Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Urangum Neruppu
Urangum Neruppu
Urangum Neruppu
Ebook128 pages44 minutes

Urangum Neruppu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பத்து வயதில் அந்தப் பண்ணைன் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த மாரி, பெரிய பண்ணையாரின் அன்பில் வளர்ந்து, அவருக்குப் பின்னால் சின்னப் பண்ணையின் பராமரிப்பில் வளர்ந்து, அந்தப் பண்ணைப் பணியாளர்களிலேயே முக்கியஸ்தனாய் ஆனான். சின்னப் பண்ணை தன் செலவிலேயே அவனுக்கு ஆர்ப்பாட்டமாய் திருமணமும் செய்து வைத்தார்.

இதற்கிடையில் மாரியின் கட்டுடழில் மயங்கிய சின்னப்பண்ணையின் மனை நீலாயதாட்சியின் தங்கை விசாலாட்சி மாரியையே வட்டமிடுகிறாள். ஒரு நாள் அவள் பலவந்தமாய் மாரியை முத்தமிட்டு விட, அதை வெளியில் சொல்ல வேண்டாமென்று மாரியிடம் சத்தியம் வாங்கிகிறாள் அக்கா.

ஒரு நாள் பண்ணை வேலையாய் மாரி வெளியூர் சென்றிருந்த நேரத்தில் யாரோ ஒரு மர்ம மனிதன் மாரியின் மனைவியைக் கெடுத்து விட, அவள் தூக்கில் தொங்குகிறாள்.

அது தன் கணவன்தான் என்பதைக் கண்டுபிடித்த சின்னப் பண்ணையின் மனைவி, அதற்கும் மாரியிடம் வெளியில் சொல்லக் கூடாதென்று சத்தியம் வாங்குகிறாள்.

பணியாளாய் இருந்த மாரி அந்தப் பண்ணை வீட்டின் பண்ணைக்காரன் ஆகிறான்.

எப்படி?...நாவலை வாசியுங்கள்.

Languageதமிழ்
Release dateJun 1, 2021
ISBN6580130007099
Urangum Neruppu

Read more from Mukil Dinakaran

Related to Urangum Neruppu

Related ebooks

Reviews for Urangum Neruppu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Urangum Neruppu - Mukil Dinakaran

    https://www.pustaka.co.in

    உறங்கும் நெருப்பு

    Urangum Neruppu

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 1

    குடிசைக்கு வெளியே கயிற்றுக் கட்டிலில் மல்லாந்து படுத்து, இருட்டு வானில் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை பிரமிப்புடன் பார்த்தபடி கிடந்தான் மாரி. ஆண்டாண்டு காலமாய் ஆச்சரியம் காட்டிக் கொண்டிருக்கும் விண்ணகத்தின் விந்தைகள், படிக்காத அந்தப் பாமரனுக்கு பெரும் பிரமிப்பை ஏற்படுத்துவதில் வியப்பொன்றுமில்லையே!.

    வேலிக்குப் பின்புறமிருந்து ஏதோ சத்தம் வர, காதுகளைத் தீட்டிக் கொண்டான் மாரி. எவனோ சைக்கிளை ஸ்டாண்ட் போடுற மாதிரி சத்தம் கேட்குது!...களவாணிப் பயலா இருப்பானோ? நினைத்துக் கொண்ட மாரி, தலைமாட்டில் இருந்த அரிவாளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

    சென்ற வாரம் பக்கத்து கிராமத்தில் புகுந்து நாலைந்து வீடுகளில் கை வரிசையைக் காட்டிச் சென்ற முகமூடிக் கொள்ளையர்கள் மாரியின் ஞாபகத்தில் வந்து போக, உஷாரானான்.

    இப்போது யாரோ நடந்து வந்து, வேலியின் கீற்றுத் தடுப்பை நகர்த்துவது தெளிவாகத் தெரிய, விருட் டென எழுந்தான் மாரி. அவன் கை அனிச்சையாய் அரிவாளைத் தூக்கிக் கொண்டது. களவாணிப் பயபுள்ள...என்ன ஒரு எகத்தாளமிருந்த இப்படி முன்னிரவுக்கே வந்து... அதுவும் முன் வாசல் வழியே நுழைவான்!......இன்னிக்கு அவனைப் பொலி போட்டுட்டுத்தான் மறு வேலை!

