைப் பெற்றவள் - தன் மகனைக் காண வேண்டும் என்கிற ஆவலை அடக்க மாட்டாது. கதாநாயகனைத் தேடி வர, அதனால் உண்டானக் குழப்பங்களே மீதிக்கதை….
ஒரு பெண் - குழந்தை பெற சக்தியற்றவளானால், அதற்காக இன்னொருத்தி மூலமாகக் குழந்தை பெறுவதா... அதை ஒரு பெண் எழுத்தாளரான நீங்கள் எழுதுவதா… இப்படி ஆயிரமாயிரம் கேள்விக்கணைகள்... குற்றச் சாட்டுக்கள்.
இவர்களுக்காக நான் மறுபடியும் சொல்கிறேன். இந்தக் கதையின் கரு - என்னுடையதல்ல. இங்கே என்னுடைய வேலை - ஒரு தையற்காரனுடைய வேலையைப் போன்றது. கொடுத்த துணியை பாங்குற தைப்பது மட்டும்தான் தையற்காரனின் பங்கு...
மேலும்... இக்கதையை - திரு. பாக்யராஜ் அவர்களின் சினிமாவைப் பார்ப்பது போலப் படியுங்கள்…. அவர் படத்தில் நல்ல கருத்துக்கள் இருக்கும். சிறந்த - யாரையும் புண்படுத்தாத - நகைச்சுவை இருக்கும். பார்த்து விட்டு வரும் போது மனசு கனம் குறைந்து காற்றில் பறக்கும்... 'லாஜிக்' பார்க்கிற Serious type ஆசாமிகள் - தயவு செய்து பொழுது போக்குக்காக மட்டும் படியுங்கள்.
இந்நாவலை உருவாக்க உதவிய திரு.பாக்யராஜ், உயர்திரு. ம. நடராஜன், உயர்திரு. டாக்டர்.விக்கிரமன், என் சிறந்த நண்பரும் ஓவியருமான திரு.ம.செ. இவர்களுக்கும், இதைப் புத்தக வடிவில் கொண்டு வந்த திருமகள் நிலையத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றி... இப்படிக்கு.
என்றென்றும் அன்புடன்
அனுராதா ரமணன்.
1
ஓ- ஒண்ணரை டூவரை டக்கர டன் கள்ளன் – குள்ளன் - டுவென்டி ஒன்
கீச்சுக் குரல் ஒன்று மேல் ஸ்தாயியில் கத்த - அதன் கழுத்தை அப்படியே இறுக்கிப் பிடித்து விடுவது போல இன்னொரு சிறுமியின் குரல்.
சே போப்பா... இது ஒண்ணும் வேணாம்... பிங்கி பிங்கி பாங்கி - ஃபாதர் மதர் டாங்கி விளையாடலாம்...
ஜானகி தனக்குள் சிரித்துக் கொள்கிறாள்.
இந்தக் குழந்தைகளுக்குத்தான் எத்தனை விளையாட்டு தெரிந்திருக்கிறது...
எங்கேயிருந்துதான் கற்றுக் கொள்கிறார்களோ...
வெளியே - ஹால் முழுக்க பொம்மைகள் போதாதென்று சமையல் பாத்திரங்களைக்கூட இவர்கள் கடை பரப்பி இருக்கிறார்கள்...
அதுவும் செந்திலும் சரவணனும் சேர்ந்தால் கத்தி சண்டைதான். ஆளுக்கொரு இட்லி தட்டை கேடயமாக வைத்துக் கொண்டு, கரண்டியையும், கீரை கடையும் மத்தையும் வைத்துக் கொண்டு 'ஆ ஊ' வென ஒரே இரைச்சல்...
இவர்களை விட சுமதி தேவலை... ஏதோ தான் பாட்டுக்கு சுவரோரமாய் சொப்புகளைப் பரத்தி, தனக்குத் தானே பேசிக் கொண்டு...
