Aval Oru Haikku
()
About this ebook
சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.
தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.
சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.
Read more from Mukil Dinakaran
Thanga Thamarai Malare! Rating: 5 out of 5 stars5/5Saathan Sollai Thattu Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Neeyadi!... Unnil Naanadi! Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsVinnai Thodalam Unthan Siragu Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Varam! Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Porkaalam Rating: 0 out of 5 stars0 ratingsKanavaana Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsAnbai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsUyirulla Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Vanthal! Rating: 5 out of 5 stars5/5Anbil Ullathu Vazhkai Rating: 0 out of 5 stars0 ratingsOru Kathavum... Innoru Kathavum! Rating: 0 out of 5 stars0 ratingsPoochuduthe En Vaalibam! Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku... Un Uyir! Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Sumanthu Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Sudugindrathu Rating: 0 out of 5 stars0 ratingsUrangum Neruppu Rating: 0 out of 5 stars0 ratingsUyirgalidathu Anbu Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsNetru Vaarai Nee Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsSaami Potta Mudichu! Rating: 0 out of 5 stars0 ratingsAasaiye Alai Polea...! Rating: 0 out of 5 stars0 ratingsIni Ellam Sugame! Rating: 3 out of 5 stars3/5Irandaam Manaiviyagiya Naan... Rating: 0 out of 5 stars0 ratingsUn Nizhalum Naanthane? Rating: 0 out of 5 stars0 ratingsPoovizhi Vaasalile! Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 0 out of 5 stars0 ratingsVarum Kaalam… Vasantha Kaalam! Rating: 0 out of 5 stars0 ratingsUyiril Pooparikkum Devathaiyum Neethan Rating: 0 out of 5 stars0 ratingsEzhu Janmam Vendinean Rating: 0 out of 5 stars0 ratings
Related to Aval Oru Haikku
Related ebooks
En Vazhvile Deepam Yetru...! Rating: 0 out of 5 stars0 ratingsNagaratha Nizhal Ondru! Rating: 0 out of 5 stars0 ratingsபுதிய பாடல் பாடு Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Paadal Paadu Rating: 5 out of 5 stars5/5Mayakkam Enna... Undhan Mounam Enna... Rating: 0 out of 5 stars0 ratingsOru Ponmaanai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsLockdownum Appusamyum Rating: 0 out of 5 stars0 ratingsMayirpeeli Uravugal Rating: 0 out of 5 stars0 ratingsEnnarugil Nee Irunthal... Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Theekuchi Rating: 0 out of 5 stars0 ratingsYaaro Paarkirargal Rating: 5 out of 5 stars5/5Uchi Nila! Rating: 0 out of 5 stars0 ratingsNagaratha Nizhal Ondru! Rating: 0 out of 5 stars0 ratingsMullum Naane...! Malar Naane! Rating: 0 out of 5 stars0 ratingsEnna Satham Indha Neram? Rating: 4 out of 5 stars4/5Oru Mullai Poovin Mudivu Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Vanthaan Rengu Rating: 0 out of 5 stars0 ratingsThirakkathey Aabathu Rating: 5 out of 5 stars5/5Uchi Nila Rating: 0 out of 5 stars0 ratingsRosap Poovu Lesaai Saavu Rating: 5 out of 5 stars5/5Kaathirukka Neramillai Rating: 5 out of 5 stars5/5Kaatrai Kaithu Sei Rating: 5 out of 5 stars5/5Kaagitha Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsKrishna Kudil Rating: 0 out of 5 stars0 ratingsMohana Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsTholainthu Pona Thozhikku... Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku Oru Indian Rating: 0 out of 5 stars0 ratingsYetho Mogam Yetho Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaadhal Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsTheansindhum Pooncholai... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Aval Oru Haikku
0 ratings0 reviews
Book preview
Aval Oru Haikku - Mukil Dinakaran
http://www.pustaka.co.in
அவள் ஒரு ஹைக்கூ
Aval Oru Haikku
Author:
முகில் தினகரன்
Mukil Dinakaran
For more books
http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 1
நாகா
தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் நர்மதா நுழையும் முன் அனைத்து ஊழியர்களும் தங்கள் பார்வையை கம்ப்யூட்டர் மானிட்டரிலிருந்து விலக்கி வாசல் கதவுப் பக்கம் பதித்தனர். யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே
என்பது இந்த அலுவலகத்தைப் பொறுத்தவரையில் நர்மதா வருவாள் பின்னே... பர்ஃப்யூம் வாசனை வரும் முன்னே
என்று மாறிப் போயிருந்தது.
யப்பா... எங்கிருந்துதான் இந்த மாதிரி பர்ஃப்யூமெல்லாம் வாங்கறாங்களோ... மொத்த ஆபீஸையுமே கிறங்கடிக்குது வாசம்!... ம்ம்ம்ம்ம்
என்றான் அருண். அதைக் கேட்ட மோகனின் முகத்தில் எள்ளும், கொள்ளும் படார்... படார்
என வெடித்தன. டேய் படவா... அவ என் ஆள்!னு தெரிஞ்சும் என் கிட்டேயே அவளைப் பத்திக் கிண்டல் பண்றியே... உனக்கு இங்கிதமே கிடையாதா?
