Saami Potta Mudichu!
()
About this ebook
வீரபத்ரன் என்னும் சாமியாடிதான் அந்த ஊரையே தன் கைக்குள் வைத்திருந்தான். ஊரில் நிகழும் திருவிழா உட்பட எல்லா நிகழ்வுகளும் அவரின் சம்மதத்தின் பேரிலும், அவர் சொல்லும் விதத்திலும்தான் நடைபெறும்.
ஒரு முறை ஊரில் ஒரு விதமான விஷக்காய்ச்சல் பரவ, அதைத் தடுக்க என்ன வழி? என்று ஊர்ப் பஞ்சாயத்து தலைவர், கோவில் தர்மகர்த்தா உள்ளிட்ட பலர் சென்று கேட்க, அந்த சாமியாடி மக்களை விஷக் காய்ச்சலிலிருந்து பாதுகாக்கும் எண்ணமின்றி, சாதிப் பாகுபாட்டை வளர்க்கும் விதமாய் ஏதேதோ சொல்ல, கோபமடைகிறான் தனபால். நாத்திகவாதி. கோபத்தில் அவன் சாமியாடியையும், கடவுளை தாறுமாறாய்த் திட்டித் தீர்க்க, அந்த கூட்டத்திலிருந்து அவன் துரத்தியடிக்கப்படுகிறான்.
ஆனால், அதே சாமியாடி வாயாலேயே ஊருக்குள் சாதிப் பாகுபாடு வேண்டாம், கீழ் சாதியும், மேல் சாதியும் இணைந்து வாழ வேண்டும், என்று சொல்ல வைத்து, மக்களிடமிருந்த வேற்றுமையைக் களைகிறான் தனபால்.
தனபால் எதை வைத்து சாமியாடியை மடக்கினான்?...நாவலை வாசித்து ரசியுங்கள்.
Read more from Mukil Dinakaran
Vinnai Thodalam Unthan Siragu Rating: 0 out of 5 stars0 ratingsBhuvana Oru Puthumai Penn Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Varam! Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Neeyadi!... Unnil Naanadi! Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai Malare! Rating: 5 out of 5 stars5/5Siragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsUyirulla Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsJeevan Oyum Munney! Rating: 0 out of 5 stars0 ratingsNalla Manam Vazhga! Rating: 0 out of 5 stars0 ratingsNetru Vaarai Nee Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsThee Kozhunthil Pani Thuliyai..!!! Rating: 0 out of 5 stars0 ratingsOru Kathavum... Innoru Kathavum! Rating: 0 out of 5 stars0 ratingsPagalil Thondrum Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsUnakkena Thudikkum Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsKanneer Varaintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Sudugindrathu Rating: 0 out of 5 stars0 ratingsIthu Mattum Kadanthu Pogathu! Rating: 0 out of 5 stars0 ratingsSugamana Kaathirupu! Rating: 0 out of 5 stars0 ratingsMulloduthan Muthangala? Rating: 0 out of 5 stars0 ratingsUnakke Vechurikean Moochu! Rating: 0 out of 5 stars0 ratingsCylinder Niraya Anbu Rating: 0 out of 5 stars0 ratingsIni Ellam Sugame! Rating: 3 out of 5 stars3/5Mullum Naane...! Malar Naane! Rating: 0 out of 5 stars0 ratingsInge Oru Shahjahan Rating: 0 out of 5 stars0 ratingsKaatrin Viralgal! Rating: 0 out of 5 stars0 ratingsAntha Violet Kangal Rating: 0 out of 5 stars0 ratingsTherodi Ointha Theru Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Enum Thean Kalanthu! Rating: 0 out of 5 stars0 ratingsKaraiyai Thedum Odangal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Saami Potta Mudichu!