வினுக்குட்டிதான் கொஞ்சம் பஞ்சாப் தீவிர வாதி ரகம்... கையில் எப்போதும் கத்தி... இல்லாவிட்டால் பிளேடு...
எங்கே ஒளித்து வைத்தாலும் அந்த குட்டிப் பிசாசுக்கென்று எப்படித்தான் கிடைக்கிறதோ...
குட்டி பிசாசு
- இப்படி வேலைக்காரி பொன்னம்மாதான் சொல்லுவாளே தவிர - ஜானகி ஒரு நாளும் அப்படிச் சொல்ல மாட்டாள்.
குழந்தைகள் என்றால் நடமாடும் தெய்வங்கள் என்பாள்…
ஒரு தாய் ஒரு சேய்
- குடும்பக் கட்டுப்பாட்டு விளம்பரத்தைப் பார்த்தால் கூட முகம் சுருங்கிப் போவாள்.
உடம்புல தெம்பும், வளர்க்க வசதியும் இருக்கறவங்க பெத்துக்கறாங்க. இவங்களுக்கென்ன கண்ணை உறுத்தறது.
அப்படியில்லே ஜானு... என்னதான் உன்கிட்ட வசதி இருக்குன்னாலும், அடுத்த குடும்பத்துக்குப் போக வேண்டிய சாப்பாட்டை நீயே விலை கொடுத்து வாங்கிடறது தப்பில்லையா...
ராஜாராமன் - அவள் கணவன் - அவளுக்கு எத்தனையோ முறை சொல்லி விட்டான்.
ஊம் ஹூம்...
அவள் கேட்பதாயில்லை...
குழந்தைகள்... குண்டு குண்டாய்... கதுப்புக் கன்னமும் கருந்திராட்சை விழிகளுமாய்...
பிறந்த குழந்தைக் கென்று ஒரு வாசனை இருக்கும் நீங்க கவனிச்சிருக்கீங்களா...
அவள் ராஜாவிடம் கேட்பாள்.
தெரியாதும்மா... நமக்குத் தெரிஞ்சதெல்லாம் உனக்குன்னு இருக்கற வாசனை... கொஞ்சம் தேங்காயெண்ணை, கொஞ்சம் மல்லிகைப் பூ, பின் கழுத்துல மஞ்சள் பொடி, கன்னத்துல பவுடர் வாசனை... உதட்டுல...
அவள், அவனது மார்பில் கை கொடுத்து பின்னுக்குத் தள்ளி விடுவாள்...
ச்சீ போங்க... உங்களைத் திருத்தவே முடியாது...
பெண்டாட்டி மேல பிரியம் வைக்கிறது மன்னிக்க முடியாத குற்றமா என்ன... வர வர நீ என்னை லட்சியம் பண்ணறதே இல்லே தெரியுமா... அதுவும் இந்த வினுகுட்டி வந்ததுக்கு அப்புறமா...
ராஜாராமன் குழந்தை மாதிரி கோபித்துக் கொள்வான். தலையோடு கால் இழுத்துப் போர்த்திக் கொண்டு திரும்பிப் படுப்பான்.
அவனை எப்படி தன் பக்கம் திருப்ப வேண்டும் என்பது ஜானகிக்குத் தெரியும்...
ஓ… ஒன்னரை டூவரை டக்கர டன்...
ஏயேய்... இப்ப எதுக்கு டாஸ் போட்டுப் பார்க்கறே...
உம்... கள்ளன் - குள்ளன் - டுவென்டி ஒன்...
இந்தா, நானும் பொறுமையாப் பார்த்திட்டிருக்கேன்… நீ பாட்டுக்கு அடுக்கிட்டே போனா எப்படி...
யா – ஓ – மே - ப்ளக்! ப்ளக்கைத் தூக்கி மேலே போட்ட நாகரத்தினப் பாம்பு...
