Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Kathavum... Innoru Kathavum!
Oru Kathavum... Innoru Kathavum!
Oru Kathavum... Innoru Kathavum!
Ebook141 pages53 minutes

Oru Kathavum... Innoru Kathavum!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஹைதராபாத்திலுள்ள ஒரு பெரிய கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஸாப்ட்வேர் எஞ்சினீயர் பதவிக்கான இண்டர்வியூ கடிதம் வர, ஈரோட்டிலிருந்து கோவையை நோக்கி பஸ்ஸில் புறப்படுகிறான் உதயகுமார். இடையில் பஸ் பிரேக் டவுன் ஆகி விட அவனால் கோவையிலிருந்து ஹைதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடிக்க முடியாமல் போகும் நிலை உருவாகின்றது.

அந்த ஆத்திரத்தில் நடு ரோட்டில் அமர்ந்து, மற்ற பயணிகளின் உதவியுடன் சாலை மறியல் செய்கிறான். அதன் காரணமாய் வேறொரு பஸ் வந்து அவர்களை அழைத்து செல்ல, தன்னால் அந்த ரயிலைப் பிடிக்க முடியாது என்பது உறுதியாகி விட்ட நிலையில், சோகமாய் அதே இடத்தில் அமர்கிறான். அவனை காரிலிருந்தவாறே கண் காணித்துக் கொண்டிருந்த பிரபல திரைப்பட இயக்குனர் இந்திரசேனன் அழைத்து, தனது அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறாயா? எனக் கேட்க, ஒப்புக் கொள்கிறான்.

ஹைதரபாத்தில் தொடர வேண்டிய அவன் வாழ்க்கை சென்னையில் தொடர்கிறது. உதயகுமார்...உதயகாந்த் ஆகிறான். முதல் படமே வெற்றி வாகை சூட வாய்ப்புக்கள் குவியத் தொடங்குகின்றது. வின்னிங் ஸ்டார் பட்டம் பெற்றவனை திரையுலகில் சில மாய பிம்பங்கள் தடுமாறச் செய்ய, தடம் மாறுகிறான்.

அடுத்து நிகழ்ந்தது என்ன?...வாசியுங்கள் நாவலை.

Languageதமிழ்
Release dateJun 1, 2021
ISBN6580130007102
Oru Kathavum... Innoru Kathavum!

Read more from Mukil Dinakaran

Related to Oru Kathavum... Innoru Kathavum!

Related ebooks

Reviews for Oru Kathavum... Innoru Kathavum!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Kathavum... Innoru Kathavum! - Mukil Dinakaran

    https://www.pustaka.co.in

    ஒரு கதவும்... இன்னொரு கதவும்!

    Oru Kathavum... Innoru Kathavum!

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் - 25

    அத்தியாயம் - 1

    வாசலில் பைக் ஹார்ன் சப்தம் கேட்டது.

    டேய்... உதயா!... உன் ஃபிரெண்டு சந்தோஷ் வந்துட்டான் போலிருக்குடா! சமையலறையிலிருந்து தாயார் லட்சுமி சொல்ல,

    ஆமாம்மா!... நானும் ரெடி... கிளம்ப வேண்டியதுதான்! என்றான் உதயகுமாரும் பதிலுக்கு கத்தலாய்.

    கொஞ்சம் பொறுடா!... டீ ஆத்திட்டிருக்கேன்... ஒரு வாய் குடிச்சிட்டுப் போகலாம்!... அவனையும் உள்ளார வரச் சொல்லுடா..அவனுக்கும் டீ இருக்கு! அவசர அவசரமாய் டீ போட்டாள் லட்சுமி.

    நீ சொல்லவே வேண்டாம்மா!... வாசலில் வந்து நிற்கும் போதே உள்ளார நீ டீ போடற வாசனையை மோப்பம் பிடிச்சிடுவான்!... .பாரு... பாரு... கூப்பிடாமலே வந்துட்டான் பாரு!... ஒரு சிங்கிள் டீக்காக எதையும் விட்டுக் கொடுப்பான் இந்த டீ ப்ரியன் என்றான் உதயகுமார் சிரித்துக் கொண்டே.,

    சிரித்தபடியே சமையலறைக்குள்ளிருந்து டீ ட்ரேயுடன் வந்த லட்சுமி இருவருக்கும் அதை நீட்ட,

    தாவி எடுத்தான் சந்தோஷ்.

    டேய்... டேய்... பறக்காதடா… பறக்காதடா... உனக்குத்தாண்டா அம்மா கொண்டு வந்திருக்காங்க! என்றான் உதயகுமார்.