Related ebooks
Naalellam Pournami Rating: 0 out of 5 stars0 ratingsMannithu Vidu... Magane...! Rating: 0 out of 5 stars0 ratingsKutra Parigaram Rating: 5 out of 5 stars5/5Velli Nila Muttrathile! Rating: 5 out of 5 stars5/5Odu... Olinthukol! Rating: 0 out of 5 stars0 ratingsUyir Kaadhalil Or Kavithai! Rating: 4 out of 5 stars4/5Vedhamadi Neeenakku! Rating: 5 out of 5 stars5/5Enge Andha Sorgam? Rating: 0 out of 5 stars0 ratingsTheeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsEngamma Maharasi Rating: 0 out of 5 stars0 ratingsNee Enthan Athisayam! Rating: 5 out of 5 stars5/5Poovizhi Vaasalile! Rating: 0 out of 5 stars0 ratingsMangai Enthan Nenjukkul! Rating: 0 out of 5 stars0 ratingsPesum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsOru Pournami Maranam and Naan Yen Iranthen Rating: 0 out of 5 stars0 ratingsManitharil Ithanai Nirangala...? Rating: 0 out of 5 stars0 ratingsKaanal Nathigal Rating: 0 out of 5 stars0 ratingsNattupura Kolaigal! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalaagi Kasindhurugi Rating: 0 out of 5 stars0 ratingsAntharathil Sundari Rating: 0 out of 5 stars0 ratingsMayakkam Enna... Undhan Mounam Enna... Rating: 0 out of 5 stars0 ratingsIthuve Iruthi Aagattum...! Rating: 0 out of 5 stars0 ratingsAttaikathi Rajakkal Rating: 0 out of 5 stars0 ratingsPachaikili Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Sudha Rating: 0 out of 5 stars0 ratingsSiragukal Rating: 0 out of 5 stars0 ratingsChittukuruvi Suttu Pazhagu Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Eeram Illai Rating: 0 out of 5 stars0 ratingsKarpoora Kanavukal Rating: 4 out of 5 stars4/5Paaraikkul Panneer Pushpam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Saami Potta Mudichu!
0 ratings0 reviews
Book preview
Saami Potta Mudichu! - Mukil Dinakaran
https://www.pustaka.co.in
சாமி போட்ட முடிச்சு!
Saami Potta Mudichu!
Author:
முகில் தினகரன்
Mukil Dinakaran
For more books
https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் - 1
அத்தியாயம் – 2
அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5
அத்தியாயம் – 6
அத்தியாயம் – 7
அத்தியாயம் – 8
அத்தியாயம் – 9
அத்தியாயம் – 10
அத்தியாயம் – 11
அத்தியாயம் – 12
அத்தியாயம் – 13
அத்தியாயம் – 14
அத்தியாயம் – 15
அத்தியாயம் – 16
அத்தியாயம் – 17
அத்தியாயம் – 18
அத்தியாயம் – 19
அத்தியாயம் – 20
அத்தியாயம் – 21
அத்தியாயம் – 22
அத்தியாயம் - 1
டும்...டும்...டும்...டும்...
கொட்டுச் சத்தத்தை தொடர்ந்து,
ஊர்ல மர்மக் காய்ச்சல் வந்து இதுவரைக்கும் ஏழு பேர் செத்திருக்காங்க ஷாமி!...அந்த மர்மக் காய்ச்சல்...மேற் கொண்டு பரவாமத் தடுக்க...என்ன பரிகாரம் பண்ணனும்?னு முடிவு பண்ண...இன்னிக்கு சாயங்காலம் ஏழு மணிக்கு ஆல மரத்தடிக் கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கு ஷாமி!...எல்லாரும் தவறாம வந்திருங்கோ ஷாமி!
ஒவ்வொரு தெரு மூலையிலும் நின்று கத்திக் கொண்டே போனான் அந்த தலையாரி.
உள்ளூர்ச் சரக்கு உளே போய் நாக்கை குழற வைத்தாலும், வார்த்தைகள் அட்சர சுத்தமாய் வந்து விழுந்தன.
கோவில் திண்ணையில் அமர்ந்து, அக்காலச் சினிமா நடிகைகளையும், இக்காலச் சினிமா நடிகைகளையும், ஒப்பிட்டுப் பேசி, பொழுதை வீணாக்கிக் கொண்டிருந்த அந்த இளைஞர் கூட்டம் தங்களைக் கடந்து செல்லும் அந்த தலையாரியை நிறுத்தியது.
இப்ப பாரு தமாஷை...
என்ற தனபால்,
டேய்...தலையாரி...அந்த சமாச்சாரத்தை இன்னொரு தரம் சொல்லிட்டுப் போடா!..சரியாய்க் காதுல விழலை
என்றான்.
கிட்டத்தட்ட அவன்தான் அந்த இளைஞர் கூட்டத்தின் தலைவன் போல். ஊரிலேயே முதன் முதலில் கான்கிரீட் வீடு கட்டி சாதித்துக் காட்டிய கடும் உழைப்பாளியான அவன் அப்பன் ஆறுமுகத்துக்கு இவன் ஒரே பிள்ளை. பள்ளிக் கூடத்திற்குப் படிக்கப் போனவன் வாத்தியாரோட தகராறு பண்ணிக்கிட்டு வெளிய வந்திட்டான். சரி...இந்தப் பள்ளிக்கூடம் இல்லாட்டிப் பரவாயில்லை....வேற பள்ளிக்கூடத்துக்காவது போடா!