அவ்வளவுதான்... அவன் திரும்பி படுப்பது மட்டுமன்றி, எழுந்தே உட்கார்ந்து விடுவான்...
போதும் நிறுத்து... தினமும் நீயே சொல்றே... என்னை அவுட்டாக்கிடறே. நானும் மனுஷன் தான். ஒரு நாளைப் போல - வாசல்லே தண்ணி லாரி வந்து நிக்கறப்ப எல்லாம் நான்தான் ஓடறேன்... என் ஸ்டேடஸ் என்ன... பெரிய கம்பெனி ஜி எம்... காலையில ஆபீஸ் போற அவசரத்துல குடம் குடமா... வாளி வாளியா... மூணாவது வீட்டுல எங்க ஆபீஸ் டெஸ்பாட்ச் கிளார்க் இருக்கான்... முந்தா நேத்து ஆபீஸ்லே - நாலு பேர் நடுவுல என்னைப் பார்த்து எடக்கு மடக்கா கேட்கறான். சார்... இது மாதிரிப்பட்ட தண்ணிக் கஷ்டத்துல பெரிய வீடே கூடாது சார். சின்ன வீடுதான் சிக்கனம்னு...
ஜானகிக்கு இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.
இப்படிச் சொல்லிப் புலம்புவானே தவிர - ராஜா ராமனுக்கு - ஜானகி ஒரு குடம் தண்ணீர் தூக்கினாலும் மனசு தாளாது...
வேணாம் தாயே... நீ நகரு... நானே செய்யறேன்...
பரவாயில்லே... நீங்க கிளம்புங்க...
இவ வேற... ஏதோ அலுப்புல சொன்னா அதையே பிடிச்சுக்குவா... தண்ணி கொண்டு வந்து கொட்டறதுக்குன்னு ஒரு ஆளைப் போட்டுக்க வேண்டியதுதானே. உங்க அம்மா வீட்டுச் சொத்தா கரைஞ்சு போறது?
ஆமா... தண்ணி எடுக்க, வீட்டு வேலை செய்ய, குழந்தைங்க வாரி இறைக்கறதை எல்லாம் எடுத்து தொட்டில் சுகம் வைக்க... இப்படி டிபார்ட்மெண்ட் வாரியா ஆள் போடலாம்...
இந்தக் குழந்தைங்களைத்தான் கொஞ்சம் அடக்கி வையேன்...
ஜானகி, கணவனின் நினைவிலேயே மூழ்கி இருந்தவள் கலீரெனக் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு, ஹாலுக்கு ஓடி வருகிறாள்.
வழக்கம் போல செந்தில்தான்...
மேசை விரிப்பை எடுத்து முதுகில் தொங்க விட்டுக் கொண்டு, மேசை மீது ஏறி நின்றபடி 'நான்தான் எம்.ஜி.ஆர்' எனக் கத்தியபடியே கரண்டியை வீசியிருக்கிறான்.
டீபாயின் மீதிருந்த கண்ணாடி பூச்சாடி சுக்கு நூறாய் சிதற -
கீழே இறங்குவதா வேண்டாமா என்கிற குழப்பத்தில் சிறுவனின் கோலி குண்டு கண்கள் மிரள...
ஜானகி பதறி விட்டாள்.
அடடா... இருடா... இறங்காதே... அப்படியே இரு... உன் செருப்பைக் கொண்டு வர்றேன்... போட்டுட்டு இறங்கு...
அவள் ஓடிப் போய் சிறுவனின் செருப்பை எடுத்து மாட்டிய வாறே வினுக்குட்டியைத் தேடுகிறாள்...
வினு...
….....
சுமதி... எங்கே வினுவைக் காணும்...
அதோ... சோபா இடுக்குல... கையில பிளேடு...
வினும்மா...
