Mudhal Theekuchi
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Uchi Nila Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsOru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Mudhal Theekuchi
Related ebooks
Ini Min Mini Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsKraim Dot Kaam Rating: 0 out of 5 stars0 ratingsOru Ponmaanaith Thedi Rating: 0 out of 5 stars0 ratingsKuttram Kuttrame Rating: 0 out of 5 stars0 ratingsNovember Nila! Rating: 5 out of 5 stars5/5January Nilave! Rating: 0 out of 5 stars0 ratingsSathamillamal Oru Satham Rating: 0 out of 5 stars0 ratingsOru Bull Bull Paravai Rating: 0 out of 5 stars0 ratingsIni... Ragini Rating: 0 out of 5 stars0 ratingsKaikuttaikkul Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsRosap Poovu Lesaai Saavu Rating: 5 out of 5 stars5/5Goodnight Kurotham Rating: 5 out of 5 stars5/5Urainthu Pona Unmai Rating: 0 out of 5 stars0 ratingsVaanavil Kutram Rating: 5 out of 5 stars5/5Miss Bharatha Maathaa Rating: 5 out of 5 stars5/5Neeya? Naana? Rating: 0 out of 5 stars0 ratingsHydrogen Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsAnu Oru Aacharyam! Rating: 0 out of 5 stars0 ratingsVaanaville Vaanamalla Rating: 0 out of 5 stars0 ratingsArunthathiyum AaruThottakkalum Rating: 0 out of 5 stars0 ratingsPanivanbudan kettu Kolgiren Rating: 5 out of 5 stars5/5Ratthathil Oru Raathiri Rating: 0 out of 5 stars0 ratingsUyir Thirudargal Rating: 0 out of 5 stars0 ratingsSendra Idamellam Irappu and Kannukkul Oru Mul Rating: 0 out of 5 stars0 ratingsKodi Kodi Minnalakal Rating: 0 out of 5 stars0 ratings9-vathu Thisai Rating: 4 out of 5 stars4/5Nilavai Kalavu Sei Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Kutram Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Killer Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Mudhal Theekuchi
0 ratings0 reviews
Book preview
Mudhal Theekuchi - Rajeshkumar
23
1
"குட்மார்னிங் டாடி...!"
வலது காதுக்குப் பக்கத்தில் வெல்வெட் மிருதுவோடு குரல் கேட்டு- கண் விழித்தார் சரவணப் பெருமாள். ஹைகோர்ட் நீதிபதி.
மகள் அஜந்தாவின் புன்னகை முகம் பார்வைக்கு கிடைத்தது. மகளின் கன்னத்தை மெதுவாய்த் தட்டி குட்மார்னிங்
சொல்லியபடி எழுந்து உட்கார்ந்தார்.
ஜன்னலுக்கு வெளியே இன்னமும் வைகறை இருட்டு தெரிந்தது.
மணி என்னம்மா...?
அஞ்சரை...
உங்கம்மா எந்திரிச்சுட்டாளா...?
அஞ்சு மணிக்கே...
உன்னோட அண்ணன்... கிஷோர்...?
நாலரை மணிக்கே எந்திரிச்சு... ஜாக்கிங் போயாச்சு.
சொன்ன அஜந்தா அப்பாவின் போர்வையை மடித்து வைத்துக் கொண்டே கேட்டாள்.
ராத்திரி எத்தனை மணிக்கப்பா படுத்தீங்க...?
ஒரு மணி ஆயிருச்சும்மா.
ஜட்ஜ்மெண்ட்டை எழுதி முடிச்சுட்டீங்களாப்பா?
ம்... முடிச்சாச்சு...
தீர்ப்பு என்னப்பா...
சரவணப்பெருமாள் சிரித்தார். காலையில பதினோரு மணிக்குத் தெரியும்...
அப்பா... ப்ளீஸ்...! எனக்கு மட்டும்.. சொல்லுங்கப்பா. ஏன்னா கொலை செய்யப்பட்டது என்னோட காலேஜைச் சேர்ந்த பொண்ணு.