என்று அவன் பெற்றோர் கெஞ்சிய போது,
என்னை வீட்டை விட்டுப் போடா
ன்னு சொல்லுங்க சந்தோஷமாய்ப் போறேன்!...அல்லது செத்துப் போடான்னு சொல்லுங்க...உடனே ம்று பேச்சு பேசாம செத்துப் போறேன்!...ஆனா எந்தக் காரணத்தைக் கொண்டும் என்னை பள்ளிக் கூடத்துக்கு மட்டும் போகச் சொல்லாதீங்க!...மீறிப் போகச் சொன்னீங்கன்னா...ரயில் தண்டவாளத்துல படுத்து நானே செத்துப் போயிடுவேன்!....செத்துப் போனதுக்கப்புறமும் உங்களையெல்லாம் நிம்மதியாய் இருக்க விட மாட்டேன்...பேயாய் வந்து எல்லோர் குரல்வளையையும் கடிச்சுக் குதறிடுவேன்!
என்று மிரட்டி பெற்றவர்களையும், மற்றவர்களையும் பயமுறுத்தி வைத்திருந்தான்.
இப்படியாக, கல்விக் காலத்தைக் கண்டபடி ஊர் சுற்றியே தொலைத்து விட்டவன், வாலிபப் பருவத்திலாவது ஏதோவொரு வேலை வெட்டிக்குப் போவான்...அதை வெச்சே அவனுக்கு ஒரு கால் கட்டைப் போட்டு விட்டுடலாம்! என்று காத்திருந்த பெற்றோர்களுக்கு அதிலும் மாபெரும் ஏமாற்றத்தையே தந்தான் அருமை மகன்.
த பாரு...வேலைக்குப் போறதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது!...நான் கொஞ்சம்....கொஞ்சமென்ன நிறையவே மொரட்டு ஆள்!ன்னு உனக்குத் தெரியாதா?...போனா போன எடத்துல எவன் மேலேயாவது கை வெச்சு...அடிதடி...சண்டை...ன்னு இழுத்துட்டு வருவேன்....பரவாயில்லையா?!...அதனால...இனிமே என்னை
வேலைக்குப் போ!...வெங்காயத்துக்குப் போ!ன்னு சொல்றதை நிறுத்திக்க!
என்று தன் தாயாரின் முகத்துக்கெதிரே ஆட்காட்டி விரலை நீட்டி எச்சரித்து வைத்திருந்தான்.
எந்த மனுசனாலும் இனி அவனைத் திருத்தவே முடியாது, என்பதைப் பூரணமாய் நம்பிய அவன் தாய் அம்மணி, கடைசி கதியாய் கடவுளிடம் சரணடைந்தாள். உள்ளூர்க் கோயில், வெளியூர்க் கோயில், என்று ஒரு கோயில் விடாமல் எல்லாக் கோவில்களுக்கும் சென்று, என் மகனுக்கு ஒரு நல்ல புத்தியைக் கொடு ஆண்டவா
என்று எல்லாக் கடவுள்களிடமும் விண்ணப்பித்துக் கொண்டேயிருந்தாள்.
அப்படித்தான் இன்னிக்கு காலையில், எங்கோ போய் விட்டு வீடு திரும்பிய தனபாலிடம், பக்கத்து வீட்டுக் கிழவி அந்த விஷயத்தைப் பற்ற வைத்திருக்கிறாள். ஏலே...தண்டுவப் பயலே!...இங்ஙன வாலே!..
என்ன கெழவி....சாவு வர மாட்டேங்குதா?...சொல்லு நம்ம பசங்களை விட்டு உனக்கு சீக்கிரமே சாவு வர ஏற்பட்டு பண்ணித் தர்றேன்!
சிரித்துக் கொண்டே சொன்னான்.
எனக்கு சாவு வர்றது இருக்கட்டும் மொதல்ல உன் ஆத்தாவைப் போய்ப் பாரு அது கெடக்குது என்னை விட மோசமா...விட்டா எனக்கு முன்னாடி அது செத்துப் போயிடும் போலிருக்கு!
என்னவாம் என்னைப் பெத்தவளுக்கு?