ஜானகி ஓடிப்போய் சிறுமியைத் தூக்கி முத்தமிட்டு கையிலிருந்த பிளேடை மிகச் சாமர்த்தியமாய் வாங்கி, அதற்குப் பதில் காகிதம் கத்தரிக்கும் பிளாஸ்டிக் கத்தியைக் கொடுத்து நிமிர்வதற்குள்...
ஓ... வந்தாச்சு... வந்தாச்சு...
ஜானகி நிமிர்ந்து பார்க்கிறாள்.
ராஜாராமன் தான்... முகம் முழுக்கப் புன்னகையும், கை நிறைய பழங்களும், பிஸ்கட்டுமாய்...
ஜானகியின் நெஞ்சம் ஒரு கணம் பெருமிதத்தில் விம்முகிறது...
கல்யாணத்தின் போது அவளது சிநேகிதிகள் சொன்னது நினைவுக்கு வருகிறது.
ஜானு... மாப்பிள்ளை எப்பவும் சஃபாரியிலத்தான் இருக்காரு... அந்த மூக்கு கண்ணாடியும், முழியும் அசல் அச்சு அப்படியே பாக்யராஜ் மாதிரி...
உம் கொடுத்து வச்சவடி நீ. ரொம்பவும் பூ மாதிரி மனசு உன் அவருக்கு... ஜானவாசக் காருல ஏர்றப்ப எவனோ ஒரு பொடியன் கார் கதவை படார்னு சாத்திட்டான் - பக்கத்துல உங்க அம்மா சீர் தட்டை ஒரு கையிலத் தூக்கிட்டு, இன்னொரு கையாலே காரைப் பிடிச்சிட்டு இருந்தாங்க போல... பொடிசு கதவைச் சாத்தினதுல விரல், அம்மியில வச்சு நசுக்கின இஞ்சி துண்டு மாதிரி ஆயிடுச்சு... ஒரே ரத்தம்... பதறிப் போயிட்டாரு மாப்பிள்ளை... 'டக்'குனு விரலை எடுத்து தன் வாயில வச்சிட்டாரு... ரத்தம் நிக்கற வரைக்கும் எடுக்கலையே... மாப்பிள்ளையின்னா இது மாப்பிள்ளை
ராஜாராமனை உள்ளே வரவிடவில்லை குழந்தைகள் - அவன் மீது ஏறி தொங்கினான் செந்தில்... சுமதியோ கழுத்தைக் கட்டிக் கொண்டு ஊஞ்சலாடுகிறாள்... சரவணன் தன் பலம் கொண்ட மட்டும் அவனைப் பிடித்து இழுக்க - ராஜா, அப்படியே உருண்டு புரண்டு அங்கேயே தரையில் உட்கார...
ஐயய்யே... என்னங்க இது... எழுந்திருங்க யாராவது பார்க்கப் போறாங்க...
பார்த்தா என்ன... என் வீடு யார் என்னை என்ன சொல்லக் கிடக்கு... செந்தில் - இந்தாடா நீ கேட்ட பந்து...
தாங்க்ஸ்...
ஆ... ஆ... வெறும் தாங்க்ஸ் தானா... முத்தம் தாடா...
சிறுவன், ராஜாராமனின் கழுத்தைச் சுற்றி அணைத்து முத்தமிட...
செந்தில்...
வாசல் பக்கம் குரல் கேட்க - ராஜாராமன் திரும்பிப் பார்க்கிறான்...
நைந்த நூல் புடைவையும், கலைந்த தலையுமாய் ஒரு பெண்... தயங்கியபடி...
செந்தில் இருக்கானா... அவங்க அப்பா ஷிப்டுக்கு கிளம்பப் போறாரு... பையனைக்கூப்பிடறாரு...
தன் கழுத்தில் சுற்றியிருந்த பிஞ்சுக் கரங்களை மெள்ளப் பிரிக்கிறான் ராஜாராமன்...
செந்தில்... உன் டாடி கூப்பிடறாராம்... போ... போ...