தீர்ப்பு என்னவாயிருக்கும்ன்னு நினைக்கிற?
அஜந்தா பேச வாயைத் திறக்கும் முன்பே-சரவணப் பெருமாளின் மனைவி அமிர்தம் கையில் காப்பி டம்ளரோடு படபடத்தபடி வந்தாள்.
தீர்ப்பு என்னவாயிருக்கும்ன்னு இன்னிக்குப் பிறந்த குழந்தை கூட சொல்லுமே? பதினெட்டு வயசுப் பொண்ணை மூணு பணக்கார வீட்டு பசங்க கார்ல கடத்திட்டு போய் கதற கதற கற்பழிச்சுட்டு உண்மை வெளியே வராமே இருக்கிறதுக்காக அந்தப் பொண்ணை கண்டா துண்டமா வெட்டி கூவத்துல எறிஞ்சிருக்காங்க. இந்த உலக மகா அநியாயத்துக்கு மூணு பேர்க்கும் தூக்கு தண்டனைதான் தரணும்... அதைத்தானே கொடுத்திருக்கீங்க?
சரவணப் பெருமாள் சிரித்தார்.
அது சஸ்பென்ஸ்...! பதினோரு மணிக்கு முன்னாடி ஜட்ஜ்மெண்ட்டை வெளியே யார்க்கும் சொல்லக் கூடாது.
அந்த மூணு பாவிகளுக்கும் பரிதாபப்பட்டு சின்ன வயசாச்சேன்னு ஆயுள் தண்டனை கொடுத்துடாதீங்க... மூணு பேரையும் ஒரு நேரத்துல தூக்குல போடணும்...
சரவணப் பெருமாள் காப்பியைக் குடித்து விட்டு எழுந்தார். ஹீட்டர் போட்டியா அமிர்தம்...?
போட்டாச்சு...
நான் போய் குளிச்சுட்டு வந்துடறேன். ஜட்ஜ்மெண்ட் காப்பியை எடுத்துட்டு மொதல்ல காபாலீஸ்வரர் கோயிலுக்கு போய்ட்டு வந்துடறேன். ஜட்ஜ்மெண்ட் தர்றது நானில்லை. அந்த லோகநாயகன்.
உங்க கூட கோயிலுக்கு நானும் வர்றேன்.
என்னது? நீயும் வர்றியா?
ஆமா...
அஜந்தா வீட்ல தனியா இருப்பாளே...?
நீங்க குளிச்சு ரெடியாகறதுக்குள்ளே ஜாக்கிங் போயிருக்கிற கிஷோர் வீட்டுக்கு வந்துட மாட்டானா...?
அவன் அப்படியே டென்னிஸ் கோர்ட்டுக்கு போயிட்டான்னா...?
இன்னிக்கு போக மாட்டான்.
எப்படி சொல்றே...?
சீக்கிரமா வந்துடச் சொல்லி நான்தான் சொல்லி விட்டிருக்கேன்...
தாய் சொல்லைத் தட்டாத பிள்ளைன்னு உனக்கு நினைப்பு. அவன் டென்னிஸ் கோர்ட்டுக்கு போய்ட்டு வழக்கமா வர்ற நேரமான எட்டு மணிக்குத்தான் வருவான். உதவாக்கரை...
காலங்கார்த்தால என் பையனைத் திட்டாதீங்க.
திட்டாமே அவனை என்ன பண்றது... கம்ப்யூட்டர் டெக்னாலஜி கோர்ஸை முடிச்ச கையோடு எம்.சி.ஏ. பண்ணுடான்னு சொன்னேன். கேட்டானா... எவனோ ஒரு ஃப்ரண்ட் கூட சேர்ந்துட்டு கம்ப்யூட்டர் கோச்சிங் சென்டரை நடத்தறதா சொல்லிகிட்டு ஊரைச் சுத்திட்டு இருக்கான். காலையில டென்னிஸ் விளையாட வேண்டியது , மத்தியானம் கிரிக்கெட் விளையாட வேண்டியது. இப்படியே நாள் போய்ட்டிருக்கு...
