Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilavukku Eeram Illai
Nilavukku Eeram Illai
Nilavukku Eeram Illai
Ebook116 pages39 minutes

Nilavukku Eeram Illai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மூளையைக் கசக்கி கற்பனையாய்ப் படைக்கும் நாவலைவிட, உண்மைக்கதைகளுக்கு என்றுமே பலம் அதிகம். அதில் ஓர் ஆழம் இருக்கும். யதார்த்தம் இருக்கும், சம்பவங்கள் மனதைப் பிழியும்.
இந்த நாவலும் கூட முழுக்க முழுக்க உண்மை. (பெயர்கள் மட்டும் வழக்கம்போல் கற்பனை).
வெளியூர் வாசகி ஒருவர் ஒரு சமயம் எங்கள் வீட்டிற்கு வந்தார். தன் வாழ்க்கையை வடித்தால்தான் தனக்கு நிம்மதி கிடைக்கும் என உருக்கமாய் பேச ஆரம்பித்தார்.
அவர் வடித்த அவரது சொந்தக் கதைதான் இந்நாவல். பெற்றோர்கள் இதன் மூலம் தங்கள் பொறுப்பை உணர்ந்தாலே என் முயற்சிக்கு வெற்றிதான்!
Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580132406026
Nilavukku Eeram Illai

Read more from Nc. Mohandoss

Related to Nilavukku Eeram Illai

Related ebooks

Reviews for Nilavukku Eeram Illai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilavukku Eeram Illai - NC. Mohandoss

    http://www.pustaka.co.in

    நிலவுக்கு ஈரமில்லை

    Nilavukku Eeram Illai

    Author:

    என்.சி. மோகன்தாஸ்

    NC. Mohandoss

    For more books

    http://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    கதைக்கு முன்...

    வணக்கம்.

    மூளையைக் கசக்கி கற்பனையாய்ப் படைக்கும் நாவலைவிட, உண்மைக்கதைகளுக்கு என்றுமே பலம் அதிகம். அதில் ஓர் ஆழம் இருக்கும். யதார்த்தம் இருக்கும், சம்பவங்கள் மனதைப் பிழியும்.

    இந்த நாவலும் கூட முழுக்க முழுக்க உண்மை. (பெயர்கள் மட்டும் வழக்கம்போல் கற்பனை).

    வெளியூர் வாசகி ஒருவர் ஒரு சமயம் எங்கள் வீட்டிற்கு வந்தார். தன் வாழ்க்கையை வடித்தால்தான் தனக்கு நிம்மதி கிடைக்கும் என உருக்கமாய் பேச ஆரம்பித்தார்.

    அவர் வடித்த அவரது சொந்தக் கதைதான் இந்நாவல். பெற்றோர்கள் இதன் மூலம் தங்கள் பொறுப்பை உணர்ந்தாலே என் முயற்சிக்கு வெற்றிதான்!

    நன்றி.

    அன்புடன்

    என். சி. மோகன்தாஸ்

    1

    சராசரி குடும்பத்தின் சுறுசுறுப்பு நேரம் - நிச்சயம் காலை ஒன்பது மணியாகத்தான் இருக்கும்.

    டிபனையும் மதியச் சாப்பாட்டையும் ஒரே மூச்சில் தயார் பண்ண வேண்டும்; குழந்தைகளை ரெடி பண்ண வேண்டும். அவர்களின் புத்தகங்கள், யூனிஃபார்ம். டிபன் கட்டி அரக்கப்பரக்க ஸ்கூலிற்கு அனுப்பிவிட்டு மூச்சு விடுவதற்குள் -

    இந்த வீட்டில் ஏதாவது வைத்தது வைத்த இடத்தில் இருக்கிறதா? என்று தலைவன் கத்துவான்.

    என்ன விஷயங்க?

    என் பேனாவைக் காணோம்!

    நல்லாப் பாருங்கள். அங்கேதான் டேபிள் மேலிருக்கும்!

    பார்த்துட்டேன். இல்லை! என்று பதறுவான். இத்தனை நேரம் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பேப்பர் புரட்டின வேளையில் அதைத் தேடி வைத்துக் கொள்ளக் கூடாதோ? மாட்டார்கள். ஆபீஸில் நாயாய் உழைத்தாலும் வீட்டிற்கு வந்தால் சொகுசு தேடுவர்.

    எல்லாவற்றிற்கும் மனைவி வேண்டும். அவள்தான் தேடி எடுத்துத் தர வேண்டும்!