வாட்?... கிண்டலா?... நானா?... என்னப்பா?... ஜஸ்ட்... பாராட்டினேன்... அதுக்குப் போய்க் கோவிச்சுக்கறியே?
அருண் சரணடைந்தான்.
அடேய்... அருண் பையா!... அவ மத்த பொண்ணுக மாதிரி மரபுக்கவிதை இல்லை!... ஹைக்கூ!... ரெண்டே விழியசைவில் ரெண்டு பக்க மேட்டரைச் சொல்லி முடிச்சிடுவா?... இப்ப ஒரு ஸாம்பிள் அசைவைக் காட்டச் சொல்றேன்... பார்க்கறியா?
அய்யோ... வேண்டாம் தலைவா!... ஏற்கனவே ஒரு தடவை பப்ளிக்ல வெச்சு ஒரு ஜொள்ளனை அவ வாங்கின வாங்கு... இன்னிக்கும் என் நெஞ்சுல ஒட்டிக்கிட்டிருக்கு!... ஹூம்... பார்த்த எனக்கே அப்படியிருக்குன்னா... அந்த ஜொள்ளனுக்கு எப்படி இருந்திருக்கும்...?... அதனால... நான் பேசியதையெல்லாம் டிலீட் பண்ணிடு
என்றான் அருண்.
அப்போது அவர்களைக் கடந்து போன நர்மதா, ஒரு வினாடி நின்று மோகனைப் பார்த்து மோகனமாய்ப் புன்னகைத்து, ஒரு ஹைக்கூ சொல்லட்டுமா?
என்று கேட்டாள்.
ம்... சொல்லு நர்மதா?
ஆவலோடு கேட்டான் மோகன்.
"இதயத்துக்கு இதயமே
பண்டமாற்று!
விலையில்லையே காதலுக்கு!... எப்படி?
சூப்பர் நர்மதா?... எப்படி முடிகிறது உன்னால்?
மோகன் கேட்க,
எல்லாம் நிகழ்கிறது... உன்னால்!
என்று கண்ணடித்துச் சொல்லி விட்டு விடு... விடு
வென்று அவள் தன் செக்ஷனுக்குள் சென்று விட, அருண் கேட்டான், என்னப்பா நடக்குது இங்கே?
பண்டமாற்றம்
என்று சொல்லி விட்டு மோகன் சிரிக்க, அவனை நோக்கி வேக வேகமாய் வந்தான் ஆபீஸ் பாய் முருகன், மோகன் சார்... உங்களை எம்.டி.கூப்பிடறார்
என்றான்.
மோகன் குழப்பத்தோடு எழ, போ... போ... திட்டுப் பரிமாற்றம் நடத்தத்தான் எம்.டி.கூப்பிடறார்!
என்றான் அருண் ஒருவித குரூர சந்தோஷத்தோடு. அவனை கடுப்பாய்ப் பார்த்த மோகன், இரு... வந்து வெச்சுக்கறேன் உன்னைய
சொல்லி விட்டு எம்.டி.ரூமை நோக்கி நடந்தான்.
மே ஐ கம் இன் சார்?
நாசூக்காய் கதவைத் தள்ளியவாறே மோகன் கேட்க,
ராஸ்கல்... உன்னைய வரச் சொன்னதே நாந்தான்?... அப்புறமென்ன பெரிய இவனாட்டம்
மே ஐ கம் இன் சார்? வர வேண்டியதுதானே?
என்று ஜாலியாய்ச் சொன்ன சங்கர் பெருமாள் அந்த நாகா
தொலைக்காட்சியின் முதலாளியாய் இருந்த போதிலும் அங்கு பணியாற்றும் அனைவருடனும் ஒரு நட்பு ரீதியில்தான் பழகுவார். முதலாளி... தொழிலாளி
ங்கற வித்தியாசத்தை பேச்சிலும்... செயல் முறையிலும் காட்டுவது உற்பத்திக் கம்பெனிகளுக்கு வேண்டுமானால் நல்ல பாலிஸியாய் இருக்கலாம்!... ஆனா நம்மை மாதிரி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அது ஒத்து வராத பாலிஸி!... ஏன்னா இங்க கிரியேட்டிவிட்டிதான் முக்கியம்!... ஸோ... எல்லோரோடும் ஒரு தோழமை ரிலேஷன்ஷிப் இருந்தாத்தான் சக்சஸ்ஃபுல் சிந்தனைகள் உருவாகும்!... புதுப் புது ஐடியாக்கள் தோன்றும்" என்பார்.