    இருந்தாலும்? என்று கோணல் வாயுடன் சொல்லி விட்டுச் சிரித்தான் சந்தோஷ்.

    என்ன உதயா?... ட்ரெயின் டிக்கெட்டை எடுத்துக்கிட்டியா?... இண்டர்வியூக்குத் தேவையான சர்ட்டிபிகேட்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டியா?... லட்சுமி பொறுப்பாய்க் கேட்டாள்.

    ம்… எடுத்திட்டேம்மா! டீயை பருகியவாறே சொன்னான்.

    ஆமாம்டா... அப்புறம் அங்க போயி... அதை மறந்துட்டேன்... இதை மறந்துட்டேன்னு... கத்தாதே!... ஹைதராபாத் என்ன பூந்துறை பக்கத்திலேயா இருக்கு?..டூ வீலர்ல வந்து குடுத்துட்டு வர?... சொல்ல முடியாது நீ அதையும் டூ வீலர்ல கொண்டு வந்து குடுடான்னு சொன்னாலும் சொல்லுவே! சந்தோஷ் கலாய்த்தான்.

    இல்லடா… எடுக்க வேண்டியதையெல்லாம் நேத்திக்கே செக்-லிஸ்ட் போட்டு... எடுத்து வெச்சிட்டேன்!... என்ன நெனைச்சே என்னைப் பற்றி... .அய்யா இப்பெல்லாம் படு ஸ்மார்ட்... தெரியுமா? காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு சொன்னான் உதயகுமார்.

    என்னமோப்பா... இந்த வேலை உனக்கு கெடைச்சு... நாம பட்ட கஷ்டத்துக்கெல்லாம் ஒரு விடிவு வந்துட்டாப் போதும்! சொல்லும் போதே சோகமானாள் லட்சுமி.

    கவலைப்படாதீங்கம்மா உங்க மகன் அந்த ஹைதராபாத் கம்பெனி இண்டர்வியூல செலக்ட் ஆகி... கை நிறைய சம்பளம் வாங்கத்தான் போறாரு!... பொண்ணெல்லாம் பார்த்துத் தயாரா வைங்க!... வேலை கெடைச்சதும் உடனே ஒரு கால்கட்டு போட்டுடுவோம்!... இல்லேன்னா பயல் லவ்வுகிவ்வுன்னு இறங்கிடுவான் சந்தோஷ் எதையோ பூடகமாய்ச் சொல்லி விட்டு சத்தமாய்ச் சிரிக்க,

    பொண்ணுக்காப்பா பஞ்சம்?... இப்பவே நான்... நீன்னு போட்டி போட்டுட்டு வர்றாங்க!

    அதான் எனக்கு நல்லாத் தெரியுமே? கண்ணடித்துச் சொன்னான் சந்தோஷ்.

    சமீப காலமாய் உதயகுமாரும் மேகலாவும் லவ்விக் கொண்டிருப்பதைத்தான் அவன் சூசகமாய்க் கலாய்க்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட உதயகுமார், டேய்... நீ சும்மா இருக்க மாட்டியா? மிரட்டினான்.

    என்னடா ரெண்டு பேரும் எதையோ மறைக்கறீங்க போலத் தெரியுதே... என்ன?... என்ன?... உண்மையைச் சொல்லிடுங்க!... திடு... திப்னு ஒரு நாள் வந்து தலைல கல்லைத் தூக்கிப் போட்டுடாதீங்க என்று தாயார் சொல்ல,

    ம்மா... என்னம்மா நீ?... அவன்தான் என்னைக் கலாய்க்கறான்னா... நீயுமா? பரிதாபமாய் கேட்டான் உதயகுமார்.

    உண்மைதாண்டா அவன் சொல்றது?... இந்தக் காலத்துல பொண்ணுகளை வெச்சிருக்கறவங்க கூட பயப்படறதில்லை!... பசங்களை வெச்சிருக்கறவங்கதான் வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதிருக்கு? லட்சுமி அப்பாவியாய்ச் சொல்ல,

    அய்யோ… சாமி!... ஆளை வுடுங்கப்பா! என்று சொல்லியபடி பேக்கை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு கிளம்ப ஆயத்தமானான் உதயகுமார்.

    டேய்... டேய்... ஒரு நிமிஷம்!... என்று சொல்லி விட்டு உள் அறைக்குள் ஓடிப் போய் விபூதிப் பாக்கெட்டை எடுத்து வந்து, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து மகனின் நெற்றியில், கண்களை மூடிக் கொண்டு... கடவுளை வேண்டிக் கொண்டு, இட்டாள் லட்சுமி.