அலட்சியமாய்க் கேட்டான்.
ம்...உனக்கு நல்ல புத்தி வரணும்
ன்னு சாமியை வேண்டிக்கிட்டு அதுக்காக ரெண்டு நாளா விரதமிருக்கா!...ஏற்கனவே ஈர்க்குச்சி உடம்பு இதுல விரதம் வேற!..ஹும்..சொன்னாலும் கேட்கறதில்லை..என்னத்தைப் பண்றது?"
அதைக் கேட்டதும் வேக வேகமாய் வீட்டுக்குள் சென்று, தாயாரின் மீது எரிந்து விழுந்திருக்கான் தனபால். த....காலையிலிருந்து சாப்பிடாமலே கிடக்கறியாமே?...என்ன கேடு உனக்கு?
அம்மணி அவனுக்கு எந்த பதிலும் சொல்லாம அமைதியாகவே இருக்க,
எனக்குப் புத்தி வரணும்கறதுக்காக சாமிக்கு விரதம் இருக்கியாமே?...இப்ப சொல்றேன் கேட்டுக்க...எந்தச் சாமியாலும் எனக்கு புத்தியைக் குடுக்க முடியாது!...அதுக்காக நீ உண்ணாவிரதம் இருந்தேன்னா...நீ செத்துத்தான் போவே!
என்று இவன் கத்தியிருக்கான்.
டேய் நான் செத்தாத்தான் உனக்குப் புத்தி வரும்!ன்னா நான் சாக கூடத் தயார்டா!
தாய்ப்பாசத்தின் உச்சம் மரணத்தைக் கூடத் துச்சமாய் மதித்தது.
ச்சீ...உன்னை மாதிரி அறிவு கெட்ட ஜென்மத்து கிட்டே பேசறதை விட...ஒரு கல்லு கிட்டே பேசலாம்!...சாமியாம்...புத்தி தருமாம்!..
என்று எங்கோ பார்த்துச் சொன்னவன் திடீரென்று தாயிடம் திரும்பி, சாமியைப் பார்த்திருக்கியா?...பார்த்திருக்கியா?...பார்க்காத சாமியை நம்புங்க!...கண்ணு முன்னாடி திரியற மனுசங்களை நம்பாதீங்க!
...சனியன் எக்கேடோ கெட்டுப் போ!" சொல்லி விட்டு வெளியேறியவன்தான், நேரே கோயில் திண்ணைக்கு வந்து வழக்கம் போல் சக நண்பர்களுடன் வம்பளக்கத் துவங்கியிருக்கான்.
ஊர்ல மர்மக் காய்ச்சல் வந்து இதுவரைக்கும் ஏழு பேர் செத்திருக்காங்க ஷாமி!...அந்த மர்மக் காய்ச்சல்...மேற் கொண்டு பரவாமத் தடுக்க...என்ன பரிகாரம் பண்ணனும்?னு முடிவு பண்ண...இன்னிக்கு சாயங்காலம் ஏழு மணிக்கு ஆல மரத்தடிக் கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கு ஷாமி!...எல்லாரும் தவறாம வந்திருங்கோ ஷாமி!
தனபால் கேட்டு சொல்லாமல் போனால், கையும் காலும் இடம் மாறி விடும் என்பதை நன்கு உணர்ந்திருந்த அந்த தலையாரி மீண்டுமொரு முறை அந்த சமாச்சாரத்தைச் சொன்னான்.
என்ன பண்ணப் போறீங்க?...எல்லாத்துக்கும் தடுப்பூசி போடப் போறீங்களா?...இல்லை காய்ச்சல் வந்தவங்க எல்லோரையும் ஒரு தனி ஜெயில்ல போட்டு அடைக்கப் போறீங்களா?
தனபாலின் ஒட்டுண்ணி ஜெயராமன் கேட்க,
அட அதையெல்லாம் இந்த திருவாத்தானுக பண்ண மாட்டானுக!...
சாமி குத்தம்...
ஆத்தா சாபம் அப்படிஇப்படின்னு எதையாவது சொல்லி, அதுக்குப் பரிகாரமா
பொங்கல் வைப்போம்...
பூஜை செய்வோம்!...
ஆட்டுக் கெடா வெட்டுவோம்ன்னு பேசித் தீர்மானம் பண்ணுவானுக!
சொல்லி விட்டு வாய் வலிக்கச் சிரித்தான் தனபால்.
"கெடா