உம்... நீ இன்னிக்கு என்னோட கிரிக்கெட் விளையாடறேன்னு சொல்லியிருக்கே இல்லே...
கண்டிப்பா... அப்பாவோடப் போய் கொஞ்ச நேரம் பேசிட்டு வா கண்ணா...
செந்தில் மனசே இல்லாமல் நகர...
காலையில விளையாடப் போனவ - இன்னும் வரல்லே...ஏண்டி - வயசு பத்தாறது... லீவு விட்டாச்சுன்னா வீட்டுல தங்க கூடாதுன்னு எதாவது விரதமா... அடுத்த வீட்டுக்காரி காலே கதியின்னு கிடக்கியே... அப்படி என்னடி அங்கே கண்டுட்டே...
ஜானகி ஓடி வந்து, சுமதியின் முதுகில் தட்டி ரகசியமாய் கிசுகிசுத்தாள்...
சுமதி... உங்கம்மா ஆபீஸ்லேயிருந்து வந்தாச்சு ஓடு… ஓடு...
ச்சீ... போங்க ஆன்ட்டி... எப்பவும் இப்படித்தான். வந்ததும் வராததுமா 'ஓ'ன்னு கத்துவாங்க. எனக்குப் பிடிக்கவே இல்லே இந்த அம்மாவை... உம்... உம்...
சுமதி, 'சட்'டென உற்சாகமிழந்து, அழுவதற்கு சுருதி கூட்ட, ராஜாராமன் சிறுமியின் கன்னத்தில் தட்டுகிறான்...
சீச்சீ சுமதி, நீ நல்ல பொண்ணு இல்லையா... அம்மாவை அப்படி எல்லாம் சொல்லக்கூடாதும்மா. அவங்க ஆபீஸ்லே எத்தனை வேலையோ... என்ன பிரச்னையோ... போபோ... போ.. நாளைக்குப்பேசலாம்.
சரவணனுக்குமே அப்பொழுதான் வீட்டு ஞாபகமே வருகிறது...
ஆண்ட்டீ... நானும் போயிட்டு அப்புறமா வர்றேன்...
அவன் ஒடுவதையே பார்த்தபடி நின்ற ஜானகியின் தோளில் தட்டுகிறான் ராஜாராமன்.
ஜானு...
உம்...
வினுக்குட்டி என் மடியிலேயே தூங்கிடுச்சு... இதை வாங்கிட்டுப் போக ஆள் வருமா... இல்லே...
நான் அப்பவே வந்துட்டேன்யா... வினுவை அவங்கம்மா எடுத்துட்டு வரச் சொன்னாங்க...
வேலைக்காரச் சிறுமி ஒருத்தி வாசலருகே குரல் கொடுக்க ராஜா ஒரு பூச்செண்டைத் தூக்கிக் கொடுப்பது போல வினுவை அவளிடம் கொடுக்கிறான்.
ஜாக்கிரதை... தூக்கம் கலைஞ்சிடப் போகுது...
குழந்தையைக் தூக்கிக் கொண்டு அப்பெண் நகர...
பெரிய ஹாலில் நாலாபுறமும் இறைந்து கிடக்கும் பொருட்கள்... சற்று முன் நிலவிய சந்தோஷ சம்பவங்களுக்குச் சாட்சியாய்...
திடீரென ஜானகி விம்மியழுகினாள்...
அடடா... என்ன ஜானு இது, குழந்தை மாதிரி... இப்ப என்னடா ஆச்சு...
அவன், ஜானகியை அணைத்து, கண்ணீர் துடைத்து, கன்னத்தில் மிருதுவாய் முத்தமிட...
அவளோ பூனைக்குட்டி மாதிரி அவனது மார்பில் முகம் தேய்க்கிறாள்...
உக்கும்... நான் உள்ளே வரலாமா...
குரல் கேட்டு திடுக்கிட்டு விலகிய ராஜாராமன் வாசக் கதவில் கை வைத்தபடி நின்ற தன் நண்பன் ஆறுமுகத்தைப் பார்த்ததும் முகம் மலருகிறான்.
