Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jodi Sera Aasai!
Jodi Sera Aasai!
Jodi Sera Aasai!
Ebook90 pages33 minutes

Jodi Sera Aasai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தாரணியை தான் பெற்ற மகளாக வளர்க்கும் அக்கா மாலினி. தன்னுடைய அக்கா மாலினி மற்றும் தன் அன்பு கணவன் ராஜேஷ் இருவரின் மறைவு. இந்த இரண்டு பெருந்துயரங்களை தாரணி எப்படி ஒப்புக் கொண்டாள்? இவர்கள் இருவரும் தாரணிக்காக விட்டுச் சென்ற பொக்கிஷம் என்ன? அந்த பொக்கிஷத்திற்காக தாரணி அனுபவித்த இன்னல்கள் என்ன? தாரணி தன் அன்பு கணவரின் மறைவிற்குப்பின் இன்னொரு வாழ்க்கையை ஏற்றுக் கொண்டாளா? இவளின் இன்னல்களையும், இவளின் முடிவையும் வாசித்து தெரிந்து கொள்வோம்...

Languageதமிழ்
Release dateAug 27, 2022
ISBN6580157908980
Jodi Sera Aasai!

Read more from Godha Parthasarathy

Related to Jodi Sera Aasai!

Related ebooks

Reviews for Jodi Sera Aasai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jodi Sera Aasai! - Godha Parthasarathy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஜோடி சேர ஆசை!

    Jodi Sera Aasai!

    Author:

    கோதா பார்த்தசாரதி

    Godha Parthasarathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/godha-parthasarathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    அத்தி! அத்தி!

    குதித்தபடி ஓடிவந்தாள் தாரிணி.

    கூடவே அழகாக வெட்டி விடப்பட்ட கூந்தல், டி.வி. விளம்பரம்போல் அசைந்தாட ஓடி வந்த அவளைப் பார்த்து வியந்து, கண் இமைக்கவும் மறந்து நின்றான் ரமேஷ்.

    நேற்று புதிதாக வாங்கின ஷராரா அவளுக்கு எத்தனை பாந்தமாக இருக்கிறது? எந்த டிரஸ்ஸும் இவளுக்கு மட்டும் எப்படி கச்சிதமாக பொருந்துகிறது?

    மாக்சி, மினி, சூடிதார், பாவாடை, தாவணி, சாரி எதுவுமே சூபர்தான். ஆடையால் அவளுக்கு அழகு என்பதைவிட அவளால் ஆடைக்கு அழகு என்றே சொல்லலாம்.

    தாரிணி நல்ல நிறம். காதில் ஊசலாடும் பெரிய வளையங்கள், நெற்றியில் சின்னதாக மின்னும் சிறிய ஸ்டிக்கர் பொட்டு. கொஞ்சும் லிப்ஸ்டிக் ரூஜ் போன்ற மேக்கப் சமாசாராமெல்லாம் பிடிக்கும். கழுத்தில் ஊசலாடும் ஒரு லாங் செயின் கையில் மெலிதாக இரு தங்க வளையல்கள் இன்னொரு கையில் டைடான் வாட்ச்.

    மாடர்ன் டிரஸ் மேக்கப் இதெல்லாம் மாலினிக்குப் பிடிக்காத விஷயம்.

    கணுக்கால் வரை புரளும் தலைமுடியை, ப்யூட்டி பார்லர் போய் குட்டையாக வெட்டிக்கொண்டு வந்த அன்று ஒரே ரகளை. மூன்று நாளைக்கு தங்கையுடன் பேசவில்லை. யாரையோ திட்டுவது போல் வாய் ஓயாமல் பொரிந்துக் கொண்டிருந்தாள்.

    அக்காவுடன் பேசாமல் அரை நொடிகூட இருக்க முடியாது தாரிணியால். மணிக்கணக்கில் பேசாமல் மௌனவிரதம் என்றால்,

    ரமேஷ் ஆபீசிலிருந்து வந்ததும், பாருங்க அத்தி! அக்கா எப்பவும் திட்டறா. பேச மாட்டேங்கிறா! என்று புகார் செய்தாள் தாரிணி.

    எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருடா - நா இப்ப உன்னைத் திட்டறமாதிரி நடிப்பேன். நீ நான் சொல்ற மாதிரி சொல்லிட்டு அழு! அப்புறம் பாரேன்!

    காதோடு ஏதோ சொல்லி அனுப்பினான் ரமேஷ்.

    ரமேஷக் கண்டதும் பாத்தீங்களா, உங்க பொண்ணு பண்ணிட்டு வந்திருக்கிற வேலையை? நீங்களும் உடந்தையா இதுக்கு? எப்படி பாத்து பாத்து எண்ணை தேச்சு, சாம்பிராணி போட்டு, நூறு ரூபா கொடுத்து தைலம் வாங்கி, தடவி, மயில்தோகை மாதிரி எப்படி வளர்த்தேன்? நிமிஷப்போதிலே வெட்டிண்டு வந்து நிக்கறா, பாருங்கோ! எல்லாம் நீங்க கொடுக்கிற இடம்தான், இந்த கழுதைக்கு. நீங்கள் ப்யூட்டி பார்லர் கூட்டிண்டு போயிருப்பேள்.

    முடிப்பதற்குள் அழுகை வந்து விட்டது மாலினிக்கு.

    ஏ... ஏ... ய்… மாலு! எனக்கு எதுவுமே தெரியாது. அவ பிரண்ட்ஸோட போயிட்டு வந்திருப்பா. உங்கிட்ட சொல்லிருப்பானு நெனச்சேன்.

    போலிக்கோபம் காட்டினான் ரமேஷ்.

    அய்யோ நீங்களும் என்னைத் திட்டறீங்களா? என்னைக்கண்டா யாருக்கும் பிடிக்கல்லை நா எங்கேயாவது போயிடறேன் - எங்கம்மா இருந்தா...

    தாரும்மா! அப்படியெல்லாம் சொல்லாதடா. அம்மா இல்லாட்டா என்னடா கண்ணு! நா இல்லை உனக்கு? ஏம்மா குழந்தைய திட்டினீங்க? எப்படி அழுறா, பாருங்க! என்று பதறிப்போய் அவளைக் கட்டியணைத்து சமாதானம் செய்தாள் மாலினி.

    அழகுதான் ஊருக்கு எளச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டிங்கிறமாதிரி, உங்க சண்டையிலே என்னை ஏன் இழுக்கறீங்க. ஆளை விடுங்கம்மா நா போறேன்.

    போகும் அவளைப் பார்த்து, மாலினியின் தோளில் சாய்ந்திருந்த தாரிணி ஒழுங்கு காட்டி சிரித்தாள். அவனும் அவளைப் பார்த்து சிரித்துவிட்டுப் போய்விட்டான்.

    ஏதோ சகவாச தோஷம், பார்ப்பாரைப் பார்த்து ஏதோ ஆசை பண்ணிண்டு வந்துட்டே பரவாயில்லை. இதுவே பழக்கமில்லாம இதோட நிறுத்திடு என்ன?

    வேகமாகத் தலையாட்டினாளே ஒழிய மறுபடி அதே கதைதான். மாலினியை சமாதானம் செய்வது எப்படி என்று அவளுக்குத் தெரியுமே. எங்கம்மா இருந்தால் - என்ற பிரம்மாஸ்திரம் இருக்கும் வரை கவலை எதுவுமே இல்லை.

    என்னடி அத்திக்கு, எப்பப்பாரு ஓட்டமும் குதியும் - சாதாரணமாகவே நடக்கத் தெரியாதா உனக்கு? வயசுப் பெண்ணா லட்சணமா இருக்கியா?

    மாலு என்னம்மா இது - அவ குழந்தைதானே? சின்ன விஷயத்துக்கெல்லாம் கண்ட்ரோல் பண்ணாதே! என்று பரிந்துகொண்டு வருவான் ரமேஷ்.

    "உங்களுக்கும் எனக்கும் தான் இவ குழந்தை. ஊரிலே எல்லாரும்

    Enjoying the preview?
    Page 1 of 1