    மெல்ல எழுந்து, வேலியின் உட்புறமாய்க் குனிந்தபடி நடந்து, கீற்றுத் தடுப்பை நெருங்கிய மாரி, உள்ளே வந்தவனை உற்று நோக்கி அடையாளம் புரிந்து கொண்டதும், அட...செம்மலை!... என்றான் சிரிப்புடன்.

    ஏலே செம்மலை!...என்னலே?...இந்த நேரத்துல களவாணிப் பயபுள்ள கணக்கா நொழையறே?...இன்னேரம் என்னோட அருவா...செகப்புப் பூசியிருக்கும்லே! சொல்லி விட்டுச் சிரித்தான்.

    அது செரி!...தகவல் கொண்டு வந்திருக்கேன்! என்று அவன் சொன்னதும், துணுக்குற்றான் மாரி.

    ஏனென்றால் கிராமங்களில் தகவல் கொண்டு வருதல் என்பது சாவு குறித்த செய்தியினை எல்லோருக்கும் அறிவிக்க வருவதாகும்.

    என்னலே?..யாருலே?...சீக்கிரம் சொல்லித் தொலைலே!...அடி வயித்துல எரிச்சல் தோணுதுலே! மாரி நடுங்கும் குரலில் சொன்னான்.

    நம்ம சின்னப்பண்ணை பூபதி ராஜா....காலமாயிட்டாரு மாரி! சற்றுப் பெரிய குரலில் சொன்னான் செம்மலை.

    அடக் கடவுளே!... உண்மையான அங்கலாய்ப்பில் ஓங்கிக் கத்தினான் மாரி.

    அவனால் அந்தச் செய்தியை எடுத்த எடுப்பில் நம்பவே முடியவில்லை. என்னலே சொல்லுறே?...என்னால இதை ஏத்துக்கவே முடியலைலே...மதியம் நான் பார்த்துப் பேசிட்டுத்தாம்லே வர்றேன்!...மனுஷன் நல்லாத்தான்லே இருந்தாரு?

    என்ன பண்றது பொசுக்குன்னு மாரடைச்சுப் போச்சு!...சுவாசம் நின்னுப் போச்சு!

    த்சொ!...த்சொ!...என்னலே இது அக்கிரமமாய் இருக்கு! ஆற்ற முடியாமல் சொன்னான் மாரி.

    அவ்வளவுதான்லே மனுஷ வாழ்க்கை!...அதுக்குள்ளார எத்தனை கள்ளங் கபடு...சூது வாது...தகிடு தத்தம்...திருகு தாளம்...வெட்டுக் குத்து...ச்சை!...புத்தி கெட்டுக் கிடக்கான் மனுஷன் என்று தத்துவம் பொழிந்து விட்டு, சரி!...கெளம்பறேன் மாரி!... இன்னும் தெக்கால மேட்டுக்கு...தண்ணீர்பந்தலுக்கெல்லாம் போவணும்!...தகவல் தர! அந்த செம்மலை நகர,

    அட செம்மலை...இரு நானும் உன் கூடவே வர்றேன்!...தகவல் தெரிஞ்ச பொறவு...நான் இங்க படுத்தா உறங்க முடியும்?...அங்க வந்தா ஆயிரத்தெட்டு வேலை பார்க்கலாமே? மாரி கிளம்பத் தயாரானான்.

    ம்...அதுவும் செரிதான்!...ரெண்டு பேருமாவே போயி தெக்கால மேடு தங்கப்பழம் அய்யா வீட்டிலேயும், தண்ணீர்ப் பந்தல் அருணகிரி அய்யா வீட்டிலேயும் தகவல் சொல்லிட்டு...அங்கிருந்து அப்படியே சாவு விட்டுக்குப் போயிடுவோம்! செம்மலை தன் ஒப்புதலைத் தர,

    அடுத்த பத்தாவது நிமிடம், இரண்டு சைக்கிள்களும், அங்கிருந்து தெக்கால மேடு நோக்கி உருண்டன.

