Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Devathaiye Saranam
Devathaiye Saranam
Devathaiye Saranam
Ebook102 pages36 minutes

Devathaiye Saranam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பு சகோதரர் என்.சி. மோகன்தாஸ் அவர்களை கடந்த பத்தாண்டுகளாக நான் அறிவேன். இவர் தமிழ் எழுத்துலகில் காலூன்றி நிற்கும் சிறந்த எழுத்தாளர்.
“இனியவளே”- போன்ற புதினங்களையும் மகளிர் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரியும் வகையில் ‘இருளில் சில விளக்குகள்’ போன்ற உண்மைக் கதைகளையும் ‘நிலவே கலையாதே’ போன்ற சிறந்த கதைகளையும் எழுதி உள்ளார்.
இவர் கதைகள், கருத்தாழம்மிக்கவையாகவும் சமுதாய மறுமலர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றவை யாகவும் அமைந்துள்ளன.
என்றும் தங்கள் அன்புள்ள,
டாக்டர் வி. ஜி. சந்தோசம்
Languageதமிழ்
Release dateMay 24, 2020
ISBN6580132405434
Devathaiye Saranam

Read more from Nc. Mohandoss

Related to Devathaiye Saranam

Related ebooks

Reviews for Devathaiye Saranam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Devathaiye Saranam - NC. Mohandoss

    http://www.pustaka.co.in

    தேவதையே சரணம்

    Devathaiye Saranam

    Author:

    என்.சி. மோகன்தாஸ்

    NC. Mohandoss

    For more books

    http://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    வாழ்த்துரை

    அன்பு சகோதரர் என்.சி. மோகன்தாஸ் அவர்களை கடந்த பத்தாண்டுகளாக நான் அறிவேன். இவர் தமிழ் எழுத்துலகில் காலூன்றி நிற்கும் சிறந்த எழுத்தாளர்.

    இனியவளே- போன்ற புதினங்களையும் மகளிர் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரியும் வகையில் 'இருளில் சில விளக்குகள்' போன்ற உண்மைக் கதைகளையும் 'நிலவே கலையாதே' போன்ற சிறந்த கதைகளையும் எழுதி உள்ளார்.

    இவர் கதைகள், கருத்தாழம்மிக்கவையாகவும் சமுதாய மறுமலர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றவை யாகவும் அமைந்துள்ளன.

    என்றும் தங்கள் அன்புள்ள,

    டாக்டர் வி. ஜி. சந்தோசம்

    1

    'கலஃப் ஜாப் கன்சல்டன்ஸி'என்கிற போர்டை மாட்டிக்கொண்டிருந்த அந்த எட்டு மாடிக் கட்டிடம் பாம்பே நரிமன் பாயிண்டில் இருந்தது. உள்ளே சின்னச் சின்ன பிளைவுட் தடுப்புகள். சுகந்தமய் ஏ.ஸி.

    வந்திருப்பவர்களை உட்காரச் சொல்லும் மரியாதை கூட அங்கில்லை. மரியாதை இருந்தாலும் இடமில்லை. ஒரு பெண் பளபளப்புடன் டெலிபோனில் ஹிந்தியில் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

    அவளது மிடி முழங்காலுக்கு மேலும் உயர்ந்து...

    சர்டிபிகேட் ஃபைலுடன் நின்றிருந்த ஹரி எனும் அந்த இளைஞனுக்கு அதை ரசிக்கும் மனநிலை அப்போதில்லை.

    உடலெல்லாம் அசதியாயிருந்தரன், அவன் டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருந்தான். படித்த பட்டத்திற்கு மரியாதை இல்லை. ஒரு டிகிரிக்காரனை டிரைவராய் வைத்துக்கொள்ள எந்தக் கம்பெனிக்கும் மனசு வரவில்லை.

    எவ்வளவு நாட்களுக்குத்தான் ஊரில் வெட்டியாய்ச் சுற்ற முடியுமாம்? சொந்த வீட்டினரே அவனை விரோதியாய்ப் பார்க்க ஆரம்பிக்கவே, கடைசியில் அரபு நாடுகளுக்காவது போகலாம் என முடிவெடுத்து பாம்பேக்கு பல முறை படையெடுப்பு! அதிர்ஷ்டவசமாய் இக்கம்பெனியில் கிளிக்காகி இப்போது மெடிக்கல் டெஸ்ட்!