    குடும்பத் தலைவிக்கு அது தலைவலி நேரம்! அதுவும் வேலைக்குப் போகிறவள் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. ஈர முடியை உலர்த்தக் கூட அவகாசமில்லாமல் பின்னாமல் ரப்பர்பேன்ட் போட்டுக் கொண்டு பறக்க வேண்டும்.

    சாந்தாம்மாவும் அந்த நிலையில்தானிருந்தாள். அவள் பள்ளி ஆசிரியை. கிராமத்துப் பள்ளிக் கூடம் என்றால் முன்னே பின்னே போகலாம். போய் வகுப்பில் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.

    டவுனில் - அதுவும் பிரைவேட்டில் அதெல்லாம் முடியாது. இடைவெளியில்லாமல் பீரியடிற்கு மேல் பீரியடாய் டயம் டேபிள் போட்டு உயிரை எடுத்து விடுவர்.

    சாந்தாம்மா வியர்க்க வியர்க்க அள்ளிக் கொட்டிக் கொண்டாள். விவிதபாரதியின் டயத்தோடு தனது வாட்சையும் சரி பண்ணிக் கொண்டாள். முடியை லூசாய் படரவிட்டு நெற்றியில் குங்குமம்!

    பவுடர் அடிக்கத் தோன்றவில்லை. வியர்வையில் திப்பி திப்பியாய் படரும். வேண்டாம்! தன்னுடைய ஹான்ட்பாகில் லைப்ரரி இதழ்களை திணித்துக் கொண்டு, சுபத்ரா!

    என்னம்மா? என்று கேட்டுவிட்டு ஜன்னல் வழி தெருவை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்த சுபத்ராவிற்கு இருபது நடக்கிறது

    அந்த ரேடியோவை நிறுத்து! கதவை மூடு! உத்தரவு பறந்தது. ஹாலில் நீண்டிருந்த கொடியிலிருந்து சேலை எடுத்து சுற்றிக் கொண்டாள். அங்கே என்னடி வேடிக்கை?

    மரத்தில் அணில் பிள்ளைம்மா!

    ஆமாம். பச்சைபிள்ளை பார்! அணிலைப் பார்த்துக் கொண்டிரு. பிழைப்பு கிழிந்து விடும்

    என்னை என்னச் செய்ய சொல்கிறாயாம்?

    பொழுது விடிந்து பொழுது போகும் வரை அந்த ஜன்னலில் அப்படி என்னடி இருக்கிறது? சமையலுக்கு உதவலாம். பாத்திரம் தேய்த்துத் தரலாம், துவைக்கலாம். காய்கறி வாங்கி வரலாம்!

    வெளியே போகவிட்டால்தானே!

    சரி... சரி, கிளம்பு!

    தெரியாமல்தான் கேட்கிறேன், ஏம்மா - நீ டீச்சர்! ஸ்கூலுக்குப் போகிறாய். நான் எதற்காக அங்கே வந்து வெட்டியாய் காவல் இருக்க வேண்டும்?

    உனக்கு சொன்னால் புரியாதுடி. என்னை மாதிரி நாலு பிள்ளைகளைப் பெத்து வளர்த்த பின்புதான் புரியும்! என்று மகளை வெளியே இழுத்து கதவைப் பூட்டினாள்.

    வாய் பார்க்காமல் ஒழுங்காய் என் பின்னாடியே வா!

    சுபத்ராவை சங்கிலியால் கட்டாத குறை. இது ஒன்றும் புதிதில்லை. அவளுக்குப் பழகிப் போய்விட்டது.

    சாந்தாம்மா மட்டுமில்லை. அப்பா சுப்ரமணியம் கூட ஆசிரியர்தான். அதுவும் தலைமையாசிரியர். அவர் ஒரு பிரத்யேக டைப்.

    ஊருக்கெல்லாம் உதவுவார். உபதேசம் பண்ணுவார். பொதுக் காரியம் என்று வந்துவிட்டால் தன் உயிரையும் கொடுப்பார். ஊருக்கு வேண்டுமானால் அவர் நல்லவராய் இருக்கலாம். வீட்டினருக்கு நிச்சயமாய் அப்படி இல்லை.

    எல்லோருக்கும் எப்போதும் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. குடும்பத்தில் சின்சியராய் இருப்பவர்கள் அலுவலகத்தில் சொதப்புவர். அங்கே மூச்சு முட்ட உழைப்பவர்களுக்கு வீட்டில் முடிவதில்லை.

    அலுவலகத்தின் அலுப்பும், அங்கே காட்ட முடியாத கோபமும் இங்கே காட்டப்படும். சுப்ரமணியம் கூட ஏறக்குறைய அந்த டைப்தான். ஸ்கூலில் – ‘ஆகா...

    Enjoying the preview?
    Page 1 of 1