Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neruppaatril Neendhum Anangavaley
Neruppaatril Neendhum Anangavaley
Neruppaatril Neendhum Anangavaley
Ebook91 pages36 minutes

Neruppaatril Neendhum Anangavaley

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஏழ்மை நிலையில் இருக்கும் பல குடும்ப பெண்களின் நிலை இன்று ராசாத்தி பாரதியை போல தான் செல்கிறது. ஒவ்வொரு நாளும் கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் பல நயவஞ்சக ஓநாய்களோடு இன்று வரையிலும் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இது மிகவும் வருத்தமான செய்தி தான். இந்த கதையில் வரும் ராசாத்தி பாரதியின் நிலையும் கூட இப்படி தான் இருக்கிறது. இந்த ஓநாய்களிடம் சிக்கிய இவர்களின் நிலை என்ன?

வாழ்க்கை எனும் நெருப்பாற்றில் ஒவ்வொரு நாளும் நீந்திக் கொண்டு தத்தளிக்கும் பெண்களின் இந்த கேள்விக்கான விடைகள் இந்த கதையின் இறுதி அத்தியாயத்தில் கிடைத்து விடும் என்று நம்புகிறேன். கதையோடு பயணித்து தெரிந்து கொள்ளுங்கள் சகோக்களே.

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580166609872
Neruppaatril Neendhum Anangavaley

Read more from Vaani Aravind

Related to Neruppaatril Neendhum Anangavaley

Related ebooks

Reviews for Neruppaatril Neendhum Anangavaley

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neruppaatril Neendhum Anangavaley - Vaani Aravind

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நெருப்பாற்றில் நீந்தும் அணங்கவளே

    Neruppaatril Neendhum Anangavaley

    Author:

    வாணி அரவிந்த்

    Vaani Aravind

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vaani-aravind

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியர் முன்னுரை

    நெருப்பு - 01

    நெருப்பு - 02

    நெருப்பு - 03

    நெருப்பு - 04

    நெருப்பு - 05

    நெருப்பு - 06

    நெருப்பு  - 07

    நெருப்பு – 08

    நெருப்பு  - 09

    நெருப்பு - 10

    ஆசிரியர் முன்னுரை

    ஏழ்மை நிலையில் இருக்கும் பல குடும்ப பெண்களின் நிலை இன்று ராசாத்தி பாரதியை போலதான் செல்கிறது.

    ஒவ்வொரு நாளும் கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் பல நயவஞ்சக ஓநாய்களோடு இன்று வரையிலும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது மிகவும் வருத்தமான செய்திதான்.

    இந்த கதையில் வரும் ராசாத்தி பாரதியின் நிலையும்கூட இப்படிதான் இருக்கிறது. இந்த ஓநாய்களிடம் சிக்கிய இவர்களின் நிலை என்ன?

    இது போக ஒவ்வொரு நாளும் தன் பிள்ளைகளை பாதுகாப்பதா? வேலைக்கு செல்வதா? ஓநாய்களிடம் இருந்து தங்களை காப்பதா? இந்த மோசமான உலகில் யாரை நம்புவது? யார் நல்லவர்கள்? பெண்களின் இந்த போராட்டம் இன்னும் எத்தனை காலம்? இதற்கு முடிவுதான் என்ன?

    வாழ்க்கை எனும் நெருப்பாற்றில் ஒவ்வொரு நாளும் நீந்திக்கொண்டு தத்தளிக்கும் பெண்களின் இந்த கேள்விக்கான விடைகள் இந்த கதையின் இறுதி அத்தியாயத்தில் கிடைத்து விடும் என்று நம்புகிறேன். கதையோடு பயணித்து தெரிந்து கொள்ளுங்கள் சகோக்களே.

    நெருப்பு - 01

    மாஞ்சோலை கிராமத்தின் தெற்கெல்லையில் ஒரு ஓரமாக இருந்த அந்த குடிசை வீட்டின் முன் ஒரு சிலர் வருவதும் போவதுமாக இருந்தனர். சிலர் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர்.