    வழியெங்கும் சின்னப் பண்ணையைப் பற்றிப் பிரலாபித்துக் கொண்டே வந்தான் மாரி.

    அந்த மனுஷனை மொத மொத நான் பார்த்தப்ப எனக்கு வயசு நாலோ...அஞ்சோ...தான் இருக்கும்!...எங்கப்பா கொண்டு வந்து பெரிய பண்ணையாருக்கு எதிர்ல என்னைய நிறுத்தி, இந்தப் பயலோட துடுக்குத் தனத்துக்கு ஒரு எல்லையே இல்லாமப் போயிடுச்சுங்கய்யா!....படிக்கவும் போக மாட்டேங்குது!...மாடோட்டவும் போக மாட்டேங்குது!...அதனால இவனுக்கு இங்க உங்க பண்ணைல ஒரு வேலை போட்டுக் குடுத்து உங்க கண் பார்வையிலேயே வெச்சுக்கங்க அய்யா!....ஏன்னா இவன் பயப்படறதே உங்க ஒருத்தருக்குத்தான்!... ன்னு சொல்லிப் பண்ணைல விட்டாரு!...அப்ப...இந்த சின்னப்பண்ணை பெரிய பண்ணையாருக்குப் பக்கத்துல நின்னுட்டிருந்தாரு!...அவருக்கு அப்ப வயசு...ஒரு பத்துப் பனிரெண்டு இருக்கும்!

    ஓ...சின்னப்பண்ணை உன்னைய விட மூத்தவரா? செம்மலை கேட்டார்.

    ம்...ஏழெட்டு வருஷம் மூத்தவராயிருப்பார்!ன்னு நினைக்கறேன்!

    குறுக்கே வந்த ரயில்வே தண்டவாளத்திற்காக சைக்கிளை விட்டு இறங்கிய இருவரும் சைக்கிளை கையில் தூக்கிக் கொண்டு, தண்டவாளத்தை தாண்டி மறு பக்கம் சென்றனர்.

    செம்மலை சற்று வேகமாய்ச் செல்ல,

    ஏலே...செம்மல...கொஞ்சம் மெதுவாப் போலே!...அதா அந்தப் புளிய மரத்துலதான் பேய் இருக்கறதா ஊருக்குள்ளார சொல்லிக்கறாங்க!..அதனாலஅந்த எடத்துல ரெண்டு பேரும் சேர்ந்தே போவலாம்லே! மாரி நடுங்கும் குரலில் சொல்ல,

    ஹா...ஹா...ஹா.. என நால் திசையும் எதிரொலிக்க சிரித்தான் அந்த செம்மலை.

    பேயாம்...பிசாசாம்!...அறுபது வயசுக்கும் மேலான ஆளு...இப்படி சின்னப் பசங்களாட்டம் நடுங்கிச் சாவறியே!....நம்மதான்லே பேயி...பிசாசு...எல்லாம்

    அவன் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவனாய், அவனை நெருங்கி அவனுடன் சேர்ந்தே பயணித்தான் மாரி.

    தெக்கால மேட்டை அடைந்ததும், நாய்களின் கூட்டுக் குரைப்பு அவர்களை வரவேற்றது.

    அடக் கெரகமே..நாய்க ஏழெட்டு இருக்கும் போலிருக்கே!...வரும் போது ஒரு கழியையாவது எடுத்திட்டு வந்திருக்கலாம்!... என்றான் செம்மலை.

    எப்படியோ இருட்டில் தட்டுத் தடுமாறி, தங்கப்பழம் அய்யா வீட்டையடைந்து, கதவைத் தட்ட,

    தங்கப்பழம் அய்யா வரும் போதே நீண்ட

    Enjoying the preview?
    Page 1 of 1