Minnuvathellam Penn
()
About this ebook
அந்தச் சுவை தொடர்ந்து வளர்ந்து இன்று அமோகச் செழிப்படைந்து விட்டது. வாசகர்களிடையே ரசனையை ஏற்படுத்திவிட்ட பெருமை அவர்களுக்குச் சேரும்.
இந்த நாட்களில் குற்றங்கள் புதுப்புது முறையில் செய்யப்படுவது போல, குற்ற இயல் நவீனங்களைப் படைப்பவர்களும் இன்று புதிது புதிதாகக் கற்பனை செய்து வாசகர்களின் திருப்திக்காகப் பாடுபடுகிறார்கள்: வெற்றியும் பெறுகிறார்கள்.
அப்படி வெற்றி பெறுபவர்களில் நண்பர் என். சி. மோகன்தாஸும் ஒருவர். அவருடைய நவீனங்களைப் படிக்கும்போது அவர் திட்டமிட்டு, ஒரு வட்டம் போட்டு, அந்த வட்டத்தின் விளிம்புகளுக்கப்பால் தன் பாத்திரங்களைச் செல்லவிடாமல் படிப்பவர்கள் நினைவில் ‘ஆரம்பத்திற்கேற்ற முடிவுதான்’ என்ற திருப்தியை ஏற்படுத்திவிடுகிறார்.
சிலர் தங்கள் நவீனங்களை ஆரம்பிக்கும்போது எத்தகைய திட்டங்கள், வரைபடங்கள் போட்டு ஆரம்பித்தாலும், இடையே சில கதாபாத்திரங்கள், எழுது கிறவர்களைப் பயமுறுத்தி விரட்டிவிட்டு, தங்கள் இஷ்டம் போல ஆட ஆரம் பித்து ஆசிரியருக்கு ஐந்தாம் படை வேலை செய்ய முன்வருவதும் உண்டு.
நண்பர் மோகன் தாஸின் கதாபாத்திரங்கள் அவர் சொல்லுக்குக் கட்டுப்படுகின்றன. இது படைப்பாளியின் வெற்றிக்கு முதற்படி. இவர் படைப்புகளில் சுவை இருக்கும் என்று நம்பிக்கையோடு கையிலெடுத்துப் படிக்க ஆரம்பிக்கலாம். கடைசிப் பக்கத்தில் வந்து நிற்கும் போதுமனத்தில் நிறைவு இருக்கும். கட்டுப்பாட்டில் விளைந்த கற்பனைகள் என்று பாராட்டலாம்.
வில்லிவாக்கம்
கோமதி ஸ்வாமிநாதன்
Read more from Nc. Mohandoss
Kaathirukka Neramillai Rating: 5 out of 5 stars5/5Kaanal Neer Kanavugal Rating: 5 out of 5 stars5/5Kolai Magal Rating: 5 out of 5 stars5/5Ennavale... Ennavale... Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Iravu Rating: 0 out of 5 stars0 ratingsMatravai Thiraikku Pinnaal Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thaamarai Penney! Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Mugam Rating: 0 out of 5 stars0 ratingsIniyavale... Rating: 0 out of 5 stars0 ratingsYeidhavanai Thedi... Rating: 5 out of 5 stars5/5Velai Paduthum Paadu Rating: 0 out of 5 stars0 ratingsAndha Aayiram Watts Kangal Rating: 0 out of 5 stars0 ratingsVibareetha Parisu Rating: 0 out of 5 stars0 ratingsKadathalukku Oru Kalloori Rating: 5 out of 5 stars5/5Devathaiye Saranam Rating: 0 out of 5 stars0 ratingsArabic Kadalukku Appaal Rating: 0 out of 5 stars0 ratingsAabathu 13-Vayathu Rating: 0 out of 5 stars0 ratingsAnitha- Akila- Agalya! Rating: 0 out of 5 stars0 ratingsKanmani Karthi Rating: 0 out of 5 stars0 ratingsOru Poongavanam... Puthu Manam... Rating: 0 out of 5 stars0 ratingsEnakkey Enakkai Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Therintha Maname! Rating: 0 out of 5 stars0 ratingsMala Ennai Mannippaya? Rating: 0 out of 5 stars0 ratingsAzhagey Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsIrulai Virattu Rating: 0 out of 5 stars0 ratingsNenjathai Alli Konjam Thaa! Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthu Malai! Rating: 0 out of 5 stars0 ratingsOru Munnutharanamai... Rating: 0 out of 5 stars0 ratingsUnmaiyai Nokki... Rating: 0 out of 5 stars0 ratings
Related to Minnuvathellam Penn
Related ebooks