    அந்த சிறிய ஓலைக்குடிசையின் நடுவீட்டில் கலைந்த தலையுடன், பழைய சாயம் போன நூல் சேலையோடு சிலையென அசையாமல் சுயநினைவின்றி ராசாத்தி அமர்ந்திருக்க மனதில் வெறுப்பும், உடலில் நடுக்கமும், வாழ்க்கையே முடிந்துவிட்டதென்ற வலியும், பரிதவிப்பும் ஒன்றாக சேர்ந்து ராசாத்தியின் கண்களில் கண்ணீராய் திரண்டு எந்த நிமிடமும் மடைதிறந்த வெள்ளமாய் கண்ணீர் ஊற்று பிரவாகமெடுக்குமோ என நினைக்கும் அளவிற்கு கடைவிழியின் ஓரம் தேங்கி நின்றது.

    அடியேய்! ராசாத்தி கண்ணீரும் கவலையும் உனக்கென்ன புதுசா? சின்ன புள்ளையா இருக்கும்போதே அந்த ஆண்டவன் உனக்கிண்டு எழுதி வெச்சிப்புட்டான். அழுகைய நிறுத்திட்டு ஆக வேண்டியத பாரு புள்ள என சுப்பாத்தாவின் குரல் ஒலிக்க.

    அழாம என்ன பாட்டி பண்ண சொல்ற. கால் வயிறு கஞ்சிக்கும் கஷ்டப்பட வச்சிட்டு இந்த மனுஷன் போய்ட்டாரே. இந்த பொட்டப்புள்ளைய வச்சிட்டு நான் இன்னும் எம்புட்டு கஷ்டப்பட போறேனோ? என் தலையெழுத்த மட்டும் இந்த ஆண்டவன் ஏன் இம்புட்டு கோணலா எழுதிவச்சானோ? என முந்தானையை வளைத்து தன் முகத்தில் வழியும் கண்ணீரை ஒற்றி எடுத்தாள்.

    தாயின் அழுகையும், அழுத்தமான வார்த்தை அம்புகளும் பாரதியின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

    நான் அப்பவே உனக்கு சொன்னேன். என் பேச்ச கேட்டியாடி இவளே. கெழக்கால மூலையில கௌளி சொம்மா கத்திகிட்டே கெடந்துச்சி. ஏதோ கெட்டது நடக்கப்போவுதுனு சொன்னனே. இப்ப அப்படியே நடந்து போய்டுச்சே. இப்ப அழுது என்னடீ பண்றது.

    இந்தா சுப்பாத்தா நீ வாய வச்சிகிட்டு கம்முனு கெட. அவளே புருஷன தூக்கிவிட்டு துடிச்சி போய் கெடக்கா. சொந்த பந்தம்னு ஒருத்தரும் கைகொடுக்க வர்ல. நீவேற சாங்கியம் சம்பிரதாயம் பேசிட்டு கெடக்க.

    மங்களத்தம்மா! புருஷன் செத்த எந்த பொம்பழையும் பொழைக்கலையா? அவன் விதி முடிஞ்சது. போய் சேர்ந்துட்டான். அதுக்குனு இப்படியே இடிஞ்சி போய் உக்காந்து கெடந்தா அடுத்த வேல சோத்துக்கு எங்கடீ போவா.

    அதுவும் செரிதான் இல்லங்கல. ராசாத்தி இப்படி அழுதுகிட்டே கெடக்காத. புள்ள மூஞ்ச பாருடீ. சோறு தண்ணி இல்லாம சோந்துபோய் கெடக்கு. அதுக்கு ஆறுதல் சொல்லி கஞ்சோ கழனியோ வச்சி கொடு என மங்களத்தம்மா கூற,

    தன் தாயின் நிலைக்கு ஆறுதல் சொல்ல தெரியாமலும், தந்தையின் இழப்பை ஈடுசெய்ய முடியாமலும் பதினைந்தே வயதான பாரதியின் மனம் சிறகொடிந்த பறவையாய் தத்தளித்து கொண்டிருந்தது.

    அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கத்தொடங்கி இருக்கும் சுட்டிப்பெண். படிப்பில் கெட்டிக்காரி. இவளது வாழ்க்கையில் வறுமையை கொடுத்த கடவுள் அறிவு செல்வத்தை மட்டும் வாரி வழங்கி இருந்தான்.

    இப்போதுதான் துன்பமெனும் காற்றைக் கிழித்து, தனது லட்சிய கனவில் சிறகை விரிக்கத் தொடங்கி இருந்தாள் சிறு பறவை பாரதி. விதியோ அவளின் சிறகை ஒடித்து, சிறையில் அடைத்து உயிரை உருக்கி, உதிரம் கொடுத்து உழைத்தால்தான் சோறு கிடைக்கும் என்ற நிலைக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1