    இதற்குள் வாசலுக்குச் சென்று பைக்கை ஸ்டார்ட் செய்தான் சந்தோஷ்.

    இருவரையும் சுமந்து கொண்டு அந்த பைக் ஈரோடு பஸ் ஸடாண்டை நோக்கிப் பறந்தது.

    போகும் வழியில் சந்தோஷ் கேட்டான். அம்மா... ரொம்ப நம்பிக்கையோட இருக்கறதைப் பார்த்தா எனக்கு கொஞ்சம் பயமாவே இருக்குடா!... நீ சொல்லுடா... இந்த இண்டர்வியூல உனக்கு ஹோப் எந்த அளவுக்கு இருக்கு?

    ம்... ரொம்ப போட்டி இருக்கும்!... ஆனாலும்... எனக்கு நிச்சயம் கிடைச்சிடும்னு தோணுது! பைக் சத்தத்தை மீறிக் கத்திச் சொன்னான் உதயகுமார்.

    எவ்வளவு பர்ஸண்ட் ஹோப் இருக்கு உனக்கு?

    ம்ம்ம் ஒரு செவண்டி ஃபைவ் பர்ஸண்ட்... சொல்லலாம்

    ஓ.கே… பாசிட்டிவாவே நினைப்போம்!... சரி... கோயமுத்தூர்ல எத்தனை மணிக்கு ஹைதராபாத் ட்ரெயின்?

    ஈவினிங்... நாலு... பத்துக்கு

    தன் மணிக்கட்டை உயர்த்தி நேரம் பார்த்த சந்தோஷ் மணி இப்ப ஒண்ணுதான் ஆகுது!... நீ கோயமுத்தூர் போய்ச் சேர மூணு மணி ஆய்டுமா?

    ம்... அங்க காந்திபுரத்துல இறங்கி... டவுன் பஸ் ஏறித்தான் ரயிவே ஸ்டேஷன் வரணும்! உதயகுமார் சொல்ல,

    எதுக்கு டவுன் பஸ்ஸெல்லாம் ஏறி ரிஸ்க் எடுக்கறே?... பேசாம ஒரு ஆட்டோவிலோ... .கால் டாக்சிலோ போயிடு... அதான் பெஸ்ட்

    பார்க்கலாம்... அங்க போய் சிச்சுவேஷனுக்குத் தகுந்த மாதிரி ஏதோ ஒண்ணு பண்ணலாம்!

    அது செரி... நீ ஹைதராபாத் போற விஷய்த்தை மேகலா கிட்டே சொல்லிட்டியா? சந்தோஷ் மெல்லக் கேட்டான்.

    இல்லை

    அடப்பாவி!... ஏண்டா என் கிட்டே ஏன் சொல்லிட்டுப் போகலை?ன்னு உன்னைக் கோவிச்சுக்குவா!... அப்புறம் வ.உ.சி.பார்க்குல செடி மறைவுல உனக்குக் கிடைக்கற கிஸ்ஸெல்லாம் மிஸ்ஸாயிடுமே சொல்லி விட்டு சந்தோஷ் சிரிக்க,

    அதுக்கில்லைடா!... ஹைதராபாத் போறேன்ன்னு சொன்னா... எதுக்கு?ன்னு கேட்பா!

    கேட்டா சொல்லு... இண்டர்வியூக்குன்னு

    சரி... வெற்றிகரமா திரும்பி வர்ற மாதிரி இருந்தா... தைரியமா... கெத்தா சொல்லலாம்!... ஒருவேளை ஃபெயிலியராயிடுச்சுன்னா?... கேவலமாய் இருக்குமல்ல? சோகமாய்ச் சொன்னான் உதயகுமார்.

    ம்ம்ம்... அதுவும் செரிதான்! என்ற சந்தோஷ், ஓ.கே!..ஓ.கே!. அவளுக்குத் தெரியாமலே இருக்கட்டும்!... சக்சஸ் ஆகி திரும்பி வந்ததும் சொல்லிக்கோ... அப்ப கோவிச்சுக்க மாட்டா" என்றான்.

    ஈரோடு பஸ் ஸ்டாண்டிற்குள் இவர்களது பைக் நுழையும் போது ஒரு கோயமுத்தூர் பஸ் கிளம்பிக் கொண்டிருந்தது.

    கோயமுத்தூர்... கோயமுத்தூர் படியில் நின்று கூவிக் கூவி அழைத்தார் கண்டக்டர்.

    இடமிருக்கா சார்? உதயகுமார் கேட்க,

    "எத்தனை

    Enjoying the preview?
    Page 1 of 1