சரி... சரி....! நீங்க போய் மொதல்ல குளிச்சுட்டு வாங்க.. அர்ச்சனையை அப்புறமா வெச்சுக்கலாம்...
சரவணப் பெருமாள் குளியலறைக்குள் நுழைந்தார். அமிர்தம் சமையலறையை நோக்கிப் போய்விட அஜந்தா முன்பக்க வரவேற்பறைக்கு வந்தாள்.
க்ரில் கம்பிகளின் வழியாக அன்றைய தின பேப்பர் சூடாய் கீழே விழுந்திருந்தது.
எடுத்துப் பிரித்தாள்.
முதல் பக்கத்திலேயே தலைப்புச் செய்திக்கு கீழே அந்த செய்தி பிரசுரமாகியிருந்தது.
கல்லூரி மாணவியைக் கற்பழித்து
கொலை செய்த பரபரப்பான வழக்கில்
இன்று தீர்ப்பு
சென்னை, ஜூன் 27
சென்ற வருடம் கல்லூரி மாணவியான தமயந்தி என்கிற பதினெட்டு வயது பெண்ணை மூன்று பணக்கார இளைஞர்கள் சுரேஷ்(24 ), கமலகுமார்(23), அல்போன்ஸ் (24) ஆகியோர் காரில் கடத்திப் போய் கற்பழித்து கொலை செய்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படுகிறது. தமிழ்நாட்டையே உலுக்கிய இந்தக் கொலை முதலில் செஷன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு பின் உச்ச நிதிமன்றத்துக்கு வந்தது. பத்து நாட்களுக்கு முன்னால் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை 27 -ம் தேதிக்கு நீதிபதி சரவணப்பெருமாள் தள்ளி வைத்தார். மேலும்....
டெலிபோன் அடிக்கவே—
பேப்பரை அப்படியே போட்டு விட்டு வேகமாக போய் ரிஸீவரை எடுத்தாள்.
ஹலோ...
பேசறது யாரு... அஜந்தாவா...?
ஒரு ஆண் குரல் கேட்டது.
ஆமா... நீங்க யாரு...?
என்னம்மா அஜந்தா... என்னோட குரலைக் கூட மறந்துட்டியா...? நான் அனந்தகிருஷ்ணன் அங்கிள் ரிடையர்ட் ஜட்ஜ்.
ஓ ... நீங்களா... குட்மார்னிங் அங்கிள்...
"குட்மார்னிங் ... குட்மார்னிங்...! அப்பா எழுந்துடாராம்மா...?
எழுந்துட்டார். குளிச்சுட்டிருக்கார் ...
அம்மா இருக்காங்களா?
இருக்காங்க...
கூப்பிடும்மா...
அஜந்தா ரிஸீவரின் வாயைப் பொத்திக் கொண்டு சமையலறையைப் பார்த்து குரல் கொடுத்தாள்.
அம்மா...! அனந்தகிருஷ்ணன் அங்கிள் போன்ல இருக்கார். உன்கூட பேசணுமாம்...
அமிர்தம் ஈரக் கையை சேலைத் தலைப்பால் ஒற்றி கொண்டே வேக வேகமாய் வந்து ரிஸீவரை வாங்கினாள்.
நமஸ்காரம்... நான் அமிர்தம் பேசறேன்... அவர் குளியலறையில இருக்கார்...
பரவாயில்லை... விஷயத்தை உங்ககிட்ட சொன்ன என்ன... அவர்கிட்ட சொன்ன என்ன...?
என்ன விஷயம் சொல்லுங்க...?
"அந்த குன்னுர் எஸ்டேட் பையன் இன்னிக்கு ஜெர்மனியிலிருந்து வர்றான். மெட்ராஸ்ல ரெண்டு நாள் தங்கிட்டு அப்புறம் குன்னூர் போறான். அவன் இங்கே தங்கியிருக்கிற ரெண்டு நாள்ல ஏதாவது ஒரு நாள் அஜந்தாவைப் பார்க்க ஏற்பாடு பண்ணிடலாமா... நான் வாக்கிங்