Pachaikili Rating: 0 out of 5 stars0 ratingsKanavodu Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsKaanamal Pona Kangal Rating: 0 out of 5 stars0 ratingsUyiril Kalantha Geetham! Rating: 0 out of 5 stars0 ratingsVaasamalar Theane......! Rating: 0 out of 5 stars0 ratingsPudhumaipithan Short Stories - Part 10 Rating: 0 out of 5 stars0 ratingsAppalakacheri Rating: 2 out of 5 stars2/5Inaiyumo Iruthayam? Rating: 0 out of 5 stars0 ratingsTheekkul Viralai Vaithal Rating: 4 out of 5 stars4/5Ingeyuma Nee? Rating: 0 out of 5 stars0 ratingsEn Varna Nila Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Kaapatrungal! Rating: 0 out of 5 stars0 ratingsMothers Touch! Rating: 0 out of 5 stars0 ratingsIththanai Naalai Engirunthaai Rating: 4 out of 5 stars4/5Maayam Seithayo Mayava Rating: 0 out of 5 stars0 ratingsEllai Kodu Rating: 3 out of 5 stars3/5Cylinder Niraya Anbu Rating: 0 out of 5 stars0 ratingsNee Naan Naam Vazhave Rating: 3 out of 5 stars3/5சதிகள் இலவசம் Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsAahaya Medai Katti...! Rating: 5 out of 5 stars5/5Kai Serum Neram Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Meendum Naalai Varum Rating: 0 out of 5 stars0 ratingsThirumanam Kuzhanthayal Nichayakkapadugirathu Rating: 0 out of 5 stars0 ratingsIthu Varai Sollatha Kavithai Rating: 3 out of 5 stars3/5Aabathu Odi Vidu Rating: 5 out of 5 stars5/5Ezhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Marakka Therintha Maname! Rating: 0 out of 5 stars0 ratingsGramathu Nila Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Minnuvathellam Penn
0 ratings0 reviews
Book preview
Minnuvathellam Penn - NC. Mohandoss
http://www.pustaka.co.in
மின்னுவதெல்லாம் பெண்
Minnuvathellam Penn
Author:
என்.சி. மோகன் தாஸ்
NC. Mohandoss
For more books
http://www.pustaka.co.in/home/author/nc-mohandoss
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
வாழ்த்துரை
நவீன தமிழ்ப் படைப்புகளில் குற்ற இயல் நவீனங்கள் சமீபகாலமாக நிறையவே இடம் பிடித்துக்கொண்டு இருக்கின்றன. ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே. ஆர். ரங்கராஜு, போன்றவர்கள் இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே, மேலை நாட்டுக் குற்ற இயல் தொடர்பான நவீனங்களை, நேரடித் தமிழ் மாற்றம் செய்தோ, தமிழ்நாட்டுச் சூழ்நிலைக்குக் கதாபாத்திரங்களையும் அவர்கள் மனநிலையையும் மாற்றியோ, சுவைபட அறிமுகம் செய்துவைத்தார்கள்.
அந்தச் சுவை தொடர்ந்து வளர்ந்து இன்று அமோகச் செழிப்படைந்து விட்டது. வாசகர்களிடையே ரசனையை ஏற்படுத்திவிட்ட பெருமை அவர்களுக்குச் சேரும்.
இந்த நாட்களில் குற்றங்கள் புதுப்புது முறையில் செய்யப்படுவது போல, குற்ற இயல் நவீனங்களைப் படைப்பவர்களும் இன்று புதிது புதிதாகக் கற்பனை செய்து வாசகர்களின் திருப்திக்காகப் பாடுபடுகிறார்கள்: வெற்றியும் பெறுகிறார்கள்.
அப்படி வெற்றி பெறுபவர்களில் நண்பர் என். சி. மோகன்தாஸும் ஒருவர். அவருடைய நவீனங்களைப் படிக்கும்போது அவர் திட்டமிட்டு, ஒரு வட்டம் போட்டு, அந்த வட்டத்தின் விளிம்புகளுக்கப்பால் தன் பாத்திரங்களைச் செல்லவிடாமல் படிப்பவர்கள் நினைவில் ‘ஆரம்பத்திற்கேற்ற முடிவுதான்’ என்ற திருப்தியை ஏற்படுத்திவிடுகிறார்.
சிலர் தங்கள் நவீனங்களை ஆரம்பிக்கும்போது எத்தகைய திட்டங்கள், வரைபடங்கள் போட்டு ஆரம்பித்தாலும், இடையே சில கதாபாத்திரங்கள், எழுது கிறவர்களைப் பயமுறுத்தி விரட்டிவிட்டு, தங்கள் இஷ்டம் போல ஆட ஆரம் பித்து ஆசிரியருக்கு ஐந்தாம் படை வேலை செய்ய முன்வருவதும் உண்டு.
நண்பர் மோகன் தாஸின் கதாபாத்திரங்கள் அவர் சொல்லுக்குக் கட்டுப்படுகின்றன. இது படைப்பாளியின் வெற்றிக்கு முதற்படி. இவர் படைப்புகளில் சுவை இருக்கும் என்று நம்பிக்கையோடு கையிலெடுத்துப் படிக்க ஆரம்பிக்கலாம். கடைசிப் பக்கத்தில் வந்து நிற்கும் போதுமனத்தில் நிறைவு இருக்கும். கட்டுப்பாட்டில் விளைந்த கற்பனைகள் என்று பாராட்டலாம்.
வில்லிவாக்கம்
கோமதி ஸ்வாமிநாதன்
1
அது - அரபிக்கடலின் காயலில் மிதந்து கொண்டிருக்கிற வைப்பின் தீவு. எர்ணாகுளத்திலிருந்து அரைமணி நேர படகு தூரம்.