    ஹரிக்கு அலுப்பாயிருந்தது. நிற்க முடியவில்லை. அதிகாலையில் தமிழ் ஏரியாவான மாதுங்காவில் இறங்கி அலைந்ததிலேயே பாதித் தெம்பு போயிற்று.

    கடைசியில் ராமகிருஷ்ணா லாட்ஜில் ஒரே ஒரு பெட் கிடைத்தது. பாம்பேயில் தனி ரூம் என்பது சிம்ம சொப்பனம். அறை ஒவ்வொன்றிலும் அரசாங்க ஆஸ்பத்திரி போல பத்துப் பன்னிரண்டு படுக்கைகள் போட்டிருப்பார்கள். அதில் ஒன்று கிடைத்தாலே பாக்கியம்.

    காமன் பாத்ரூமிற்கு முந்திக் கொள்ள வேண்டும்.

    - கொண்டான்.

    குளித்து ரெடியாகி அத்தனை காலையிலேயே யூனிட் டிரெயினின் மாமாங்க நெரிசலில் நசுக்கப்பட்டு... பாம்பே வாழ்க்கையின் மேல் அவனுக்கு வெறுப்பாய் வந்தது.

    எல்லாவற்றையும் சகித்துக் கொண்டாக வேண்டும். வேறு வழியில்லை. கடமைகள் பொறுப்புகள் ஏராளம்.

    சுவரில் சரிந்து கண்களை மூட, கோபிகாவின் சோகக் கண்கள் நிழலடித்தன. அவளது அந்த உருண்டை முகத்திற்கு அந்த சோகம் தேவையில்லாதது அவளது தலையெழுத்து - ஹரியை நேசிக்கவேண்டுமென்பது. அதை யாரால் மாற்ற முடியும்?

    ஹரி! என்னை எப்போது ஏத்துக்கப் போறீங்க?

    அது என் கையிலா இருக்கிறது?

    அப்புறம்?

    கோபிகா, என்னைப் புரிந்துகொள்! எந்த நம்பிக்கையில் இப்போது உன்னை நான் ஏற்றுக் கொள்ள முடியும்? வீட்டில் வசதியிருக்கிறதா இல்லை... கையில் வேலையிருக்கிறதா? வீட்டில் வாணி வேறு கல்யாணத்திற்குக் காத்துக்கொண்டிருக்கிறாள். வறட்டு கௌரவமும் வெட்டிப் பேச்சுமாய் காலம் தள்ளும் அப்பா! ஆசைகளை மனதிற்குள் பூட்டி வைத்திருக்கும் அம்மா. இவர்களுக்கு ஒரு வழி பண்ணாமல் நான் எப்படி உன்னை...?

    ஹரி, உங்கள் நிலைமை புரியாமலில்லை. என்னையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு வேண்டி வந்த வரன்களையெல்லாம் தட்டிக் கழித்துவிட்டேன் என்கிற கோபத்தில் பெற்றோர் விரோதியாய் பாவிக்கின்றனர். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. எவ்வளவு சீக்கிரம் கட்டிக்கொடுத்து அனுப்புகிறார்களோ, அவ்வளவு சீக்கிரம் அவர்களுக்கும்'விடுதலை' நான் சொல்வதைக் கேளுங்கள். நான் அதிகமாய் ஒன்றும் எதிர்பரர்க்கவில்லை. என் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு மட்டும் கட்டிவிட்டால் போதும். என் நகைகளைத் தருகிறேன். அதை வைத்து வாணியைக் கட்டிக்கொடுங்கள். மீதியை வைத்து ஏதாவது பிசினஸ்...

    இது நடக்கிற காரியமாய்த் தோன்றவில்லை.

    ஏன் நடக்காது?

    வாணிக்கு பார்த்த வரன் முப்பது பவுன் கேட்கிறார்களாம். உன்னால் அவர்களின் ஆசையை ஈடுகட்ட முடியாது. அந்த வரன் வேண்டாம். வேறு பாருங்கள் என்று சொன்னால் அப்பா கேட்டால்தானே? வாணிக்கும் அந்த மாப்பிள்ளை மேல் ஓர் ஈடுபாடு...

    அப்போ, நாம ஒன்று சேரவே முடியாதா?

    "கோபிகா! சை! முதலில் இந்த அழுகையை நிறுத்து, வாழ்க்கை என்பது நாம் நினைக்கிற மாதிரி இல்லை. அதன்

    Enjoying the preview?
    Page 1 of 1