மேஜையருகே வந்த மோகனை, உட்கார்ப்பா
என்று சொல்லி இருக்கையை அவர் காட்ட, யோசனையுடன் உட்கார்ந்தான் மோகன்.
அப்புறம்... ராத்திரி நல்லாத் தூங்கினியா?... கனவு வந்திச்சா?... யார் வந்தாங்க கனவுல?... போன வாரம் போய் நேர் காணல் எடுத்திட்டு வந்தியே... கவர்ச்சிப் புயல் கங்கனாஸ்ரீ... அவ வந்தாளா?
பொதுவாகவே ஒரு சிறிய டிஸ்கஷனுக்கு இரண்டு பேரை அழைத்திருந்தால், அதில் ஒருவர் மட்டும் வந்திருந்தால் அந்த இன்னொருவர் வரும் வரை இது போல் எதையாவது பேசி முதலில் வந்தவரின் மூடை ஜாலியாக்குவார் எம்.டி.சங்கர் பெருமாள்.
அடுத்து யார் சார் வரணும் டிஸ்கஷனுக்கு?
மோகனே கேட்டான்.
நர்மதா வரணும்!... அவ வந்ததும் மெயின் டிஸ்கஷனுக்குப் போவோம்
என்ற எம்.டி., ஆமாம்... நர்மதாவுடனான உன்னோட லவ் எந்த லெவல்ல இருக்கு?
கேட்டார்.
அது... வந்து...
என்று இழுத்த மோகன், அப்படியே போய்க்கிட்டிருக்கு சார்
என்றான் சுவாரஸியமே இல்லாமல்.
அடப் போப்பா!... நீ என்ன கிராமத்துக் காதலனா? இப்படி சைவக் காதல் பண்ணிட்டிருக்க?... ப்யூர் சிட்டிபாய்... அதிலும் லீடிங் டி.வி.சேனல்ல புரோக்ராம் எக்ஸிக்யூடிவ்... இன்னேரம் எல்லாம் முடிஞ்சுது சார்
ன்னு நீ சொல்லியிருக்கணும்!’ சொல்லி விட்டு சங்கர் பெருமாள் கண்ணில் நீர் வரச் சிரிக்க,
சார்... மெதுவா பேசுங்க சார்... நர்மதா வந்திடப் போறா
பயந்தான் மோகன்.
வந்தா வரட்டும்... என்ன பயம்?... அவ கிட்டேயே நான் இதைக் கேட்பேன் தெரியுமா?
என்றார் சங்கர் பெருமாள்.
அப்போது பர்ஃப்யூம் வாசனையோடு அறைக்கதவு திறக்கப்பட, நர்மதா உள்ளே வந்தாள். மோகனின் பக்கத்து இருக்கையில் அவள் அமர்ந்ததும், என்ன மோகன்... இப்ப நான் உன் கிட்ட கேட்டதை நர்மதாகிட்டேயும் கேட்டுடவா?
அவன் தர்ம சங்கடமாய் நெளிய, சரி... சரி... பயப்படாத... நான் கேட்கலை!
என்று சிரித்தபடி சொன்னவர், சட்டென்று சீரியஸாகி, அப்ப நாம மெயின் டிஸ்கஷனுக்குப் போகலாமா?
கேட்டார்.
ஓ.கே.சார்
என்றனர் அவர்கள் இருவரும் ஒரே குரலில்.
அடுத்த மாசம் பதினாலாம் தேதி என்ன தெரியுமா?
எம்.டி.கேட்க,
காதலர் தினம் சார்
என்றான் மோகன் உடனே,
அந்தக் காதலர் தினத்துக்கு ஒரு புதிய... வித்தியாசமான... யூஸ்ஃபுல் காஸெப்டோட ஒரு புரோக்ராம் பண்ணனும்!... ஏதாவது ஐடியா யோசிச்சு வெச்சிருக்கீங்களா?
தலையைச் சொறிந்த மோகன், இதுவரைக்கும் எதையும் யோசிக்கலை சார்!... இப்ப நீங்க சொல்லியிருக்கீங்க... இனிமேல்தான் யோசிக்கணும் சார்
என்றான். நர்மதாவைப் பார்த்த எம்.டி., என்னம்மா... நீ கைவசம் ஏதாவது ஐடியா வெச்சிருக்கியா?
கேட்டார்.
ஒரு அரை மணி நேரம் டைம் குடுங்க சார்... நாங்க ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணி ஒரு நல்ல கான்ஸெப்டோட வர்றோம்
நம்பிக்கையோடு சொன்னாள் நர்மதா.
"ஓ.கே... நான் உங்களுக்கு ஒரு மணி நேரம் டைம் தர்றேன்!... போய் யோசிச்சு உருப்படியான ஐடியாவோட வாங்க!... அப்புறம்... நாம் இப்ப பேசியது... இனிமேல் பேசப் போறது... எல்லாமே பக்கா