அப்போது விடிந்து கொண்டிருந்தது. சீன வலைகளில் மாட்டின மீன்களுக்கு வேண்டி காக்கைகள் அலைந்தன. படகுகள் பயணிகளுடன் மிதந்தன.
பள்ளிக்கூடத்து சர்ச்சின் பின்புறவீட்டில் சுதா, அப்போ நான் வரேம்மா
என்று ஹாலிற்கு வந்தாள்.
அவளுடைய கண்களில் சோகம் குடியிருந்தது.
அம்மா நெற்றியில் குங்குமம் வைத்தபோது அப்பா முடமான கால்களுடன் தட்டுத்தடுமாறி எழ, அவரது கால்களில் விழுந்து ஆசி வாங்கினாள்.
பார்த்துப் போம்மா. எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சுக்க. கல்லாட்டம் நான் இருக்கும் போது... உன்னை துபாய்க்கு மூட்டை கட்டறேனே...
கண் கலங்கினார். எல்லாமே நான் செஞ்ச பாவம்!
போதும் விடுங்க. புறப்படும்போது ஏன் புலம்பிக் கொண்டு...?
சுதா! எம்மேல கோபமில்லையே!
எதுக்குப்பா! அஞ்சு பெண்களை பெற்று ஆளாக்கியிருக்கீங்க. சம்பாத்யமெல்லாம் வெள்ளத்துல போச்சு. அதுக்கு யார் என்ன பண்ண முடியும்?
கலங்கின கண்களுடன் தங்கைகளைப் பார்த்தாள்.
ப்ளஸ்டூவும், ஒன்பதும், ஏழும், ஐந்தும் படிப்பவர்களின் முகங்களில் வருத்த ரேகை ஓடிற்று. அக்காள் தங்களை எப்படியும் கரையேற்றிவிடுவாள் என்கிற நம்பிக்கையுடன் அவர்கள் விடைகொடுத்தனர்.
தாய், சுதாவின் கைகளைப் பிடித்துக்கொடுத்து பொசுக்கென அழுதது.
அவளுடைய கண்கள் உள்ளே போயிருந்தன. கந்தலான சேலை, ப்ளவுசின் கக்கம் கிழிந்திருந்தது. கழுத்தும் காதும் மூளி!
அம்மாவின் கழுத்தில் நகைகளை மறுபடியும் சார்த்த வேண்டும். சுதா நினைத்துக்கொண்டாள்.
அவள் பிரியமனமில்லாமல் நிற்க -
சுதா! சமயமாயி வேகம் கிளம்பு!
என்று மலையாளத் தமிழ் பேசினபடி வந்தார் சுலைமான் குட்டி.
அவருக்கு ஐம்பது வயதிருக்கலாம். ஒல்லியான தேகம். தலை நரைத்து நடு உச்சியில் வழுக்கை, தாவங்கட்டையில் அப்பின மாதிரி தாடி வைத்திருந்தார்.
பழுப்பு லுங்கி கட்டியிருந்தார். இடையில் மொத்தமான பெல்ட். நெற்றியில் ஆச்சர்யம், சந்தனப்பொட்டு.
சுதா குஞ்ஞே... அப்பா அம்மாட்ட ஆசீர் வாங்கிக்கோ...?
அவள் தலையாட்ட, அப்போ போகாலமல்லோ?
அட்பா குச்சி ஊன்றி அவசரமாய் அருகில் வந்தார்.
சுலைமான்! உங்களை நம்பிதான் சுதாவை அனுப்பறேன். அவள் பத்திரம்!
டோண்ட் ஒர்ரி! எல்லாத்துக்கும் ஞான் உண்டு. நிங்ஙள்ட குடும்ப வறுமை ஓடிப்போகப் போகுது பாருங்க! என் தமிழ் சரிதானே... சுதா-வா!
அவர் விசுக்கென திரும்பி நடந்தார். நடையில் அவசரமும் ஆலோசனையும் இருந்தது.
சுதா டாட்டா காட்டிவிட்டு திரும்பித் திரும்பி பார்த்து அவரைத் தொடர்ந்தாள்.
நீங்களும் போங்க! போய் படகுல ஏற்றிவிட்டுட்டு வாங்க!
வேணாண்டி. என்னால தாங்க முடியாது. குத்துக் கல்லாட்டம் நான் வீட்டில குந்தியிருக்கேன். பாவம் பொட்டை புள்ளையை கடல்தாண்டி...
ஆமா. உடனே புலம்பல்! நானே போயிட்டு வரேன்!
போட் ஜெட்டியில் இன்னும் பத்துப் பன்னிரண்டு பெண்கள் கனவுகளுடன் நின்றிருந்தார்கள்.
பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்கள். அந்த தீவைவிட்டு கால் எடுத்து வைக்காதவர்களாயிருக்க வேண்டும். கண்களில் ஆச்சர்யமும், முகத்தில் சோகமும்.
வழியனுப்ப வந்தவர்கள் பரிவாய் பேசிக் கொண்டிருந்தார்கள்.
சுதா