டேய் கரடி... எப்படா வந்தே...
ஆமா... பூஜைய படுக்கையறைக்குள்ள வச்சுக்காம நடு ஹால்லே வச்சுக்கிட்டு, என்னை கரடியின்னு சொல்லு...
ஜானகி விழிகளைத் துடைத்துக்கொண்டு தன்னைச் சமாளித்தபடி உள்ளே ஓடுகிறாள்.
இருங்க... காபி கொண்டு வர்றேன்...
அவசரமே இல்லை... மெதுவாக் கொண்டா தங்கச்சி. எப்படியும் இந்த வீட்டுக்கு வந்தா காபி குடிக்காம நான் நகர மாட்டேன்... உன் காபியாலேத்தான் என் எழுத்து வாழுது... எழுத்தாளன் அபயம் ஆறுமுகம் பிரபலமானதே உன் கை காபி குடிச்சுத்தான்...
ராஜாராமன், மனைவி பார்க்காத சமயத்தில் நண்பனின் முதுகில் அடிக்கிறான்.
போறும்டா ஐஸ். எப்படியும் காபி வாரும்...
ஆறுமுகம், ஜானகி தலை மறைந்ததும் மெள்ள ராஜாராமனிடம் கேட்கிறான்.
ஏண்டா, டாக்டர் என்ன சொன்னார்... ஜானகிக்கு குழந்தை பிறக்குமா - பிறக்காதா...
ராஜாராமன் உதட்டைப் பிதுக்குகிறான்...
எங்கே... அவ வயித்துல ஒரு புழு பூச்சி வந்துதுன்னா டாக்டருக்கு ஹார்ட் அட்டாக் வந்துரும் போல இருக்கு... அவ்வளவு ரிஸ்க்...
மேலும் ஏதோ சொல்ல வந்தவன் காபி கோப்பையுடன் ஜானகி வருவதைக் கண்டு வாயை இறுக மூடிக் கொள்கிறான்...
ஜானகி... ஒரு தேவதை... இந்த தேவதைக்கு ஒரு குட்டி தேவதை பிறக்காதபடி அப்படியென்ன சாபம்...
ராஜா பெருமூச்செறிகிறான்.
2
கன்னத்தில் கை வைத்தபடி வாசலிலேயே உட்கார்ந்திருக்கிறாள் மீனாட்சியம்மாள்.
தெரு முனையில் வரும் போதே - ஆறுமுகம் அவளை கவனித்து விட்டான்.
போச்சு... இன்னிக்கு ஆபீசுக்குப் போன மாதிரிதான்.
காலையில் வீட்டை விட்டுக் கிளம்பும்போதே அவன் மனைவி சொன்னாள்:
நேத்துலேயிருந்தே வீட்டுக்கார கிழவி மூட் சரியில்லே... பாவம், கிழவர் கிடந்து மாட்டிட்டுத் திண்டாடறாரு... நீங்க வேற அவ கண்ணுலப் பட்டு வைக்காதீங்க. ஏற்கனவே இங்கே நம்ம ரெண்டு பேருக்கும் எட்டுப் பொருத்தம். காலங்கார்த்தாலே கோதாவுல இறங்க நம்மாலே முடியாது சாமி...
ஆறுமுகம், மனைவி அபயத்தின் மூக்கு நுனியைச் செல்லமாய் திருகியபடி சொன்னான்.
நீ சொல்லி, எதையாவது நான் கேட்காம இருந்திருக்கேனா அபயம்...
ஆமா... இப்படித்தான் சொல்லுவீங்க... முந்தா நாள் ராத்திரி அடுப்பங்கரையில ஏதோ சத்தம் கேட்குது போய் பார்த்துட்டு வாங்கன்னு சொன்னேன்... அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க...
என்ன சொன்னேன்?